இலக்கியத்துளி 4
இலக்கியத்துளி 4 ஓர் ஏழைக் குடியானவன். தொழில் செய்ய முடியவில்லை. வீட்டிலோ வறுமை. மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. “உழைக்கத்தான் முடியவில்லை: மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெறக்கூடவா முடியவில்லை?” என்று கடிந்த மனைவி மன்னனிடம் பரிசுபெற்று வறுமை நீங்கப்பெற்ற சிலரைச் சுட்டிக்காட்டி, “அவர்களைப்போல் நீங்களும் சென்று மன்னனிடம் பரிசு பெற்று வாருங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே நம் வறுமை தீரும்.” என்று இறுக்கமாகச் சொல்லி விட்டாள். மனைவி சொல்லிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பதையுணர்ந்த குடியானவன், வருவது வரட்டும் என்று நினைத்து மன்னனைக் காணப் புறப்பட்டான். தனக்கும் தமிழ்ப்புலமைக்கும் வெகுதூரம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனினும் வழிச்செல்லும் நேரத்தில் ஒரு கவிதையேனும் தன் மனதில் தோன்றிவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு. சிந்தித்துக் கொண்டே போனான். வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் “மண்ணுண்ணி மாப்பிள்ளை” என்று கூவிக்கொண்டே ஓடினான். குடியானவன் விழித்துக் கொண்டான். இந்தத் தொடரைக் கவிதையின் முதலடியாக்கிக் கொண்டான். இன்னும் சற்றுத் தூரம் ...