இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியத்துளி 4

இலக்கியத்துளி 4 ஓர் ஏழைக் குடியானவன். தொழில் செய்ய முடியவில்லை. வீட்டிலோ வறுமை. மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. “உழைக்கத்தான் முடியவில்லை: மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெறக்கூடவா முடியவில்லை?” என்று கடிந்த மனைவி மன்னனிடம் பரிசுபெற்று வறுமை நீங்கப்பெற்ற சிலரைச் சுட்டிக்காட்டி, “அவர்களைப்போல் நீங்களும் சென்று மன்னனிடம் பரிசு பெற்று வாருங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே நம் வறுமை தீரும்.” என்று இறுக்கமாகச் சொல்லி விட்டாள். மனைவி சொல்லிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பதையுணர்ந்த குடியானவன், வருவது வரட்டும் என்று  நினைத்து மன்னனைக் காணப் புறப்பட்டான். தனக்கும் தமிழ்ப்புலமைக்கும் வெகுதூரம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனினும் வழிச்செல்லும் நேரத்தில் ஒரு கவிதையேனும் தன் மனதில் தோன்றிவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு. சிந்தித்துக் கொண்டே போனான். வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் “மண்ணுண்ணி மாப்பிள்ளை” என்று கூவிக்கொண்டே ஓடினான். குடியானவன் விழித்துக் கொண்டான். இந்தத் தொடரைக் கவிதையின் முதலடியாக்கிக் கொண்டான். இன்னும் சற்றுத் தூரம் ...

இலக்கியத்துளி –3

இலக்கியத்துளி –3 ஒளவையார் ஒரு சிறந்த புலவர். பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று அண்மைக் காலம்வரை பேசிவந்த உலகுக்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்களின் கல்வித்திறனுக்குச் சான்றாக நின்று பதிலளித்தவர். ஆண் புலவர்களே கண்டு அஞ்சும் கவிவல்லமை படைத்தவர். இத்தகைய சிறப்புவாய்ந்த ஒளவையார் வேழமுகன் விநாயகனுடன் ஒரு பாடலாற் பேரம் பேசுகிறார். “நான் நான்கு பொருள்களை உனக்குத் தருகிறேன்: நீ எனக்கு மூன்று பொருள்களைத் தா.” என்று பட்டென்று கேட்கிறார். இன்றைய மொழியிற் சொல்வதானால் பிள்ளையாருக்குக் கையூட்டு கொடுத்துக் காரியம் சாதிக்க முயல்கிறாh எனலாம். பால், தெளி(ந்த)தேன், (இன்)பாகு,  (சுவையான)பருப்பு ஆகிய நான்கு உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து சுவைபட நான் உனக்குத் தருகிறேன்: எனக்கு சங்கம் வளர்த்த -இயல், இசை, நாடகம் - ஆகிய மூன்று தமிழையும் தந்துவிடு என்பதே அந்தப்பாடல். பெரும்புலவர் ஒருவர் நான்கு பொருள்களைக் கையூட்டாகக் கொடுத்து மூன்று பொருள்களை இறைவனிடம் பெற முயல்வது சரியா என்ற கேள்வி இங்கு எழுகிறது. அது பிழையான முன்னுதாரணமாகி விடாதா என்ற அச்சமும் சேர்ந்தே தோன்றுகிறது. இது சரியா பிழையா ...

இலக்கியத்துளி -- 2

இலக்கியத்துளி  -- 2 மன்னன் சண்பக பாண்டியனுக்கு ஓர் ஐயம் தோன்றியது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா என்பதே அவ்வையம். அதனைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொற்காசு பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்துவிட்டான். தருமி என்றோர் ஏழைப்பிராமணன் அப்பரிசைப் பெறவிரும்பித தான் தினமும் வணங்கும் சொக்கநாதப் பெருமானிடம் முறையிடுகிறான். சொக்கநாதரும் தன் பக்தனுக்காக ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதைக் கொண்டு சென்று அரசவையிற் பாடிக்காட்டிப் பரிசுபெற முனைந்தபோது அரசவைப் புலவர் நக்கீரனால் பரிசு தடுத்து நிறுத்தப்படுகிறது. பாடலிலே சொற்குற்றம் இலையாயினும் பொருட்குற்றம் இருக்கிறது: எனவே பரிசு தரமுடியாது என்பது நக்கீரரது வாதம். தருமி கவலைப்படுகிறான். நக்கீரனோ, “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது: வாசமலர்களைச் சூடுவதனால் செயற்கை மணம்தான் உண்டு. நீர் கொண்டுவந்த பாடலில் இயற்கை மணமுண்டு எனக் கருத்து இருப்பதால் அது பொருட்குற்றத்தின் பாற்படுகிறது. எனவே பரிசு தர முடியாது.” எனத் தெளிவாகவே அறிவித்து விடுகிறார். பரிசு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் சொக்கநாதரிடம் சென்ற தருமி சபையி...

இலக்கியத்துளி – 1

இலக்கியத்துளி – 1 எங்கள் தாய்மொழியாம் தமிழைப் பிழையற எழுதுவதுகூட ஒரு பெரியகலை. இன்றைய நாட்களில் பலர் இக்கலையில் ஆர்வம் காட்டுவதில்லை. கூசாமல் சொற்பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் கொண்ட ஆக்கங்களைப் படைத்துவிட்டு அவற்றைச் சரியானவை என்றும் வாதிடுவார்கள். இத்தகையோர் அந்நாட்களிலும் இருந்திருக்கிறார்கள். சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர். அவர்; தமிழுக்கு அணிகலனான மணிமேகலையைப் படைத்தளித்தவர். இவருக்குக் கூலவாணிகச் சாத்தனார் என்ற பெயரும் உளது. சீத்தலை என்பது புலவர் பிறந்த இடத்தின் பெயரென்பர் இலக்கிய அறிஞர்கள். கூலம் என்பது தானியம். கூலவாணிகச் சாத்தனார் எனும்போது இவர் தானியவணிகம் செய்தோர் வழிவந்தவராக இருக்கக் கூடும் என்றொரு கருத்தும் உண்டு. எவ்வாறெனினும் சீத்தலையைச் சீழ்த்தலை என்பாருமுளர். இவர்கள் கருத்துப்படி சீழ்த்தலை என்பதுதான் சீத்தலை என்றாயிற்று. புலவர் தலை எந்நேரமும் சீழ்வடிந்த நிலையிலேயே காணப்படுவதால் அவருக்கு அப்பெயர் வந்தது என்கிறார்கள் அவர்கள். அதற்குக் கூறும்காரணம் வேடிக்கையாக இருந்தாலும் பொருள் பொதிந்ததாக அமைந்திருப்பது சிறப்பு. புலவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் தமிழிற் பிழ...

அன்னை பத்ரகாளியம்பாள்.

அன்னை பத்ரகாளியம்பாள். அன்னைபத்ர காளியம்பாள் ஆலயக்கொடி யேற்றம்  அடியவர்கள் மனங்களிலே ஆனந்தக்குடி யேற்றம் சின்னவர்கள் பெரியவர்கள் சேர்ந்துஒன்று கூடி  தேரிழுக்கும் காட்சிகாணக் கண்கள்வேண்டும் கோடி வீதியெங்கும் பக்தர்கூட்டம் வேண்டுதல்கள் செய்வார்  விம்மியழுது கண்ணீர்சிந்தித் தாயினருளை வெல்வார் ஓதியுணர்ந்த வேதியர்கள் மந்திரங்கள் சொல்வார்  உள்ளமுருகி அடியவர்கள் அகந்தைதனைக் கொல்வார். அன்னைகொடி யேறிவிட்டால் அனைவர்உணவும் சைவம்  அவள்தீர்த்தம் காணும்வரை மக்கள்மனதும் தெய்வம் இன்னமுதாய் அன்னையருள் கோணைமண்ணிற் பெய்யும்  அரகரஒம் சக்திஎன்ற ஓசைநெஞ்சைக் கொய்யும் வீதிமண்ணை உடல்தழுவி ஆண்கள்வலம் வருவார்  வேண்டுதல்கள் வெல்லுமென்று எண்ணிமனம் மகிழ்வார் ஆதித்தாயை வேண்டிப்பெண்கள் அடியழித்துச் செல்வார்  அனைத்துயிரும் நலம்பெறுக என்றேமனதிற் சொல்வார் இளையர்கூட்டம் தாயினருளை இறைஞ்சிநிற்கும் காட்சி  இந்தமண்ணில் சைவம்நிலைக்கும் என்பதற்குச் சாட்சி தளையுடைத்துத் தடைதகர்த்துச் சைவத்தமிழ் வெல்லும்  தமிழர்நிலமும் நெறியுமென்றும் உயர்வழியிற் செல்லும். ...

சந்நிதி வேலன்.

சந்நிதி வேலன். ஆலிலையில் அமுதருந்தி பூவரசிற் குடிபுகுந்து  அன்பர்மனங் களிலுறைவான் சந்நிதி வேலன் நீலமயில் ஏறிவந்து சேவற்கொடி ஏந்திநின்று  நெஞ்சமெலாம் நிறைந்திருப்பான் சந்நிதி வேலன் சீலமுறு அடியவர்முன் சிறுகுழந்தை யாகவந்து  சிரிக்கவைத்துக் களித்திருப்பான் சந்நிதி வேலன் கோலவள்ளி யானையுடன் கோமகனாய்க் காட்சிதந்து  குளிர்நிலவாய்ச் சிரித்திருப்பான் சந்நிதி வேலன். ஆற்றங்கரை யானென்பர் அப்பன்முருகன் துணையென்பர்  அழைத்தபோது அருகில்வந்து நிற்பவன் இவனென்பர் சீற்றங்கொண்டு சூரன்வதை செய்தவனும் இவனென்பர்  சுந்தரமாய்த் தமிழ்கேட்டுக் குழைபவனும் இவனென்பர் ஆற்றுப்படை அருணகிரிக்கு அளித்தவனும் இவனென்பர்  அன்னதானக் கந்தன்என ஆனவனும் இவனென்பர் தோற்றம்முடிவு இல்லாத சோதியனும் இவனென்பர்  தொண்டைமா னாற்றுச்செல்வச் சந்நிதியின் வேலனென்பர். வடபுலத்தில் வேலெடுப்பான் தென்புலத்;தே வலம்வருவான்  வரும்வழியில் வில்லூன்றிப் பதிதனிலே யமர்வான் நடைபயிலும் பக்தரொடு வெருகலாற்றில் இணைந்திருப்பான்  நல்லதமிழ்ச் சிறுவனென வழித்துணையாய் நடப்பான் தடைகள்வரின் தகர்த்...

எங்கள் திருக்கோணமலை 12

எங்கள் திருக்கோணமலை 12 உலகமும் தோற்றமும் ஆனவளே தாயே  உயிர்களும் இயக்கமும் ஆனவளும் நீயே அலகிலாச் சோதியாய் ஆனவளே தாயே  அரனவன் திருச்சக்தி ஆனவளும் நீயே கலைகளும் காட்சியும் ஆனவளே தாயே  கருணைப் பெருங்கடல் ஆனவளும் நீயே நிலையிலாப் புவியினில் தாயாக நீயே  நெருக்கமாய் அமர்ந்தருள் புரிகின் றாயே வேதத்தின் உட்பொருளே விரிந்தெழு அண்டத்தின்  வித்தாகி நிற்பவளே வெளியெங்கும் நிறைந்தவளே நாதத்தின் இருப்பிடமே நவசக்தி யாகிநின்று  நானிலத்தோர் வாழ்வில் நடைமுறையாய் ஆனவளே ஓதற் கரியவளே உள்ளொளியே பெருநிதியே  உயிர்மூச்சா யாகிநின்று அருள்பவளே தாயே ஏதமில் அன்னையே இன்னுயிரே பத்ரகாளி  எனநாமம் பூண்டமர்ந்த இணையிலாச் சக்தியே எங்கள்மண் தலைநிமிர இன்னருள் புரிபவளே  எம்துயர் போயொழியச் சக்தியாய் வருபவளே பொங்கிவரும் பகையோட்டும் உருத்திர நாயகியே  பொருளுக்கும் அறிவுக்கும் பிறப்பிடமாய் ஆனவளே சங்கரனார் மனங்கொண்ட  சக்திஓங் காரியே  சந்தோசம் சன்மார்க்கம் தந்தெம்மை ஆள்பவளே தங்கத்திருக் கோணமலை மண்ணமர்ந்து காக்கும்  தாயேபத்ர காளியெமக் கெல்லாமும் நீ...