தேசத்தின் நாசங்கள்.

தேசத்தின் நாசங்கள்.


முள்ளி வாய்க்கால் அள்ளிச் சென்ற
உயிர்கள் எத்தனையோ? – அதைச்
சொல்லிச் சொல்லி அரசியல் செய்யும்
பதர்கள் எத்தனையோ?


போரின் போது பதுங்கிப் படித்துப்
பல்கலை சென்றவர்கள் -- அதன்
வேராய்த் தாமே இருந்தோ மென்று
புலம்புதல் எப்படியோ?


ஏழை மக்கள் ஏதிலி யாகித்
தெருக்களில் அலைகையிலே – தினம்
வாழைப் பழமும் வடையும் உண்டு
கொழுத்தவர் எத்தனையோ?


போரில் வீழ்;ந்;த வீரர் உடலம்
புண்பட்ட வேளையிலே – அதை
‘ஊரும் நடப்பும்’ செய்தி போல
நினைத்தவர் எத்தனையோ?


இறந்து போன எம்மவர் உடல்கள்
வீதியில் கிடக்கையிலே – அதை
மறந்து மகிழ்வாய் வெறுங்கதை பேசி
வாழ்ந்தவர் எத்தனையோ?


போரில் தம்மைத் தொலைத்தவர் எங்கள்
மனங்களில் நிறைந்திருப்பர் -- அந்தப்
போரால் தம்மை விளம்பரம் செய்பவர்
துரும்பெனப் பறந்திடுவர்.


காலம் மாறும் காட்சி மாறும்
கவலைப் படுவார்கள். – அந்த
வேளை புறமுது கிட்டோர் நிச்சயம்
வீசப் படுவார்கள்.


நானும் அவன்தான் என்றே உரைப்பவர்
நாய்போற் கிடப்பார்கள் -- காலம்
தானாய் மாறும் தருக்கர் மறைவர்
தமிழாள் தலைநிமிர்வாள்.


எமக்காய் மடிந்த அத்தனை பேரும்
எமக்குத் தெய்வங்களே –அதைத்
தமக்காய் மாற்றி வாழ்பவர் யாவரும்
தேசத்தின் நாசங்களே.


கந்தவனம் கோணேஸ்வரன்.
 16.05.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5