கந்தையா நீலகண்டன்.
கந்தையா நீலகண்டன். செந்தமிழும் சிவநெறியும் சீர்பெறவே வந்துதித்த கந்தையா நீலகண்டப் பெருந்தகையை – சிந்தையிலே என்றும் இருத்திவைப்போம் அவர்வழியில் நாம்நடப்போம் பொன்றாது என்றுமவர் புகழ். ஈழத்தாய் பெற்றெடுத்த இணையற்ற தவப்புதல்வன் ஆழத் தமிழ்ப்புலமை பெற்றமகன் - நாளும் நற்றமிழ ராய்வாழ்ந்து நால்வேத நெறிதேர்ந்து உற்றாரவ ருயர்வாழ்வு காண். சட்டத் துறைவலராய் சமுதாய ஆர்வலராய் எட்டுத் திசைக்கும்புகழ் பரப்பிநின்றார் - தெட்டத் தெளிவான பாதையிலே திடமாக நடந்ததனால் அழியாத நிலைபெற்றா ருயர்ந்து. எல்லோர்க்கும் இன்சொலராய் எவர்வரினும் நல்லுறவாய் வல்லோர்க்கு வாய்த்ததொரு வழித்தடமாய் - இல்லறத்தின் இலக்கணமாய் வாழ்ந்தெங்கள் இதயமெலாம் நிறைந்தஐயா நிலைத்திருக்கு முங்கள் நினைவு. கந்தவனம் கோணேஸ்வரன். (அன்னாரின் முதலாவதாண்டு நினைவுக் கவிதை)