கவிதை.
கவிதை.
நெஞ்சில் தோன்றும் எண்ணங்களை ஒரு
நிரையில் நிறுத்தி வைத்து – வெண்
மஞ்சிற் தோய்த்துத் தேனிற் பிசைந்து
வரி வரியா யடுக்கி – மனம்
கொஞ்சு தமிழிற் குழைத்துத் தந்தால்
அதுவே கவியா கும் -- உயிர்
கெஞ்சும் உணர்வுக ளோடமைந் திருந்தால்
உலகுள்ள வரை வழும்.
சொல்ல வந்ததைத் தெளிவாய் உணர்ந்திடச்
சொல்வது தான் கவிதை -- உணர்
வெல்லாம் உருகிட உயரிய சிந்தனை
தருவது தான் கவிதை -- மழை
வெள்ளம் போலே சொற்பெருக் காகி
வளர்வது தான் கவிதை -- நல்
உள்ளம் நைந்து உணர்வைத் தழுவி
நின்றால் அது கவிதை.
அடுக்கி வைக்கும் சொற்கள் எல்லாம்
அழகுக் கவி யாகா -- மொழி
தடுக்கித் தடுக்கி வீழ்ந்து தொடுப்பவை
தரணியில் நிலை யாகா -- உளத்
துடிப்பைத் தொட்டுத் துயரைப் பிய்த்துத்
தோன்றும் இன்பத் தை -- ஒரே
வடிப்பில் வனப்பாய்ப் பொழியின் அதுவே
வாழுங் கவி யாகும்.
மொழியில் அறிவு பெற்றிடப் பெற்றிட
முகிழ்க்கும் நற் கவிதை -- புது
வழியிற் பார்வையின் ஆழத்தைப் புதைத்திட
புயலென வரும் கவிதை -- வான்
வெளியில், புவியில், விழியில், அழகில்
மெல்லிடும் உணர் வேந்தி -- மனம்
மொழியும் கருத்தை வார்த்தையிற் தந்தால்
மண்ணில் அது கவிதை.
கந்தவனம் கோணேஸ்வரன்.
10.12 2004
நெஞ்சில் தோன்றும் எண்ணங்களை ஒரு
நிரையில் நிறுத்தி வைத்து – வெண்
மஞ்சிற் தோய்த்துத் தேனிற் பிசைந்து
வரி வரியா யடுக்கி – மனம்
கொஞ்சு தமிழிற் குழைத்துத் தந்தால்
அதுவே கவியா கும் -- உயிர்
கெஞ்சும் உணர்வுக ளோடமைந் திருந்தால்
உலகுள்ள வரை வழும்.
சொல்ல வந்ததைத் தெளிவாய் உணர்ந்திடச்
சொல்வது தான் கவிதை -- உணர்
வெல்லாம் உருகிட உயரிய சிந்தனை
தருவது தான் கவிதை -- மழை
வெள்ளம் போலே சொற்பெருக் காகி
வளர்வது தான் கவிதை -- நல்
உள்ளம் நைந்து உணர்வைத் தழுவி
நின்றால் அது கவிதை.
அடுக்கி வைக்கும் சொற்கள் எல்லாம்
அழகுக் கவி யாகா -- மொழி
தடுக்கித் தடுக்கி வீழ்ந்து தொடுப்பவை
தரணியில் நிலை யாகா -- உளத்
துடிப்பைத் தொட்டுத் துயரைப் பிய்த்துத்
தோன்றும் இன்பத் தை -- ஒரே
வடிப்பில் வனப்பாய்ப் பொழியின் அதுவே
வாழுங் கவி யாகும்.
மொழியில் அறிவு பெற்றிடப் பெற்றிட
முகிழ்க்கும் நற் கவிதை -- புது
வழியிற் பார்வையின் ஆழத்தைப் புதைத்திட
புயலென வரும் கவிதை -- வான்
வெளியில், புவியில், விழியில், அழகில்
மெல்லிடும் உணர் வேந்தி -- மனம்
மொழியும் கருத்தை வார்த்தையிற் தந்தால்
மண்ணில் அது கவிதை.
கந்தவனம் கோணேஸ்வரன்.
10.12 2004
கருத்துகள்
கருத்துரையிடுக