கண்ணும் எழுதேம்.

கண்ணும் எழுதேம்.


கண்வழி காதலர் நுழைந்தனர் என்றனம்
கண்மை யாலெழில் படுத்துதல் எங்ஙனம்
உண்மையில் அவருரு கண்ணிலே இருக்கையில்
கண்மை வருத்தவவர் கவலுறுதல் பொறுப்பேனோ?


கண்களை மூடவும் அஞ்சிய பேதையான்
என்னவர் நோவுற எங்ஙனம் ஏற்பன்யான்
கண்ணொளி யாயென்றன் காதலர் இருக்கையில்
வண்ணம் பூசுவதால் வருகின்ற சுகம்யாதோ?


எண்ணத்தில் நிறைந்தவர் இதயத்தில் உறைந்தவர்
கண்வழி சென்றவர் காதலைத் தருபவர்
பெண்மயில் யானெனப் பேசியே மகிழ்பவர்
கண்விழி அஞ்சனம் ஏந்திடக் கலங்காரோ?


காதலர்க் கின்பம் கனிந்தோர்க்காய் வாழ்வது
சாதலே வரினும் சேர்ந்தேதான் போவது
தீதறு காதலன் தீண்டிடும் விழிகளை
யாதும்யான் செய்கிலன் விலகுவாய் தோழியே.


கந்தவனம் கோணேஸ்வரன்.

28.05.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5