கல்யாண வைபோகமே…

கல்யாண வைபோகமே…



சிவனும் உமையும் இணைந்தது போலே
சுவையுந் தமிழும் கலந்தது போலே
கவியும் பொருளும் பிணைந்தது போலே
அவளு மவனும் இணைவது மணமே



கண்ணன் கொண்ட ராதையின் அன்பென
மன்னன் ராமனின் சீதைகொள் பணிவென
எண்ணம் நிறைந்த என்னவள் மலர்வென
வண்ணம் காண்பது வளர்திரு மணமே



உற்றோர் உறவுகள் வாழ்த்தி மகிழக்
கற்றோர் மனதால் கனிந்து நெகிழக்
கொற்றம் பெற்ற இருமனக் கலப்பில்
வெற்றி யுறுங்கல் யாணவை போகமே


கந்தவனம் கோணேஸ்வரன்
21.04.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5