இராஜதுரை தர்மராஜா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இராஜதுரை தர்மராஜா
(ஆயுள்வேத வைத்திய வித்தகர்)
நேரில்வர முடியவில்லை
நினைத்தால்நெஞ்சம் தவிக்கிறது
ஓரவிழி கசிகிறது
உள்மனமோ அழுகிறது
நேரியனாய் வாழ்ந்தமகன்
நிலம்நீங்கிப் போனதாலே
யாருமற்றுப் போனோமென்று
எங்கள்மண்ணும் கவல்கிறது.
பேர்புகழுக் காசைப்படாப்
பெருந்தகையாய் வாழ்ந்தவன்நீ
சீர்தமிழர் சிறப்புப்பெறத்
தினந்தினமும்; உழைத்தவன்நீ
நேர்வழியைத் தவிர்த்தோரை
நீசரென அழைத்தவன்நீ
பார்புகழும் எழுத்துகளால்
பலபேரை வென்றவன்நீ
மலிவான விளம்பரத்தில்
மயங்காத மன்னவன்நீ
தெளிவான பாதையிலே
தென்றலென வாழ்ந்தவன்நீ
நிலவாக உயர்ந்துஎங்கள்
நெஞ்சமெலாம் நிறைந்தவன்நீ
விலகாத நட்புக்கு
விளக்காக நின்றவன்நீ.
மலைமண் ணிங்கழுகிறது
மைந்த:.உந்தன் பிரிவுகண்டு
நிலைகுலைந்து போகிறது
நின்னுடலம் விலகிற்றென்று
அலைகடலாய்க் கண்ணீர்சிந்தி
ஐயா உன்னை அனுப்பிவைத்தோம்
அமைதிகொள்க அன்புநண்ப!
அனைவரும்உன் வழிவருவோம்.
அனைத்து நண்பர்கள் சார்பாக
கந்தவனம் கோணேஸ்வரன்.
14.01.2019
(இன்று கொழும்பில் தகனக்கிரியை இடம்பெறுகிறது)
(ஆயுள்வேத வைத்திய வித்தகர்)
நேரில்வர முடியவில்லை
நினைத்தால்நெஞ்சம் தவிக்கிறது
ஓரவிழி கசிகிறது
உள்மனமோ அழுகிறது
நேரியனாய் வாழ்ந்தமகன்
நிலம்நீங்கிப் போனதாலே
யாருமற்றுப் போனோமென்று
எங்கள்மண்ணும் கவல்கிறது.
பேர்புகழுக் காசைப்படாப்
பெருந்தகையாய் வாழ்ந்தவன்நீ
சீர்தமிழர் சிறப்புப்பெறத்
தினந்தினமும்; உழைத்தவன்நீ
நேர்வழியைத் தவிர்த்தோரை
நீசரென அழைத்தவன்நீ
பார்புகழும் எழுத்துகளால்
பலபேரை வென்றவன்நீ
மலிவான விளம்பரத்தில்
மயங்காத மன்னவன்நீ
தெளிவான பாதையிலே
தென்றலென வாழ்ந்தவன்நீ
நிலவாக உயர்ந்துஎங்கள்
நெஞ்சமெலாம் நிறைந்தவன்நீ
விலகாத நட்புக்கு
விளக்காக நின்றவன்நீ.
மலைமண் ணிங்கழுகிறது
மைந்த:.உந்தன் பிரிவுகண்டு
நிலைகுலைந்து போகிறது
நின்னுடலம் விலகிற்றென்று
அலைகடலாய்க் கண்ணீர்சிந்தி
ஐயா உன்னை அனுப்பிவைத்தோம்
அமைதிகொள்க அன்புநண்ப!
அனைவரும்உன் வழிவருவோம்.
அனைத்து நண்பர்கள் சார்பாக
கந்தவனம் கோணேஸ்வரன்.
14.01.2019
(இன்று கொழும்பில் தகனக்கிரியை இடம்பெறுகிறது)
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 7
பதவியல் 7
தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர்.
இயற்சொல். தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும்.
“நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன.
ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு.
திரிசொல். சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன.
“பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்றான், செப்பினான், உரைத்தான், விளம்பின…
தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர்.
இயற்சொல். தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும்.
“நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன.
ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு.
திரிசொல். சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன.
“பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்றான், செப்பினான், உரைத்தான், விளம்பின…
தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5
போலி எழுத்துகள். சில சமயங்களில் ஓரெழுத்தக்குப் பதிலாக வேறோர் எழுத்தைப் பயன்படுத்தும்போது அது போலி எழுத்து எனப்படுகிறது. போலிஎழுத்தும் இலக்கண வலுவுடையது என்பதால் இலக்கண நூலார் அதனை ‘வழு’ எனப் புறந்தள்ளுவதில்லை. எனினும் போலி எழுத்துகள் வலிந்து புகுத்தப்படாதிருப்பது மொழிக்கு அழகு தருமென்பதை நினைவிற் கொளல் நலம். போலி எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும்போது அது முதற்போலி எனவும், இடையில் இடம்பெறுகையில் இடைப்போலி எனவும், சொல்லினிறுதியில் வரும்போது கடைப்போலி எனவும் வழங்கப்படுகின்றன.
1. முதற்போலி ஓளவை அவ்வை ஒள அவ் போலி பௌத்தம் பவுத்தம் பௌ பவு போலி நண்டு ஞண்டு ந ஞ போலி மயல் மையல் ம மை போலி மையம் மய்யம் மை மய் போலி ஐயர் அய்யர் ஐ அய் போலி நாயிறு ஞாயிறு நா ஞா போலி பையன்கள் பசங்கள் பை ப போலி யாமம் சாமம் யா சா போலி
2. இடைப்போலி அரசன் அரைசன் ர ரை போலி; ஈயல் ஈசல் ய ச போலி நிலயம் …
1. முதற்போலி ஓளவை அவ்வை ஒள அவ் போலி பௌத்தம் பவுத்தம் பௌ பவு போலி நண்டு ஞண்டு ந ஞ போலி மயல் மையல் ம மை போலி மையம் மய்யம் மை மய் போலி ஐயர் அய்யர் ஐ அய் போலி நாயிறு ஞாயிறு நா ஞா போலி பையன்கள் பசங்கள் பை ப போலி யாமம் சாமம் யா சா போலி
2. இடைப்போலி அரசன் அரைசன் ர ரை போலி; ஈயல் ஈசல் ய ச போலி நிலயம் …
தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 6
பதவியல் 6திணை. திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும். இலக்கணநூலார். மனிதர்களையும் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட தேவர், அசுரர், கடவுளர் என்பவர்களையும் உயர் திணையாகவும், ஏனையவற்றை உயர்திணை அல்லாதனவாகவும் பிரித்துள்ளனர். உயர்திணை அல்லாதவை அஃறிணை எனப்படுகின்றன.
உயர்திணையின் நடவடிக்கைகளைக் குறிக்கும் வினைச்சொற்கள் உயர்திணை சார்ந்தும் .அஃறிணைக்குரிய வினைகள் அஃறிணை சார்ந்தும் இருப்பது தமிழ்வழக்கு.
மனிதன் ஓடினான். பூனை ஓடியது, அவர்கள் வந்தனர், அவை வந்தன போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், மனிதன், அவர்கள் என்பவை உயர்திணை வினைச்சொற்களிலும், பூனை, அவை போன்றவை அஃறிணை வினைச்சொற்களிலும் நிறைவு பெறுவதை அவதானிக்கலாம்.
எனினும் சிலஇடங்களில் இவ்விதி குழப்பமடைவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தை, தெய்வம் என்பவை உயர்திணை வகுதிக்குள் வருகின்ற பெயர்கள். ஆனால் அவை வினைச்சொல் பெறுமபோது. குழந்தை விளையாடுகிறது, தெய்வம் எம்மைக் காக்கின்றது என அஃறிணை விகுதி பெறுகின்ற வினைகளையே ஏற்கின்றன. அதேபோல் சூரியன் உதித்தது சூரியன் உதித்தான் என்பதில் இருவகை வினைகளும் ஏற்கப்படுவதைக் காணலாம். சந…
உயர்திணையின் நடவடிக்கைகளைக் குறிக்கும் வினைச்சொற்கள் உயர்திணை சார்ந்தும் .அஃறிணைக்குரிய வினைகள் அஃறிணை சார்ந்தும் இருப்பது தமிழ்வழக்கு.
மனிதன் ஓடினான். பூனை ஓடியது, அவர்கள் வந்தனர், அவை வந்தன போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், மனிதன், அவர்கள் என்பவை உயர்திணை வினைச்சொற்களிலும், பூனை, அவை போன்றவை அஃறிணை வினைச்சொற்களிலும் நிறைவு பெறுவதை அவதானிக்கலாம்.
எனினும் சிலஇடங்களில் இவ்விதி குழப்பமடைவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தை, தெய்வம் என்பவை உயர்திணை வகுதிக்குள் வருகின்ற பெயர்கள். ஆனால் அவை வினைச்சொல் பெறுமபோது. குழந்தை விளையாடுகிறது, தெய்வம் எம்மைக் காக்கின்றது என அஃறிணை விகுதி பெறுகின்ற வினைகளையே ஏற்கின்றன. அதேபோல் சூரியன் உதித்தது சூரியன் உதித்தான் என்பதில் இருவகை வினைகளும் ஏற்கப்படுவதைக் காணலாம். சந…
கருத்துகள்