வாழ்க தாமரைத்தீவான்

வாழ்க தாமரைத்தீவான்

ஈச்சந்தீவில் பிறந்தவன்
 இதயமெல்லாம் நிறைந்தவன்
பேச்சுத்தமிழிற் கவிதைகள்
 படைத்தளிக்கும் வல்லவன்.

தேசம்புகழும் பெருமகன்
 தென்றல்பெற்ற திருமகன்
பேசரிய குணங்களால்
 பெருமைக்குரிய மலையவன்.

உயரத்திலே சின்னவன்
 உள்ளத்திலே பெரியவன்
வயிரம்பாய்ந்த நெஞ்சினன்
 வளர்தமிழின் காவலன்.

எண்பத்தெட்டு வயதினன்
 இளமையுள்ளம் கொண்டவன்
அன்புகாட்டும் மனங்களில்
 ஆழமாக நிற்பவன்.

தாமரையாய் மலர்ந்தவன்
 தமிழர்தீவு ஆனவன்
நாமுமவனைப் போற்றுவோம்
 நலம்பெருக வாழ்த்துவோம்

கந்தவனம் கோணேஸ்வரன்
24.07.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5