ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும்.
ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும். ஆங்கில அறிவென்பது அரசியலுக்கு ஒரு மேலதிகத் தகைமையேயன்றி வேறன்று. தங்கள் குடும்பவசதி காரணமாக ஆங்கிலத்தில் கல்விபெற்றவர்களும் ஆங்கிலமோகம் கொண்ட சில பாமரர்களும்தான் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆங்கில அறிவடையவர்களெல்லாம் சாதனையாளர்கள்போன்றும் ஏனையோர் இயலாதார்போன்றும் நடந்து கொள்வது மடைமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடே. நாங்கள் தலைவர்கள் எனக் கொண்டாடும் .பொன்னம்பலம் இராமநாதன், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், கணபதி காங்கேசு பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முருகேசு சிவசிதம்பரம், இராஜவரோதயம் .சம்பந்தன், புதிதாய் முளைக்கும் க.வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் அனைவரும் ஆங்கிலமொழிமூலம் கல்வி பெற்றவர்களே. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்றவர்களே. இவர்களை எடுத்துப்பாருங்கள்: அனைவரும் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. உன்னையும் என்னையும் போன்று தெருக்களில் விளையாடியவர்களல்லர். பட்டம்விட்டு உடலெங்கும் புழுதியில் புரண்டவர்களல்லர். பஞ்சம் தெரியாமல் வளர்ந்தார்கள்: பெற்றோர் தேடிவைத்த பணத்தில் உயர்கல்வி பெற்றார்க...