எனது மண்பெற்ற இளைய தலைமுறைக்கு……… அரசியலுக்கு வருபவர்கள் நேர்மை, ஒழுக்கம், அறிவு, துணிவு, செயலாண்மை ஆகிய ஐந்து திறன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையின்தான் நாடு நலம்பெறும்: மக்களும் நன்மையடைவர்கள். துரதி~;டவசமாக இலங்கையில் இத்தகைய சிறப்புகள் அரசியல்வாதிகளிடம் காணப்படுவதில்லை. நேர்மை இல்லாதவர்கள் அரசியலுக்க வந்தால் பெரியவர்கள் போலவும் சாதனையாளர்கள் போலவும் தோற்றம் பெறக்கூடும்; ஆனால் மக்கள் மனதிலே அவர்கள் நிறைவான இடத்தைப் பெறமாட்டார்கள். பல அரசியல்வாதிகள் கோடிகோடியாகச் சொத்துச் சேர்த்தமைக்கு நேர்மையின்மைதான் பிரதான காரணம். இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடலாம். ஆயினும் மக்கள் இவர்களைத் திருடர்கள் வரிசையிலேதான் வைத்திருப்பார்கள். பலபேரை நாம் கண்முன்னாலேயே பார்க்கிறோம்: நேற்றுவரை தெருவில் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அரசியலுக்கு வந்து சிலகாலத்துக்குள்ளாகவே தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திப் பரம்பரைத் தனவந்தர்கள் போலப் பவனி வருகிறார்கள். இவர்களுக்கு இத்துணைச் சிறியகாலத்துள் எவ்வாறு அவ்வளவு சொத்துகள் சேர்ந்தன என்ற ...