வெருகற்பத்து 09- வேலெடுத்து வருகிறோம்.....

                           வேலெடுத்து வருகிறோம்.

          வருகிறோம்  வருகிறோம்  வாசல்தேடி  வருகிறோம்
                  வண்ணமயில்  வாகனனைக்  காணநாங்கள்  வருகிறோம்
          தெருவழியே  ஊர்வலமாய்த் திரண்டுநாங்கள்  வருகிறோம்.
          தெய்வத்திரு  முருகனவன்  அருளைநாடி  வருகிறோம்.

          வேலெடுத்துச்  குருவழியில்  விருப்புடனே  நடக்கிறோம்
          வெற்றித்திரு  முருகன்புகழ்  பாடிநாங்கள்  நடக்கிறோம்
          ஆறெழுத்து  மந்திரத்தை  அகமகிழ்ந்து  சொல்கிறோம்
          ஐயனவன்  பாதங்களே  அபயம்என்று  வருகிறோம்.

          திருமலையின்  தென்னவனைத்  தேடிநாங்கள்  வருகிறோம்
          தேவர்குலம்  காத்தமுருகன்  காலடிக்கு  வருகிறோம்
          ஒருதிருவாய்  உலகம்போற்றும்  முருகன்நாமம்  சொல்லியே
          உணர்வுபொங்க  ஊனுருக  நடந்துநாங்கள்  வருகிறோம்

          வெருகலாற்றங்  கரையமர்ந்த  வேலனிடம்  வருகிறோம்
          வீரச்சித்திர  வேலாயுத  முருகனிடம்  வருகிறோம்
          ஒருமனதாய்ப்  பாடியாடிக்  கந்தனிடம்  வருகிறோம் 
          உலகமுய்ய  உதித்தமுருகக்  கடவுளிடம்  வருகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5