இராஜதுரை தர்மராஜா

இராஜதுரை தர்மராஜா
(ஆயுள்வேத வைத்திய வித்தகர்)

நேரில்வர முடியவில்லை
 நினைத்தால்நெஞ்சம் தவிக்கிறது
ஓரவிழி கசிகிறது
 உள்மனமோ அழுகிறது
நேரியனாய் வாழ்ந்தமகன்
 நிலம்நீங்கிப் போனதாலே
யாருமற்றுப் போனோமென்று
 எங்கள்மண்ணும் கவல்கிறது.

பேர்புகழுக் காசைப்படாப்
 பெருந்தகையாய் வாழ்ந்தவன்நீ
சீர்தமிழர் சிறப்புப்பெறத்
 தினந்தினமும்; உழைத்தவன்நீ
நேர்வழியைத் தவிர்த்தோரை
 நீசரென அழைத்தவன்நீ
பார்புகழும் எழுத்துகளால்
 பலபேரை வென்றவன்நீ

மலிவான விளம்பரத்தில்
 மயங்காத மன்னவன்நீ
தெளிவான பாதையிலே
 தென்றலென வாழ்ந்தவன்நீ
நிலவாக உயர்ந்துஎங்கள்
 நெஞ்சமெலாம் நிறைந்தவன்நீ
விலகாத நட்புக்கு
 விளக்காக நின்றவன்நீ.

மலைமண் ணிங்கழுகிறது
 மைந்த:.உந்தன் பிரிவுகண்டு
நிலைகுலைந்து போகிறது
 நின்னுடலம் விலகிற்றென்று
அலைகடலாய்க் கண்ணீர்சிந்தி
 ஐயா உன்னை அனுப்பிவைத்தோம்
அமைதிகொள்க அன்புநண்ப!
 அனைவரும்உன் வழிவருவோம்.

                    அனைத்து நண்பர்கள் சார்பாக
                    கந்தவனம் கோணேஸ்வரன்.
                    14.01.2019
(இன்று கொழும்பில் தகனக்கிரியை இடம்பெறுகிறது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5