இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறுப்பும் துடிப்பும்.

மறுப்பும் துடிப்பும். வயிற்றுக்கு உணவின்றி வாடியழும் ஒருகுழந்தை வயிறேற்று உணவுமிக வாயிறுக்கும் ஒருகுழந்தை. பஞ்சணையில் துயில்கொள்ளும் பாங்காக ஒருகுழந்தை படுத்தற்கும் வீடின்றிப் பாதையிலே ஒருகுழந்தை.   அழகழகாய் ஆடையிட்டு அகமகிழும் ஒருகுழந்தை கழுவுதற்கும் ஆடையின்றிக் கவலையுறும் ஒருகுழந்தை. கண்களிலே சிரிப்பும் களிப்புமாய் ஒருகுழந்தை கண்வழியே ஏக்கமுடன் காத்திருக்கும் ஒருகுழந்தை. அன்னைதந்தை சுற்றமென்று அன்போடு ஒருகுழந்தை தன்னையேந்த யாருமின்றித் தவித்துநிற்கும் ஒருகுழந்தை. மண்ணிற் பிறப்பெடுப்போர் மகிழ்வோடு வாழ்வதுதான் எண்ணிற் சரியாகும் என்கிறது நீதிநெறி. எல்லோரும் பிறப்பொப்பர் ஏல்தொழிலால் சிறப்புறுவர் நல்லோர்க்கு உலகுண்டு நவில்கிறது பொய்யில்மறை. இருந்தும் என்னபயன் ஏழைத்தாய் வயிற்றுதித்து வருந்தும் குழந்தைக்கு வகையெதுவும் கண்டிலமே. நல்லோர்கள் சேரவேண்டும் நாட்டுநலம் பெருக்கவேண்டும் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவழி வகுக்கவேண்டும். இல்லாமை நீங்கவேண்டும் எவ்வுயிரும் மகிழவேண்டும் பொல்லாத பேதங்கள் போயொழிந்து சாகவேண்டும். கந்தவனம் கோணேஸ்வரன். 01.06.2020...

நேரிசை ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா போதையின் பாதையில் சமூகம்.. போதையின் பாதையில் போய்த்திரி வோர்களால் ஏதமில் வாழ்முறை எங்ஙனம் தோன்றிடும்? பாதியிற் கல்வியைப் பிள்ளைகள் நிறுத்துவர் ஏதிலி யாகியே இல்லத்தோர் வருந்துவர் மோதலும் வீட்டில் முகிழ்த்திடும் வேதனை யொன்றே வாழ்க்கையில் நிலைக்குமே. கந்தவனம் கோணேஸ்வரன் 20.05.2020

மதங்களும் மனிதர்களும்.

இக்கட்டுரைத் தொடர் கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் தம்பி மைக்கல் கொலினை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளியான தினக்கதிர் பத்திரிகையின் ஞாயிறு தின இதழ்களில் என்னால் எழுதுப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாகும். இது 1999இல் நூல்வடிவம் பெற்றது. இன்றைய தலைமுறையனரின் வாசிப்புக்காக…….. மனக்கோலங்கள் 1 மதங்களும் மனிதர்களும். உலகிலுள்ள எந்த மதமும் தீயவழிகளைப் போதிப்பதில்லை. மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றதான் அவை கூறுகின்றன. ஆனாலும் இந்த உலகத்தில் உண்மையான மனிதர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள். எந்த மதமும் பிறருடைய அமைதியைக் கெடுத்து வாழ் என்றோ, பிறருக்குத் தீங்குசெய்து உயர்ந்துகொள் என்றோ யாருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஆனாலும் இவையே இன்றைய வாழ்க்கைப் போக்காக மாறிக் கொண்டிருப்பதை நாம கண்கூடாகக் காண்கிறோம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துதர்மம் போதிப்பதை,  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் புத்தமதம் கூறுவதை,  இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவ,  இஸ்லாமிய மதங்கள் வலியுறுத்துவதை எத்தனை மனிதர்கள் பயபக்தியுடன் கேட்டு, அதன்படி நடக்கிறார்கள் என்றால் வ...

கண்ணும் எழுதேம்.

கண்ணும் எழுதேம். கண்வழி காதலர் நுழைந்தனர் என்றனம் கண்மை யாலெழில் படுத்துதல் எங்ஙனம் உண்மையில் அவருரு கண்ணிலே இருக்கையில் கண்மை வருத்தவவர் கவலுறுதல் பொறுப்பேனோ? கண்களை மூடவும் அஞ்சிய பேதையான் என்னவர் நோவுற எங்ஙனம் ஏற்பன்யான் கண்ணொளி யாயென்றன் காதலர் இருக்கையில் வண்ணம் பூசுவதால் வருகின்ற சுகம்யாதோ? எண்ணத்தில் நிறைந்தவர் இதயத்தில் உறைந்தவர் கண்வழி சென்றவர் காதலைத் தருபவர் பெண்மயில் யானெனப் பேசியே மகிழ்பவர் கண்விழி அஞ்சனம் ஏந்திடக் கலங்காரோ? காதலர்க் கின்பம் கனிந்தோர்க்காய் வாழ்வது சாதலே வரினும் சேர்ந்தேதான் போவது தீதறு காதலன் தீண்டிடும் விழிகளை யாதும்யான் செய்கிலன் விலகுவாய் தோழியே. கந்தவனம் கோணேஸ்வரன். 28.05.2020

இலக்கியத்துளி 18.

இலக்கியத்துளி 18. படிக்கும் வேளையில் மட்டுமன்றி நினைக்குந்தோறும் இனிமை தரவல்லது விவேகசிந்தாமணி. இது ஒரு திரட்டுநூல். பவ்வேறு சந்தர்ப்பங்களில் பல பாவலர்களால் உருவான கவிதைகளின் தொகுப்பு. தமிழுலகின் கவிதைப்பரப்பின் மிகப்பெரிய சொத்து இந்நூல் எனின் மிகையன்று. அதில்வரும் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து ஓர் இலக்கியக் காட்சி. தலைவன் தலைவியை முதற்றடவையாகக் காண்கிறான். தலைவி சற்றுத்தூரத்தே அழகுமயில்போல் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அவளின் அழகில் அவன் சொக்கிப்போய்த் தடுமாறுகிறான். “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”   (1081) என்ற வள்ளுவன் மொழிக்கேற்ப அவன்மனம் மயங்குகிறது. அந்த மங்கை அருகில்வர அருகில்வர அருகில்வர மனம் உருகுகிறதே. கரிய கூந்தலையுடைய அழகிய மேனியாள் கானமயில்போற் காட்சி தருகிறாளே. இவள் தனமோ பெரிது இடையோ சிறியது. ஐயகோ,  எப்படித்தான் தாங்குகிறாளோ…தெருவில் இவள் நிற்குங்காலை தெய்வம் எனும்படியாக அல்லவா காட்சிதருகிறாள்… பாடலைப் பாருங்கள். “அருகில்வர அருகில்வர அருகில்வர உருகும்  கரியகுழல் மேனிஇவள் கானமயில் சாயல்  பெரியத...

அழகிய தென்றல்.

நேரிசை ஆசிரியப்பா. அழகிய தென்றல். விழுதுடை ஆலின் வீழ்நிழற் கீழே பழுதற மகிழ்ந்து பல்கதை பேசி உறவுகள் கூடி ஒருமன மாகி பறவைகள் போலுளம் பயின்றிடுங் காலை அழகிய தென்றல் இதமே பழகிடும் இனிய பைந்தமிழ்க் கவியே. கந்தவனம் கோணேஸ்வரன

வீட்டுமர்.

வீட்டுமர். வசுக்கள் எண்மரில் ஒருவராய் இருந்தவர் வசிட்டர் முனிவினால் மண்மீது பிறந்தவர் இசைவுடன் பிரபாசன் என்றபெயர் பெற்றவர் வசையில் பிரமனின் புத்திரனாய் வாழ்ந்தவர். கங்கைசந் தனவுக்கு மைந்தனென உலகில் திங்களதன் வமிசத்துத் திகழொளியாய் வந்தவர் கங்கையின் பரமரிப்பில் கண்ணியனாய் வளர்ந்தவர் அங்கையில் ஒழுக்கநெறி ஏந்தியே நடந்தவர். தேவ விரதனென்று கங்கைபெய ரிட்டாள் வேத நெறியனைத்தும் வசிட்டரிடம் கற்றார் தீதறு அரசியலை வியாழகுரு தந்தார் ஏதமில் விற்றிறனை பரசுராமர் கொடுத்தார். ஒழுக்கநெறி யாலுலகில் உயர்ந்தவராய் வாழ்ந்தார் வழுக்களறு வாழ்வுபெற மணவினையைத் துறந்தார் இறத்தல்கூடத் தன்விருப்பே என்றவரம் பெற்றார் இறக்கும்போதும் மாலின்நாமம் ஆயரங்கள் அளித்தார். தம்பிக்காய்ப் பெண்கவர்ந்த போதுமறங் கண்டார் அம்பையவள் விருப்பப்படி சால்வனிடங் கொடுத்தார் அம்பைமண மாகாநிலை யால்தவித்து நொந்தார் நம்பிநின்ற பெண்விருப்பை மறுதலித்து நின்றார். மணவினையை மறுத்ததாலே போர்வினைக்கு வந்தார் தனதுகுரு பரசுராம ரோடுயுத்தம் செய்தார் மனநிலையால் துவண்டுபோன அம்பையெனும் நல்லாள் தனைவருத்தித் தீக்குளித்து இன்னுய...

இலக்கியத்துளி 17

இலக்கியத்துளி 17 மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் துறவுபற்றிப் பேசுவதால் இதற்கு ‘மணிமேகலை துறவு’ என்ற பெயரும் உண்டு. விழாவறைகாதை தொடக்கம் நோற்றகாதை யீறாக முப்பது காதைகளைக் கொண்டது இந்நூல். இவ்வரிய காப்பியத்தை இயற்றியவர் மதுரையைச் சேர்ந்த கூலவாணிகனான சீத்தலைச் சாத்தனார். இக்காப்பியத்தில் ஒர் சுவையான காட்சி: ஆதிரை என்பாள் கற்புடைப்பெண். மணிமேகலை பெற்ற அமுதசுரபியில் முதற்றடவையாக அன்னமிடும் சிறப்புப் பெற்றவள் இவள். இவளது கணவன் சாதுவன். பொருள்வயிற் பிரிந்த சாதுவன் கடல்மேல் சென்றுகொண்டிருக்கையில் மரக்கலம் அலையின் சீற்றத்தாற் சிதறிவிட மரத்துண்டொன்றைத் துணையாகப்பற்றிக் கடலலையின் உந்துதலால் ஆடையணியும் வழக்கமற்ற மலைவாழ் மக்களான நாகர் குலத்தவரின் இடம் சேர்கிறான். அலைச்சலின் சோர்வும் பசிக்களையும் அவனைப் பற்றிக்கொண்டதால் கரையில் அப்படியே உறங்கிவிடுகிறான். அவனைக்கண்ட மலைவாழ்நாகர்கள் தம் தலைவனிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மனிதர்களை உண்ணும் பழக்கமுடைய அவர்களின் மொழியை ஏற்கனவே சாதுவன் அறிந்திருந்ததால் அவர்களுடனும் தலைவனுடனும் இனிமையாகப்...