எங்கள் திருக்கோணமலை 12
எங்கள் திருக்கோணமலை 12
உலகமும் தோற்றமும் ஆனவளே தாயே
உயிர்களும் இயக்கமும் ஆனவளும் நீயே
அலகிலாச் சோதியாய் ஆனவளே தாயே
அரனவன் திருச்சக்தி ஆனவளும் நீயே
கலைகளும் காட்சியும் ஆனவளே தாயே
கருணைப் பெருங்கடல் ஆனவளும் நீயே
நிலையிலாப் புவியினில் தாயாக நீயே
நெருக்கமாய் அமர்ந்தருள் புரிகின் றாயே
வேதத்தின் உட்பொருளே விரிந்தெழு அண்டத்தின்
வித்தாகி நிற்பவளே வெளியெங்கும் நிறைந்தவளே
நாதத்தின் இருப்பிடமே நவசக்தி யாகிநின்று
நானிலத்தோர் வாழ்வில் நடைமுறையாய் ஆனவளே
ஓதற் கரியவளே உள்ளொளியே பெருநிதியே
உயிர்மூச்சா யாகிநின்று அருள்பவளே தாயே
ஏதமில் அன்னையே இன்னுயிரே பத்ரகாளி
எனநாமம் பூண்டமர்ந்த இணையிலாச் சக்தியே
எங்கள்மண் தலைநிமிர இன்னருள் புரிபவளே
எம்துயர் போயொழியச் சக்தியாய் வருபவளே
பொங்கிவரும் பகையோட்டும் உருத்திர நாயகியே
பொருளுக்கும் அறிவுக்கும் பிறப்பிடமாய் ஆனவளே
சங்கரனார் மனங்கொண்ட சக்திஓங் காரியே
சந்தோசம் சன்மார்க்கம் தந்தெம்மை ஆள்பவளே
தங்கத்திருக் கோணமலை மண்ணமர்ந்து காக்கும்
தாயேபத்ர காளியெமக் கெல்லாமும் நீயே
கந்தவனம் கோணேஸ்வரன்.
கார்த்திகை 1998.
உலகமும் தோற்றமும் ஆனவளே தாயே
உயிர்களும் இயக்கமும் ஆனவளும் நீயே
அலகிலாச் சோதியாய் ஆனவளே தாயே
அரனவன் திருச்சக்தி ஆனவளும் நீயே
கலைகளும் காட்சியும் ஆனவளே தாயே
கருணைப் பெருங்கடல் ஆனவளும் நீயே
நிலையிலாப் புவியினில் தாயாக நீயே
நெருக்கமாய் அமர்ந்தருள் புரிகின் றாயே
வேதத்தின் உட்பொருளே விரிந்தெழு அண்டத்தின்
வித்தாகி நிற்பவளே வெளியெங்கும் நிறைந்தவளே
நாதத்தின் இருப்பிடமே நவசக்தி யாகிநின்று
நானிலத்தோர் வாழ்வில் நடைமுறையாய் ஆனவளே
ஓதற் கரியவளே உள்ளொளியே பெருநிதியே
உயிர்மூச்சா யாகிநின்று அருள்பவளே தாயே
ஏதமில் அன்னையே இன்னுயிரே பத்ரகாளி
எனநாமம் பூண்டமர்ந்த இணையிலாச் சக்தியே
எங்கள்மண் தலைநிமிர இன்னருள் புரிபவளே
எம்துயர் போயொழியச் சக்தியாய் வருபவளே
பொங்கிவரும் பகையோட்டும் உருத்திர நாயகியே
பொருளுக்கும் அறிவுக்கும் பிறப்பிடமாய் ஆனவளே
சங்கரனார் மனங்கொண்ட சக்திஓங் காரியே
சந்தோசம் சன்மார்க்கம் தந்தெம்மை ஆள்பவளே
தங்கத்திருக் கோணமலை மண்ணமர்ந்து காக்கும்
தாயேபத்ர காளியெமக் கெல்லாமும் நீயே
கந்தவனம் கோணேஸ்வரன்.
கார்த்திகை 1998.
கருத்துகள்
கருத்துரையிடுக