வில்லூன்றிக் கந்தன் தேரில் வருகிறான் (20.08.2017)

பன்னிரு  தோளன்
வள்ளிம  ணாளன்
    பாங்குடன்  தேரில்  வருகின்றான்
தன்னுயிர்த்  தெய்வ
யானையம்  பாளுடன்
     தரணியைக்  காக்க  வருகின்றான்.


வில்லினை  யூன்றி
வேலெடுத்  தாடி
     வெம்பகை  போக்க  வருகின்றான்.
அல்லலை  யறுத்து
ஆனந்தங்  கொடுத்து
     அடியவர்  போற்ற  வருகின்றான்.


தகப்பனின்  குருஅவன்
தமிழ்த்திரு  உருஅவன்
     தாயுமை  யாள்மடி  தவழ்கின்றவன்.
அகப்பையில்  துயரற
அனைவரும்  நலமுற
      அடியவர்  தமக்கருள் பொழிகின்றவன்.


நல்லையிற்  கந்தன்
நற்சந்  நிதியினன்
 நாடே  பணிகதிர்  காமத்தான்.
எல்லையில்  உகந்தை
இங்குவில்  லூன்றி
     எழுந்தருள்  புரியும்  அறுமுகத்தான்.

வணங்கிடும்  அடியார்
வருவினை  போக்கி
      வனப்புடை  வாழ்வை  அருள்கின்றவன்
கணங்களும்  பணிந்திட
   கவலைகள்  மறைந்திட
   கந்தன்என  அருள்  புரிகின்றவன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5