பதவியல் 7 தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர்.
இயற்சொல். தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும். “நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு.
திரிசொல். சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன. “பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்றான், செப்பினான், உரைத்தான், விளம்பின…
போலி எழுத்துகள். சில சமயங்களில் ஓரெழுத்தக்குப் பதிலாக வேறோர் எழுத்தைப் பயன்படுத்தும்போது அதுபோலி எழுத்துஎனப்படுகிறது. போலிஎழுத்தும் இலக்கண வலுவுடையது என்பதால் இலக்கண நூலார் அதனை ‘வழு’ எனப் புறந்தள்ளுவதில்லை. எனினும் போலி எழுத்துகள் வலிந்து புகுத்தப்படாதிருப்பது மொழிக்கு அழகு தருமென்பதை நினைவிற் கொளல் நலம். போலி எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும்போது அது முதற்போலி எனவும், இடையில் இடம்பெறுகையில் இடைப்போலி எனவும், சொல்லினிறுதியில் வரும்போது கடைப்போலி எனவும் வழங்கப்படுகின்றன.
1.முதற்போலிஓளவை அவ்வை ஒள அவ் போலி பௌத்தம் பவுத்தம் பௌ பவு போலி நண்டு ஞண்டு ந ஞ போலி மயல் மையல் ம மை போலி மையம் மய்யம் மை மய் போலி ஐயர் அய்யர் ஐ அய் போலி நாயிறு ஞாயிறு நா ஞா போலி பையன்கள் பசங்கள் பை ப போலி யாமம் சாமம் யா சா போலி
பதவியல் 6திணை. திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும். இலக்கணநூலார். மனிதர்களையும் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட தேவர், அசுரர், கடவுளர் என்பவர்களையும் உயர் திணையாகவும், ஏனையவற்றை உயர்திணை அல்லாதனவாகவும் பிரித்துள்ளனர். உயர்திணை அல்லாதவை அஃறிணை எனப்படுகின்றன.
உயர்திணையின் நடவடிக்கைகளைக் குறிக்கும் வினைச்சொற்கள் உயர்திணை சார்ந்தும் .அஃறிணைக்குரிய வினைகள் அஃறிணை சார்ந்தும் இருப்பது தமிழ்வழக்கு.
மனிதன் ஓடினான். பூனை ஓடியது, அவர்கள் வந்தனர், அவை வந்தன போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், மனிதன், அவர்கள் என்பவை உயர்திணை வினைச்சொற்களிலும், பூனை, அவை போன்றவை அஃறிணை வினைச்சொற்களிலும் நிறைவு பெறுவதை அவதானிக்கலாம்.
எனினும் சிலஇடங்களில் இவ்விதி குழப்பமடைவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தை, தெய்வம் என்பவை உயர்திணை வகுதிக்குள் வருகின்ற பெயர்கள். ஆனால் அவை வினைச்சொல் பெறுமபோது. குழந்தை விளையாடுகிறது, தெய்வம் எம்மைக் காக்கின்றது என அஃறிணை விகுதி பெறுகின்ற வினைகளையே ஏற்கின்றன. அதேபோல் சூரியன் உதித்தது சூரியன் உதித்தான் என்பதில் இருவகை வினைகளும் ஏற்கப்படுவதைக் காணலாம். சந…
பதவியல் இயல் 2 பகுதி 9 ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் கருத்துப் புலப்படுமாறும் அமைந்திருக்கின்ற இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட கூட்டே தொடர்மொழி எனப்படுகின்றது. தொடர்மொழியானது தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படுகின்றது. தொகைநிலைத் தொடர்: தொகைநிலைத் தொடர் என்பது உருபுகள் வெளிப்படாமல் மறைந்து நிற்கின்ற நிலையில், இரண்டு அல்லது அவற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து இலக்கணரீதியாகப் பொருள் தருவது எனலாம். தொகை என்றால் தொக்கிநிற்கிறது அல்லது மறைந்து நிற்கிறது என்று பொருள். இத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என அறுவகைப்படுகின்றது. 1. வேற்றுமைத்தொகை: வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துநின்று பொருள் தருகின்றபோது அது வேற்றுமைத்தொகை எனப்படுகிறது. வேற்றுமைகள் எட்டு என்கிறது இலக்கணம். இவற்றுள் முதல்வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையாகிய விளிவேற்றுமையும் உருபுகள் அற்றன. அதாவது எந்த உருபுகளையும் தம்முடன் இணைத்து மொழிநடையில் ...
கருத்துகள்