கனக நெடுங்கடை திறமினோ.
கனக நெடுங்கடை திறமினோ.
செயங்கொண் டானெனும் சீரிய புலவன்
நயங்கொண் டுரைத்த கலிங்கத்துப் பரணியில்
வயங்கொள் வஞ்சியர் கொழுநரை மறுத்து
தயங்கின ரேகடை திறந்திடல் வெறுத்து
கனக நெடுங்கடை திறந்திடு வீரென
மனம் நெகிழ்ந்தனர் மாண்புடை வீரர்கள்
இனிதாம் அந்த ஊடலின் அழகினை
இன்புறும் வண்ணம் உரைத்திடு வோமே.
“வாரணம் ஆயிரம் கண்டு: வெற்றித்
தோரணம் தன்னைப் பூண்டு: நின்
பேரினில் காதல் கொண்ட: அன்புப்
பித்தனுக் காய்நெடுங் கடை திறமினோ.
நாடு காக்கும் பணிக்காய்ச் சென்று
ஆடும் களத்தே பகைவரைக் கொன்று
தேடும் உன்றன் அன்பன் வந்தேன்
தேவி கனகநெடுங் கடை திறமினோ.
போரில் ஆயிரம் இடர்களை வென்று
புறமுது கில்லா ஆற்றல் கொண்டு
வீரம் செறிந்த சாதனை புரிந்த
வெற்றி மகற்காய்க் கடை திறமினோ.
கனக நெடுங்கடை அடைத்து வைத்து
மனதி னிலேபொய்க் கோபங் கொண்டு
தினமும் ஏங்கிய தேன்மலர் உறவைத்
தள்ளுதல் முறையோ தாழ் திறமினோ.
வேலின் ஒலிக்கு அஞ்சா நெஞ்சம்
நூலிடை யாள்விழிக் கஞ்சுதல் முறையோ
பாலில் வடித்த பாவாய் உன்றன்
பாசத் துணைக்காய்த் தாழ் திறமினோ.
சோழன் புலிக்கொடி கலிங்க மண்ணில்
கோல மிட்டுப் பறந்திடல் பாராய்
வேழம் அனைய வேந்தன் படைதரு
வீரன் வந்தனன் நெடுங்கடை திறமினோ.
காலம் மாளினும் கடமை பெரிதென
ஞாலம் வியக்கும் பரணி எழுந்திட
ஆல மரம்போல் அரசு தழைத்திட
வாழ்வோ னுக்காய்க் கடை திறமினோ.
உன்றன் விழியின் ஓரம் வியர்த்தது
என்றன் வேல்முனை வேழம் பெயர்த்தது
சிந்தை முழுதும் நிறைந்த பெண்ணே
செந்தமிழ்ப் பாவாய் நெடுங்கடை திறமினோ.
வாசலில் பார்த்தனை வரவின்றிச் சோர்ந்தனை
நேசத்திற் துடித்தனை நினைந்துயிர் வருந்தினை
பாசத்தில் விளைந்த பசுங்கொடியே யென்
ஆசைக் கிளியே நெடுங்கடை திறமினோ.
இன்னொரு யுத்தம் இப்போதைக் கில்லை
என்னருந் துணையே இனிப்பிரி வில்லை
பொன்னுடல் தழுவிப் புதுக்கதை பேசி
இன்னுயி ராவோம் கடைதிற வாயோ?.
கந்தவனம் கோணேஸ்வரன்
27.04.2020
செயங்கொண் டானெனும் சீரிய புலவன்
நயங்கொண் டுரைத்த கலிங்கத்துப் பரணியில்
வயங்கொள் வஞ்சியர் கொழுநரை மறுத்து
தயங்கின ரேகடை திறந்திடல் வெறுத்து
கனக நெடுங்கடை திறந்திடு வீரென
மனம் நெகிழ்ந்தனர் மாண்புடை வீரர்கள்
இனிதாம் அந்த ஊடலின் அழகினை
இன்புறும் வண்ணம் உரைத்திடு வோமே.
“வாரணம் ஆயிரம் கண்டு: வெற்றித்
தோரணம் தன்னைப் பூண்டு: நின்
பேரினில் காதல் கொண்ட: அன்புப்
பித்தனுக் காய்நெடுங் கடை திறமினோ.
நாடு காக்கும் பணிக்காய்ச் சென்று
ஆடும் களத்தே பகைவரைக் கொன்று
தேடும் உன்றன் அன்பன் வந்தேன்
தேவி கனகநெடுங் கடை திறமினோ.
போரில் ஆயிரம் இடர்களை வென்று
புறமுது கில்லா ஆற்றல் கொண்டு
வீரம் செறிந்த சாதனை புரிந்த
வெற்றி மகற்காய்க் கடை திறமினோ.
கனக நெடுங்கடை அடைத்து வைத்து
மனதி னிலேபொய்க் கோபங் கொண்டு
தினமும் ஏங்கிய தேன்மலர் உறவைத்
தள்ளுதல் முறையோ தாழ் திறமினோ.
வேலின் ஒலிக்கு அஞ்சா நெஞ்சம்
நூலிடை யாள்விழிக் கஞ்சுதல் முறையோ
பாலில் வடித்த பாவாய் உன்றன்
பாசத் துணைக்காய்த் தாழ் திறமினோ.
சோழன் புலிக்கொடி கலிங்க மண்ணில்
கோல மிட்டுப் பறந்திடல் பாராய்
வேழம் அனைய வேந்தன் படைதரு
வீரன் வந்தனன் நெடுங்கடை திறமினோ.
காலம் மாளினும் கடமை பெரிதென
ஞாலம் வியக்கும் பரணி எழுந்திட
ஆல மரம்போல் அரசு தழைத்திட
வாழ்வோ னுக்காய்க் கடை திறமினோ.
உன்றன் விழியின் ஓரம் வியர்த்தது
என்றன் வேல்முனை வேழம் பெயர்த்தது
சிந்தை முழுதும் நிறைந்த பெண்ணே
செந்தமிழ்ப் பாவாய் நெடுங்கடை திறமினோ.
வாசலில் பார்த்தனை வரவின்றிச் சோர்ந்தனை
நேசத்திற் துடித்தனை நினைந்துயிர் வருந்தினை
பாசத்தில் விளைந்த பசுங்கொடியே யென்
ஆசைக் கிளியே நெடுங்கடை திறமினோ.
இன்னொரு யுத்தம் இப்போதைக் கில்லை
என்னருந் துணையே இனிப்பிரி வில்லை
பொன்னுடல் தழுவிப் புதுக்கதை பேசி
இன்னுயி ராவோம் கடைதிற வாயோ?.
கந்தவனம் கோணேஸ்வரன்
27.04.2020
கருத்துகள்
கருத்துரையிடுக