தேசத்தின் நாசங்கள்.
தேசத்தின் நாசங்கள்.
முள்ளி வாய்க்கால் அள்ளிச் சென்ற
உயிர்கள் எத்தனையோ? – அதைச்
சொல்லிச் சொல்லி அரசியல் செய்யும்
பதர்கள் எத்தனையோ?
போரின் போது பதுங்கிப் படித்துப்
பல்கலை சென்றவர்கள் -- அதன்
வேராய்த் தாமே இருந்தோ மென்று
புலம்புதல் எப்படியோ?
ஏழை மக்கள் ஏதிலி யாகித்
தெருக்களில் அலைகையிலே – தினம்
வாழைப் பழமும் வடையும் உண்டு
கொழுத்தவர் எத்தனையோ?
போரில் வீழ்;ந்;த வீரர் உடலம்
புண்பட்ட வேளையிலே – அதை
‘ஊரும் நடப்பும்’ செய்தி போல
நினைத்தவர் எத்தனையோ?
இறந்து போன எம்மவர் உடல்கள்
வீதியில் கிடக்கையிலே – அதை
மறந்து மகிழ்வாய் வெறுங்கதை பேசி
வாழ்ந்தவர் எத்தனையோ?
போரில் தம்மைத் தொலைத்தவர் எங்கள்
மனங்களில் நிறைந்திருப்பர் -- அந்தப்
போரால் தம்மை விளம்பரம் செய்பவர்
துரும்பெனப் பறந்திடுவர்.
காலம் மாறும் காட்சி மாறும்
கவலைப் படுவார்கள். – அந்த
வேளை புறமுது கிட்டோர் நிச்சயம்
வீசப் படுவார்கள்.
நானும் அவன்தான் என்றே உரைப்பவர்
நாய்போற் கிடப்பார்கள் -- காலம்
தானாய் மாறும் தருக்கர் மறைவர்
தமிழாள் தலைநிமிர்வாள்.
எமக்காய் மடிந்த அத்தனை பேரும்
எமக்குத் தெய்வங்களே –அதைத்
தமக்காய் மாற்றி வாழ்பவர் யாவரும்
தேசத்தின் நாசங்களே.
கந்தவனம் கோணேஸ்வரன்.
16.05.2020
முள்ளி வாய்க்கால் அள்ளிச் சென்ற
உயிர்கள் எத்தனையோ? – அதைச்
சொல்லிச் சொல்லி அரசியல் செய்யும்
பதர்கள் எத்தனையோ?
போரின் போது பதுங்கிப் படித்துப்
பல்கலை சென்றவர்கள் -- அதன்
வேராய்த் தாமே இருந்தோ மென்று
புலம்புதல் எப்படியோ?
ஏழை மக்கள் ஏதிலி யாகித்
தெருக்களில் அலைகையிலே – தினம்
வாழைப் பழமும் வடையும் உண்டு
கொழுத்தவர் எத்தனையோ?
போரில் வீழ்;ந்;த வீரர் உடலம்
புண்பட்ட வேளையிலே – அதை
‘ஊரும் நடப்பும்’ செய்தி போல
நினைத்தவர் எத்தனையோ?
இறந்து போன எம்மவர் உடல்கள்
வீதியில் கிடக்கையிலே – அதை
மறந்து மகிழ்வாய் வெறுங்கதை பேசி
வாழ்ந்தவர் எத்தனையோ?
போரில் தம்மைத் தொலைத்தவர் எங்கள்
மனங்களில் நிறைந்திருப்பர் -- அந்தப்
போரால் தம்மை விளம்பரம் செய்பவர்
துரும்பெனப் பறந்திடுவர்.
காலம் மாறும் காட்சி மாறும்
கவலைப் படுவார்கள். – அந்த
வேளை புறமுது கிட்டோர் நிச்சயம்
வீசப் படுவார்கள்.
நானும் அவன்தான் என்றே உரைப்பவர்
நாய்போற் கிடப்பார்கள் -- காலம்
தானாய் மாறும் தருக்கர் மறைவர்
தமிழாள் தலைநிமிர்வாள்.
எமக்காய் மடிந்த அத்தனை பேரும்
எமக்குத் தெய்வங்களே –அதைத்
தமக்காய் மாற்றி வாழ்பவர் யாவரும்
தேசத்தின் நாசங்களே.
கந்தவனம் கோணேஸ்வரன்.
16.05.2020
கருத்துகள்
கருத்துரையிடுக