அரசியற் கட்டுரை - 03- புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல்
புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல் 2017 செப்டெம்பர் 21ந் தேதியன்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பக்கான உத்தேச யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கைக்கென வரையப்பட்ட யாப்பு யோசனைகளில் முதன் முறையாக பிரதான இரண்டு சிங்களக்கட்சிகளும் தமிழர்களின் மிகப்பெரிய அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருமனப்பட்டுச் செயல்பட்டு இணக்கம் காணப்பட்ட அரசியலமைப்புக்கான உத்தேச யோசனைகள் இவையெனில் மிகையன்று. இத்தகைய யோசனைகள், அச்சொட்டாக இல்லாவிடினும் மேலும் மெருகூட்டப்பட்ட திருத்தங்களுடன் புதிய அரசியலமைப்பாக ஏற்றுக்கொள்ளப்படுதற்கான நிகழ்தகவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. உத்தேச முன்மொழிவுகள் பற்றி எவர் எத்தகைய பரப்புரைகளைச் செய்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளும், மலையகக் கட்சிகளும் இணைந்து செயல்படுகின்ற, இலங்கை மக்களின் ஏற்பைப்பெற்ற அரசியல் யோசனைகளாக இவை பரிணமித்துள்ளன என்பதை நிராகரிக்க முடியாது. இவ்வியோசனைகளில் பலவிடயங்கள் உள்ளடக்கப்பட்டால...