இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (3).

இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (3). உவமைத் தொடர்களும் அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் வகையும். நம்முன்னோர் மரபுச்சொற்றொடரைப் பயன்படுத்தித் தமது பேச்சுவன்மையையம் எழுத்துவன்மையையும் மேம்படச் செய்தமை போன்றே உவமைத் தொடர்களையும் பொருத்தமான இடங்களிற் பயன்படுத்தித் தாம் சொல்லவந்த கருத்துகளுக்கு வலுவூட்டினர். மரபுத்தொடரைப் பொறுத்தமட்டில் அத்தொடரிற் கையாளப்படும் சொற்களின் நேர்க்கருத்துகள் தொடரின் கருத்தாக அமையா என்பது ஏற்கனவே அறிந்தவிடயம். அத்தொடரின் பொருள் மரபுவழியாகப் பேணப்பட்டு வருவதால் அதில் மாற்றம் செய்யும் உரிமையும் எமக்கு இல்லை. இதனால் மரபுச்சொற்றொடர்களை நாம் புதிதாக ஆக்கிவிடவும் முடியாது என்பது வெள்ளிடைமலை. ஆனால் உவமைச் சொற்றொடர்கள் அவ்வாறல்ல. அவற்றின் கருத்துகள் தெளிவானவை. நாம் சொல்லவரும் கருத்துக்கு ஏற்ற உவமானங்களாக அவை செயற்படுபவை. “ஏற்கனவே நடந்த சம்பவம்போல் நாம் சொல்லவரும் சம்பவமும் அமைகிறது.” என்ற எண்ணத்தை வலியுறுத்தும் வகையிலமைபவை. எனவே, உவமைச் சொற்றொடர்கள் புதிதாகத்; தோன்றுதற்குச் சந்தர்ப்பங்களுள. “காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததுபோல” என்ற உவமைச் சொற்றொடரை எடுத...

.இலக்கியத்துளி 10.

.இலக்கியத்துளி 10. தமிழ்ப்புலவர்களுக்குக் கவித்துவச்செருக்கு சற்று அதிகம்தான். இந்தச் செருக்குக் காரணமாக அவர்கள் கடவுளர்களையும் தமக்கொத்தவர்களாகக் கருதிக் கொள்வதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் கடவுளர்களையும் சாதாரண மனிதர்கள்போற் பாவித்துக் கவிதையாற் குளிப்பாட்டிவிடுவார்கள். இக்கவிதைகளில் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும். கடவுளரின் அற்புத குணங்களையெல்லாம் இவர்கள் அற்பமாக்கி விடுவார்கள். இத்தகைய கவிதைகள் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் விருப்புத் தரவல்லன. இவற்றில் தமிழ்மொழி கையாளப்பட்டிருக்கும் விதம் தனித்துவமானது. இப்படியும் தாய்த்தமிழைப் பயன்படுத்தி உயர்வுபெறச் செய்யலாமா என்று எண்ணத் தோன்றும். பார்ப்பதற்குக் கடவுளரை அலட்சியம் செய்வதுபோற் தெரியும் இத்தகைக் கவிதைகள் பொருள்விளங்கிப் படிப்போரைப் பரவசத்திலாழ்த்தும். பக்தியின் சிறப்பைப் பாராட்டத் தோன்றும் . காளமேகப்புலவருக்கு முழுமுதற் கடவுளான சிவபெருமானைத் திட்டித்தீர்க்க வேண்டும்போற் தோன்றியதோ என்னவோ அவரை “சாம்பராகிப் போவாய்….நெருப்பாக எரிந்து போவாய்…இருகூறாகிப் போவாய்… நட்டமாவாய்….நஞ்சாகிப்போவாய்… என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல...

இலக்கணம் அறிவோம் தொடரியல் 3 (2)

இலக்கணம் அறிவோம் தொடரியல் 3 (2) மரபுச் சொற்றொடர்களும் அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் முறைமைகளும். அழகிய தமிழ் வசனநடைகளுக்கு மரபுச் சொற்றொடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன. தமிழ் வசனங்களை அழகாகவும் பொருள் செறிந்ததாகவும் அமைக்க வேண்டுமாயின் மரபுச் சொற்றொடர்களையும் அவற்றை வசனங்களிற் பயன்படுத்துகின்ற முறையையும் அறிந்திருத்தல் அவசியம். நம் முன்னோர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற வசனங்கள் பொருட்செறிவுடையதாக இருப்பதற்காக அவற்றுடன் இணையக்கூடிய பல்வேறுவிதமான மரபுச் சொற்றொடர்களை உருவாக்கித் தந்துள்ளனர். மரபுச் சொற்றொடர்கள் என்பதன் பொருள் மரபுவழியாகப் பலதலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு எம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கருத்துமிக்க சொற்றொடர்கள் என்பதாகும். இவற்றை நாம் சரியாகப் பயன்படுத்துவதன்மூலம் மொழிவளத்தைப் பாதுகாப்பதோடு எமது ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறோம். மரபுச் சொற்றொடர் ஒன்றில் பயன்படுத்தப்படும் சொற்கள் எவையும் தமது இயல்பான கருத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். சொற்களின் கருத்து ஒருவிதமாக இருக்க மரபுச் சொற்றொடரால் உண்டாகும் கருத்து பிறிதொன்றாக இ...

வாழ்க தாமரைத்தீவான்

வாழ்க தாமரைத்தீவான் ஈச்சந்தீவில் பிறந்தவன்  இதயமெல்லாம் நிறைந்தவன் பேச்சுத்தமிழிற் கவிதைகள்  படைத்தளிக்கும் வல்லவன். தேசம்புகழும் பெருமகன்  தென்றல்பெற்ற திருமகன் பேசரிய குணங்களால்  பெருமைக்குரிய மலையவன். உயரத்திலே சின்னவன்  உள்ளத்திலே பெரியவன் வயிரம்பாய்ந்த நெஞ்சினன்  வளர்தமிழின் காவலன். எண்பத்தெட்டு வயதினன்  இளமையுள்ளம் கொண்டவன் அன்புகாட்டும் மனங்களில்  ஆழமாக நிற்பவன். தாமரையாய் மலர்ந்தவன்  தமிழர்தீவு ஆனவன் நாமுமவனைப் போற்றுவோம்  நலம்பெருக வாழ்த்துவோம் கந்தவனம் கோணேஸ்வரன் 24.07.2019

தமிழ் இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (1)

தமிழ் இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (1) நீளமான வசனங்களை ஆக்குதல். நாம் அமைக்கும் வாக்கியங்கள் சிறியவையாக இருப்பின் பிழைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். ஆனால் அவற்றை நெடிய அல்லது நீண்ட வசனங்களாக அமைக்க முயலுமிடத்துச் சரியாக அக்கறை எடுக்காவிட்டால் எம்மை அறியாமலே பலவித வழுக்கள் அவ்வசனத்திற் கலந்துவிடும் சந்தர்ப்பங்கள் உள. எனவே நாம் நீண்ட வசனங்களை அமைக்கும்போது கவனமாக இலக்கண விதிகளை அனுசரித்தல் வேண்டும். சிறிய வாக்கியங்கள்;. நான் வந்தேன். தம்பி வந்தான் தங்கை வந்தாள். இவை மூன்றுந் தனித்தனி வாக்கியங்களாகின்றன. இவை ஒன்றோடொன்று தொடர்பற்றன. கால விடயத்தைப் பொறுத்த அளவில் “நான் இன்று வந்தேன்.” “தம்பி நேற்று வந்தான்.” “தங்கை முந்தையதினத்தில் வந்தாள்.” என்று கூறினும் பொருந்தும். காரண விடயத்தைப் பொறுத்தமட்டில்,  “நான் படிக்க வந்தேன்.” “தம்பி விளையாட வந்தான்.” “தங்கை ஊஞ்சலாட வந்தாள்.” என்று வேறுபடக் கூறினும் ஏற்கத்தக்கனவாக அமையும். ஆனால், இவற்றை ஒரே வாக்கியமாக அமைக்கும்போது காலத்தையும் காரணத்தையும் தெளிவாகச் சொன்னாலன்றி வேறுபாடுகள் தோன்ற இடமிருக்கா. மேற்கண்ட வசனங்...

துயரங் கூறவா?

துயரங் கூறவா? செருப்புக் கூடப் பாரமான  சேதி சொல்லவா – என் இருப்பைக் கூட இழந்துவிட்ட  துயரம் கூறவா. நெருப்புக் கடலில் நீந்திவந்த  கதையை விளம்பவா – நான் நிலையிழந்து தளர்ந்து போன  நிலையை மொழியவா பிள்ளைகுட்டி பெண்டு பெற்றோர்  அழிவைப் பகரவா – நான் அள்ளிச்சுமந்த அவர்கள் ரணத்தின்  வலியைச் சொல்லவா வெள்ளைக் கொடியும் மதிப்பிழந்த  விபரம் கூறவா – அதை வீரமென்று பகன்ற அரசின்  சிறுமை சொல்லவா வல்லரசு வாய் புதைத்த  வகையைச் சொல்லவா – அது நல்லபிள்ளை போல நின்ற  நளினங் கூறவா கொல்பவர்க்கு உதவி செய்த  கொடுமை சொல்லவா – அந்தக் கொடுமையிலும் எழுந்து வந்த  துயரங் கூறவா உலகவாழ்வில் உச்சத் துயரின்  கதையைக் கூறவா – நாம் உருக்குலைந்து போன அந்த  நிகழ்வைக் கூறவா தலையிழந்து கிடந்த உடல்கள்  நிலையைக் கூறவா – அவர் தமிழர்என்ப தால் சிதைந்த  விதியைக் கூறவா. கந்தவனம் கோணேஸ்வரன். (இக்கவிதை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக ஆண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது. முகநூல் நண்பர்களின் பார்வைக்காக இன்று (21.07...

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (4).

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (4). வினா வாக்கியம் அமைத்தல். வினாவாக்கியங்கள் பொதுவாக இருவகையின. ஒருவகை: ஆம் அல்லது இல்லை என்ற விடையை எதிர்பார்த்து நிற்குமியல்பின. மற்றவகை: விளக்கங்கள் கோரி நிற்பன. இவ்வாக்கியங்களைத் தெளிவுறவும் வழுவறவும் அமைத்தல் சிறப்பாம். ஆம் அல்லது இல்லை என்ற பதிலை எதிர்பார்க்கும் வினா வாக்கியங்கள். இவை இலகுவானவை. ‘ஆ’ அல்லது ‘ஓ’ என்ற எழுத்தைப் பொருத்தமான சொல்லின் இறுதியில் சேர்ப்பதன்மூலம் இவ்வகை வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன. அவன் வந்தானா?  (விடை: “ஆம்.” அல்லது, “ஆம் அவன் வந்தான்.”) அவனா வந்தான்?  (விடை: “ஆம்.” அல்லதுä, “ஆம்ää அவனேதான் வந்தான்.) அவன் வந்தானோ? அவனோ வந்தான்? இவற்றுள் “அவன் வந்தானா?” “அவன் வந்தானோ? ஆகிய இருவாக்கியங்களும் ஒரே தன்மையின. இவ்வகை வாக்கியங்கள் செயலுக்கு முன்னுரிமை கொடுக்கும் வினாவாகின்றன. இவற்றின் எதிர்பார்ப்பு “அவன்” எனக் குறிப்பிடப்படும் மனிதன்,  “வந்தானா அல்லனா?” (தற்கால மொழிநடையில்,  “வந்தானா இல்லையா?”) என்பதாகும். இவ்வகை வினாக்களுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்றுதான் விடை கூறப்பட வேண்டும். ...

தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (3)

தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (3) எண்வழு. எண்வழுவற்ற வாக்கியம் அமைத்தல் என்பது ஒருமை,  பன்மை என்பவற்றிற் கவனமெடுத்து வாக்கியம் அமைத்தலாகும். அவ்வாறு வாக்கியம் அமைக்கும்போது ஒருமையிற் தொடங்கும் வாக்கியத்தின் நிறைவு ஒருமைப் பயனிலையாகவும் பன்மையிற் தொடங்கும் வாக்கிய நிறைவு பன்மைப் பயனிலையாகவும் இருத்தல் அவசியம். இவ்விதி தவறின் அஃது எண்வழுவின் பாற்படும். தம்பி வந்தான்; மாடு மேய்கிறது. வேணி அழகாக நடனமாடினாள். இவ்வாக்கியங்கள் எண்வழு அற்ற முறையில் அமைந்துள்ளன. எழுவாய்,  பயனிலை இரண்டும் ஒருமையில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. அதேபோல், தம்பியும் தங்கையும் வந்தனர். மாடுகள் மேய்கின்றன. வேணியும் இலக்கியாவும் நடனமாடினர். ஆகிய வாக்கியங்களில் எழுவாய்களும் பயனிலைகளும் பன்மைத்தன்மையுடன் பொருத்தமாக இணைந்துள்ளமையால்  இவை வழுவற்றுக் காணப்படுகின்றன. இத்தகைய வாக்கியங்கள் இலகுவானவை. பொதுவாகப் எல்லோராலும் பிழையற அமைக்கக் கூடியவை. பின்வரும் வாக்கிய அமைப்பகளை நோக்குவோம். நான் அவளுடன் சென்றேன். (அவளுடன் நான் சென்றேன்.) இவ்வாக்கியத்தில் “நான்” என்பது எழுவாயாக இரு...