இலக்கியத்துளி 4
இலக்கியத்துளி 4
ஓர் ஏழைக் குடியானவன். தொழில் செய்ய முடியவில்லை. வீட்டிலோ வறுமை. மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. “உழைக்கத்தான் முடியவில்லை: மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெறக்கூடவா முடியவில்லை?” என்று கடிந்த மனைவி மன்னனிடம் பரிசுபெற்று வறுமை நீங்கப்பெற்ற சிலரைச் சுட்டிக்காட்டி, “அவர்களைப்போல் நீங்களும் சென்று மன்னனிடம் பரிசு பெற்று வாருங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே நம் வறுமை தீரும்.” என்று இறுக்கமாகச் சொல்லி விட்டாள்.
மனைவி சொல்லிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பதையுணர்ந்த குடியானவன், வருவது வரட்டும் என்று நினைத்து மன்னனைக் காணப் புறப்பட்டான். தனக்கும் தமிழ்ப்புலமைக்கும் வெகுதூரம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனினும் வழிச்செல்லும் நேரத்தில் ஒரு கவிதையேனும் தன் மனதில் தோன்றிவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு. சிந்தித்துக் கொண்டே போனான்.
வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் “மண்ணுண்ணி மாப்பிள்ளை” என்று கூவிக்கொண்டே ஓடினான். குடியானவன் விழித்துக் கொண்டான். இந்தத் தொடரைக் கவிதையின் முதலடியாக்கிக் கொண்டான்.
இன்னும் சற்றுத் தூரம் நடந்து போனான். அங்கும் சிறுவர்கள் “காவிறை… கூவிறை…” என்று கத்திக் கொண்டே ஓடி விளையாடினார்கள். குடியானவனுக்குக் கவிதையின் இரண்டாவது அடியும் கிடைத்து விட்டது. இரண்டு வரிகளையும் மனனப்படுத்திக் கொண்டிருக்கும்போதே தூரத்தே இரண்டு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து “உங்கப்பன் கோவில் பெருச்சாளி.” ஏன்ற திட்டினான். குடியானவன் இதனைக் கவிதையின் மூன்றாவது அடியாக்கிக் கொண்டான்
.
என்றாலும் கவிதை நிறைவுபெற்றதாக அவன் மனதுக்குத் தோன்றவில்லை. கருத்துத்தான் புரியாவிட்டாலும் கவிதை நிறைவுபெற்றது போன்றதொரு தோற்றமாவது வேண்டாமா எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தொடர்ந்து நடந்தான் குடியானவன்.
வுழியில் ஒரு நண்பன் குறுக்கிட்டான். “என்னப்பா பலமான யோசனையுடன் எங்கே போகிறாய்?” என்று கேட்டான். தான் செல்லும் காரணத்தை நண்பனிடம் கூறிய குடியானவன் நல்ல கவிதையொன்றை எழுத முடியாத தன் ஆதங்கத்தையும் வெளியிட்டான். நண்பனுக்கும் கவிதை வடிக்கத் தெரியவில்லை. இருப்பினும் தன்நண்பனுக்கு அதைக் காட்டிக் கொள்ளாமல் “கவிதைதானே…இது என்ன பெரிய காரியம்? தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்? கன்னா பின்னா என்று எதையாவது சொல்லிவிடுää அது கவிதையாகி விடும். மன்னரும் நிச்சயம் பரிசு தருவார்: உன் வறுமையும் நீங்கிவிடும்.” எனத் தேற்றிவிட்டுச் சென்றான். குடியானவன் கன்னா பின்னா என்பதையும் ஓரடியாக இணைத்துக் கொண்டான்.
இப்போதும் கவிதை நிறைவு பெறவில்லை. “அவரிவர் கூறியவற்றைக் கொண்டுதானே கவிதையை உருவாக்கினேன். அதை நிறைவு படுத்த நான் இரு வரிகளையேனும் சேர்க்க வேண்டாமா?” எனச் சிந்தித்த குடியானவன் “சோழமன்னிடந்தானே போகிறேன். அவரை விளித்து ஈரடிகளையாவது எழுதினால் நன்றன்றோ?” என எண்ணினான். மன்னா, தென்னா, சோழரங்கப் பெருமானே எனக் கவிதையையும் நிறைவு செய்தான். மகிழ்வுடன் அரசவைக்குள் நுழைந்தும் விட்டான்.
தான் மன்னனைப் பாடிப் பரிசு பெற வந்திருப்பதாகத் தெரியப்படுத்தியதும் மன்னனும் மிகமகிழ்ந்து பாடும்படி சொல்ல, குடியானவனும் பாடிக்காட்டினான். அவன் ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல மன்னனின் முகம் கடுப்பாகிக் கோபம் தலைக்கேறியது. அரசவைப் புலவரும் வந்தவன் புலவனலலன் என்பதையும் பரிசு பெறுவதற்காக் கவிதை என்ற நினைப்பில் வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார்.
கவிதை பாடிமுடிந்ததும் மன்னன் பெருஞ்சினத்துடன், “யாரங்கே? இவனை இழுத்துக் கொண்டுபோய்ச் சிரச்சேதம் செய்து விடுங்கள்.” எனக் கட்டளையிட்டான். மன்னனின் கோபங்கண்டு குடியானவன் நடுங்கினான். கவிதை என்று நினைத்து மன்னன்முன் ஏதேதோ உளறி விட்டதால் வாழ்க்கையும் தொலைந்தது என்று வருந்தினான்.
குடியானவனின் நிலையைப் பார்த்து இரங்கிய அரசவைப் புலவர் எழுந்தார். “மன்னா தாங்கள் அவசரப்பட்டுத தவறான உத்தரவைப் பிறப்பித்து விட்டீர்கள். தாங்கள் கோபப்படத் தக்கதாகக் கவிதையில் எதுவும் சொல்லப்படவில்லையே. அனைத்து வார்த்தைகளும் உங்களைப் புகழ்ந்தன்றோ காணப்படுகின்றன. இந்த ஏழைப்புலவன் தண்டனை பெறுமளவுக்குக் குற்றமெதுவும் செய்து விடவில்லையே.” என்றார்.
சற்று நிதானமடைந்ம மன்னன் அரசவைப் புலவரைப்பார்த்து “ நான் விளங்கிக் கொண்டவரையில் கவிதையின் பொருள் அபத்தமாக இருக்கிறது. தாங்கள் முடிந்தால் அக்கவிதையுன் சிறப்பைச் சொல்லுங்கள் கேட்கிறேன்.” என்றான். புலவர் நிதானமானப் பொருள் சொல்லத் தொடங்கிளார்.
மண்ணுண்ணி மாப்பிள்ளையே – மண்ணை உண்ட திருமாலே,
காவிறையே – சோழமண்டலத்துக் காவல் தெய்வமே,
கூவிறையே – ஓசையால் எழும் இசைக்குக் காவலனே,
உங்கள் அப்பன் கோ -- தங்கள் தந்தையாராகிய மன்னர்
வில் பெருச்சாளி -- வில்வித்தையில் எதிரிகளை நடுங்கச் செய்யும் பெரிய சிங்கத்துக்கு நிகரானவர்,
கன்னா – பிறருக்குக் கொடை வழங்குவதில் கர்ணனைப் போன்றவரே,
பின்னா – குடிமக்கள்மேற் கருணை காட்டுவதிலும், பொறுமை காப்பதிலும் கர்ணனின் தம்பியாகிய தருமனுக்கு நிகரானவரே,
மன்னா -- இந்த நாட்டின் மன்னர் பெருமானே,
தென்னா – தென்னாட்டின் தலைமகனே,
சோழரங்கப் பெருமானே – சோழமண்டலத்தின் தலைவனே.
.
என்றல்லவா தங்களைப் பாடியிருக்கிறார். என்று தெளிவு படுத்தினார்.
“அடடா நான் தவறு செய்யத் துணிந்தேன்.” என வருந்திய மன்னன் ஏழைக் குடியானவனிடம் மன்னிப்புக் கேட்டுப் பெரும் பொருளும் கொடுத்தனுப்பினான்.
குடியானவனின் பஞ்சமும் தீர்ந்தது: “ஓர் ஏழையைக் காப்பாற்றிவிட்டோமே.” என்ற நிம்மதியும் அரசவைப் புலவருக்குக் கிடைத்தது.
அந்த வேடிக்கையான கவிதையைப் பார்ப்போம்:
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே….கூவிறையே
உங்கள் அப்பன்
கோவில் பெருச்சாளி
கன்னா ….பின்னா
மன்னா….தென்னா
சோழரங்கப் பெருமானே.
இந்தக் கவிதை தமிழின் பெருமையை மட்டுமன்றித் தமிழை வளைத்துப் பொருள் கூறி ஓரேழையின் உயிரைக் காத்த அரசவைப் புலவரின் சிறப்பையுமன்றோ பறைசாற்றுகிறது.
கந்தவனம் கோணேஸ்வரன்.
28.03.2019
ஓர் ஏழைக் குடியானவன். தொழில் செய்ய முடியவில்லை. வீட்டிலோ வறுமை. மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. “உழைக்கத்தான் முடியவில்லை: மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெறக்கூடவா முடியவில்லை?” என்று கடிந்த மனைவி மன்னனிடம் பரிசுபெற்று வறுமை நீங்கப்பெற்ற சிலரைச் சுட்டிக்காட்டி, “அவர்களைப்போல் நீங்களும் சென்று மன்னனிடம் பரிசு பெற்று வாருங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே நம் வறுமை தீரும்.” என்று இறுக்கமாகச் சொல்லி விட்டாள்.
மனைவி சொல்லிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பதையுணர்ந்த குடியானவன், வருவது வரட்டும் என்று நினைத்து மன்னனைக் காணப் புறப்பட்டான். தனக்கும் தமிழ்ப்புலமைக்கும் வெகுதூரம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனினும் வழிச்செல்லும் நேரத்தில் ஒரு கவிதையேனும் தன் மனதில் தோன்றிவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு. சிந்தித்துக் கொண்டே போனான்.
வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் “மண்ணுண்ணி மாப்பிள்ளை” என்று கூவிக்கொண்டே ஓடினான். குடியானவன் விழித்துக் கொண்டான். இந்தத் தொடரைக் கவிதையின் முதலடியாக்கிக் கொண்டான்.
இன்னும் சற்றுத் தூரம் நடந்து போனான். அங்கும் சிறுவர்கள் “காவிறை… கூவிறை…” என்று கத்திக் கொண்டே ஓடி விளையாடினார்கள். குடியானவனுக்குக் கவிதையின் இரண்டாவது அடியும் கிடைத்து விட்டது. இரண்டு வரிகளையும் மனனப்படுத்திக் கொண்டிருக்கும்போதே தூரத்தே இரண்டு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து “உங்கப்பன் கோவில் பெருச்சாளி.” ஏன்ற திட்டினான். குடியானவன் இதனைக் கவிதையின் மூன்றாவது அடியாக்கிக் கொண்டான்
.
என்றாலும் கவிதை நிறைவுபெற்றதாக அவன் மனதுக்குத் தோன்றவில்லை. கருத்துத்தான் புரியாவிட்டாலும் கவிதை நிறைவுபெற்றது போன்றதொரு தோற்றமாவது வேண்டாமா எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தொடர்ந்து நடந்தான் குடியானவன்.
வுழியில் ஒரு நண்பன் குறுக்கிட்டான். “என்னப்பா பலமான யோசனையுடன் எங்கே போகிறாய்?” என்று கேட்டான். தான் செல்லும் காரணத்தை நண்பனிடம் கூறிய குடியானவன் நல்ல கவிதையொன்றை எழுத முடியாத தன் ஆதங்கத்தையும் வெளியிட்டான். நண்பனுக்கும் கவிதை வடிக்கத் தெரியவில்லை. இருப்பினும் தன்நண்பனுக்கு அதைக் காட்டிக் கொள்ளாமல் “கவிதைதானே…இது என்ன பெரிய காரியம்? தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்? கன்னா பின்னா என்று எதையாவது சொல்லிவிடுää அது கவிதையாகி விடும். மன்னரும் நிச்சயம் பரிசு தருவார்: உன் வறுமையும் நீங்கிவிடும்.” எனத் தேற்றிவிட்டுச் சென்றான். குடியானவன் கன்னா பின்னா என்பதையும் ஓரடியாக இணைத்துக் கொண்டான்.
இப்போதும் கவிதை நிறைவு பெறவில்லை. “அவரிவர் கூறியவற்றைக் கொண்டுதானே கவிதையை உருவாக்கினேன். அதை நிறைவு படுத்த நான் இரு வரிகளையேனும் சேர்க்க வேண்டாமா?” எனச் சிந்தித்த குடியானவன் “சோழமன்னிடந்தானே போகிறேன். அவரை விளித்து ஈரடிகளையாவது எழுதினால் நன்றன்றோ?” என எண்ணினான். மன்னா, தென்னா, சோழரங்கப் பெருமானே எனக் கவிதையையும் நிறைவு செய்தான். மகிழ்வுடன் அரசவைக்குள் நுழைந்தும் விட்டான்.
தான் மன்னனைப் பாடிப் பரிசு பெற வந்திருப்பதாகத் தெரியப்படுத்தியதும் மன்னனும் மிகமகிழ்ந்து பாடும்படி சொல்ல, குடியானவனும் பாடிக்காட்டினான். அவன் ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல மன்னனின் முகம் கடுப்பாகிக் கோபம் தலைக்கேறியது. அரசவைப் புலவரும் வந்தவன் புலவனலலன் என்பதையும் பரிசு பெறுவதற்காக் கவிதை என்ற நினைப்பில் வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார்.
கவிதை பாடிமுடிந்ததும் மன்னன் பெருஞ்சினத்துடன், “யாரங்கே? இவனை இழுத்துக் கொண்டுபோய்ச் சிரச்சேதம் செய்து விடுங்கள்.” எனக் கட்டளையிட்டான். மன்னனின் கோபங்கண்டு குடியானவன் நடுங்கினான். கவிதை என்று நினைத்து மன்னன்முன் ஏதேதோ உளறி விட்டதால் வாழ்க்கையும் தொலைந்தது என்று வருந்தினான்.
குடியானவனின் நிலையைப் பார்த்து இரங்கிய அரசவைப் புலவர் எழுந்தார். “மன்னா தாங்கள் அவசரப்பட்டுத தவறான உத்தரவைப் பிறப்பித்து விட்டீர்கள். தாங்கள் கோபப்படத் தக்கதாகக் கவிதையில் எதுவும் சொல்லப்படவில்லையே. அனைத்து வார்த்தைகளும் உங்களைப் புகழ்ந்தன்றோ காணப்படுகின்றன. இந்த ஏழைப்புலவன் தண்டனை பெறுமளவுக்குக் குற்றமெதுவும் செய்து விடவில்லையே.” என்றார்.
சற்று நிதானமடைந்ம மன்னன் அரசவைப் புலவரைப்பார்த்து “ நான் விளங்கிக் கொண்டவரையில் கவிதையின் பொருள் அபத்தமாக இருக்கிறது. தாங்கள் முடிந்தால் அக்கவிதையுன் சிறப்பைச் சொல்லுங்கள் கேட்கிறேன்.” என்றான். புலவர் நிதானமானப் பொருள் சொல்லத் தொடங்கிளார்.
மண்ணுண்ணி மாப்பிள்ளையே – மண்ணை உண்ட திருமாலே,
காவிறையே – சோழமண்டலத்துக் காவல் தெய்வமே,
கூவிறையே – ஓசையால் எழும் இசைக்குக் காவலனே,
உங்கள் அப்பன் கோ -- தங்கள் தந்தையாராகிய மன்னர்
வில் பெருச்சாளி -- வில்வித்தையில் எதிரிகளை நடுங்கச் செய்யும் பெரிய சிங்கத்துக்கு நிகரானவர்,
கன்னா – பிறருக்குக் கொடை வழங்குவதில் கர்ணனைப் போன்றவரே,
பின்னா – குடிமக்கள்மேற் கருணை காட்டுவதிலும், பொறுமை காப்பதிலும் கர்ணனின் தம்பியாகிய தருமனுக்கு நிகரானவரே,
மன்னா -- இந்த நாட்டின் மன்னர் பெருமானே,
தென்னா – தென்னாட்டின் தலைமகனே,
சோழரங்கப் பெருமானே – சோழமண்டலத்தின் தலைவனே.
.
என்றல்லவா தங்களைப் பாடியிருக்கிறார். என்று தெளிவு படுத்தினார்.
“அடடா நான் தவறு செய்யத் துணிந்தேன்.” என வருந்திய மன்னன் ஏழைக் குடியானவனிடம் மன்னிப்புக் கேட்டுப் பெரும் பொருளும் கொடுத்தனுப்பினான்.
குடியானவனின் பஞ்சமும் தீர்ந்தது: “ஓர் ஏழையைக் காப்பாற்றிவிட்டோமே.” என்ற நிம்மதியும் அரசவைப் புலவருக்குக் கிடைத்தது.
அந்த வேடிக்கையான கவிதையைப் பார்ப்போம்:
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே….கூவிறையே
உங்கள் அப்பன்
கோவில் பெருச்சாளி
கன்னா ….பின்னா
மன்னா….தென்னா
சோழரங்கப் பெருமானே.
இந்தக் கவிதை தமிழின் பெருமையை மட்டுமன்றித் தமிழை வளைத்துப் பொருள் கூறி ஓரேழையின் உயிரைக் காத்த அரசவைப் புலவரின் சிறப்பையுமன்றோ பறைசாற்றுகிறது.
கந்தவனம் கோணேஸ்வரன்.
28.03.2019
கருத்துகள்
கருத்துரையிடுக