இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை.

கவிதை. நெஞ்சில் தோன்றும் எண்ணங்களை ஒரு  நிரையில் நிறுத்தி வைத்து – வெண் மஞ்சிற் தோய்த்துத் தேனிற் பிசைந்து  வரி வரியா யடுக்கி – மனம் கொஞ்சு தமிழிற் குழைத்துத் தந்தால்  அதுவே கவியா கும்  -- உயிர் கெஞ்சும் உணர்வுக ளோடமைந் திருந்தால்  உலகுள்ள வரை வழும். சொல்ல வந்ததைத் தெளிவாய் உணர்ந்திடச்  சொல்வது தான் கவிதை  -- உணர் வெல்லாம் உருகிட உயரிய சிந்தனை  தருவது தான் கவிதை  -- மழை வெள்ளம் போலே சொற்பெருக் காகி  வளர்வது தான் கவிதை  -- நல் உள்ளம் நைந்து உணர்வைத் தழுவி  நின்றால் அது கவிதை. அடுக்கி வைக்கும் சொற்கள் எல்லாம்  அழகுக் கவி யாகா  -- மொழி தடுக்கித் தடுக்கி வீழ்ந்து தொடுப்பவை  தரணியில் நிலை யாகா  -- உளத் துடிப்பைத் தொட்டுத் துயரைப் பிய்த்துத்  தோன்றும் இன்பத் தை  -- ஒரே வடிப்பில் வனப்பாய்ப் பொழியின் அதுவே  வாழுங் கவி யாகும். மொழியில் அறிவு பெற்றிடப் பெற்றிட  முகிழ்க்கும் நற் கவிதை  -- புது வழியிற் பார்வையின் ஆழத்தைப் புதைத்திட  புயலென வரும் கவிதை...

ஒரு பிரார்த்தனை.

ஒரு பிரார்த்தனை.  கந்தவனம் கோணேஸ்வரன். வேதனையில் துவள்கிறது  வெதும்பிநெஞ்சம் வெடிக்கிறது சோதனையோ இதுஎன்று  சோர்ந்துமனம் அழுகிறது. யார்கண் பட்டதுவோ  யார்சாபம் இட்டனரோ பாரெங்கும் தமிழர்மனம்  பதைபதைத்துத் துடிக்கிறது. எங்கள்தமிழ் வீரர்களால்  இறுமாந்த மக்களின்று பங்கப்பட்டு அழுகின்ற  பாவம்ஏன் சூழ்ந்ததுவோ வடக்கென்ன கிழக்கென்ன  வண்டமிழர் பூமியன்றோ திடமாகச் செயலிபட்டால்  தேனாறு பாயுமன்றோ. இரண்டுகர வோசையிங்கு  இடியன்றோ எதிரிகட்கு இரண்டுபட்ட சேதிவந்தால்  இதமன்றோ அவர்களுக்கு. எதுநீதி எதுநியாயம்  எங்களுக்கு அவைவேண்டாம் பொதுநீதி ஒற்றுமையே  புரிந்துசெயல் படுக:போதும் இருபத்து ஆண்டுகளாய்  எல்லாமாய் ஆனவர்கள் துருவங்கள் ஆவதனால்  துயர்என்றும் தமிழருக்கே. பிரபாவும் கருணாவும்  பேசரிய வீரர்களே பெருவாழ்வைத் தமிழர்பெறப்  பேறாகி உழைத்தவரே. வேறாகிப் போவதென்றால்  வெந்துநாங்கள் மடிந்திங்கு நீறாகிப் போவதன்றி  நிகழ்கின்ற காட்சியென்ன? இருவரும் சிந்தியுங்கள்  இதயத்தால...

உறவில் தமிழின் விருந்து.

உறவில் தமிழின் விருந்து.              கந்தவனம் கோணேஸ்வரன். உறவுமுறைச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள. அதுபோல் அவை தமிழ்மொழியிலும ஆட்சி செலுத்துகின்றன. ஆனால் அவை எந்த உறவைக் குறிக்கத் தோற்றம் பெற்றனவோ அந்த உறவு முறையுடன் மட்டும் நின்று விடுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். காலமாற்றத்தாலும் சூழல் மாற்றத்தாலும் அவை தாம் உருவான நோக்கத்துக்கு அப்பாற்சென்று வேடிக்கை காட்டுகின்றன. அப்பா என்ற சொல் தந்தையைக் குறிக்கும். அப்பா என்ற சொல்லுடன் ஒரு “டா” வையும் இணைத்து விட்டால் “அப்பாடா” ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. “இஞ்சேரும் அப்பா உம்மைத்தான்..” என்று பள்ளி மாணவி அழைத்தால் அப்பா தோழியாகி விடுகிறது. “ஏனணை அப்பா நான் சொல்லுறதைக் கேட்க மாட்டியோ?” என்று குடும்பத்தில பேசிக் கொண்டால், பேசுபவர் பெண்ணாக இருந்தால் கணவனை விளிக்கும் சொல்லாகவும், ஆணாக இருந்தால் மனைவியை விளிக்கும் சொல்லாகவும் உருப்பெற்று விடுகிறது. “அப்பா”வுக்குக் கடைசியில்வரும் “அரவை” நீக்கிவிட்டு “ன்” சேர்த்துவிட்டால் “அப்பனும் நீ அம்மையும் நீ..” என்று இறைவனைத் தேடிச்செல்கிறது. “அம்மையே அ...

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் அருகில் அவளிருந்தாள் கற்றைக் குழலைக் கையால் நீவிக் களித்து நானிருந்தேன் முற்றம் மணக்கும் மல்லிகைக் கொடியாள் மதியை மறைத்திருந்தாள் ஓற்றை உயிரீ ருடலில் உளதென உவப்பில் நானிருந்தேன். மழலைப் பேச்சில் மனதைக் கொடுத்து மயங்கிக் கிடந்திருந்தோம் அழகுத் தமிழிற் கவிதை சொல்லி அறிவால் மகிழ்ந்திருந்தோம் கழகத் தமிழிற் காவிய வரிகளைக் களிப்புடன் மீட்டிருந்தோம் நிலவும் உலகும் நெஞ்சுள் வசப்படும் நினைவில் திளைத்திருந்தோம். கவிதை சிறுகதை கனிதமிழ் உரையென அரங்குகள் அமைத்திருந்தோம் அவையில் அறிஞர் கூடி யுதிர்க்கும் கருத்தினில் ஆழ்ந்திருந்தோம் சுவைதரு கூத்திலும் சுந்தரப் பாட்டிலும் சொக்கி யெமையிழந்தோம் கவினுறு பரதம் தருஅபி நயத்தில் கவலைகள் மறந்திருந்தோம்.. கம்பெடுத் தாடிக் கன்னியர் மயங்கக் காளையர் வலம்வந்தார் செம்பெடுத் தாடும் செல்வியர் அழகில் சிந்தையை அவரிழந்தார் அம்பெனப் பாயும் விழியசை பெறற்கு ஆயிரம் தவமிருந்தார் கம்பனும் நாணும் கவிபுனைந் தழகியர் காதலைப் பெறவிழைந்தார். சொல்லே ருழவர் செந்தமிழ் மொழிக்குச் செம்மை சேர்த்திருந...

படையலில் தத்துவம்.

படையலில் தத்துவம்.                கந்தவனம் கோணேஸ்வரன். சைவசமயக் கோட்பாட்டின்படி பதி, பசு,பாசம் அநாதியானவை. அநாதி என்பதன் பொருள் தோற்றம் அற்றது என்பதாகும். தோற்றமில்லாப் பொருள்கள் எவற்றுக்கும் மறைவும் கிடையா. எனவே, அவை நிரந்தரமானவை. பதி, பசு, பாசம் என்பவை முறையே இறைவன், உயிர்கள், மலங்கள் எனவும் வழங்கப்படும். உயிர்களின் நோக்கம் இறைவனைச் சேர்தல். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பவை பாசம் எனப்படும் மலங்கள். மலம் என்றாலே அழுக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அழுக்கு நீக்கப்பட வேண்டியதன்றோ… ஆனால் உயிர்கள், தம்நிலை உணராது மலத்தில் அழுந்திக் கிடக்கின்றன. அழுக்கு என்ற பொருளில் மலம் என்ற சொல் அமைந்திருக்கின்ற போதும் நாங்கள் அதனை விடமுடியாமல் மயங்கிக் கிடப்பதால்தான் அதனைப் பாசம் என்றும் வழங்குகிறோம். உயிர்கள், இறையைத்தவிர மற்றெப் பொருளில் ஆசைகொண்டாலும் அது பாசம் எனப்படும். உயிர்கள் இறைவனை உணர்வதற்குப் பாசமே தடையாக இருக்கின்றது. உயிர்களின் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. இதனால்தான் புத்தபிரானும் “ஆசையை விடு.” என்றார். சைவசமயம் உட்பட இந்துநெறி...

வாணியே நின் திருப்பாதம் தொழுதேன். (அரங்கக் கவிதை)

வாணியே நின் திருப்பாதம் தொழுதேன். (அரங்கக் கவிதை) அன்னை கலைவாணி  அகிலாண்ட ஈஸ்வரியே உன்னைப் பதம்பிடித்தேன்  உய்விக்க வேண்டுமம்மா. வெள்ளைக் கலையுடுத்தி  வீணை இசைப்பவளே பிள்ளை நான்தொழுதேன்  பேறருள வேண்டுமம்மா. வீணை தனையிசைக்கும்  வித்தியா தத்துவமே மோனை எதுகைக்கவி  முன்மொழிய வேண்டுமம்மா. உன்றன்திருப் பாதத்தில்  உலகே சுழலுதம்மா என்றன் வாழ்வெல்லாம்  என்தாயே நின்சரணம். ஆறிவால் உயர்ந்திடவே  அம்மா நீயருள்வாய் நெறியாய் நடப்போரை  நீகாக்க வேண்டுமம்மா. புதிய கலைகள்தாயே  பூப்பதெல்லாம் உன்னாலே எதிலேயெவர் சிறப்புறினும்  எல்லாமே உன்னருளே. தாமரை மலர்கள்செய்த  தவம்நாங்கள் செய்தோமில்லை சாமரம் வீசும்சோலை  தனில்இலையாய்த் தளிர்த்தோமில்லை. இசையைச் சுமந்துவரும்  இளங்காற்றாய் அமைந்தோமில்லை அசைந்து வீழருவி  அதன்நீராய்த் தவழ்ந்தோமில்லை. உன்றன் கைவீணை  ஒலியாக நானிருந்தால் மன்றில்என் புகழ்சொல்ல  மாநிலத்தில் எவர்க்கியலும்? முன்றலில்பூத்து உன்றன்  முகம்பார்க்கம் மல்லிகையாய் இ...