இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தையா நீலகண்டன்.

கந்தையா நீலகண்டன். செந்தமிழும் சிவநெறியும் சீர்பெறவே வந்துதித்த கந்தையா நீலகண்டப் பெருந்தகையை – சிந்தையிலே என்றும் இருத்திவைப்போம் அவர்வழியில் நாம்நடப்போம் பொன்றாது என்றுமவர் புகழ். ஈழத்தாய் பெற்றெடுத்த இணையற்ற தவப்புதல்வன் ஆழத் தமிழ்ப்புலமை பெற்றமகன் - நாளும் நற்றமிழ ராய்வாழ்ந்து நால்வேத நெறிதேர்ந்து உற்றாரவ ருயர்வாழ்வு காண். சட்டத் துறைவலராய் சமுதாய ஆர்வலராய் எட்டுத் திசைக்கும்புகழ் பரப்பிநின்றார் - தெட்டத் தெளிவான பாதையிலே திடமாக நடந்ததனால் அழியாத நிலைபெற்றா ருயர்ந்து. எல்லோர்க்கும் இன்சொலராய் எவர்வரினும் நல்லுறவாய் வல்லோர்க்கு வாய்த்ததொரு வழித்தடமாய் - இல்லறத்தின் இலக்கணமாய் வாழ்ந்தெங்கள் இதயமெலாம் நிறைந்தஐயா நிலைத்திருக்கு முங்கள் நினைவு.                             கந்தவனம் கோணேஸ்வரன். (அன்னாரின் முதலாவதாண்டு நினைவுக் கவிதை)

எங்கள் திருக்கோணமலை -11

எங்கள் திருக்கோணமலை -11 நாவில் விளையாடும் தமிழெல்லாம் காவியமாம்  நல்லோர் வாயுரைக்கும் வார்த்தைகளே மந்திரமாம். ஆவின் பாலன்ன அருந்தவத்தோர் தம்முளமாம்  ஆந்தணர் கரங்களென்றும் அழகான குவிமலராம். கோவில் வரும்பக்தர் நினைவுகளே சிவமயமாம்  கும்பிடும்போ தவர்சிந்தும் விழிநீரே சரஸ்வதியாம் பூவில் அமர்வண்டின் முரலோசை இசையமுதாம்  புள்ளினத்தின் சிறகடிப்பால் எழும்வீச்சு தாளமதாம். மானின் விழியசைவால் மங்கையர்க்கு அந்தரமாம்  மயங்கும் காளையர்க்கு மங்கைகூந்தல் சுந்தரமாம் தேனின்  கனிசுவைக்கத் தருக்களெல்லாம் கவியினமாம்  திரளாகப் பள்ளிசெல்லும் பிள்ளைகள்வெண் முகிலினமாம் வேனில் தழுவியெழும் இளங்காற்று பேரமுதாம்  வீரர் புகழ்பேசும் வார்த்தைகளே நாவமுதாம் மானின் நேர்விழியாள் மாதுமையாள் பாகமுறை  கோணேசர் மண்ணதனில் காணும்பொருள் யாவுமிறை. கன்னியாநீ ராடிவரு வோர்களுடல் தேறிடுமாம்  காயத்திரி பீடமதில் அமர்ந்தால்மனம் ஆறிடுமாம் அன்னைபத்ர காளியம்பாள் அருள்மிகுந்த ஆலயத்தை  அனுதினமும் வலம்வருவோர்க் கனைத்துங்கை கூடிடுமாம் வன்னமுடை லக்சுமிநா ராயணானின் ...

எங்கள் திருக்கோணமலை -- 10

எங்கள் திருக்கோணமலை  -- 10 அந்தணர்தம் கரங்குவிய அம்புயம் மலரும்  ஆன்மிக ஸ்வரங்களுடன் பொழுதும் புலரும் செந்தமிழர் தேவாரம் செவியில் ஒலிக்கும்  செவ்வரி வண்டுமலர் தாவிக் களிக்கும் முந்தையர்தம் நல்லாசி மழையாய்ப் பொழியும்  மூத்தநல் லறிஞர்தம் வழியில் வாழும் எந்தமிழர் திருக்கோண மலையெங்கள் பூமி  எம்தந்தை தாய்வாழ்ந்த இனியதமிழ்ப் பூமி கடலலைகள் மந்திரங்கள் ஓதி நிற்கும்  கண்கவரும் மலரினங்கள் மகிழ்ந்தே பூக்கும் படம்போட நண்டுவந்து மணலிற் பாயும்  பாய்கின்ற அலைவரவாற் படமும் தேயும் திடங்கொண்ட மீன்குஞ்சு கரையைப் பார்க்கும்  சிறுவர்தம் துணிவுகண்டு உடலம் வேர்க்கும் அடங்காது தீமைகண்டு ஆர்க்கும் தமிழர்  அணிதிரளும் பூமியெங்கள் அன்னை பூமி பசியவயல் நெல்மணியும் பல்தொழிலும் பெருகும்  பசுவினங்கள் நிரைநின்று பால்தன்னைச் சொரியும் இசைநடனம் ஓவியமும் உயர்ந்திங்கு ஓங்கும்  எங்கும்நிறை பள்ளிகளால் அறிவுயர்ந்து துலங்கும் திசைதோறும் தீந்தமிழர் புகழ்பரப்பி நிற்கும்  திருக்கோண மலைமண் தென்கயிலை யாகும் அசையாது கோணேசர் குன்றமர்ந்து காக்கும் ...

திருக்கோணேஸ்வரம்.

திருக்கோணேஸ்வரம். இலங்கையிலுள்ள சிவாலயங்களுள் மிகவும் தொன்மையானதும் முதன்மையானதும் என்ற சிறப்புடையது திருக்கோணேஸ்வரம். இது இயற்கை எழில் நிறைந்ததும் உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் அமைந்ததுமான திருக்கோணமலை பட்டினத்தில் அமைந்துள்ளது. முப்புறமும் கடல் சூழ்ந்த திருக்கோணமலை நகரத்தில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வர ஆலயமும் முப்புறமும் கடல் சூழ்ந்த குன்றில் காணப்படுவது பெருஞ்சிறப்பாகும். இவ்வாலயத்தில் அமைந்துள்ள இறைவன் கோணேஸ்வரர் என்றும் இறைவி மாதுமையம்பாள் என்றும் அழைக்கப்படுகினறனர். இவ்வாலயத்தின் தீர்த்தமாக பாவநாசச் சுனையும் தலவிருட்சமாக கல்லால மரமும் அமைந்துள்ளன. இவ்வாலயம் என்று தோன்றியது என்பது இதுவரை துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. கிறிஸ்துவுக்கு முன் 1300ம் ஆண்டளவில் இலங்கையை ஆண்ட மனுமாணிக்கராஜா என்ற மன்னனால் இவ்வாலயம் தாபிக்கப்பட்டதாக அறிஞர் ஒருவர் கூறுகிறார். இராமாயணத்தில் வரும் பாத்திரமான இராவணனுக்கும் இவ்வாலயத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாகக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருக்கோணேஸ்வரத் திருப்பதிகத்திலும் இவ்வாலயத்துக்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்பு கா...

எங்கள் வல்வெட்டித்துறை

எங்கள் வல்வெட்டித்துறை மாவலியாள் தென்புறத்தே வளம்பெருக்கும் நாடு  மாவேந்தன் சங்கிலியன் மறம்வளர்த்த நாடு நாவேந்தர் தமிழாலே நலம்நிறைந்த நாடு  நல்லதமிழ்க் கவிஞர்குழாம் வாழ்ந்திருந்த நாடு காவோடு கழனிகளும் கடலும்சேர் நாடு  கலைவளர்த்துத் தொழில்வளர்த்துக் கவின்சிறந்த நாடு தேவாரப் பண்கேட்டுச் செங்கதிரோன் உதிக்கும்  தெய்வத்திரு மாந்தர்வாழ் வல்வைத்துறை நாடு பாய்மரத்தால் பாரெங்கும் பவனிவந்தோர் நாடு  பலநாட்டு வாணிபங்கள் செய்ததமிழ் நாடு ஓய்வவென்ப தறியாத உழைப்பாளர் நாடு  உயிர்போல மொழிகாத்து உயர்ந்தஈழ நாடு சேய்வேலன் சந்நிதியைத் தேர்ந்துறைந்த நாடு  திருவோங்கு கந்தவனக் கோயில்கண்ட நாடு தாய்போல முத்துமாரி தந்தைசிவ னாருடனே  தனயன்கண பதிசகிதம் அமர்ந்தவல்வை நாடு கடலாடி வருமிளைஞர் கவின்தோள்கள் தினவெடுக்கும்  கயலாடும் விழிமாதர் காதல்மொழி யதைத்தகர்க்கும் திடமான கொள்கையுடன் களமாடும் காளைகளின்  செயற்றிறனாற் செந்தமிழ்த்தாய் சீர்மையிங்கு செழித்திருக்கும் தடம்மாறாச் சிவநெறியில் தமிழ்ச்சான்றோர் வாழ்வதனால்  தமிழோடு சிவநெறியும் தலைநிமிர்ந்து...

எங்கள் திருக்கோணமலை – 9

எங்கள் திருக்கோணமலை – 9 நுரைபொங்கும்  அலைவந்து கரையேறிக் களிக்கும்  நுவலரிய தமிழ்ச்சான்றோர் அறங்காதில் ஒலிக்கும் தரைபொங்கி நெல்மணியாய்த் தலைசாய்ந்து கிடக்கும்  தமிழர்நலம் காப்போர்கரம் தழும்பேறிச் சிவக்கும் வருவினைகள் நலமாக அறிஞர்குழாம் உழைக்கும்  வையகத்துத் தமிழர்க்கெலாம் தலைநகராய்ச் செழிக்கும் திருக்கோணை மலைமண்ணின் புகழுரைக்கும் நாவில்  திருவேறி அறிவேறித் தெளிந்தோர்மம் மேவும். அந்தணர்தம் கரங்குவிய அழகுமலர் விரியும்  அதிகாலை நேரமென வண்டுகாதில் மொழியும் தென்கயிலை மலையமர்ந்து தெய்வம்அருள் பொழியும்  தெருவெங்கும் சிவநாமம் தேனெனவே சொரியும் இன்புறுநல் லோர்நெஞ்சில் இனியஅன்பு மலரும்  எல்லோரும் நலம்பெறுக என்றுகதிர் விரியும் சென்றபல நூற்றாண்டாய்ச் சைவமும் தமிழும்  சேர்ந்துவளர்ந்த தாலிந்தச் சிவபூமி மகிழும் வருவோரை உபசரித்து வாழவகை செய்யும்  வாழ்வோரை அறந்தூணாய் வழுவின்றிக் காக்கும் செருக்கோடு நிற்பவரைச் சிலநாளே ஏற்கும்  செய்தொழிலில் நேர்மையுள்ளோர் தனைவாழ்த்திக் வணங்கும் திருக்கோணை மலைமண்ணில் நொந்திழந்து கெட்டோர்  த...

இராஜதுரை தர்மராஜா

ஜனவரி 13, 2019 இராஜதுரை தர்மராஜா (ஆயுள்வேத வைத்திய வித்தகர்) நேரில்வர முடியவில்லை  நினைத்தால்நெஞ்சம் தவிக்கிறது ஓரவிழி கசிகிறது  உள்மனமோ அழுகிறது நேரியனாய் வாழ்ந்தமகன்  நிலம்நீங்கிப் போனதாலே யாருமற்றுப் போனோமென்று  எங்கள்மண்ணும் கவல்கிறது. பேர்புகழுக் காசைப்படாப்  பெருந்தகையாய் வாழ்ந்தவன்நீ சீர்தமிழர் சிறப்புப்பெறத்  தினந்தினமும்; உழைத்தவன்நீ நேர்வழியைத் தவிர்த்தோரை  நீசரென அழைத்தவன்நீ பார்புகழும் எழுத்துகளால்  பலபேரை வென்றவன்நீ மலிவான விளம்பரத்தில்  மயங்காத மன்னவன்நீ தெளிவான பாதையிலே  தென்றலென வாழ்ந்தவன்நீ நிலவாக உயர்ந்துஎங்கள்  நெஞ்சமெலாம் நிறைந்தவன்நீ விலகாத நட்புக்கு  விளக்காக நின்றவன்நீ. மலைமண் ணிங்கழுகிறது  மைந்த:.உந்தன் பிரிவுகண்டு நிலைகுலைந்து போகிறது  நின்னுடலம் விலகிற்றென்று அலைகடலாய்க் கண்ணீர்சிந்தி  ஐயா உன்னை அனுப்பிவைத்தோம் அமைதிகொள்க அன்புநண்ப!  அனைவரும்உன் வழிவருவோம்.                     அனைத்து நண்பர்கள் சார்பாக     ...

எங்கள் திருக்கோணமலை -- 8

எங்கள் திருக்கோணமலை -- 8 தேன்சிந்தும் பலாப்பழங்கள் திசைபுகழும் ஆலயங்கள்  தெருவெங்கும் தீந்தமிழர் கலைக்கூத்துகள் வான்கொஞ்சும் தென்னைகள் மனங்கொஞ்சும் மாமரங்கள்  வயலாலே வாழ்வுபெறும் பைந்தமிழர்கள் மான்கெஞ்சும் மயல்விழிகள் மாதர்தம் அருள்மொழிகள்  மானத்தின் வழிவாழும் செந்தமிழர்கள் ஆன்சிந்தும் பால்நெய்கள் அகஞ்சிந்தும் புன்னகைகள்  அன்பாலே அணைத்தேற்கும் இன்மாந்தர்கள் அறிவுநிறை கற்றோர்கள் ஆர்வமுடை இளைஞர்கள்  அழகுமயில் அன்னதமிழ் மெல்லணங்குகள் செறிவுநிறை பண்பாளர் செகம்வியக்கும் நெறியாளர்  செந்தமிழிற் துறைபோந்த காராளர்கள் பரிவுநிறை தாய்மார்கள் பாசமிகு சோதரியர்  பாடசாலை பெருமையுறம் மாணாக்கர்கள் உயர்பதியாம் தமிழ்ப்பதியாம் ஓங்குசைவத் திருப்பதியாம்  ஒப்பரிய திரியாயின் உயர்கோலங்கள். அந்தணர்கைம் மலர்குவிய அம்புஜங்கள் விரியும்  அதிகாலை வேளைகாதில் வேதவொலி சொரியும் செந்தமிழர் தேவாரம் மனையெங்கும் பெருகும்  செந்நெல்லும் தயிர்பாலும் தெருவெங்கும் வழியும் சொந்தபந்த உறவெல்லாம் சேர்ந்திங்கு வாழும்  செல்விருந்து ஓம்பிவரு விருந்தினரைத் தேட...