கந்தையா நீலகண்டன்.

கந்தையா நீலகண்டன்.

செந்தமிழும் சிவநெறியும் சீர்பெறவே வந்துதித்த
கந்தையா நீலகண்டப் பெருந்தகையை – சிந்தையிலே
என்றும் இருத்திவைப்போம் அவர்வழியில் நாம்நடப்போம்
பொன்றாது என்றுமவர் புகழ்.

ஈழத்தாய் பெற்றெடுத்த இணையற்ற தவப்புதல்வன்
ஆழத் தமிழ்ப்புலமை பெற்றமகன் - நாளும்
நற்றமிழ ராய்வாழ்ந்து நால்வேத நெறிதேர்ந்து
உற்றாரவ ருயர்வாழ்வு காண்.

சட்டத் துறைவலராய் சமுதாய ஆர்வலராய்
எட்டுத் திசைக்கும்புகழ் பரப்பிநின்றார் - தெட்டத்
தெளிவான பாதையிலே திடமாக நடந்ததனால்
அழியாத நிலைபெற்றா ருயர்ந்து.

எல்லோர்க்கும் இன்சொலராய் எவர்வரினும் நல்லுறவாய்
வல்லோர்க்கு வாய்த்ததொரு வழித்தடமாய் - இல்லறத்தின்
இலக்கணமாய் வாழ்ந்தெங்கள் இதயமெலாம் நிறைந்தஐயா
நிலைத்திருக்கு முங்கள் நினைவு.

                            கந்தவனம் கோணேஸ்வரன்.
(அன்னாரின் முதலாவதாண்டு நினைவுக் கவிதை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5