ITAK
நாம் கடந்து வந்த பாதை 2
1954ம் ஆண்டு. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் சேர்.ஜோன் கொத்தலாவல தலைமையில் அரசோச்சிய காலம். பிரித்தானிய அரச தலைவரான எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். எமது நாட்டுக்கும் அவரே மகாராணியார் என்பதால் இலங்கையரசால் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வரவேற்பில் சிங்களமும் ஆங்கிலமுமே பயன்படுத்தப்பட்டன. தமிழ் முற்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டும எனத் தமிழரசுக்கட்சி முடிவெடுத்தது. அப்போது தமிழரசு வாலிப முன்னணியின் முதற் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
அதேவருடம் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ்.நகரசபை முன்றலில் தமிழ்க்காங்கிரஸ் சார்பில் திரு.சி.அருளம்பலம் தலைமையில் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலங்கார ரதத்தில் பிரதமரை இருத்தி கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் இழுத்துவந்தனர்.
பிரதமர் மேடையை நெருங்கியதும் ஏற்கனவே பார்வையாளர்கள்போல் மேடையைச் சூழ்ந்திருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் அதுவரையில் மறைத்து வைத்திருந்த கறுப்புக்கொடிகளை உயர்த்தி அசைத்து “பிரதமரே திரும்பிப் போங்கள்;.” என்று ஆந்கிலத்திலும் தமிழிலும் உரத்துக் கோஷமிட்டனர்.
முதன்முதலாக இலங்கைப் போராட்டவரலாற்றில் கறுப்புக்கொடி பயன்பாட்டுக்கு வந்த தினம் அதுதான். பிரதமர் வெலவெலத்துப் போனார். பார்வையாளர்களும் உற்சாகத்துடன் கோஷமெழுப்பினார்கள். பொலிசார் பாய்ந்து வந்தனர். தடியடிப் பிரயோகம் நடந்தது. அமிர்தலிங்கம் மூக்கிலிருந்து இரத்தம் சிந்தியது; அவரது வெள்ளுடை நிறம்மாறியது.
சுதந்திர இலங்கையின் தமிழர் போராட்ட வரலாற்றில் முதன்முதலாகச் சிந்தப்பட்ட இரத்தத்துக்குச் சொந்தக்காரர் அமிர்தலிங்கமானார். பிற்காலத்தில் 1957 பெப்ரவரி 4ஆந் திகதி திருக்கோணமலையில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே போராட்டத்தின் முதலாவது களப்பலியாகும்.
1954ம் ஆண்டு. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் சேர்.ஜோன் கொத்தலாவல தலைமையில் அரசோச்சிய காலம். பிரித்தானிய அரச தலைவரான எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். எமது நாட்டுக்கும் அவரே மகாராணியார் என்பதால் இலங்கையரசால் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வரவேற்பில் சிங்களமும் ஆங்கிலமுமே பயன்படுத்தப்பட்டன. தமிழ் முற்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டும எனத் தமிழரசுக்கட்சி முடிவெடுத்தது. அப்போது தமிழரசு வாலிப முன்னணியின் முதற் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
அதேவருடம் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ்.நகரசபை முன்றலில் தமிழ்க்காங்கிரஸ் சார்பில் திரு.சி.அருளம்பலம் தலைமையில் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலங்கார ரதத்தில் பிரதமரை இருத்தி கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் இழுத்துவந்தனர்.
பிரதமர் மேடையை நெருங்கியதும் ஏற்கனவே பார்வையாளர்கள்போல் மேடையைச் சூழ்ந்திருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் அதுவரையில் மறைத்து வைத்திருந்த கறுப்புக்கொடிகளை உயர்த்தி அசைத்து “பிரதமரே திரும்பிப் போங்கள்;.” என்று ஆந்கிலத்திலும் தமிழிலும் உரத்துக் கோஷமிட்டனர்.
முதன்முதலாக இலங்கைப் போராட்டவரலாற்றில் கறுப்புக்கொடி பயன்பாட்டுக்கு வந்த தினம் அதுதான். பிரதமர் வெலவெலத்துப் போனார். பார்வையாளர்களும் உற்சாகத்துடன் கோஷமெழுப்பினார்கள். பொலிசார் பாய்ந்து வந்தனர். தடியடிப் பிரயோகம் நடந்தது. அமிர்தலிங்கம் மூக்கிலிருந்து இரத்தம் சிந்தியது; அவரது வெள்ளுடை நிறம்மாறியது.
சுதந்திர இலங்கையின் தமிழர் போராட்ட வரலாற்றில் முதன்முதலாகச் சிந்தப்பட்ட இரத்தத்துக்குச் சொந்தக்காரர் அமிர்தலிங்கமானார். பிற்காலத்தில் 1957 பெப்ரவரி 4ஆந் திகதி திருக்கோணமலையில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே போராட்டத்தின் முதலாவது களப்பலியாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக