இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெருகற்பத்து 1. ஆற்றங்கரை வேலவா.....

                                           கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற  முருகனாலயமாகத் திகழும் வெருகலம்பதியின்  திருவிழா  நடைபெறுகின்றது.  பதினோராந் திகதி திங்கட்கிழமையன்று தீர்த்தோற்சவம் இடம்பெற இருப்பதன் காரணமாக திருக்கோணமலையிலிருந்து  இவ்வாலயம் நோக்கித்  தமது பாதயாத்திரையை மேற்கொள்ளும்   பக்த அடியார்கள் முருகனின் திருநாமத்தை உச்சரித்து உளம்கனிந்து பக்தி பரவசத்தில் தமைமறந்து களிப்புற்று பயணக்களைப்பை உணராதிருக்க இவ் வெருகற்பத்து யாக்கப்பட்டு நாளொன்றாய் பத்து நாட்களுக்கும் வௌியிடப்படுகிறது...........                                              கடவுள் வாழ்த்து                          "வேழ முகக்கடவுள் விரைந்தென் அருகமர்ந்து         ...

இந்து சமயம் - விளக்கம் 05

கடவுளரும் குடும்பம் நடத்துவதுபோல எங்கள் சமயத்தில் சித்திரிக்கப்படுகிறதே : இதன் காரணம் என்ன? அறிந்தவற்றைக் கொண்டுதான் அறியாத ஒன்றை விளக்கமுடியும். ஏவுகணை அல்லது விண்ணோடம் எவ்வாறு வேலை செய்கின்றது என்று பத்துவயதுச் சிறுவன் கேட்கக்கூடும்.  “தேவையற்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது.” என்று அவனுக்குத் தடைபோட்டால் அது பாவம். விஞ்ஞான முறைப்படிதான் விளக்கப்போகிறேன், என்று புறப்பட்டால் அது பையனைப் பைத்தியக்காரனாக்கும் காரியமாகிவிடும். எனவே வாணவெடியை உதாரணங்காட்டி, அது தீச்சுவாலையின் பின்புற உந்துதலினால் முன்னோக்கி எழுகின்ற தன்மையை ஒப்பிட்டு, ஏவுகணை அல்லது விண்ணோடம் இயங்கும் முறையை விளக்குவதே சிறுவனின் கேள்விக்குச் சரியான விடையாகிறது. அப்போதுதான் சிறுவனால் அது எப்படி இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதுபோல, சாதாரண மக்களும் இறைவனைப் புரிந்துகொள்ள வேண்டும்: அவர். தேவையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் கடவுளின் தன்மையைக் குடும்பங்கள் மூலம் உருவகித்து இருக்கிறார்கள். இதன்மூலம் கடவுள் எமக்கு நல்ல தந்தையாக, அன்புத் தாயாக, கூடிவிளையாடும் சகோதரனாக எம்மோடு உறவாடு...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 : பகுதி 03

 பதவியல் 03 இடைச்சொற்கள். இடைச்சொற்கள் பகுக்கப்பட முடியாதவை.  எனவே அவை எப்போதும் பகாப்பதங்கள் என்ற வகுதிக்குள் அடங்கி விடுகின்றன. இடைச்சொற்கள் பெயராகவோ வினையாகவோ அல்லாமல் அவற்றுடன் இணைந்துநின்று பெயர்ச் சொற்களதும், வினைச்சொற்களதும் வலிமையை அதிகப்படுத்திப் பொருள் விளங்க வைக்கும் பணிகளைச் செய்கின்றன. எனினும் இவை தனித்து நிற்கும்போது பொருள் தருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இடைச்சொற்களின் பணி இடைச் சொற்கள் இலையேல் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் ஏறத்தாழ, செயலற்றுப் போய்விடுகின்றன என்பது ஒப்புக்கொள்ளத்தக்க உண்மை. பெயர் அல்லது  வினைச் சொற்களைச் சொல்லவந்த கருத்துக்கேற்பத் தயார்படுத்துவதும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும் இடைச்சொற்களின் பணிகளாகின்றன.  இதன்படி ஒரு சொல்லின் பகுதி தவிர்ந்த அனைத்து ஒட்டுகளும் இடைச்சொற்களே என்பது தெளிவான முடிவாகும். நடந்தான் என்ற வினைச்சொல்லை எடுத்துக்கொண்டால் நட என்ற வினையடியைத் தவிர்ந்த அனைத்து இணைவுகளும் இடைச்சொற்கள் சார்ந்தவையே.   கூனி என்ற பெயரை நோக்கின் கூன் எனும் அடிச் சொல்லுடன் இ...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 : பகுதி 02

                                                         பதவியல் 2 ஓரெழுத்தாலோ ஒன்றுக்குமேற்பட்ட எழுத்துகளாலோ ஆக்கப்பட்டுப் பொருள் வெளிப்படுத்தி நிற்பவை பதங்கள் அல்லது சொற்கள் எனப்படுகின்றன. அவை பெயர், வினை, இடை, உரி என நான்கு வகையின. பகுபதம் : பகாப்பதம்; பதங்கள் அனைத்தும் பிரிக்கப்படக் கூடியவை, பிரிக்கப்பட முடியாதவை என இரு வகைக்குள் அடங்குகின்றன. பிரிக்கப்படக் கூடியவை அதாவது பகுக்கப்படக் கூடியவை பகுபதங்கள் எனவும் பகுக்கப்பட முடியாதவை பகாப்பதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பகுபதம் ஒரு பதத்தைப் பகுத்தாலும் அச்சொல் பொருள்தருமாயின் அது பகுபதம் எனப்படுகிறது. பொதுவாக பெயர்ச்சொற்களிலும் வினைச்சொற்களிலும் அநேகமானவை பகுபதங்களாகவே காணப்படுகின்றன. இடைச் சொற்களும் உரிச்சொற்களும் பகுக்கப்பட முடியாதவை . எனவே அவை பகாப்பதங்கள் வகுதிக்குள் நிற்கின்றன. அதேபோல் பெயர்ச்சொற்களிலும் வினைச் சொற்களிலும் பகாப்பதங்களும் இருக்கின்றன. பகுபதங்கள் ...

கவிதை 02

                 மக்கள் சேவையாளன்..... சேவையென்று  வருபவர்க்கு  நேர்மையிருக்க  வேண்டும் சீர்மைநிறைந்த  வாழ்க்கைநெறியில்  நடந்திருக்க  வேண்டும் பூவைப்போல  மென்மையான  மனமிருக்க  வேண்டும் பொங்குகின்ற  எரிமலையும்  உள்ளிருக்க  வேண்டும். துணிச்சலுடன்  கருத்துச்சொல்லும்  பண்பிருக்க  வேண்டும் துட்டரையும்  திருத்திச்செல்லும்  பக்குவமும்  வேண்டும் தனித்துநின்ற  போதும்தலையை  நிமிர்த்திநிற்க  வேண்டும் தன்னலத்தை  உதறித்தள்ளும்  தைரியமும்  வேண்டும். நீதிநெறி  பேணுவோரைப்  போற்றிவாழ  வேண்டும் நேர்மையான  மாந்தருக்குத்  தலைவணங்க  வேண்டும் மோதினால்தான்  நீதியெனில்  மோதிப்பார்க்க  வேண்டும் மோதும்போதும்  தருமநெறி  காத்துநிற்க  வேண்டும். அற்பகுணம்  படைத்தவரை  அறிந்துவைக்க  வேண்டும் அருகிருக்கும்  வேளையவரில்  கவனமிருக்க  வே...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 பகுதி 01

பதவியல் 1 பதம், சொல், கிளவி, மொழி என்பன ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகும். மனிதன் ஒலிகளை இணைத்து எண்ணங்களை வெளிப்படுத்த முனைந்தபோது சொல் பிறந்தது எனலாம். ஆ, ஊ என்று பேசிய மனிதன் அவ்வொலிகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் சொற்களை ஆக்கிக் கொண்டது போலவே ஒலியன்களான எழுத்துகளையும் பயன்படுத்தி சொற்களுக்கு வரிவடிவம் கொடுத்தான். ஒலிகளால் ஆக்கப்பட்டு ஒலியன்களால் வரிவடிவம் கொடுக்கப்பட்ட சொற்கள் தொடர்பான விளக்கங்களே பதவியல் எனப்படுகிறது. சொற்கள் ஓரெழுத்தாலோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளாலோ உருவாகின்றன.  நீ, வா, போ, கா, பா போன்றவை ஓரெழுத்தாலான சொற்களாகும். பதம், காண், மரம், வேர். நட, சிங்கம் என்பவை ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளாலான சொற்களாகும். பதங்களை ஓசைவடிவில் பார்க்கும்போது அவற்றை ஓரசைச் சொற்கள், ஈரசைச் சொற்கள், மூவசைச் சொற்கள் எனவும் வகைப்படுத்தலாம்.  மூவசைக்கும் மேற்பட்ட சொற்கள் பொதுவாக எந்தமொழியிலும் பேச்சுவழக்கில் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதில்லை. அருமையாக அவை இடம்பெறக்கூடும். ' 'அசையையும்" 'எழுத்தையும்' ஒன்றெனக் கொண்டு குழம்பிவிடக் கூடா...

மக்களின் மனம் வெல்லா தமிழ் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண சபையும்

கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதன் காலம் நீடிக்கப்படலாம் என்ற எண்ணம் நிலவியபோதும் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஒருவேளை காலம் நீடிக்கப்படுமானால் அது தமிழர்களுக்கு கசப்பான அனுபவமாகவே அமையும் என்பது தமிழ்மக்களுடைய கருத்து. மாகாணசபையின் ஐந்தாண்டு காலமும் முஸ்லிம் முதலமைச்சர்களாலேயே நிருவகிக்கப் பட்டிருக்கிறது. 2012 செப்டெம்பரில் தேர்தல் நடைபெற்றபோது முஸ்லிம் மக்களுடன் இணைந்தே ஆட்சி அமைப்போம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேடைதோறும் பரப்புரை செய்து வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் நிலைமை தலைகீழாயிற்று. அத்தேர்தலில், ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி 200,044 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனங்களுமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. த.தே.கூட்டமைப்பு 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் கைப்பற்றின. ஐ.தே.கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றிக் கொண்டன. முஸ்லிம் காங்கிரஸ் நினைத்திருந்தால் சம்பந்தரின் பரப்பு...

கவிதை 01

                           அரசியல் அரசியலுக்  கென்ன  தகுதி  தேவை அடக்க  மாகக்  கேட்டாளென்  மனைவி இரகசியமாய்ச்  சொல்லுகிறேன் எவர்க்கும்நீ  சொல்லிடாதே… சம்மதமா  என்றேன்  நான்  மெதுவாய் சம்மதமே  என்றாள்  அவள்  இதமாய் பதவியொன்றே  அரசியலில்  குறிக்கோள்  -அதைப் பறிகொடுத்தால்  அவர்க்குஅது  கடற்கோள் விதவிதமாய்ப்  பொய்கள்  சொல்லி வேண்டாத  வேலை  செய்து எதுவரினும்  கொடுத்துஅவர்  பெறுவார்  -கதிரை எவர்தரினும்  ஓடிச்சென்று  விழுவார். பசித்திருப்போர்  தனிலும்பயன்  கொள்வார்  -அவர் பட்டினியைக்  காட்டிப்  புரட்சி  செய்வார் பசித்தவர்கள்  பசித்திருக்க புசித்திருப்பார்  வயிறுஉப்ப பக்குவமாய்  மேடையேறிப்  பொழிவார்  -ஏழைப் பட்டினியைச்  சொல்லித்தினம்  அழுவார். கொடிபிடிக்க  ஊரவரை  அழ...

இந்துசமயம் விளக்கம் 04

கேள்வி பதில்...... அவ்வாறாயின் நாம் விரும்பும் வடிவத்தில் கடவுளை வழிபடலாமா? இதை அனுமதித்தால் வழிபாட்டுக்குப் பயன்படும் கடவுளர் உருவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகாதா? கடவுள் வழிபாடு என்பது மன அமைதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் நிகழ வேண்டுமென்பதால் அவரவர் விரும்பிய வடிவங்களில் வணங்குதற்கு இந்து தர்மம் அனுமதியளிக்கின்றது. ஆனால் இந்த அனுமதியை எல்லைமீறிப் பயன்படுத்தலாகாது. ஒருவர் தாயின்மேல் நிறைந்த அன்பு கொண்டவராக இருக்கலாம். இதன் பிரதிபலிப்பால் தாயின் வடிவில் இறைவனைக் கண்டு வணங்குவதிற் தவறேதும் இல்லை. இன்னொருவர், தந்தையை, குருவை, மகான்ஒருவரை இறைவடிவில் கண்டு வணங்கலாம். அதிற் பிழையேதுமில்லை. ஆனால் அத்தகைய ஒருவர் தன் தாயை, தந்தையை, குருவை, தான்போற்றும் மகானைத் தான் வணங்குவதுபோல் பிறரும் வணங்க வேண்டுமென எதிர்பார்க்கலாகாது. அது சரியுமல்ல. அத்துடன், வாழும் அல்லது வாழ்ந்த ஒருவரின் வடிவத்தூடாகக் கடவுளைக் காணமுயலும் ஒருவர், அந்த வடிவம்பற்றிய உயர்ந்த எண்ணத்துக்கு இடையூறு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும். இதேபோல் ஊருக்கு நன்மைசெய்து தம்மை வருத்திக் கொண...

வில்லூன்றிக் கந்தன் தேரில் வருகிறான் (20.08.2017)

படம்
பன்னிரு  தோளன் வள்ளிம  ணாளன்     பாங்குடன்  தேரில்  வருகின்றான் தன்னுயிர்த்  தெய்வ யானையம்  பாளுடன்      தரணியைக்  காக்க  வருகின்றான். வில்லினை  யூன்றி வேலெடுத்  தாடி      வெம்பகை  போக்க  வருகின்றான். அல்லலை  யறுத்து ஆனந்தங்  கொடுத்து      அடியவர்  போற்ற  வருகின்றான். தகப்பனின்  குருஅவன் தமிழ்த்திரு  உருஅவன்      தாயுமை  யாள்மடி  தவழ்கின்றவன். அகப்பையில்  துயரற அனைவரும்  நலமுற       அடியவர்  தமக்கருள் பொழிகின்றவன். நல்லையிற்  கந்தன் நற்சந்  நிதியினன்  நாடே  பணிகதிர்  காமத்தான். எல்லையில்  உகந்தை இங்குவில்  லூன்றி      எழுந்தருள்  புரியும்  அறுமுகத்தான். வணங்கிடும்  அடியார் வருவினை  போக்கி       வனப்புடை  வாழ்வை  அருள்கின்றவன் கணங்களும்  பணிந்திட    கவலைகள்  மறைந்...