கல்யாண வைபோகமே…
கல்யாண வைபோகமே…
சிவனும் உமையும் இணைந்தது போலே
சுவையுந் தமிழும் கலந்தது போலே
கவியும் பொருளும் பிணைந்தது போலே
அவளு மவனும் இணைவது மணமே
கண்ணன் கொண்ட ராதையின் அன்பென
மன்னன் ராமனின் சீதைகொள் பணிவென
எண்ணம் நிறைந்த என்னவள் மலர்வென
வண்ணம் காண்பது வளர்திரு மணமே
உற்றோர் உறவுகள் வாழ்த்தி மகிழக்
கற்றோர் மனதால் கனிந்து நெகிழக்
கொற்றம் பெற்ற இருமனக் கலப்பில்
வெற்றி யுறுங்கல் யாணவை போகமே
கந்தவனம் கோணேஸ்வரன்
21.04.2020
சிவனும் உமையும் இணைந்தது போலே
சுவையுந் தமிழும் கலந்தது போலே
கவியும் பொருளும் பிணைந்தது போலே
அவளு மவனும் இணைவது மணமே
கண்ணன் கொண்ட ராதையின் அன்பென
மன்னன் ராமனின் சீதைகொள் பணிவென
எண்ணம் நிறைந்த என்னவள் மலர்வென
வண்ணம் காண்பது வளர்திரு மணமே
உற்றோர் உறவுகள் வாழ்த்தி மகிழக்
கற்றோர் மனதால் கனிந்து நெகிழக்
கொற்றம் பெற்ற இருமனக் கலப்பில்
வெற்றி யுறுங்கல் யாணவை போகமே
கந்தவனம் கோணேஸ்வரன்
21.04.2020
கருத்துகள்
கருத்துரையிடுக