துயரங் கூறவா?
துயரங் கூறவா?
செருப்புக் கூடப் பாரமான
சேதி சொல்லவா – என்
இருப்பைக் கூட இழந்துவிட்ட
துயரம் கூறவா.
நெருப்புக் கடலில் நீந்திவந்த
கதையை விளம்பவா – நான்
நிலையிழந்து தளர்ந்து போன
நிலையை மொழியவா
பிள்ளைகுட்டி பெண்டு பெற்றோர்
அழிவைப் பகரவா – நான்
அள்ளிச்சுமந்த அவர்கள் ரணத்தின்
வலியைச் சொல்லவா
வெள்ளைக் கொடியும் மதிப்பிழந்த
விபரம் கூறவா – அதை
வீரமென்று பகன்ற அரசின்
சிறுமை சொல்லவா
வல்லரசு வாய் புதைத்த
வகையைச் சொல்லவா – அது
நல்லபிள்ளை போல நின்ற
நளினங் கூறவா
கொல்பவர்க்கு உதவி செய்த
கொடுமை சொல்லவா – அந்தக்
கொடுமையிலும் எழுந்து வந்த
துயரங் கூறவா
உலகவாழ்வில் உச்சத் துயரின்
கதையைக் கூறவா – நாம்
உருக்குலைந்து போன அந்த
நிகழ்வைக் கூறவா
தலையிழந்து கிடந்த உடல்கள்
நிலையைக் கூறவா – அவர்
தமிழர்என்ப தால் சிதைந்த
விதியைக் கூறவா.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(இக்கவிதை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக ஆண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது. முகநூல் நண்பர்களின் பார்வைக்காக இன்று (21.07.2019) வெளியிடப்படுகிறது.)
செருப்புக் கூடப் பாரமான
சேதி சொல்லவா – என்
இருப்பைக் கூட இழந்துவிட்ட
துயரம் கூறவா.
நெருப்புக் கடலில் நீந்திவந்த
கதையை விளம்பவா – நான்
நிலையிழந்து தளர்ந்து போன
நிலையை மொழியவா
பிள்ளைகுட்டி பெண்டு பெற்றோர்
அழிவைப் பகரவா – நான்
அள்ளிச்சுமந்த அவர்கள் ரணத்தின்
வலியைச் சொல்லவா
வெள்ளைக் கொடியும் மதிப்பிழந்த
விபரம் கூறவா – அதை
வீரமென்று பகன்ற அரசின்
சிறுமை சொல்லவா
வல்லரசு வாய் புதைத்த
வகையைச் சொல்லவா – அது
நல்லபிள்ளை போல நின்ற
நளினங் கூறவா
கொல்பவர்க்கு உதவி செய்த
கொடுமை சொல்லவா – அந்தக்
கொடுமையிலும் எழுந்து வந்த
துயரங் கூறவா
உலகவாழ்வில் உச்சத் துயரின்
கதையைக் கூறவா – நாம்
உருக்குலைந்து போன அந்த
நிகழ்வைக் கூறவா
தலையிழந்து கிடந்த உடல்கள்
நிலையைக் கூறவா – அவர்
தமிழர்என்ப தால் சிதைந்த
விதியைக் கூறவா.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(இக்கவிதை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக ஆண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது. முகநூல் நண்பர்களின் பார்வைக்காக இன்று (21.07.2019) வெளியிடப்படுகிறது.)
கருத்துகள்
கருத்துரையிடுக