இலக்கியத்துளி – 1
இலக்கியத்துளி – 1
எங்கள் தாய்மொழியாம் தமிழைப் பிழையற எழுதுவதுகூட ஒரு பெரியகலை. இன்றைய நாட்களில் பலர் இக்கலையில் ஆர்வம் காட்டுவதில்லை. கூசாமல் சொற்பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் கொண்ட ஆக்கங்களைப் படைத்துவிட்டு அவற்றைச் சரியானவை என்றும் வாதிடுவார்கள். இத்தகையோர் அந்நாட்களிலும் இருந்திருக்கிறார்கள்.
சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர். அவர்; தமிழுக்கு அணிகலனான மணிமேகலையைப் படைத்தளித்தவர். இவருக்குக் கூலவாணிகச் சாத்தனார் என்ற பெயரும் உளது. சீத்தலை என்பது புலவர் பிறந்த இடத்தின் பெயரென்பர் இலக்கிய அறிஞர்கள். கூலம் என்பது தானியம். கூலவாணிகச் சாத்தனார் எனும்போது இவர் தானியவணிகம் செய்தோர் வழிவந்தவராக இருக்கக் கூடும் என்றொரு கருத்தும் உண்டு.
எவ்வாறெனினும் சீத்தலையைச் சீழ்த்தலை என்பாருமுளர். இவர்கள் கருத்துப்படி சீழ்த்தலை என்பதுதான் சீத்தலை என்றாயிற்று. புலவர் தலை எந்நேரமும் சீழ்வடிந்த நிலையிலேயே காணப்படுவதால் அவருக்கு அப்பெயர் வந்தது என்கிறார்கள் அவர்கள். அதற்குக் கூறும்காரணம் வேடிக்கையாக இருந்தாலும் பொருள் பொதிந்ததாக அமைந்திருப்பது சிறப்பு.
புலவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் தமிழிற் பிழைவிட்டால் புலவருக்குச் சட்டென்று கோபம் வந்துவிடுமாம். தன் கோபத்தை அவர் பிழைவிட்ட மாணாக்கன் மேல் காட்டுதற்குப் பதிலாக எழுத்தாணியாற் தன்தலையிலேயே குத்தித் தன்னைத் தண்டித்துக் கொள்வாராம். (மாணவர்கள் மேல் கைவைக்க முடியாத இன்றைய ஆசிரியர்கள் போலவோ என்னவோ.) இப்படி அடிக்கடி அவர் செய்து கொள்வதால் தலைப்புண்கள் சீழ்பிடித்த நிலையிற் காணப்படவே புலவருக்கு அப்பெயர் வந்தது என்பது சீழ்த்தலைச் சாத்தனார் என்று கூறுவோரது விளக்கம்.
இது நடைமுறைக்குக் கொஞ்சம் இடையூறான விளக்கமாக இருந்தபோதிலும் தமிழைப் பிழையற எழுத வேண்டும் என்பதன் அழுத்த வெளிப்பரடாகக் கொள்வதில் தவறில்லை; என்றே தோன்றுகிறது.
இப்போது விடயத்துக்கு வருவோம். கம்பர் மிகப்பெரும் புலவர் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. காளமேகப் புலவரும் ஆற்றலிற் குறைந்தவரல்லர். கம்பரிற் பிழைபிடிக்க வேண்டுமென்பது காளமேகப் புலவரின் நெடுநாளைய அவாப்போலும். கம்பரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாடலில் நாராயணன் என்று சொல்வதற்குப் பதிலாக நராயணன் என்று சொல்லிவிட்டார். இது இலக்கணப் பிழை சார்ந்ததன்று. பாடலின் ஒலியமைதி கருதிச் சொல்லப்பட்டது. இதற்கு இலக்கண வல்லோர் விகாரக்குறுக்கம் எனப் பெயர்கொடுத்து வழுவமைதியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் காளமேகப் புலவர் தயாராக இல்லை. சட்டென்று காரசாரமான ஒரு பாடலை உதிர்த்து விடுகிறார். அந்தப் பாடல் இதுதான்:
நாராயணனை நராயணன் என்றே கம்பர்
ஓராமற் சொன்ன உறுதியால் -- நேராக
வாரென்றால் வர்என்பேன் வாளென்றால் வள்என்பேன்
நாரென்றால் நர்என்பேன் நான்.
இந்தப் பாடல், “கம்பனே.. நீ நாரயணன் என்ற பெயரை நராயணன் என்று சொல்லத் துணிந்ததால் நானும் இனிமேல் வார் என்று சொல்லுமிடங்களில் வர் என்று சொல்வேன்: வாள் என்பதை வள் என்று உச்சரிப்பேன்: நார் என்று வருமிடங்களில் நர் என்று கூறுவேன்: உன்னால் என்ன செய்யமுடியும்?” என்று கேட்பது போலிருக்கிறதல்லவா.
அறிஞர்களின் மோதலிற்கூட அன்னைத்தமிழ் சிறப்படைவது பெருமைக்குரியதுதானே!
கந்தவனம் கோணேஸ்வரன்
16.03.2019
எங்கள் தாய்மொழியாம் தமிழைப் பிழையற எழுதுவதுகூட ஒரு பெரியகலை. இன்றைய நாட்களில் பலர் இக்கலையில் ஆர்வம் காட்டுவதில்லை. கூசாமல் சொற்பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் கொண்ட ஆக்கங்களைப் படைத்துவிட்டு அவற்றைச் சரியானவை என்றும் வாதிடுவார்கள். இத்தகையோர் அந்நாட்களிலும் இருந்திருக்கிறார்கள்.
சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர். அவர்; தமிழுக்கு அணிகலனான மணிமேகலையைப் படைத்தளித்தவர். இவருக்குக் கூலவாணிகச் சாத்தனார் என்ற பெயரும் உளது. சீத்தலை என்பது புலவர் பிறந்த இடத்தின் பெயரென்பர் இலக்கிய அறிஞர்கள். கூலம் என்பது தானியம். கூலவாணிகச் சாத்தனார் எனும்போது இவர் தானியவணிகம் செய்தோர் வழிவந்தவராக இருக்கக் கூடும் என்றொரு கருத்தும் உண்டு.
எவ்வாறெனினும் சீத்தலையைச் சீழ்த்தலை என்பாருமுளர். இவர்கள் கருத்துப்படி சீழ்த்தலை என்பதுதான் சீத்தலை என்றாயிற்று. புலவர் தலை எந்நேரமும் சீழ்வடிந்த நிலையிலேயே காணப்படுவதால் அவருக்கு அப்பெயர் வந்தது என்கிறார்கள் அவர்கள். அதற்குக் கூறும்காரணம் வேடிக்கையாக இருந்தாலும் பொருள் பொதிந்ததாக அமைந்திருப்பது சிறப்பு.
புலவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் தமிழிற் பிழைவிட்டால் புலவருக்குச் சட்டென்று கோபம் வந்துவிடுமாம். தன் கோபத்தை அவர் பிழைவிட்ட மாணாக்கன் மேல் காட்டுதற்குப் பதிலாக எழுத்தாணியாற் தன்தலையிலேயே குத்தித் தன்னைத் தண்டித்துக் கொள்வாராம். (மாணவர்கள் மேல் கைவைக்க முடியாத இன்றைய ஆசிரியர்கள் போலவோ என்னவோ.) இப்படி அடிக்கடி அவர் செய்து கொள்வதால் தலைப்புண்கள் சீழ்பிடித்த நிலையிற் காணப்படவே புலவருக்கு அப்பெயர் வந்தது என்பது சீழ்த்தலைச் சாத்தனார் என்று கூறுவோரது விளக்கம்.
இது நடைமுறைக்குக் கொஞ்சம் இடையூறான விளக்கமாக இருந்தபோதிலும் தமிழைப் பிழையற எழுத வேண்டும் என்பதன் அழுத்த வெளிப்பரடாகக் கொள்வதில் தவறில்லை; என்றே தோன்றுகிறது.
இப்போது விடயத்துக்கு வருவோம். கம்பர் மிகப்பெரும் புலவர் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. காளமேகப் புலவரும் ஆற்றலிற் குறைந்தவரல்லர். கம்பரிற் பிழைபிடிக்க வேண்டுமென்பது காளமேகப் புலவரின் நெடுநாளைய அவாப்போலும். கம்பரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாடலில் நாராயணன் என்று சொல்வதற்குப் பதிலாக நராயணன் என்று சொல்லிவிட்டார். இது இலக்கணப் பிழை சார்ந்ததன்று. பாடலின் ஒலியமைதி கருதிச் சொல்லப்பட்டது. இதற்கு இலக்கண வல்லோர் விகாரக்குறுக்கம் எனப் பெயர்கொடுத்து வழுவமைதியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் காளமேகப் புலவர் தயாராக இல்லை. சட்டென்று காரசாரமான ஒரு பாடலை உதிர்த்து விடுகிறார். அந்தப் பாடல் இதுதான்:
நாராயணனை நராயணன் என்றே கம்பர்
ஓராமற் சொன்ன உறுதியால் -- நேராக
வாரென்றால் வர்என்பேன் வாளென்றால் வள்என்பேன்
நாரென்றால் நர்என்பேன் நான்.
இந்தப் பாடல், “கம்பனே.. நீ நாரயணன் என்ற பெயரை நராயணன் என்று சொல்லத் துணிந்ததால் நானும் இனிமேல் வார் என்று சொல்லுமிடங்களில் வர் என்று சொல்வேன்: வாள் என்பதை வள் என்று உச்சரிப்பேன்: நார் என்று வருமிடங்களில் நர் என்று கூறுவேன்: உன்னால் என்ன செய்யமுடியும்?” என்று கேட்பது போலிருக்கிறதல்லவா.
அறிஞர்களின் மோதலிற்கூட அன்னைத்தமிழ் சிறப்படைவது பெருமைக்குரியதுதானே!
கந்தவனம் கோணேஸ்வரன்
16.03.2019
கருத்துகள்
கருத்துரையிடுக