இலக்கியத்துளி -- 2
இலக்கியத்துளி -- 2
மன்னன் சண்பக பாண்டியனுக்கு ஓர் ஐயம் தோன்றியது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா என்பதே அவ்வையம். அதனைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொற்காசு பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்துவிட்டான்.
தருமி என்றோர் ஏழைப்பிராமணன் அப்பரிசைப் பெறவிரும்பித தான் தினமும் வணங்கும் சொக்கநாதப் பெருமானிடம் முறையிடுகிறான். சொக்கநாதரும் தன் பக்தனுக்காக ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதைக் கொண்டு சென்று அரசவையிற் பாடிக்காட்டிப் பரிசுபெற முனைந்தபோது அரசவைப் புலவர் நக்கீரனால் பரிசு தடுத்து நிறுத்தப்படுகிறது. பாடலிலே சொற்குற்றம் இலையாயினும் பொருட்குற்றம் இருக்கிறது: எனவே பரிசு தரமுடியாது என்பது நக்கீரரது வாதம்.
தருமி கவலைப்படுகிறான். நக்கீரனோ, “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது: வாசமலர்களைச் சூடுவதனால் செயற்கை மணம்தான் உண்டு. நீர் கொண்டுவந்த பாடலில் இயற்கை மணமுண்டு எனக் கருத்து இருப்பதால் அது பொருட்குற்றத்தின் பாற்படுகிறது. எனவே பரிசு தர முடியாது.” எனத் தெளிவாகவே அறிவித்து விடுகிறார்.
பரிசு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் சொக்கநாதரிடம் சென்ற தருமி சபையில் நிகழ்ந்தவற்றைச் சொல்கிறான். சொக்கநாதர் தருமியையும் அழைத்துக்கொண்டு அரசவைக்கு வருகிறார். நக்கீரனிடம் காரணம் கேட்கிறார். நக்கீரன் காரணத்தை முன்வைக்கிறார். “பத்மினி வகைப் பெண்களின் கூந்தலிலும் இயற்கை மணம் இல்லையென்கிறீரா?” எனச் சொக்கநாதர் கடுந்தொனியிற் கேட்கிறார். “பத்மினி வகைப் பெண்களென்ன நான் பாடிப்பரவும் என் ஐயன் சொக்கநாதப்பெருமானின் தேவியேயாயினும் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லையென்பதுதான் உண்மை.” என்று அழுத்தமாகவே சொல்லிவிடுகிறார் நக்கீரன்.
நக்கீரன் தன்பாடலிற் குற்றம் சொன்னதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத சொக்கநாதர் தான் இறைவன் என்பதை உணர்த்துமுகமாக நெற்றிக்கண்ணைக் காட்டுகிறார். நக்கீரனோ அதற்கும் அஞ்சவில்லை. “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே.” எனத் தன் முடிவைத் தெளிவாகவே அறிவிக்கிறார். அதன்பிறகு சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் நக்கீரன் நியாயத்தைக் காக்க எரியுண்டு போவதும் நக்கீரனின் துணிச்சலை மெச்சி சிவபெருமான் அவரை உயிர்ப்பித்து அருள்கொடுப்பதும் இலக்கியச் செய்திகளாகின்றன.
இச்சம்பவம் இறைவனேயாயினும் குற்றம் செய்தால் அது குற்றமே என்றே சொல்லக்கூடிய பக்குவமான மனதை எமக்குத் தருவதோடு அருமையான மூன்று பாடல்களையும் தமிழ் இலக்கியப் பரப்புக்குத் தந்திருக்கின்றது.
ஒருபாடல் மதுரைச்சொக்கநாதர் எனப்படும் இறைவனால் தருமிக்கு அருளிது. மற்றைப் பாடல் நக்கீரன்மேற் கோபங்கொண்டு மதுரைச்சொக்கநாதராற் பாடப்பெற்றது. மூன்றாவது பாடல் நக்கீரன் மதுரைச்சொக்கநாதரின் பாடலுக்குப் பதிலாகப் பாடியது. இப்போது பாடல்களைப் பார்ப்போம்.
மதுரைச்சொக்கநாதர் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல்;
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்
மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே.
இதன்பொருள்:
பூக்களின் மணத்தைத் தேர்ந்து ஆராய்கின்ற அழகிய சிறகுகளையுடைய வண்டே,
உன் விருப்பப்படி சொல்லாமல் கண்டறிந்த உண்மையைச் சொல்வாயாக,
பழகியவற்றுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் (நட்பினால்)
மயிலின் சாயலையும்,
நெருங்கியமைந்த வரிசைப் பற்களையுடைய பெண்கள் கூந்தலின் மணம்போல
இயற்கையான மணம் நீயறிந்த பூக்களில் உளதோ? ….என்பதாகும்.
நக்கீரன்மேற் கோபங்கொண்டு மதுரைச் சொக்கநாதர் பாடியது.
அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவி
பங்கப் படஇரண்டு கால்பரப்பி -- சங்கதனைக்
கீர்கீ ரென்றறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்?
இதன்பொருள்:
உடம்பை வளர்ப்பதற்காக அரிவாளில் நெய்பூசி
மோசமான முறையில் கால்களை அகலமாக்கி இருந்து
சங்கெடுத்துக்
கீர் கீர் என ஓசைவருமளவுக்கு அறுத்து (நகைசெய்யும்) நக்கீரனோ
இவ்வுலகில் என் கவிதையிற் குறை காண்பவன்?
இதற்கு நக்கீரன் கொடுத்த பதிற் பாடல்;
சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க் கேதுகுலம்?
பங்கமுறச் சொன்னாற் பழுதாமோ? -- சங்கதனை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி.
இதன்பொருள்:
சங்கு அறுக்கும் குலத்தவர் நாங்கள்: சங்கரனாரே உங்களுக்கு ஏதாவது குலப்பெருமை உளதா?
(இதனை) கொஞ்சம் இழிவுபடச் சொன்னால் பிழையாகுமா?
சங்கை
அரிந்து அதிற்கிடைக்கும் வருமானத்தில் வாழ்வோமேயன்றி உம்மைப் போல
(கையிற் திருவோடு ஏந்தி) இரந்து உண்டு நாம் வாழமாட்டோம். என்பதாகும்.
இறைவனை வாழ்த்துகின்ற நம்தமிழ், நியாயத்தை நிலைநிறுத்துவதற்காக அவருடன் சமர் தொடுக்கவும் தயங்காது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் அல்லவா இப்பாடல்கள்?
கந்தவனம் கோணேஸ்வரன்
20.03.2019
மன்னன் சண்பக பாண்டியனுக்கு ஓர் ஐயம் தோன்றியது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா என்பதே அவ்வையம். அதனைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொற்காசு பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்துவிட்டான்.
தருமி என்றோர் ஏழைப்பிராமணன் அப்பரிசைப் பெறவிரும்பித தான் தினமும் வணங்கும் சொக்கநாதப் பெருமானிடம் முறையிடுகிறான். சொக்கநாதரும் தன் பக்தனுக்காக ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதைக் கொண்டு சென்று அரசவையிற் பாடிக்காட்டிப் பரிசுபெற முனைந்தபோது அரசவைப் புலவர் நக்கீரனால் பரிசு தடுத்து நிறுத்தப்படுகிறது. பாடலிலே சொற்குற்றம் இலையாயினும் பொருட்குற்றம் இருக்கிறது: எனவே பரிசு தரமுடியாது என்பது நக்கீரரது வாதம்.
தருமி கவலைப்படுகிறான். நக்கீரனோ, “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது: வாசமலர்களைச் சூடுவதனால் செயற்கை மணம்தான் உண்டு. நீர் கொண்டுவந்த பாடலில் இயற்கை மணமுண்டு எனக் கருத்து இருப்பதால் அது பொருட்குற்றத்தின் பாற்படுகிறது. எனவே பரிசு தர முடியாது.” எனத் தெளிவாகவே அறிவித்து விடுகிறார்.
பரிசு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் சொக்கநாதரிடம் சென்ற தருமி சபையில் நிகழ்ந்தவற்றைச் சொல்கிறான். சொக்கநாதர் தருமியையும் அழைத்துக்கொண்டு அரசவைக்கு வருகிறார். நக்கீரனிடம் காரணம் கேட்கிறார். நக்கீரன் காரணத்தை முன்வைக்கிறார். “பத்மினி வகைப் பெண்களின் கூந்தலிலும் இயற்கை மணம் இல்லையென்கிறீரா?” எனச் சொக்கநாதர் கடுந்தொனியிற் கேட்கிறார். “பத்மினி வகைப் பெண்களென்ன நான் பாடிப்பரவும் என் ஐயன் சொக்கநாதப்பெருமானின் தேவியேயாயினும் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லையென்பதுதான் உண்மை.” என்று அழுத்தமாகவே சொல்லிவிடுகிறார் நக்கீரன்.
நக்கீரன் தன்பாடலிற் குற்றம் சொன்னதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத சொக்கநாதர் தான் இறைவன் என்பதை உணர்த்துமுகமாக நெற்றிக்கண்ணைக் காட்டுகிறார். நக்கீரனோ அதற்கும் அஞ்சவில்லை. “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே.” எனத் தன் முடிவைத் தெளிவாகவே அறிவிக்கிறார். அதன்பிறகு சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் நக்கீரன் நியாயத்தைக் காக்க எரியுண்டு போவதும் நக்கீரனின் துணிச்சலை மெச்சி சிவபெருமான் அவரை உயிர்ப்பித்து அருள்கொடுப்பதும் இலக்கியச் செய்திகளாகின்றன.
இச்சம்பவம் இறைவனேயாயினும் குற்றம் செய்தால் அது குற்றமே என்றே சொல்லக்கூடிய பக்குவமான மனதை எமக்குத் தருவதோடு அருமையான மூன்று பாடல்களையும் தமிழ் இலக்கியப் பரப்புக்குத் தந்திருக்கின்றது.
ஒருபாடல் மதுரைச்சொக்கநாதர் எனப்படும் இறைவனால் தருமிக்கு அருளிது. மற்றைப் பாடல் நக்கீரன்மேற் கோபங்கொண்டு மதுரைச்சொக்கநாதராற் பாடப்பெற்றது. மூன்றாவது பாடல் நக்கீரன் மதுரைச்சொக்கநாதரின் பாடலுக்குப் பதிலாகப் பாடியது. இப்போது பாடல்களைப் பார்ப்போம்.
மதுரைச்சொக்கநாதர் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல்;
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்
மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே.
இதன்பொருள்:
பூக்களின் மணத்தைத் தேர்ந்து ஆராய்கின்ற அழகிய சிறகுகளையுடைய வண்டே,
உன் விருப்பப்படி சொல்லாமல் கண்டறிந்த உண்மையைச் சொல்வாயாக,
பழகியவற்றுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் (நட்பினால்)
மயிலின் சாயலையும்,
நெருங்கியமைந்த வரிசைப் பற்களையுடைய பெண்கள் கூந்தலின் மணம்போல
இயற்கையான மணம் நீயறிந்த பூக்களில் உளதோ? ….என்பதாகும்.
நக்கீரன்மேற் கோபங்கொண்டு மதுரைச் சொக்கநாதர் பாடியது.
அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவி
பங்கப் படஇரண்டு கால்பரப்பி -- சங்கதனைக்
கீர்கீ ரென்றறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்?
இதன்பொருள்:
உடம்பை வளர்ப்பதற்காக அரிவாளில் நெய்பூசி
மோசமான முறையில் கால்களை அகலமாக்கி இருந்து
சங்கெடுத்துக்
கீர் கீர் என ஓசைவருமளவுக்கு அறுத்து (நகைசெய்யும்) நக்கீரனோ
இவ்வுலகில் என் கவிதையிற் குறை காண்பவன்?
இதற்கு நக்கீரன் கொடுத்த பதிற் பாடல்;
சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க் கேதுகுலம்?
பங்கமுறச் சொன்னாற் பழுதாமோ? -- சங்கதனை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி.
இதன்பொருள்:
சங்கு அறுக்கும் குலத்தவர் நாங்கள்: சங்கரனாரே உங்களுக்கு ஏதாவது குலப்பெருமை உளதா?
(இதனை) கொஞ்சம் இழிவுபடச் சொன்னால் பிழையாகுமா?
சங்கை
அரிந்து அதிற்கிடைக்கும் வருமானத்தில் வாழ்வோமேயன்றி உம்மைப் போல
(கையிற் திருவோடு ஏந்தி) இரந்து உண்டு நாம் வாழமாட்டோம். என்பதாகும்.
இறைவனை வாழ்த்துகின்ற நம்தமிழ், நியாயத்தை நிலைநிறுத்துவதற்காக அவருடன் சமர் தொடுக்கவும் தயங்காது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் அல்லவா இப்பாடல்கள்?
கந்தவனம் கோணேஸ்வரன்
20.03.2019
கருத்துகள்
கருத்துரையிடுக