வீட்டுமர்.

வீட்டுமர்.


வசுக்கள் எண்மரில் ஒருவராய் இருந்தவர்
வசிட்டர் முனிவினால் மண்மீது பிறந்தவர்
இசைவுடன் பிரபாசன் என்றபெயர் பெற்றவர்
வசையில் பிரமனின் புத்திரனாய் வாழ்ந்தவர்.


கங்கைசந் தனவுக்கு மைந்தனென உலகில்
திங்களதன் வமிசத்துத் திகழொளியாய் வந்தவர்
கங்கையின் பரமரிப்பில் கண்ணியனாய் வளர்ந்தவர்
அங்கையில் ஒழுக்கநெறி ஏந்தியே நடந்தவர்.


தேவ விரதனென்று கங்கைபெய ரிட்டாள்
வேத நெறியனைத்தும் வசிட்டரிடம் கற்றார்
தீதறு அரசியலை வியாழகுரு தந்தார்
ஏதமில் விற்றிறனை பரசுராமர் கொடுத்தார்.


ஒழுக்கநெறி யாலுலகில் உயர்ந்தவராய் வாழ்ந்தார்
வழுக்களறு வாழ்வுபெற மணவினையைத் துறந்தார்
இறத்தல்கூடத் தன்விருப்பே என்றவரம் பெற்றார்
இறக்கும்போதும் மாலின்நாமம் ஆயரங்கள் அளித்தார்.


தம்பிக்காய்ப் பெண்கவர்ந்த போதுமறங் கண்டார்
அம்பையவள் விருப்பப்படி சால்வனிடங் கொடுத்தார்
அம்பைமண மாகாநிலை யால்தவித்து நொந்தார்
நம்பிநின்ற பெண்விருப்பை மறுதலித்து நின்றார்.


மணவினையை மறுத்ததாலே போர்வினைக்கு வந்தார்
தனதுகுரு பரசுராம ரோடுயுத்தம் செய்தார்
மனநிலையால் துவண்டுபோன அம்பையெனும் நல்லாள்
தனைவருத்தித் தீக்குளித்து இன்னுயிரைத் துறந்தாள்.


வெல்லரிய வீரனென இருந்தும்துரி யோதனன்தன்
சொல்லுக்காய் அவன்பக்கல் நின்றுபோர் புரிந்தார்
வில்லாளன் பேரன்அருச் சுனன்கை யம்பவரைக்
கொல்லற்குக் கண்ணன் குயுக்தியொன்று செய்தான்.


அம்பையவள் சிகண்டியென மறுபிறப்பில் வந்தாள்
அம்பையை முன்னிறுத்திப் பார்த்தன்கணை தொடுத்தான்
அம்புகள் வீடுமரை அணியணியாத் தாக்கியதும்
அம்புப் படுக்கையிலே பெருமகனார் உடல்சாய்ந்தார்.


பத்தாம் நாட்போரில் பிதாமகனார் அம்பணையில்
சத்தியப் போர்நிலையில் தட்சாயணம் முடியும்வரை
நித்தியராய் வீற்றிருந்து பூரணைப்பின் எட்டாம்நாள்
சத்துவர் பாதங்களில் தன்னுயிரை அர்ப்பணித்தார்..



அந்தநாள் இன்றவரை பீ~;மா~; டமியென்று
விந்தைமிகு பெயரோடு நினைவுகூரல் கண்டோம்
எந்தையர்ககு மூத்தமகன் இனியபுகழ் வலிமை
எம்மவரோ டின்றிருத்தல் எல்லோர்க்கும் பெருமை.


பாரதத்தின் பெருமகனார் பீ~;மர்புகழ் வாழ்க
வேரெனவே நின்றுழைத்த கங்கைமகன் வாழ்க
நாரணனார் நடத்திவைத்த பரதக்கதை வாழ்க
நம்மவர்க்கிதி காசமென நின்றுயர்ந்து வழ்க.



கந்தவனம் கோணேஸ்வரன்.

21.05.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5