இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியற் கட்டுரை - 03- புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல்

புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல் 2017 செப்டெம்பர் 21ந் தேதியன்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பக்கான உத்தேச யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கைக்கென வரையப்பட்ட யாப்பு யோசனைகளில் முதன் முறையாக பிரதான இரண்டு சிங்களக்கட்சிகளும் தமிழர்களின் மிகப்பெரிய அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருமனப்பட்டுச் செயல்பட்டு இணக்கம் காணப்பட்ட அரசியலமைப்புக்கான உத்தேச யோசனைகள் இவையெனில் மிகையன்று. இத்தகைய யோசனைகள், அச்சொட்டாக இல்லாவிடினும் மேலும் மெருகூட்டப்பட்ட திருத்தங்களுடன் புதிய அரசியலமைப்பாக ஏற்றுக்கொள்ளப்படுதற்கான நிகழ்தகவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. உத்தேச முன்மொழிவுகள் பற்றி எவர் எத்தகைய பரப்புரைகளைச் செய்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளும், மலையகக் கட்சிகளும் இணைந்து செயல்படுகின்ற, இலங்கை மக்களின் ஏற்பைப்பெற்ற அரசியல் யோசனைகளாக இவை பரிணமித்துள்ளன என்பதை நிராகரிக்க முடியாது. இவ்வியோசனைகளில் பலவிடயங்கள் உள்ளடக்கப்பட்டால...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

பதவியல் 4 இடைச் சொற்கள்.  இடைநிலை. ஒரு பகுபதத்தில் பகுதி, விகுதி என்பவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பவை இடைநிலைகளாகும். விகுதியானது திணை, பால் எண், இடம் என்பவற்றைக் காட்டுவதுபோல் வினைச் சொற்களுடன் இணைந்துவருகின்ற இடைநிலைகள் காலத்தைக் காட்டுகின்றன. பெயர்ச்சொற்களிடையே வருகின்ற இடைநிலைகள் காலங்காட்டுவதில்லை. இவற்றின் தன்மையைக் கொண்டு அறிஞர்கள் மூவகைப் படுத்தியுள்ளனர். அவை பெயர் இடைநிலை, வினை இடைநிலை, எதிர்மறை இடைநிலை என்பவையாம்.  பெயர் இடைநிலை: இவை பெயர்ச்சொற்களின் பகுதி, விகுதிகளுக்கு இடையே வருகின்றதெனினும் காலங்காட்டுவதில்லை. உதாரணமாக, அறிஞன், வலைஞன், சுவைஞன் என்பவற்றில் வருகின்ற ‘ஞ’கர மெய் இடைநிலை எனப்படுகிறது. அதேபோல் வலைச்சி என்ற பகுபதத்தில் வருகின்ற ‘ச்’, குறத்தி, வண்ணாத்தி ஆகிய பகுபதங்களிடையே வருகின்ற ‘த்’ என்பன இடைநிலைகளாகும். இவை உண்மையில் இடைநிலைச் சொற்கள்தாமா என்ற மயக்கம் எழுவதற்கும் வாய்ப்பு இல்லாமலில்லை. இவை தனியெழுத்தாக அமைவதும், உடம்படு மெய்போல் தோற்றமளிப்பதும் இத்தகைய மயக்கத்துக்கு ஏதுவாகின்றன. உடம்படு மெய் என்பது வேறு: இடைநில...

ITAK -03

நாம் கடந்து வந்த பாதை 3 1961ஆம் ஆண்டு. சிறிமாவின் ஆட்சிக்காலம். வடக்கு கிழக்கு எங்ஙணும் தமிழரசுக் கட்சியின் தலைமையில் அரசுக்கெதிராகத் தமிழ்மக்கள் திரள்திரளாகக்கூடிச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். திருக்கோணமலையிலும் கச்சேரி முன்னால் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய கச்சேரி  கடற்கரையின் முன்னால் இப்போதுள்ள கடற்படையினரின் அருங்காட்சியகக் கட்டடத்தில் அமைந்திருந்தது. எனது தாயாரும் தினமும் காலையில் வந்து கட்டடத்துக்கு முன்னால் தெருவோரம் விசாலமாக அமைந்திருந்த நிலப்பரப்பில் அமர்ந்து விடுவார். என் தாயாரைப்போல் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் காலையிலேயே கூடிவிடுவார்கள். எனக்கு அப்போது பத்து வயது. நானும் தாயாருடன் வந்து அமர்ந்து கொள்வேன். தந்தையார் எங்களிருவரையும் அழைத்துவந்து விட்டுவிட்டுத் தன் பணிக்காகச் சென்றுவிடுவார். கச்சேரி முடங்கிப் போய்க் கிடந்தது. தமிழர் மாவட்டங்களில் அமைந்திருந்த அனைத்துக் கச்சேரிகளுக்கும் இதுதான் நிலை. அரச நிர்வாகம் தமிழர்நிலங்களில் செயலிழந்து போனது. அவ்வப்போது பொலிசாரும் இராணுவத்தினரும் வந்து  அறப்போரா...

அரங்கக் கவிதை 1 - தி.த.க.

 எங்கள் சிந்தையில்  தி.த.க. திருக்கோணமலை தந்த தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் நினைவு விழாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் -ஆண்டு சரியாக நினைவில் இல்லை- பாடிய கவிதை இது. திருக்கோணமலை சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த கலைஞர் கலாவினோதன் சித்தி அமரசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.                                                இந்தத் தமிழரங்கில் இனிதே கவிதைசொலத்                                               தந்த வாய்ப்புக்காய்த் தமிழாலே வணங்குகிறேன்.                                               முந்தைத் தமிழ்ப்பெருமை முகிழ்சாம்பல் தீவுதனில்           ...

ITAK

நாம் கடந்து வந்த பாதை 2 1954ம் ஆண்டு. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் சேர்.ஜோன் கொத்தலாவல தலைமையில் அரசோச்சிய காலம். பிரித்தானிய அரச தலைவரான எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். எமது நாட்டுக்கும் அவரே மகாராணியார் என்பதால் இலங்கையரசால்  அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் சிங்களமும் ஆங்கிலமுமே பயன்படுத்தப்பட்டன. தமிழ் முற்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டும எனத் தமிழரசுக்கட்சி முடிவெடுத்தது. அப்போது தமிழரசு வாலிப முன்னணியின் முதற் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதேவருடம் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ்.நகரசபை முன்றலில் தமிழ்க்காங்கிரஸ் சார்பில் திரு.சி.அருளம்பலம் தலைமையில் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலங்கார ரதத்தில் பிரதமரை இருத்தி கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் இழுத்துவந்தனர். பிரதமர் மேடையை நெருங்கியதும் ஏற்கனவே பார்வையாளர்கள்போல் மேடையைச் சூழ்ந்திருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ...

வெருகற்பா 10 - வெருகலன் இவன்.....

                         வெருகலன் இவன்.                                                  கிழக்குத்  தமிழக  நடுவினிலே                         கிளைவிடு  மாவலிக்  கரைதனிலே                         அழகன்  ஒருவன்  கொலுவிருப்பான்                         அறுமுகன்  எனஅவன்  சிரித்திருப்பான்.                                                                                       ...

வெருகற்பத்து 09- வேலெடுத்து வருகிறோம்.....

                            வேலெடுத்து வருகிறோம்.           வருகிறோம்  வருகிறோம்  வாசல்தேடி  வருகிறோம்                   வண்ணமயில்  வாகனனைக்  காணநாங்கள்  வருகிறோம்           தெருவழியே  ஊர்வலமாய்த் திரண்டுநாங்கள்  வருகிறோம்.           தெய்வத்திரு  முருகனவன்  அருளைநாடி  வருகிறோம்.           வேலெடுத்துச்  குருவழியில்  விருப்புடனே  நடக்கிறோம்           வெற்றித்திரு  முருகன்புகழ்  பாடிநாங்கள்  நடக்கிறோம்           ஆறெழுத்து  மந்திரத்தை  அகமகிழ்ந்து  சொல்கிறோம்           ஐயனவன்  பாதங்களே  அபயம்என்று  வருகிறோம்.           திருமலையின் ...

அரசியற்கட்டுரை -02 -தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக்கிளையும் அதன் தற்போதைய நிலையும்.

தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக்கிளையும் அதன் தற்போதைய நிலையும். திருக்கோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைமை பரிதாபமாகிக் கிடக்கிறது. அமரர் இராஜவரோதயனாரால் திருக்கோணமலையில்  விதை தூவப்பட்டு, அமரர் ஏகாம்பரம், அமரர் நேமிநாதன், அமரர் தங்கத்துரை போன்றோரால் சிறப்பிக்கப்பட்டு இன்றைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கட்சி இது. திரு வீர.சுப்பிரமணியம், அமரர் மாணிக்கசபாபதி, அமரர் ஈழத்துநாதன், அமரர் எலட்ரிக்கல் ராஜன் ஆகியோரால் கண்ணுங்கருத்துமாக வளர்க்கப்பட்டு புதிய தலைமுறையினருக்காக விட்டுச் செல்லப்பட்ட கட்சி இது. 1977ல் திரு.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலந்தொட்டு, பல இன்னல்களுக்கு மத்தியிலும் செயலாளர் நாயகமாக, கட்சித் தலைவராக, இப்போது எம்மை வழிநடத்தும் தமிழர் தலைவராகச் செயலாற்றி வருவதன்மூலம் பேணப்பட்ட கட்சி இது. தமிழர் விடுதலைக் கூட்டணியாகச் செயல்பட்டபோது அதன் பிரதான சக்தியாக இயங்கியதோடல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியதன் பின்னரும் அதன் தலைமைச் சக்தியாகச் செயல்படுகின்ற கட்சி இது. ஆனால் இன்று இத்துணைப் பெருமை நிறைந்த தமிழரசுக் கட...

வெருகற்பத்து 08- வேலன் வருகிகிறான்.....

                                              வேலன் வருகிறான்..                         வேலன்  வருகிறான்  எங்கள்  வேலன்  வருகிறான்                         வெருகலாற்  றங்கரை  யமர்ந்த  வேலன்  வருகிறான்                          பாலன்  வருகிறான்  எங்கள்  பாலன்  வருகிறான்                         பார்வதியாள்  மைந்தன்  தேரில்  ஏறி  வருகிறான்.                                                              ...

வெருகற்பத்து 07- சேவற்கொடியோன்.....

                                                 சேவற் கொடியோன்..                                                   பாழுந்  துயர்  ஓடி  மறைந்  திட                                                  பாதை  தெளி  வாகத்  தெரிந்  திட                                                  சேவற்  கொடி  யோனை  வழிபடு  மடி  யார்கள்                                 ...

வெருகற்பத்து 06- தென்கயிலை வேலன்

                                                     தென்கயிலை வேலன்..                   தென்கயிலைப்  பூமியிலே  தென்புலத்து  எல்லையிலே                   தென்றல்வரும்  பாதையிலே  அமர்ந்திருப்  பாய்நீ                   தேவியிரு  மாதரோடும்  மகிழ்ந்திருப்  பாய்நீ                  அன்புகொண்ட  அடியவர்கள்  ஆனந்தப்பூச்  சொரிந்திருக்க                  அன்னைஉமை  பாலகனாய்  அமர்ந்திருப்  பாய்நீ                   ஆற்றங்கரை  வேலவனாய்  மகிழ்ந்திருப்  பாய்நீ.         ...

வெருகற்பத்து 05 - தமிழ்க் கடவுள்......

                                      தமிழ்க் கடவுள்.                                           தேவர்குலம்  காக்கவந்த  எங்கள்  வேலவன்                                           தீந்தமிழர்க்  கடவுளென  வந்த  பாலகன்                                           மாவலியாள்  கரையமர்ந்து  அருள்சுரக்  கின்றான்                                           மாதர்வள்ளி  யானையுடன்  வலம்வரு  கின்றான்           ...

வெருகற்பத்து 04- வெற்றி முருகன்.....

                                வெற்றி முருகன்...                                        வெற்றித்திரு  முருகனுக்கு  அரகரோகரா                                        வேலெடுத்த  குமரனுக்கு  அரகரோகரா                                        சுற்றிப்பகை  வென்றவற்கு  அரகரோகரா                                        சூரனைவ  தைத்தவர்க்கு  அரகரோகரா.                                       ...