கவிஞன் குரல் 1 (பாரதியார்)
கவிஞன் குரல் 1 (பாரதியார்)
என்ன மகாகவியே ஏக்கத்தின் வெளிப்பாடோ
நின்னை நெஞ்சிருத்தி நிறைகவிதை சொல்வன்யான்
முன்னைப் பெருமைகளை மகிழ்வுடனே ஏற்றதுபோல்
‘இன்னும் வளருமெங்கள் தமிழ்’;அதனை ஏற்றருள்க.
அகத்தியனும் காப்பியனும் அருமறையோன் வள்ளுவனும்
இகத்தினிலே இணையில்லாப் பெரியோரென் றுணர்கின்றோம்
மகிழ்ந்ததமிழ் வாடுமென்று மாபாவி உரைத்தசொல்
அகத்தினிலே உறைத்ததுவோ ஐயதுயர் விட்டொழிக.
நின்வழியில் வந்தவன்யான் நிமிர்ந்துநின்று பேசுகிறேன்
என்னுயிராம் இனியதமிழ் என்றென்றும் வாழ்ந்திருக்கும்
பொன்வேண்டல் புகழ்வேண்டல் போர்த்தமிழர் குணமன்று
தன்னாவி தனையிழந்தும் தமிழ்காப்பான் குமரனின்று.
நமக்காக நாடிருக்கும் நமக்கென்றோ ரரசிருக்கும்
தமர்பிறரென் றெண்ணாமல் தமிழ்த்தாயின் அன்பிருக்கும்
இமயங்க டந்துமெங்கள் இன்பத்தமிழ் மூச்சிருக்கும்
இமைப்போதும் சோராம லுழைக்கின்ற திறனிருக்கும்.
எட்டுத்திக்கும் வெற்றிக்கனி எம்மவர் பறித்துநிற்க
கொட்டிமுழக் குந்தமிழால் குவலயத்தை அளந்துவர
தொட்டணைத்துக் கணினியிலுந் தூயதமிழ் விதைத்துயர
எட்டடியில் மட்டிடாமல் எண்கோடி அடியெடுத்தார்.
இன்னுமென்ன தயக்கமய்யா எங்கள்தமிழ் சிறந்தோங்கும்
மின்வழியில் இலக்கியங்கள் மேதினியில் பரந்துநிற்கும்
என்னவென் றறியாமல் உரைத்தவனை மன்னித்துப்
பொன்னுலகி லமர்ந்திருக்கும் பாரதியே அமைதிகொள்வாய்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
04.05.2020
என்ன மகாகவியே ஏக்கத்தின் வெளிப்பாடோ
நின்னை நெஞ்சிருத்தி நிறைகவிதை சொல்வன்யான்
முன்னைப் பெருமைகளை மகிழ்வுடனே ஏற்றதுபோல்
‘இன்னும் வளருமெங்கள் தமிழ்’;அதனை ஏற்றருள்க.
அகத்தியனும் காப்பியனும் அருமறையோன் வள்ளுவனும்
இகத்தினிலே இணையில்லாப் பெரியோரென் றுணர்கின்றோம்
மகிழ்ந்ததமிழ் வாடுமென்று மாபாவி உரைத்தசொல்
அகத்தினிலே உறைத்ததுவோ ஐயதுயர் விட்டொழிக.
நின்வழியில் வந்தவன்யான் நிமிர்ந்துநின்று பேசுகிறேன்
என்னுயிராம் இனியதமிழ் என்றென்றும் வாழ்ந்திருக்கும்
பொன்வேண்டல் புகழ்வேண்டல் போர்த்தமிழர் குணமன்று
தன்னாவி தனையிழந்தும் தமிழ்காப்பான் குமரனின்று.
நமக்காக நாடிருக்கும் நமக்கென்றோ ரரசிருக்கும்
தமர்பிறரென் றெண்ணாமல் தமிழ்த்தாயின் அன்பிருக்கும்
இமயங்க டந்துமெங்கள் இன்பத்தமிழ் மூச்சிருக்கும்
இமைப்போதும் சோராம லுழைக்கின்ற திறனிருக்கும்.
எட்டுத்திக்கும் வெற்றிக்கனி எம்மவர் பறித்துநிற்க
கொட்டிமுழக் குந்தமிழால் குவலயத்தை அளந்துவர
தொட்டணைத்துக் கணினியிலுந் தூயதமிழ் விதைத்துயர
எட்டடியில் மட்டிடாமல் எண்கோடி அடியெடுத்தார்.
இன்னுமென்ன தயக்கமய்யா எங்கள்தமிழ் சிறந்தோங்கும்
மின்வழியில் இலக்கியங்கள் மேதினியில் பரந்துநிற்கும்
என்னவென் றறியாமல் உரைத்தவனை மன்னித்துப்
பொன்னுலகி லமர்ந்திருக்கும் பாரதியே அமைதிகொள்வாய்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
04.05.2020
கருத்துகள்
கருத்துரையிடுக