மாமரத்துப் பூவழகி.

மாமரத்துப் பூவழகி.


மாமரத்துப் பூவழகி மஞ்சள்நிறப் பெண்ணழகி
தாமரைப்பூக் கண்ணழகி தளிர்போன்ற கையழகி
பூமரத்தின் கீழிருந்து யார்வரவைப் பார்த்தனையோ
தாமதமேன் ஆகுதென்று தவித்தேதான் போயினையோ?


போனமச்சான் பணிமுடிஞ்சாப் பட்டென்னு வந்திடுவான்
ஆணழகன் மனசெல்லாம் ஆத்தாநீ நெறைஞ்சிருக்கே
ஏனிந்தக் கலக்கமம்மா எண்ணமெலாம் நிறைவேறும்
மானேயுன் மனசுபோல மணவாழ்வு தானமையும்


அஞ்சாதே அஞ்சுகமே ஆசைமச்சான் வந்திடுவான்
அஞ்சாறு மூடைகளில் அன்பையள்ளிக் கொட்டிடுவான்
பஞ்சாகிப் போகுமுந்தன் பார்வைதந்த ஏக்கமெல்லாம்
நெஞ்சாரத் தழுவிடுவான் நிம்மதியைத் தந்திடுவான்.


காத்திருத்தல் கூடப்பெண்ணே காதலுக்கு இன்பமடி
பூத்திருக்கும் விழிச்சாறு பூந்தேனாய்ச் சொட்டுதடி
சேர்த்துவைச்ச ஆசையெல்லாம் செங்கரும்பே தீருமடி
செஞ்சடையா னோடுமையாய் உன்வாழ்வு சிறக்குமடி.


கந்தவனம் கோணேஸ்வரன்
22.12.2019




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5