வெருகற்பத்து 07- சேவற்கொடியோன்.....
சேவற் கொடியோன்..
பாழுந் துயர் ஓடி மறைந் திடபாதை தெளி வாகத் தெரிந் திட
சேவற் கொடி யோனை வழிபடு மடி யார்கள்
சூழும் பகை வாடி ஒதுங் கிட
சோகம் இல தாக மயங் கிட
தாவும் மயில் வாகன னின்பதம் பணி வார்கள்.
நாளும் இனி தாக விடிந் திட
நாலும் சரி யாக நடந் திட
ஆற்றங் கரை யானின் அருள் பெற வேண்டும்
வாழும் வழி சாலச் சிறந் திட
வாழ்க்கை முறை யாக நடந் திட
சாற்றுந் திருப் புகழால் வழி பட வேண்டும்.
வேதம் புகழ் மாது மக வென
வெற்றித் திரு வேலன் இவ னென
நாளும் அடி யார்கள் தொழு திடும் குமரேசா
பாதம் பணி வோர்கள் நலம் பெற
பாழும் வினை வேர்கள் அறுந் திட
வேலும் மயி லோ னின் அருள் பெறுவோமே.
கருத்துகள்
கருத்துரையிடுக