வெருகற்பா 10 - வெருகலன் இவன்.....
வெருகலன் இவன்.
கிழக்குத் தமிழக நடுவினிலேகிளைவிடு மாவலிக் கரைதனிலே
அழகன் ஒருவன் கொலுவிருப்பான்
அறுமுகன் எனஅவன் சிரித்திருப்பான்.
கிழக்குத் தமிழக.....
அழுதிடும் அடியார் ஓர்புறமாம்
அகம்நெகிழ்ந் திடுவோர் ஓர்புறமாம்
தொழுதிடும் அடியார் ஓர்புறமாம்
தொடர்ந்திடும் அடியார் ஓர்புறமாம்.
கிழக்குத் தமிழக….
சரவணன் துணையென நடந்திருப்பார்
சற்குரு அவன்எனப் புகழ்ந்துரைப்பார்
வெருகலன் இவனென வியந்துரைப்பார்
வேலவன் அருளில் மிதந்திருப்பார்.
கிழக்குத் தமிழக….
அவனே கலியுகக் கடவுளென்பார்
அடியவர் போற்றும் வரதனென்பார்
சிவனாய் உமையாய்க் கணபதியாய்
சிந்தையில் நிறைபவன் முருகனென்பார்.
கிழக்குத் தமிழக...
வெருகற்பா முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக