எங்கள் திருக்கோணமலை -11
எங்கள் திருக்கோணமலை -11
நாவில் விளையாடும் தமிழெல்லாம் காவியமாம்
நல்லோர் வாயுரைக்கும் வார்த்தைகளே மந்திரமாம்.
ஆவின் பாலன்ன அருந்தவத்தோர் தம்முளமாம்
ஆந்தணர் கரங்களென்றும் அழகான குவிமலராம்.
கோவில் வரும்பக்தர் நினைவுகளே சிவமயமாம்
கும்பிடும்போ தவர்சிந்தும் விழிநீரே சரஸ்வதியாம்
பூவில் அமர்வண்டின் முரலோசை இசையமுதாம்
புள்ளினத்தின் சிறகடிப்பால் எழும்வீச்சு தாளமதாம்.
மானின் விழியசைவால் மங்கையர்க்கு அந்தரமாம்
மயங்கும் காளையர்க்கு மங்கைகூந்தல் சுந்தரமாம்
தேனின் கனிசுவைக்கத் தருக்களெல்லாம் கவியினமாம்
திரளாகப் பள்ளிசெல்லும் பிள்ளைகள்வெண் முகிலினமாம்
வேனில் தழுவியெழும் இளங்காற்று பேரமுதாம்
வீரர் புகழ்பேசும் வார்த்தைகளே நாவமுதாம்
மானின் நேர்விழியாள் மாதுமையாள் பாகமுறை
கோணேசர் மண்ணதனில் காணும்பொருள் யாவுமிறை.
கன்னியாநீ ராடிவரு வோர்களுடல் தேறிடுமாம்
காயத்திரி பீடமதில் அமர்ந்தால்மனம் ஆறிடுமாம்
அன்னைபத்ர காளியம்பாள் அருள்மிகுந்த ஆலயத்தை
அனுதினமும் வலம்வருவோர்க் கனைத்துங்கை கூடிடுமாம்
வன்னமுடை லக்சுமிநா ராயணானின் நாமமதை
வாயாரச் சொன்னாலே நல்வினைகள் சேர்ந்திடுமாம்
கன்னல்தமிழ்ப் பூமிதிருக் கோணமலை மண்ணதனில்
கால்வைத்தாற் பேறுஎனில் வாழ்ந்திருப்போர் நலம்சொலவோ?
கந்தவனம் கோணேஸ்வரன்.
வைகாசி 2012
நாவில் விளையாடும் தமிழெல்லாம் காவியமாம்
நல்லோர் வாயுரைக்கும் வார்த்தைகளே மந்திரமாம்.
ஆவின் பாலன்ன அருந்தவத்தோர் தம்முளமாம்
ஆந்தணர் கரங்களென்றும் அழகான குவிமலராம்.
கோவில் வரும்பக்தர் நினைவுகளே சிவமயமாம்
கும்பிடும்போ தவர்சிந்தும் விழிநீரே சரஸ்வதியாம்
பூவில் அமர்வண்டின் முரலோசை இசையமுதாம்
புள்ளினத்தின் சிறகடிப்பால் எழும்வீச்சு தாளமதாம்.
மானின் விழியசைவால் மங்கையர்க்கு அந்தரமாம்
மயங்கும் காளையர்க்கு மங்கைகூந்தல் சுந்தரமாம்
தேனின் கனிசுவைக்கத் தருக்களெல்லாம் கவியினமாம்
திரளாகப் பள்ளிசெல்லும் பிள்ளைகள்வெண் முகிலினமாம்
வேனில் தழுவியெழும் இளங்காற்று பேரமுதாம்
வீரர் புகழ்பேசும் வார்த்தைகளே நாவமுதாம்
மானின் நேர்விழியாள் மாதுமையாள் பாகமுறை
கோணேசர் மண்ணதனில் காணும்பொருள் யாவுமிறை.
கன்னியாநீ ராடிவரு வோர்களுடல் தேறிடுமாம்
காயத்திரி பீடமதில் அமர்ந்தால்மனம் ஆறிடுமாம்
அன்னைபத்ர காளியம்பாள் அருள்மிகுந்த ஆலயத்தை
அனுதினமும் வலம்வருவோர்க் கனைத்துங்கை கூடிடுமாம்
வன்னமுடை லக்சுமிநா ராயணானின் நாமமதை
வாயாரச் சொன்னாலே நல்வினைகள் சேர்ந்திடுமாம்
கன்னல்தமிழ்ப் பூமிதிருக் கோணமலை மண்ணதனில்
கால்வைத்தாற் பேறுஎனில் வாழ்ந்திருப்போர் நலம்சொலவோ?
கந்தவனம் கோணேஸ்வரன்.
வைகாசி 2012
கருத்துகள்
கருத்துரையிடுக