இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலரே…மௌனம் ஏன்?

மலரே…மௌனம் ஏன்? உன்னைக் கண்டேன் உவகை கொண்டேன் என்னைத் தந்தேன் இதயம் மகிழ்ந்தேன். பதற்றம் ஏனோ பாவாய் உன்றன் உதட்டை அசைத்து ஒருசொல் கூறாய். பார்த்த விழிகள் பனித்து நின்றன யாத்த கவிதை தனித்து நொந்தது. ஏக்கம் தானோ எனக்கு நீதி? நோக்கம் என்ன கூறடி தேவி. மலரே மலரே மௌனம் ஏனோ? புலரும் காதல் துயரம் தானோ? கந்தவனம் கோணேஸ்வரன் 19.12.2019

எனது மண்பெற்ற இளைய தலைமுறைக்கு…

 எனது மண்பெற்ற இளைய தலைமுறைக்கு……… அரசியலுக்கு வருபவர்கள் நேர்மை,  ஒழுக்கம்,  அறிவு,  துணிவு,  செயலாண்மை ஆகிய ஐந்து திறன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையின்தான் நாடு நலம்பெறும்: மக்களும் நன்மையடைவர்கள். துரதி~;டவசமாக இலங்கையில் இத்தகைய சிறப்புகள் அரசியல்வாதிகளிடம் காணப்படுவதில்லை. நேர்மை இல்லாதவர்கள் அரசியலுக்க வந்தால் பெரியவர்கள் போலவும் சாதனையாளர்கள் போலவும் தோற்றம் பெறக்கூடும்; ஆனால் மக்கள் மனதிலே அவர்கள் நிறைவான இடத்தைப் பெறமாட்டார்கள். பல அரசியல்வாதிகள் கோடிகோடியாகச் சொத்துச் சேர்த்தமைக்கு நேர்மையின்மைதான் பிரதான காரணம். இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடலாம். ஆயினும் மக்கள் இவர்களைத் திருடர்கள் வரிசையிலேதான் வைத்திருப்பார்கள். பலபேரை நாம் கண்முன்னாலேயே பார்க்கிறோம்: நேற்றுவரை தெருவில் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அரசியலுக்கு வந்து சிலகாலத்துக்குள்ளாகவே தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திப் பரம்பரைத் தனவந்தர்கள் போலப் பவனி வருகிறார்கள். இவர்களுக்கு இத்துணைச் சிறியகாலத்துள் எவ்வாறு அவ்வளவு சொத்துகள் சேர்ந்தன என்ற ...

மாமரத்துப் பூவழகி.

மாமரத்துப் பூவழகி. மாமரத்துப் பூவழகி மஞ்சள்நிறப் பெண்ணழகி தாமரைப்பூக் கண்ணழகி தளிர்போன்ற கையழகி பூமரத்தின் கீழிருந்து யார்வரவைப் பார்த்தனையோ தாமதமேன் ஆகுதென்று தவித்தேதான் போயினையோ? போனமச்சான் பணிமுடிஞ்சாப் பட்டென்னு வந்திடுவான் ஆணழகன் மனசெல்லாம் ஆத்தாநீ நெறைஞ்சிருக்கே ஏனிந்தக் கலக்கமம்மா எண்ணமெலாம் நிறைவேறும் மானேயுன் மனசுபோல மணவாழ்வு தானமையும் அஞ்சாதே அஞ்சுகமே ஆசைமச்சான் வந்திடுவான் அஞ்சாறு மூடைகளில் அன்பையள்ளிக் கொட்டிடுவான் பஞ்சாகிப் போகுமுந்தன் பார்வைதந்த ஏக்கமெல்லாம் நெஞ்சாரத் தழுவிடுவான் நிம்மதியைத் தந்திடுவான். காத்திருத்தல் கூடப்பெண்ணே காதலுக்கு இன்பமடி பூத்திருக்கும் விழிச்சாறு பூந்தேனாய்ச் சொட்டுதடி சேர்த்துவைச்ச ஆசையெல்லாம் செங்கரும்பே தீருமடி செஞ்சடையா னோடுமையாய் உன்வாழ்வு சிறக்குமடி. கந்தவனம் கோணேஸ்வரன் 22.12.2019

மன்னவன் வந்தானடி..

மன்னவன் வந்தானடி.. இதழில் தேன்துளி பருகிட இதயம் மகிழ்ந்து தழுவிடக் கதைகள் சொல்லி மகிழ்ந்திடக் காலம் முழுதும் களித்திட, உதய வானின் நிலவென உள்ளம் போற்றும் உறவென விதியை வெல்லுந் துணையென விரைந்தே என்னவன் வந்திட, விழிகள் விரைந்து போரிட விரல்கள் நுழைந்து தளமிடப் பரவுந் தேக உணர்வினிற் பாரை மறைத்துப் புதைத்திட, எரியும் மேனி குளிர்ந்திட ஏக்கங் குறைந்து தணிந்திடப் புரியும் வகையிற் புரிந்திடப் புதுப்புதுக் கலைகள் தொடர்ந்திட, கன்னக் கதுப்பினிற் கவிசொலக் காவியம் படைத்துளங் களிப்புற மன்னவன் வந்தான் அடிதோழி மகிழ்ந்தேன் அவனுள் எனைத்தேடி. கந்தவனம் கோணேஸ்வரன் 10.02.2020

உளமாரத் தொழுதிடுவோம்.

உளமாரத் தொழுதிடுவோம். சின்னக்கை யானாலும் சிந்தாமல் சிதறாமல் அன்னக்கை யாவதை யார்தான் மறுப்பரோ? கன்னிப் பயிர்நட்டுக் கதிரறுக்கும் வரைகாத்து சின்னக் கைககளால்  சோறுதரும் பேறென்ன? உழவர் தெய்வமெனில் உழுங்கரங்கள் சக்தியாமோ மழலைக் கரங்களிவை மாண்புநிறை சிவமாமோ? உழவின்றேல் உணவில்லை உணவின்றேல் உயிரில்லை அழகான பூமியிலே ஆவதென்று எதுவுமில்லை. மழலைகளை மனத்திருத்தி மகிமைபெறு உழுதொழிலை உலகுய்ய உயர்த்திடுவோம் உளமாரத் தொழுதிடுவோம். கந்தவனம் கோணேஸ்வரன் 14.02.2020

இன்பத் தமிழென்றே முழக்கம் செய்வோம்

இன்பத் தமிழென்றே முழக்கம் செய்வோம் . என்று பிறந்தனள் என்றெவர் அறியா தின்று பிறந்தவள் போலெழில் உருவினள் ஆதி இலக்கணம் அகத்தியம் கண்டவள் நீதி அகப்புற இலக்கியம் தந்தவள் வணிகம் கண்டவள் வழ்வியல் கொண்டவள் கணிதக் கலையின் கரைதனைத் தொட்டவள் பக்திச் சுவைக்குப் பாவிருந் தளித்தவள் பற்பல சிற்பச் சாத்திரம் அறிந்தவள் இன்றுங் கணினியில் ஆட்சி புரிபவள் என்றும் பட்டி மன்றம் ஆள்பவள் அன்னைத் தமிழே நின்னை என்றும் இன்பத் தமிழென முழங்குதல் செய்வோம். கந்தவனம் கோணேஸ்வரன்.  07.01.2020

இருவரிக்கவிதை

கம்பன் கவிக்கூடம்  முத்தமிழ்க் களம் இருவரிக்கவிதை (பதினான்கு சொற்கள்) ஓய்விற் கூட உளத்தை வளர்க்கும் வாய்ப்பைத் தருவது விளையாட்டு மாதர் மனதில் மகிழ்ச்சி பொங்க மலர்ந்தது பல்லாங் குழியாட்டம். கந்தவனம் கோணேஸ்வரன். 30.01.2020

பேரழகிப் பெண்ணிவளோ.

பேரழகிப் பெண்ணிவளோ. கூந்தல் அந்தக் கார்முகிலின் தங்கையாமோ சேர்ந்த முகம் சிரித்திருக்கும் திங்களாமோ மைவிழிகள் உரைப்பதெலாம் இனிய பொய்களோ மரகதங்கள் போட்டுவைத்த முத்துப் பைகளோ கைவிரல்கள் காந்தள் கொண்ட மெல்லிதழாமோ செவ்விதழ்கள் கோவை தந்த செந்நிறமாமோ நூலிழையும் நாணுமிடை நினது என்பனோ காலளந்த பூமிபனிக் குழம்பு என்பனோ விண்ணை விட்டுப் பூமிவந்த வெண்ணிலவோ கண்ணை யீர்க்கும் பேரழகுப் பெண்ணிவளோ? கந்தவனம் கோணேஸ்வரன். 30.12.2019

இலக்கியத்துளி 14

இலக்கியத்துளி 14 சொக்கநாதப் புலவர் சிறந்த சிவபக்தர். சிவனல்லால் வேறு தெய்வமும் உளதோ என்று கேட்பவர். பலநாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற கவலை அவருக்கு. யார் யாருக்கோவெல்லாம் அருளும் பெருமான் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவரை வாட்டிற்று. சிவபிரானைத் திட்டித் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அம்பலவாணரிடம் நேரே செல்கிறார். “சாக்கிய நாயனார் உன்னைக் கல்லால் அடித்தார்: அருச்சுனன் உன்னை வில்லால் அடித்தான்: கண்ணப்ப நாயனார் செருப்பாலேயே அடித்தார்:  நீ வந்திக்குக் கூலியாளாகப் போனபோது பாண்டியன் பிரம்பால் அடித்தான். இவர்களுடைய செய்கைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றெண்ணி அருள் புரிந்த சிவனே,  இப்படியான எதனையும் செய்யாது உன்மீது மலர்களை எறிந்த மன்மதனை எரித்த நீதியென்னை?” என்று கடிந்து கொள்கிறார் . அப்போதும் புலவரின் கோபம் தீரவில்லை. தொடர்கிறார். “நற்குலப் பெண்ணான உமாதேவிக்கு இடப்புறத்தைத் தியாகம் செய்தவனே,  கல்லால் எறிந்தவருக்கும்,  செருப்பால் உதைத்தவருக்கும்,  வில்லால் அடித்தவருக்கும் அருள் புர...

இலக்கியத்துளி 13.

இலக்கியத்துளி 13. ஓட்டக்கூத்தர் ஒரு பெரும்புலவர். தன் மன்னனான சோழனுக்குப் பெண்கேட்டுப் பாண்டியனிடம் செல்கிறார். பாண்டியனும் அவரைச் சீண்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ என்னவோ, பாண்டியர் குடும்பத்திற் பெண் எடுப்பதற்குச் சோழனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுவிட்டான். ஓட்டக்கூத்தருக்குக் கோபம் வந்துவிட்டது. “சோழன் ஏறும் குதிரையான கோரத்துக்கு நீ ஏறும் குதிரையான கனவட்டம்  நிகராகுமா? சோழநாட்டு நதியான காவிரிக்கு உன்னாட்டு நதி வைகையை ஒப்பிடக்கூடுமோ? ஆத்திமாலைக்கு உன் வேப்பம்பூ மாலை இணையாகுமா? சோழன் என்கிற ஆதவனுக்கு முன்னால் பாண்டியன் என்கிற சந்திரன் ஒளிவீச இயலுமோ? மீன்கொடியைக் கொண்ட மீனவனான உன்னால் வீரருக்கெல்லாம் வீரனாகிவிட முடியுமா? எங்குமே வெற்றியைக் குவிக்கின்ற புலிக்கொடிக்கு நிகராக உன் மீன்கொடியை உயர்த்திப் பிடிக்கலாகுமா? உன் கொற்கை நகரத்தைச் சோழனின் உறந்தை நகருக்கு ஒப்பிடல் சரியோ? உன் பாண்டிநாடு எங்கள் சோழநாட்டுக்கு எந்த வகையிலேனும் ஈடாகுமா?” என்றெல்லாம் கேட்டுவிடுகிறார். இதற்குப் பாண்டியன் பதில் சொல்லவில்லை. மாறாக, ஒட்டக்கூத்தரின் தமிழ்வீச்சில் மயங்கிக் கிடந்தான். ஆனால் அவ...
 இலக்கியத்துளி 12 பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்றொரு புலவர். அவரது பெயரில்தான் பொன்னும் காசும் இருந்ததே யொழிய வாழ்க்கையில் வறுமைமட்டுமே அவருக்குத் துணை நின்றது. எத்தனை நாள்தான் வறுமையைக் கூட வைத்துக்கொள்ள முடியும்? வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. தன்னைத்தானே நொந்து கொள்ளத் தொடங்கினார். “அட கெட்டுப்போனவனே… எத்தனையோ தொழில் உலகத்தில் இருக்கத்தக்கதாகக் கல்விதான் பெரிது என்று விழுந்துவிழுந்து கற்றாயே.. யாது பயன் இப்போது விளைந்தது? மனதைத் திடப்படுத்திக்கொண்டு மற்றவர்களை வசியப்படுத்தி ஏமாற்றக் கற்றுக்கொண்டாயா? கம்பை வைத்து ஆடிப் பிறரை மகிழ்விக்கவாவது கற்றுக் கொண்டாயா? செப்பிடி வித்தைகள் செய்து பிழைக்கவாவது தெரிந்து கொண்டாய? உடலை விற்றுப் பிழைக்கும் கணிகையாகவேனும் பிறந்தாயா? இந்தச் சனியன்பிடித்த தமிழை மறந்துவிட்டுப் பெண்களுக்குக் காதல்தூது போயாவது வயிறுவளர்க்கப் பழகிக் கொண்டாயா? என்ன பிறப்படா உன் பிறப்பு?” என்ற தன்னைத்தானே கடிந்து கொள்கிறார். புலவரல்லவா… தன்துயரைப் பாடலாகவே கொட்டிவிடுகிறார். அடகெடுவாய்: பலதொழிலு மிருக்கக் கல்வி  அதிகமென்று கற்றுவிட்டோம் அறிவில் ல...