யாரினும் யாரினும்
குறள் மொழியின்பம் 2
யாரினும் யாரினும்
“யாரினும் காதலம் என்றேனோ ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)
யாரினும் காதலம் என்றன்யான் நின்தோழி
யாரினும் மாதுமேல் காதலோ என்கிறாள்
ஊரிடை யானொரு பெண்ணையும் நோக்கிலன்
காரிகை இவளன்றிக் கனவிலுங் காண்கிலன்.
அன்புடைச் சொல்லெனக் கதிதுன்பந் தருவதோ
.இன்புடை யாள்நெஞ்சம் எனையெண்ணிக் கவல்வதோ
துன்புடை மனத்தனாய் தூயதங்காய் நின்னிடம்
என்றுயர் உரைப்பதன்றி வேறுவழி காண்கிலன்.
என்றன் ஆவியவள் என்நினைவின் தோழியவள்
பொன்றாக் காதலெனும் பொய்கையிலே பூத்தமலர்
இன்றென் இன்புரைக் கேற்பில்லாப் பொருள்கொண்டாள்
நன்றோ ஈதென்று நவில்வாயோ தோழியிடம்?
காதல் மிகுpயால் கவிதைதரு தேன்தமிழால்
வேதம் போலினிக்கும் என்றெண்ணிச் சொல்லிவைத்தேன்
மோதல் விளைக்கின்றாள் முகிழ்பொருளைத் தொலைத்துவிட்டாள்
ஏதம் எனிலென்று மன்னிக்கச் சொல்வாயோ?
பாசப் பிணைப்புண்டு பலகோடிக் காதலுண்டு
நேசம் நிறைநெஞ்சின் நினைவிலவள் மட்டுமுண்டு
நீசக் குணமெதுவும் நெஞ்சமதிற் துளியுமில்லை
ஆசைமனம் கலங்குவதை அவளிடம்நீ கூறாயோ?
கந்தவனம் கோணேஸ்வரன்.
13.05.2020
யாரினும் யாரினும்
“யாரினும் காதலம் என்றேனோ ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)
யாரினும் காதலம் என்றன்யான் நின்தோழி
யாரினும் மாதுமேல் காதலோ என்கிறாள்
ஊரிடை யானொரு பெண்ணையும் நோக்கிலன்
காரிகை இவளன்றிக் கனவிலுங் காண்கிலன்.
அன்புடைச் சொல்லெனக் கதிதுன்பந் தருவதோ
.இன்புடை யாள்நெஞ்சம் எனையெண்ணிக் கவல்வதோ
துன்புடை மனத்தனாய் தூயதங்காய் நின்னிடம்
என்றுயர் உரைப்பதன்றி வேறுவழி காண்கிலன்.
என்றன் ஆவியவள் என்நினைவின் தோழியவள்
பொன்றாக் காதலெனும் பொய்கையிலே பூத்தமலர்
இன்றென் இன்புரைக் கேற்பில்லாப் பொருள்கொண்டாள்
நன்றோ ஈதென்று நவில்வாயோ தோழியிடம்?
காதல் மிகுpயால் கவிதைதரு தேன்தமிழால்
வேதம் போலினிக்கும் என்றெண்ணிச் சொல்லிவைத்தேன்
மோதல் விளைக்கின்றாள் முகிழ்பொருளைத் தொலைத்துவிட்டாள்
ஏதம் எனிலென்று மன்னிக்கச் சொல்வாயோ?
பாசப் பிணைப்புண்டு பலகோடிக் காதலுண்டு
நேசம் நிறைநெஞ்சின் நினைவிலவள் மட்டுமுண்டு
நீசக் குணமெதுவும் நெஞ்சமதிற் துளியுமில்லை
ஆசைமனம் கலங்குவதை அவளிடம்நீ கூறாயோ?
கந்தவனம் கோணேஸ்வரன்.
13.05.2020
கருத்துகள்
கருத்துரையிடுக