இருமனம் இணைந்தனவே.

இருமனம் இணைந்தனவே.


அண்ணலின் விழிகள் அவளை நோக்கின
அவளின் விழிகள் நிலத்தைத் தாக்கின
இன்னுயிர் மகிழ்ந்திடக் காதல் பிறந்தது
இருமனம் இணைந்தன வேயென வுரைத்தது.


அவளின் விழிவழி அவன் நுழைந்தான்
அவனுரு காத்திட அவள் விழித்தாள்
இமைதனை மூடிட அவள் மறந்தாள்
இமையே நான்என அவன் பகன்றான்.


அவனுடற் குருதியில் அவள் நிறைந்தாள்
அவன்நெறி வலுப்பெறத் துணை புரிந்தாள்
திருமண பந்தம் நெருங்கிடும் வண்ணம்
இருமனங் கலந்துயிர் வாழ்வ மென்றார்.


கந்தவனம் கோணேஸ்வரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5