கந்தையா நீலகண்டன்.
கந்தையா நீலகண்டன்.
செந்தமிழும் சிவநெறியும் சீர்பெறவே வந்துதித்த
கந்தையா நீலகண்டப் பெருந்தகையை – சிந்தையிலே
என்றும் இருத்திவைப்போம் அவர்வழியில் நாம்நடப்போம்
பொன்றாது என்றுமவர் புகழ்.
ஈழத்தாய் பெற்றெடுத்த இணையற்ற தவப்புதல்வன்
ஆழத் தமிழ்ப்புலமை பெற்றமகன் - நாளும்
நற்றமிழ ராய்வாழ்ந்து நால்வேத நெறிதேர்ந்து
உற்றாரவ ருயர்வாழ்வு காண்.
சட்டத் துறைவலராய் சமுதாய ஆர்வலராய்
எட்டுத் திசைக்கும்புகழ் பரப்பிநின்றார் - தெட்டத்
தெளிவான பாதையிலே திடமாக நடந்ததனால்
அழியாத நிலைபெற்றா ருயர்ந்து.
எல்லோர்க்கும் இன்சொலராய் எவர்வரினும் நல்லுறவாய்
வல்லோர்க்கு வாய்த்ததொரு வழித்தடமாய் - இல்லறத்தின்
இலக்கணமாய் வாழ்ந்தெங்கள் இதயமெலாம் நிறைந்தஐயா
நிலைத்திருக்கு முங்கள் நினைவு.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(அன்னாரின் முதலாவதாண்டு நினைவுக் கவிதை)
செந்தமிழும் சிவநெறியும் சீர்பெறவே வந்துதித்த
கந்தையா நீலகண்டப் பெருந்தகையை – சிந்தையிலே
என்றும் இருத்திவைப்போம் அவர்வழியில் நாம்நடப்போம்
பொன்றாது என்றுமவர் புகழ்.
ஈழத்தாய் பெற்றெடுத்த இணையற்ற தவப்புதல்வன்
ஆழத் தமிழ்ப்புலமை பெற்றமகன் - நாளும்
நற்றமிழ ராய்வாழ்ந்து நால்வேத நெறிதேர்ந்து
உற்றாரவ ருயர்வாழ்வு காண்.
சட்டத் துறைவலராய் சமுதாய ஆர்வலராய்
எட்டுத் திசைக்கும்புகழ் பரப்பிநின்றார் - தெட்டத்
தெளிவான பாதையிலே திடமாக நடந்ததனால்
அழியாத நிலைபெற்றா ருயர்ந்து.
எல்லோர்க்கும் இன்சொலராய் எவர்வரினும் நல்லுறவாய்
வல்லோர்க்கு வாய்த்ததொரு வழித்தடமாய் - இல்லறத்தின்
இலக்கணமாய் வாழ்ந்தெங்கள் இதயமெலாம் நிறைந்தஐயா
நிலைத்திருக்கு முங்கள் நினைவு.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(அன்னாரின் முதலாவதாண்டு நினைவுக் கவிதை)
கருத்துகள்
கருத்துரையிடுக