தேர்தல் 2020.

தேர்தல் 2020.


தேர்தலொன்று வருகுதென்ற சேதிவந் தாச்சு
சேதிவந்த தாலேபதவி மோதலுண் டாச்சு
ஆர்வத்தடன் ஆயிரம்பேர் முன்னிலை வருவார்
அவர்களிலும் ஒருசிலர்தான் பதவிகள் பெறுவார்


மேடைபோட்டுச் சத்தமிட்டுக் கொள்கைவிளக் குவார்
மேன்மையான பாதைதமதே என்றுங் கூறுவார்
கூடவரு வோர்கள்சிலர் மாலைபோ டுவார்
கொள்கைக்குன்று எங்களவர் என்று புகழுவார்.


பொய்களுடன் புனைவுகளை அள்ளி வீசுவார்
புரட்சியொன்றே எங்கள்வழி என்றும் பேசுவார்
கைகள்தட்டி ஆர்ப்பரித்து மக்கள் மகிழுவார்
காலந்தந்த பரிசுஇவரே என்றும் நம்புவார்.


புரபரப்பாய் நடக்கும்தேர்தல் முடிந்து போனபின்
பார்லிமென்றுக் கதிரையிலே ஐயா அமருவரர்
சுறுசுறுப்பாய் ஓடித்திரிந்த இளைஞர் எல்லோரும்
சொர்க்கம்காலில் வீழ்ந்ததென்று வெடிகள் கொளுத்துவரர்


ஐந்துவருட காலம்ஐயா அமைதி கொள்ளுவார்
அடுத்ததேர்தல் வருகையில்தான் கண்ணை விழிப்பார்
எங்கேஎங்கள் பழையதொண்டர் என்று தேடுவார்
எப்போதும்நாம் இணைந்திருத்தல் அவசிய மென்பார்


விடிவைத்தேடும் மக்கள்இன்றே விழிப்புக் கொள்ளுங்கள்
விவேகமான முடிவெடுத்து வாக்குப் போடுங்கள்
அடிமைப்புத்தி அற்றுப்போகச் செயலில் காட்டுங்கள்
அன்பும்அறிவும் நிறைந்தவரை உயர்த்தி வையுங்கள்.



கந்தவனம் கோணேஸ்வரன்
03.03.2020



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5