உளமாரத் தொழுதிடுவோம்.

உளமாரத் தொழுதிடுவோம்.

சின்னக்கை யானாலும் சிந்தாமல் சிதறாமல்
அன்னக்கை யாவதை யார்தான் மறுப்பரோ?

கன்னிப் பயிர்நட்டுக் கதிரறுக்கும் வரைகாத்து
சின்னக் கைககளால்  சோறுதரும் பேறென்ன?

உழவர் தெய்வமெனில் உழுங்கரங்கள் சக்தியாமோ
மழலைக் கரங்களிவை மாண்புநிறை சிவமாமோ?

உழவின்றேல் உணவில்லை உணவின்றேல் உயிரில்லை
அழகான பூமியிலே ஆவதென்று எதுவுமில்லை.

மழலைகளை மனத்திருத்தி மகிமைபெறு உழுதொழிலை
உலகுய்ய உயர்த்திடுவோம் உளமாரத் தொழுதிடுவோம்.

கந்தவனம் கோணேஸ்வரன்
14.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5