இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏதிலியாய் நாங்கள்…

ஏதிலியாய் நாங்கள்… இப்படித்தான் ஏதிலியாய் ஒருநாளிற் போனோம் எப்படித்தான் பிழைத்தோமோ நினைக்கமனம் வேகும் தப்பிவந்தோர் கூறுங்கதை தரணிகாணாச் சோகம் எப்புறமும் துயரென்றால் எங்குநெஞ்சம் ஆறும் கணத்துக்குக் கணம்நிலை மாறிச்சீ ரழிக்கும் நினைத்தாலே இப்போதும் தேகம்பட படக்கும் தோள்சுமந்த உறவுகள் துடிதுடித்து மாண்டார் தோளிருந்த குழந்தைகளும் துயர்க்கடலில் ஆழ்ந்தார் நம்பிக்கை ஒன்றேதான் நம்வாழ்வின் ஆதாரம் வெம்புதுயர் வீழ்ந்தழியும் விடிகாலம் உருவாகும். கந்தவனம் கோணேஸ்வரன். 23.05.2020

இலக்கியத்துளி 16

இலக்கியத்துளி 16 காதலுக்குத் தூதுசெல்லல் என்பது இன்றும் நடைமுறையிலுள்ள ஒன்று. என்னதான் தொழினுட்பக் கருவிகள் வந்தாலும் தூது செல்லும் காதலுக்குத்தான் வலிமை அதிகம். காதலரிடையே பிரிவு ஏற்படினும் தூது செல்பவரால் பிரிவின் காரணத்தைக் கண்டிறிந்து இடித்துரைத்;துக் காதலர்களை மீண்டும் இலகுவாக ஒன்று சேர்த்திட முடியும். தூதின் வலிமையை உணர்ந்ததாலோ என்னவோ தமிழிலக்கியப் பரப்பில் தூதுவிடுதல் என்பதைக்கூட இலக்கியமாக்கிச் சிறப்புற வைத்திருக்கிறார்கள். நெஞ்சுவிடு தூதுää கிள்ளைவிடு தூதுää மான்விடு தூதுää அன்னம்விடு தூதுää தமிழ்விடு தூது எனப் பல தூதுகள் தமிழ் அகத்துறை இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. “பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ… துள்ளிவரும் வெள்ளலையே நீபோய்த் தூதுசொல்ல மாட்டாயோ..” என்று வெள்ளலைiயைத் தூதனுப்பும் காட்சியை ஒரு திரைப்படப் பாடல் முன்னிறுத்துகிறது. “இந்த மன்றத்தில் ஓடிவரும்… இளந் தென்றலைக் கேட்கின்றேன்….நீ சென்றிடும் வழியினிலே … என் தெய்வத்தைக் காண்பாயோ..” .இந்தத் திரைப்பாடல் தன் காதல்துணைக்குத் தென்றலைத் தூதனுப்பும் காட்சியை எமக்குத் தருகிறது. இவ்விரண்டு ப...

யாரினும் யாரினும்

 குறள் மொழியின்பம் 2 யாரினும் யாரினும் “யாரினும் காதலம் என்றேனோ ஊடினாள் யாரினும் யாரினும் என்று (1314) யாரினும் காதலம் என்றன்யான் நின்தோழி யாரினும் மாதுமேல் காதலோ என்கிறாள் ஊரிடை யானொரு பெண்ணையும் நோக்கிலன் காரிகை இவளன்றிக் கனவிலுங் காண்கிலன். அன்புடைச் சொல்லெனக் கதிதுன்பந் தருவதோ .இன்புடை யாள்நெஞ்சம் எனையெண்ணிக் கவல்வதோ துன்புடை மனத்தனாய் தூயதங்காய் நின்னிடம் என்றுயர் உரைப்பதன்றி வேறுவழி காண்கிலன். என்றன் ஆவியவள் என்நினைவின் தோழியவள் பொன்றாக் காதலெனும் பொய்கையிலே பூத்தமலர் இன்றென் இன்புரைக் கேற்பில்லாப் பொருள்கொண்டாள் நன்றோ ஈதென்று நவில்வாயோ தோழியிடம்? காதல் மிகுpயால் கவிதைதரு தேன்தமிழால் வேதம் போலினிக்கும் என்றெண்ணிச் சொல்லிவைத்தேன் மோதல் விளைக்கின்றாள் முகிழ்பொருளைத் தொலைத்துவிட்டாள் ஏதம் எனிலென்று மன்னிக்கச் சொல்வாயோ? பாசப் பிணைப்புண்டு பலகோடிக் காதலுண்டு நேசம் நிறைநெஞ்சின் நினைவிலவள் மட்டுமுண்டு நீசக் குணமெதுவும் நெஞ்சமதிற் துளியுமில்லை ஆசைமனம் கலங்குவதை அவளிடம்நீ கூறாயோ? கந்தவனம் கோணேஸ்வரன். 13.05.2020

கவிஞன் குரல் 1 (பாரதியார்)

கவிஞன் குரல் 1 (பாரதியார்) என்ன மகாகவியே ஏக்கத்தின் வெளிப்பாடோ நின்னை நெஞ்சிருத்தி நிறைகவிதை சொல்வன்யான் முன்னைப் பெருமைகளை மகிழ்வுடனே ஏற்றதுபோல் ‘இன்னும் வளருமெங்கள் தமிழ்’;அதனை ஏற்றருள்க. அகத்தியனும் காப்பியனும் அருமறையோன் வள்ளுவனும் இகத்தினிலே இணையில்லாப் பெரியோரென் றுணர்கின்றோம் மகிழ்ந்ததமிழ் வாடுமென்று மாபாவி உரைத்தசொல் அகத்தினிலே உறைத்ததுவோ ஐயதுயர் விட்டொழிக. நின்வழியில் வந்தவன்யான் நிமிர்ந்துநின்று பேசுகிறேன் என்னுயிராம் இனியதமிழ் என்றென்றும் வாழ்ந்திருக்கும் பொன்வேண்டல் புகழ்வேண்டல் போர்த்தமிழர் குணமன்று தன்னாவி தனையிழந்தும் தமிழ்காப்பான் குமரனின்று. நமக்காக நாடிருக்கும் நமக்கென்றோ ரரசிருக்கும் தமர்பிறரென் றெண்ணாமல் தமிழ்த்தாயின் அன்பிருக்கும் இமயங்க டந்துமெங்கள் இன்பத்தமிழ் மூச்சிருக்கும் இமைப்போதும் சோராம லுழைக்கின்ற திறனிருக்கும். எட்டுத்திக்கும் வெற்றிக்கனி எம்மவர் பறித்துநிற்க கொட்டிமுழக் குந்தமிழால் குவலயத்தை அளந்துவர தொட்டணைத்துக் கணினியிலுந் தூயதமிழ் விதைத்துயர எட்டடியில் மட்டிடாமல் எண்கோடி அடியெடுத்தார். இன்னுமென்ன தயக்கமய்யா எங்கள்...
தாயெனும் கோயில். அன்னை உந்தன் கண்ணில்தானே அன்பின் தெய்வம் கண்டேன் ஆசை முத்தம் தந்தபோது அகிலந் தன்னை வென்றேன். உந்தன் கரங்கள் என்னைத்தழுவ உணர்வின் இனிமை வியந்தேன் தந்தபாலில் தமிழைப் பருகித் தமிழால் இன்று உயர்ந்தேன். எந்தன் விழிகள் தூங்கும்போது அருகே யமர்ந்து ரசித்திருந்தாய் எந்தன் விரல்கள் அசையும்போது எறும்போ ஈயோ எனத்தவித்தாய். கண்ணை விழிக்கும் போதுஎதிரில் கமலம் போலே சிரித்திருந்தாய் விண்ணி லிருந்து கண்ணன்வந்தான் வீட்டுக் கென்றே மகிழ்ந்திருந்தாய். அன்னை இன்றென் அருகிலில்லை அதனால் மனசு கொதிக்கிறது உன்னனைத் தானே தெய்வமென்று உள்ளக் கோயில் துதிக்கிறது. கந்தவனம் கோணேஸ்வரன் 11.05.2020

இலக்கியத்துளி 15.

இலக்கியத்துளி 15. தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. இவ்வகை இலக்கியங்கள் எளிமையான தமிழில் படிப்போர்க்குச் சிரமமின்றி வளங்கும்வகையில் அமைந்திருக்கும். இவற்றுள் திருக்குற்றாலக் குறவஞ்சி மிகமிகச் சிறப்புடைத்து என்பர் அறிஞர். இதனைத் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் இயற்றியுள்ளார். இதில் ஒரு காட்சி: தலைவி வசந்தவல்லி என்பாள் குற்றாலநாதர் உலாவருங் காட்சியைக் கண்டு மயல் கொள்கிறாள். குறத்தி ஒருத்தி அவள் நிலையைப் புரிந்துகொண்டு குற்றலநாதருடைய நகர்வளம் பற்றி எடுத்தோதி மகிழ்விக்கிறாள். நகர்வளம் பற்றி வருகின்ற பாடல்களுள் இடவமைதி நோக்கி இருபாடல்களின் சுவையை நோக்குவோம். நீர்த்துறையில் புல்மேய்ந்து வந்த எருமைக்கூட்டம் களிப்புடன் நீரருந்துகிறது. அவ்வெருமைகள் நீரருந்தும்போது தங்கள் கன்றுகளை நினைத்துக் கொள்வதால் இயல்பாகவே அவற்றின் மடிகளிலிருந்து பால் சுரக்கின்றது. பால் நீரில் கலக்கின்றது. அப்பாலை மகிழ்வுடன் அருந்திய வாளைமீன்கள் உற்சாக மிகுதியால் நீரைவிட்டு உயரே துள்ளிப்பாய்ந்து அருகிலிருந்த மணம்வீசும் பலாமரத்துக் கனியில் மோதுகின்றன. பலாப்பழம் மரத்தைவிட்டு நீங்கி அருகே நிற்கும...

தேசத்தின் நாசங்கள்.

தேசத்தின் நாசங்கள். முள்ளி வாய்க்கால் அள்ளிச் சென்ற உயிர்கள் எத்தனையோ? – அதைச் சொல்லிச் சொல்லி அரசியல் செய்யும் பதர்கள் எத்தனையோ? போரின் போது பதுங்கிப் படித்துப் பல்கலை சென்றவர்கள் -- அதன் வேராய்த் தாமே இருந்தோ மென்று புலம்புதல் எப்படியோ? ஏழை மக்கள் ஏதிலி யாகித் தெருக்களில் அலைகையிலே – தினம் வாழைப் பழமும் வடையும் உண்டு கொழுத்தவர் எத்தனையோ? போரில் வீழ்;ந்;த வீரர் உடலம் புண்பட்ட வேளையிலே – அதை ‘ஊரும் நடப்பும்’ செய்தி போல நினைத்தவர் எத்தனையோ? இறந்து போன எம்மவர் உடல்கள் வீதியில் கிடக்கையிலே – அதை மறந்து மகிழ்வாய் வெறுங்கதை பேசி வாழ்ந்தவர் எத்தனையோ? போரில் தம்மைத் தொலைத்தவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பர் -- அந்தப் போரால் தம்மை விளம்பரம் செய்பவர் துரும்பெனப் பறந்திடுவர். காலம் மாறும் காட்சி மாறும் கவலைப் படுவார்கள். – அந்த வேளை புறமுது கிட்டோர் நிச்சயம் வீசப் படுவார்கள். நானும் அவன்தான் என்றே உரைப்பவர் நாய்போற் கிடப்பார்கள் -- காலம் தானாய் மாறும் தருக்கர் மறைவர் தமிழாள் தலைநிமிர்வாள். எமக்காய் மடிந்த அத்தனை பேரும் எமக்குத் தெய்வங்களே –அத...

காதல்வானிலே…

காதல்வானிலே… நிலவின் குளிரைக் கண்களில் வைத்தாய் மலரின் அழகை வதனத்திற் கொண்டாய். உலவும் காற்றில் உணர்வைக் கலந்தாய் உயிர்க்கும் மொழியில் அன்பைக் கரைத்தாய். தழுவும் போதொரு பனிமுகி லானாய் பழகும் வேளையில் பைந்தமிழ் தந்தாய். இளைய மகளே எந்தன் உயிரே வளையல் குலுங்கும் வனிதையர் திருவே. காதல் வானில் கவிதைச் சிறகொடு தீதில் உலகம் காண்போம் வாராய். கந்தவனம் கோணேஸ்வரன். 10.05.2020

கனக நெடுங்கடை திறமினோ.

கனக நெடுங்கடை திறமினோ. செயங்கொண் டானெனும் சீரிய புலவன் நயங்கொண் டுரைத்த கலிங்கத்துப் பரணியில் வயங்கொள் வஞ்சியர் கொழுநரை மறுத்து தயங்கின ரேகடை திறந்திடல் வெறுத்து கனக நெடுங்கடை திறந்திடு வீரென மனம் நெகிழ்ந்தனர் மாண்புடை வீரர்கள் இனிதாம் அந்த ஊடலின் அழகினை இன்புறும் வண்ணம் உரைத்திடு வோமே. “வாரணம் ஆயிரம் கண்டு: வெற்றித் தோரணம் தன்னைப் பூண்டு: நின் பேரினில் காதல் கொண்ட: அன்புப் பித்தனுக் காய்நெடுங் கடை திறமினோ. நாடு காக்கும் பணிக்காய்ச் சென்று ஆடும் களத்தே பகைவரைக் கொன்று தேடும் உன்றன் அன்பன் வந்தேன் தேவி கனகநெடுங் கடை திறமினோ. போரில் ஆயிரம் இடர்களை வென்று புறமுது கில்லா ஆற்றல் கொண்டு வீரம் செறிந்த சாதனை புரிந்த வெற்றி மகற்காய்க் கடை திறமினோ. கனக நெடுங்கடை அடைத்து வைத்து மனதி னிலேபொய்க் கோபங் கொண்டு தினமும் ஏங்கிய தேன்மலர் உறவைத் தள்ளுதல் முறையோ தாழ் திறமினோ. வேலின் ஒலிக்கு அஞ்சா நெஞ்சம் நூலிடை யாள்விழிக் கஞ்சுதல் முறையோ பாலில் வடித்த பாவாய் உன்றன் பாசத் துணைக்காய்த் தாழ் திறமினோ. சோழன் புலிக்கொடி கலிங்க மண்ணில் கோல மிட்டுப் பறந்திடல் பாராய் வ...

முத்தமொன்று கேட்டபோது…

முத்தமொன்று கேட்டபோது… முத்தமொன்ற கேட்டபோது சத்தமின்றி நின்றாய் சுத்தமின்றி நின்றதாலே வெட்கமென்று கொண்டேன் வெட்கமென்று கொண்டதாலே கிட்டவந்து நின்றேன் கிட்டவந்து நின்றபோது எட்டியெட்டிச் சென்றாய். எட்டியெட்டிச் செல்வதுதான் பெண்மைக்கு அழகோ தொட்டுப்பேச அனுமதித்தால் தூய்மைக்குப் பழுதோ விட்டிற்பூச்சி போலநானும் அலைதலுந் தகுமோ கட்டியள்ளி முத்தமிட்டால் ஆண்மைக்கு மிடுக்கோ பூங்கொடியைச் சுற்றித்தானே வண்டுகள் பறக்கும் ஏங்குகின்ற மனதில்தானே காதலும் சுரக்கும் மாங்கனிகள் என்றாலே சுவைத்திடச் சிறக்கும் வாங்கிக்கொள்ள மனமிருந்தால் வண்ணங்கள் பிறக்கும் வண்ணங்கள் தாமடியோ வாழ்க்கையின் சிறகு எண்ணங்கள் விரிந்தாலே இனித்திடும் உறவு உன்னிடத்தில் தானேயென் உள்ளத்து உணர்வு கண்ணைமூடி நின்றிருந்தால் காவிய மகிழ்வு தேனிதழிற் சுவைமதுவை யாருக்கு வைத்தான் நானுரிமை கொள்வதற்குத் தானதைத் தந்தான் ஏனினியும் தமதமோ அருகில் வந்துநில் வானுலகு சென்றுவரும் வழியைத் தந்துநில். கந்தவனம் கோணேஸ்வரன் 09.03.2020

காதலை வாழி மதி

குறள்மொழியின்பம்    குறள் 1118 காதலை வாழி மதி என்னவளும் வெண்ணிலவும் ஒப்புகையில் ஒன்றாமோ என்னவளின் இளஞ்சிரிப்பு வெண்ணிலவில் உண்டாமோ தண்ணிலவு குளிர்கொடுக்கும் தளிர்க்கரங்கள் அதுதருமோ என்னவளின் தளிர்க்கரங்கள் தந்தசுகம் போல்வருமோ என்னவளின் முகஞ்சுற்றி எப்போதும் கருமேகம் வெண்ணிலவே உனைச்சுற்றி மழைவந்தால் தான்மேகம் கண்மறைக்கும் இருளில்தான் உந்தனொளி துலங்கும் பொன்மயிலாள் தருமொளியோ பகலிரவாய் விளங்கும் வளர்ந்திருப்பாய் தேய்ந்திருப்பாய் வானிலன்றோ நீயிருப்பாய் தளர்வறியா என்னவளோ தமிழ்போல  அருகிருப்பாள் களங்கமிலா முகமலர்வால் கவிதையெனக் கனிந்திருப்பாள் விளங்குகின்ற என்னவளை நீநிகர்த்தல் எவ்விதமோ? உன்னழகு கவிஞர்கட் குறுபொருளாய் ஆவதுண்டு மன்னவர்தம் வமிசத்து வளர்பெயராய் அமைவதுண்டு என்னவளோ எனக்குமட்டும் இலக்கியத்துக் கருவாவாள் வெண்ணிலவே காதலில்நீ பொதுவான பொருளாவாய். சிவனாரின் செஞ்சடையில் சிறுநிலவாய்த் தானிருப்பாய் தவமாளும் பார்வதியின் நெற்றிக்கே ஒப்பாவாய் நவமான என்னவளோ நாயகியாய் நெஞ்சமர்ந்தாள் உவமானம் வேண்டாமே உயர்மதியே நீவாழி.. கந்தவனம் கோணேஸ்வரன். 06.05.2...

நறுந்தொகை.

நறுந்தொகை. கொற்கைத் துறையின் முத்தின் வனப்பும் பொற்கைப் பாண்டியன் புகழ்நெறிச் சிறப்பும் உற்ற தமிழ்வளர் பாண்டி நாட்டில் நற்றமிழ் செய்த நாயக வாழி. நறுந்தொகை யென்னும் வெற்றி வேற்கை தருமறி வுரைகள் தவிர்த்திடல் தகுமோ பெருவளங் கொண்ட பண்புடை வேந்தன் அதிவீர ராம பாண்டிய வாழி. நாற்றிசை புகழும் நறுந்தொகை யாற்றி வேற்கை தாங்கிடும் வெற்றியைப் போற்றி நூற்பயன் வியந்திட நுவலருங் கவிதரு நாற்படைத் தலைவ: நின்றமிழ் பெரிது. அழகு என்பது அவரவர் இயல்பும் பழகு தொழிலும் சார்ந்திடக் கண்டு உழவன் வேந்தன் குலமகள் விலைமகள் பழுதறு கல்வி பார்ப்பனர் செல்வர். மந்திரி பெண்டிர் வைசியர் அறிஞர் தந்திரி வறிஞர் தம்மழ குரைத்து செந்தமிழ் சிறக்க நறுந்தொகை செய்த நந்தமிழ்த் திருவை நானிலம் வியக்கும். பிறப்பாற் குலத்தாற் பெருமைகள் ஏதுள சிறப்புடைக் கல்வியிற் தானே சீர்மை பொறுப்புடன் அதைத்தரு குருவே இறைவன் இரப்பினுங் கல்வியைப் பெறுதல் இனிதே பெற்றமும் கழுதையும் மேய்புல் நிலமொரு கொற்றம் பெற்று உயர்தலு முண்டு முற்றம் நிறைந்த மாடி மனைகளும் சுற்றம் இழந்து போதலும் உண்டு நாளும் கிழமையும் நலிந்தோர்க்...

கலித்துறை

 கலித்துறை உறவும் பிரிவும் உலகில் நிகழும் உயிர்ப்புமுறை அறமார் வழியில் அனைவரும் நடப்பின் அனைத்துமிறை இறைவன் துணையாய் இருப்பார் என்றே இன்புறுவோம் நிறைவாய் வாழ்ந்தால் நிகரில் பெருமை நிலைத்திடுமே. கந்தவனம் கோணேஸ்வரன் 03.05.2020

இருமனம் இணைந்தனவே.

இருமனம் இணைந்தனவே. அண்ணலின் விழிகள் அவளை நோக்கின அவளின் விழிகள் நிலத்தைத் தாக்கின இன்னுயிர் மகிழ்ந்திடக் காதல் பிறந்தது இருமனம் இணைந்தன வேயென வுரைத்தது. அவளின் விழிவழி அவன் நுழைந்தான் அவனுரு காத்திட அவள் விழித்தாள் இமைதனை மூடிட அவள் மறந்தாள் இமையே நான்என அவன் பகன்றான். அவனுடற் குருதியில் அவள் நிறைந்தாள் அவன்நெறி வலுப்பெறத் துணை புரிந்தாள் திருமண பந்தம் நெருங்கிடும் வண்ணம் இருமனங் கலந்துயிர் வாழ்வ மென்றார். கந்தவனம் கோணேஸ்வரன்.

கல்யாண வைபோகமே…

கல்யாண வைபோகமே… சிவனும் உமையும் இணைந்தது போலே சுவையுந் தமிழும் கலந்தது போலே கவியும் பொருளும் பிணைந்தது போலே அவளு மவனும் இணைவது மணமே கண்ணன் கொண்ட ராதையின் அன்பென மன்னன் ராமனின் சீதைகொள் பணிவென எண்ணம் நிறைந்த என்னவள் மலர்வென வண்ணம் காண்பது வளர்திரு மணமே உற்றோர் உறவுகள் வாழ்த்தி மகிழக் கற்றோர் மனதால் கனிந்து நெகிழக் கொற்றம் பெற்ற இருமனக் கலப்பில் வெற்றி யுறுங்கல் யாணவை போகமே கந்தவனம் கோணேஸ்வரன் 21.04.2020

கவிகாளமேகம்.

கவிகாளமேகம். திருக்குடந்தை யிற்பிறந்தார் திருவரங்கத் தில்வளர்ந்தார் திருவானைக் காமோகனாங்கி வடிவினிலே தனையிழந்தார் விருப்புமே லிட்டதனால் விட்டுணு வையும்மறந்து விரைந்துசைவத் திருவெனவே வாழ்துணைக்காய் வந்தார். மோகனாங்கி வருகைக்காய்க் காத்திருந்து செயலிழந்து தாகமுடன் இருளினிலே தனியாகச் சோர்ந்திருந்தார் அகிலாண்ட தேவியவள் அழகிய சிறுபெண்ணாய் மகிமைபெறு தாம்பூல எச்சிலையவர் வாயுமிழ காதலிதா னென்று கண்மயங்கிப் போதையிலே ஆவலுட னதையேந்தி அவர்சுவைத்து மகிழந்ததனால் போதவிழ்ந்த மலரெனவே புதுப்புனலின் ஊற்றெனவே தீதகற்று தமிழ்க்கவிதை கொட்டும்காள மேகமானார். .வஞ்சகமாய்ப் பகழ்ந்தார் வளர்சிலேடை தந்தார் அஞ்சு ‘டு’ வைத்து அரியவெண்பா தான்படைத்தார் வெஞ்சினங்கள் பொழிந்தார் வித்துவத்தில் திளைத்தார் அஞ்சலிலாக் கவிபடைத்து அன்னைத்தமிழ் பணிந்தார். திருமலை ராயன்மனையில் செருக்கோடு வீற்றிருந்த அதிமதுரக் கவியென்பான் அகந்தையை அடக்கிவைத்தார் அறுபத்து நான்குபேரின் அகந்தைநிறை தலைக்கவியைச் சிரந்தாழ்த்தி வணங்கவைத்துச் செயற்றிறனில் உயர்ந்துநின்றார். திருமலை ராயன்முன் வாணிதரு வாசனத்தில் பெருமிதமாய் அம...