இலக்கியத்துளி 16
இலக்கியத்துளி 16
காதலுக்குத் தூதுசெல்லல் என்பது இன்றும் நடைமுறையிலுள்ள ஒன்று. என்னதான் தொழினுட்பக் கருவிகள் வந்தாலும் தூது செல்லும் காதலுக்குத்தான் வலிமை அதிகம். காதலரிடையே பிரிவு ஏற்படினும் தூது செல்பவரால் பிரிவின் காரணத்தைக் கண்டிறிந்து இடித்துரைத்;துக் காதலர்களை மீண்டும் இலகுவாக ஒன்று சேர்த்திட முடியும்.
தூதின் வலிமையை உணர்ந்ததாலோ என்னவோ தமிழிலக்கியப் பரப்பில் தூதுவிடுதல் என்பதைக்கூட இலக்கியமாக்கிச் சிறப்புற வைத்திருக்கிறார்கள். நெஞ்சுவிடு தூதுää கிள்ளைவிடு தூதுää மான்விடு தூதுää அன்னம்விடு தூதுää தமிழ்விடு தூது எனப் பல தூதுகள் தமிழ் அகத்துறை இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.
“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ… துள்ளிவரும் வெள்ளலையே நீபோய்த் தூதுசொல்ல மாட்டாயோ..” என்று வெள்ளலைiயைத் தூதனுப்பும் காட்சியை ஒரு திரைப்படப் பாடல் முன்னிறுத்துகிறது.
“இந்த மன்றத்தில் ஓடிவரும்… இளந் தென்றலைக் கேட்கின்றேன்….நீ சென்றிடும் வழியினிலே … என் தெய்வத்தைக் காண்பாயோ..” .இந்தத் திரைப்பாடல் தன் காதல்துணைக்குத் தென்றலைத் தூதனுப்பும் காட்சியை எமக்குத் தருகிறது.
இவ்விரண்டு பாடல்களும் முழுமையான தூதுப் பாடல்களே. காதலர்தம் உளத்தவிப்பைக் கண்முன்னே சிறப்பாக நிறுத்துகின்றன.
தமிழ்விடு தூது இலக்கியத்தில் ஒருகாட்சி. இயற்றியவர் பெயர் அறியப்படாத போதிலும் இலக்கியத் தரத்தால் தூதாசிரியர் தமிழிலக்கிய உலகில் சிறப்பிடம் பெறுகிறார்.
ஒரு தலைவி. அவளுக்கு மதுரைச் சோமசுந்தரனார்மீது காதல் பிறந்து விட்டது. மதுரைச் சோமசுந்தரனாரைச் சந்திப்பதெப்படி, தன் காதலை எடுத்துச் சொல்வதெப்படி..
நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள். என்னதான் நடந்து விடப்போகிறது….தமிழையே தூதாக அனுப்பிப் பார்ப்போமே என்ற முடிவுக்கும் வருகிறாள்.
தமிழையே தூதாக அனுப்புதற்கு அவள் தேரும்வழி சுவையுடைத்து. அதனைப் பார்ப்போம்.
ஒளிநிறைந்த தாமரையில் வாசஞ்செய்யும் அன்னத்தைத் தூது விடலாமென்றால் அது சோமசுந்தரனாரின் திருமுடியை நெருங்க முடியாமல் திரும்பிவந்த பறவை ஆயிற்றே…
பிரமன் அன்னப்பட்சியாக மாறிச் சிவனின் முடியைக் காணாது தோல்விற்று வந்தமை அவள் நெஞ்சிலாடுகிறது. எனவே அன்னத்தை நிராகரிக்க முடிவெடுக்கிறாள்.
வண்டைத் தூதாக விடுக்கலாமென்றால் குறுந்தொகைப் பாடலில் ஒன்றான “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழியுமோ?” எனும்வரிகள் அவள் நினைவுக்கு வரவே வண்டு ஐயப்பாட்டுக்கு உரியதாகி விடுகிறது. ஆதலால் அதுவும் தன் தூதுக்குப் பொருத்தமற்றது எனத் தவிர்க்கிறாள்.
மானைத் தூதனுப்பலாமெனின் அது தன் தலைவன் அணிந்துள்ள புலித்தோலாடையைக் கண்டு மருண்டு எடுத்துச்சென்ற பணியைக் கைiவிடக் கூடும். எனவே அதுவும் ஏற்றதன்று என்கிறது அவள் மனம்.
குயிலைத் தூதுவிட எண்ணின் அது காக்கையினத்தைச் சார்ந்தது. காக்கை வலியான் என்கிற கரிக்குருவியினம் சார்ந்த பறவையைக் கண்டால் அஞ்சும் இயல்புடையது. வலியான் பறவை என் தலைவனை வழிபட்டு முத்தியின்பம் பெற்றதென்பர் பெரியோர். ஒருவேளை காக்கையினஞ் சார்ந்த குயில் என்னவரை அணுகும்போது வலியான் அவரருகே இருக்குமாயின் அனைத்தும் கெட்டுவிடும். எனவே குயிலும் தூதுக்கு உகந்ததாகாது.
என் மனதையே தூதுவிடலாமென்றால் அது அவரை நேரிற்கண்டதும் நாணமுற்று அவரை நெருங்கத் தயங்கும். எனவே தன்மனமும் அப்பணிக்கு ஏற்றதன்று எனப் பலவாறாகச் சிந்தித்துத் தமிழையே தூது விட முடிவெடுக்கிறாள் தலைவி என்கிறது தமிழ்விடு தூது எனும் இலக்கியம்.
அந்தச் சுவையான பாடல் இதுதான்.
ஓண்கமலத்து
அன்னந் தனைவிடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னந்தான் கண்டறியா தென்பாரே
மன்னெந்தாய்
அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே
தப்பாது
மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமர்பாற் சாராதே
ஏனைப்பூங்
கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே
ஆகையினால்
இந்தமனத் தைத்தூதா யேகென்பேன் இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே…
இக்குறைபாடுகளை எல்லாம் கடந்து வெல்லவல்ல தமிழே தனக்காகத் தூது செல்லவல்லது எனத் தேருகிறாள் தலைவி என்கிறது தமிழ்விடு தூது.
கந்தவனம் கோணேஸ்வரன்
25.05.2020
காதலுக்குத் தூதுசெல்லல் என்பது இன்றும் நடைமுறையிலுள்ள ஒன்று. என்னதான் தொழினுட்பக் கருவிகள் வந்தாலும் தூது செல்லும் காதலுக்குத்தான் வலிமை அதிகம். காதலரிடையே பிரிவு ஏற்படினும் தூது செல்பவரால் பிரிவின் காரணத்தைக் கண்டிறிந்து இடித்துரைத்;துக் காதலர்களை மீண்டும் இலகுவாக ஒன்று சேர்த்திட முடியும்.
தூதின் வலிமையை உணர்ந்ததாலோ என்னவோ தமிழிலக்கியப் பரப்பில் தூதுவிடுதல் என்பதைக்கூட இலக்கியமாக்கிச் சிறப்புற வைத்திருக்கிறார்கள். நெஞ்சுவிடு தூதுää கிள்ளைவிடு தூதுää மான்விடு தூதுää அன்னம்விடு தூதுää தமிழ்விடு தூது எனப் பல தூதுகள் தமிழ் அகத்துறை இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.
“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ… துள்ளிவரும் வெள்ளலையே நீபோய்த் தூதுசொல்ல மாட்டாயோ..” என்று வெள்ளலைiயைத் தூதனுப்பும் காட்சியை ஒரு திரைப்படப் பாடல் முன்னிறுத்துகிறது.
“இந்த மன்றத்தில் ஓடிவரும்… இளந் தென்றலைக் கேட்கின்றேன்….நீ சென்றிடும் வழியினிலே … என் தெய்வத்தைக் காண்பாயோ..” .இந்தத் திரைப்பாடல் தன் காதல்துணைக்குத் தென்றலைத் தூதனுப்பும் காட்சியை எமக்குத் தருகிறது.
இவ்விரண்டு பாடல்களும் முழுமையான தூதுப் பாடல்களே. காதலர்தம் உளத்தவிப்பைக் கண்முன்னே சிறப்பாக நிறுத்துகின்றன.
தமிழ்விடு தூது இலக்கியத்தில் ஒருகாட்சி. இயற்றியவர் பெயர் அறியப்படாத போதிலும் இலக்கியத் தரத்தால் தூதாசிரியர் தமிழிலக்கிய உலகில் சிறப்பிடம் பெறுகிறார்.
ஒரு தலைவி. அவளுக்கு மதுரைச் சோமசுந்தரனார்மீது காதல் பிறந்து விட்டது. மதுரைச் சோமசுந்தரனாரைச் சந்திப்பதெப்படி, தன் காதலை எடுத்துச் சொல்வதெப்படி..
நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள். என்னதான் நடந்து விடப்போகிறது….தமிழையே தூதாக அனுப்பிப் பார்ப்போமே என்ற முடிவுக்கும் வருகிறாள்.
தமிழையே தூதாக அனுப்புதற்கு அவள் தேரும்வழி சுவையுடைத்து. அதனைப் பார்ப்போம்.
ஒளிநிறைந்த தாமரையில் வாசஞ்செய்யும் அன்னத்தைத் தூது விடலாமென்றால் அது சோமசுந்தரனாரின் திருமுடியை நெருங்க முடியாமல் திரும்பிவந்த பறவை ஆயிற்றே…
பிரமன் அன்னப்பட்சியாக மாறிச் சிவனின் முடியைக் காணாது தோல்விற்று வந்தமை அவள் நெஞ்சிலாடுகிறது. எனவே அன்னத்தை நிராகரிக்க முடிவெடுக்கிறாள்.
வண்டைத் தூதாக விடுக்கலாமென்றால் குறுந்தொகைப் பாடலில் ஒன்றான “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழியுமோ?” எனும்வரிகள் அவள் நினைவுக்கு வரவே வண்டு ஐயப்பாட்டுக்கு உரியதாகி விடுகிறது. ஆதலால் அதுவும் தன் தூதுக்குப் பொருத்தமற்றது எனத் தவிர்க்கிறாள்.
மானைத் தூதனுப்பலாமெனின் அது தன் தலைவன் அணிந்துள்ள புலித்தோலாடையைக் கண்டு மருண்டு எடுத்துச்சென்ற பணியைக் கைiவிடக் கூடும். எனவே அதுவும் ஏற்றதன்று என்கிறது அவள் மனம்.
குயிலைத் தூதுவிட எண்ணின் அது காக்கையினத்தைச் சார்ந்தது. காக்கை வலியான் என்கிற கரிக்குருவியினம் சார்ந்த பறவையைக் கண்டால் அஞ்சும் இயல்புடையது. வலியான் பறவை என் தலைவனை வழிபட்டு முத்தியின்பம் பெற்றதென்பர் பெரியோர். ஒருவேளை காக்கையினஞ் சார்ந்த குயில் என்னவரை அணுகும்போது வலியான் அவரருகே இருக்குமாயின் அனைத்தும் கெட்டுவிடும். எனவே குயிலும் தூதுக்கு உகந்ததாகாது.
என் மனதையே தூதுவிடலாமென்றால் அது அவரை நேரிற்கண்டதும் நாணமுற்று அவரை நெருங்கத் தயங்கும். எனவே தன்மனமும் அப்பணிக்கு ஏற்றதன்று எனப் பலவாறாகச் சிந்தித்துத் தமிழையே தூது விட முடிவெடுக்கிறாள் தலைவி என்கிறது தமிழ்விடு தூது எனும் இலக்கியம்.
அந்தச் சுவையான பாடல் இதுதான்.
ஓண்கமலத்து
அன்னந் தனைவிடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னந்தான் கண்டறியா தென்பாரே
மன்னெந்தாய்
அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே
தப்பாது
மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமர்பாற் சாராதே
ஏனைப்பூங்
கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே
ஆகையினால்
இந்தமனத் தைத்தூதா யேகென்பேன் இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே…
இக்குறைபாடுகளை எல்லாம் கடந்து வெல்லவல்ல தமிழே தனக்காகத் தூது செல்லவல்லது எனத் தேருகிறாள் தலைவி என்கிறது தமிழ்விடு தூது.
கந்தவனம் கோணேஸ்வரன்
25.05.2020
கருத்துகள்
கருத்துரையிடுக