அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் அருகில் அவளிருந்தாள்
கற்றைக் குழலைக் கையால் நீவிக் களித்து நானிருந்தேன்
முற்றம் மணக்கும் மல்லிகைக் கொடியாள் மதியை மறைத்திருந்தாள்
ஓற்றை உயிரீ ருடலில் உளதென உவப்பில் நானிருந்தேன்.
மழலைப் பேச்சில் மனதைக் கொடுத்து மயங்கிக் கிடந்திருந்தோம்
அழகுத் தமிழிற் கவிதை சொல்லி அறிவால் மகிழ்ந்திருந்தோம்
கழகத் தமிழிற் காவிய வரிகளைக் களிப்புடன் மீட்டிருந்தோம்
நிலவும் உலகும் நெஞ்சுள் வசப்படும் நினைவில் திளைத்திருந்தோம்.
கவிதை சிறுகதை கனிதமிழ் உரையென அரங்குகள் அமைத்திருந்தோம்
அவையில் அறிஞர் கூடி யுதிர்க்கும் கருத்தினில் ஆழ்ந்திருந்தோம்
சுவைதரு கூத்திலும் சுந்தரப் பாட்டிலும் சொக்கி யெமையிழந்தோம்
கவினுறு பரதம் தருஅபி நயத்தில் கவலைகள் மறந்திருந்தோம்..
கம்பெடுத் தாடிக் கன்னியர் மயங்கக் காளையர் வலம்வந்தார்
செம்பெடுத் தாடும் செல்வியர் அழகில் சிந்தையை அவரிழந்தார்
அம்பெனப் பாயும் விழியசை பெறற்கு ஆயிரம் தவமிருந்தார்
கம்பனும் நாணும் கவிபுனைந் தழகியர் காதலைப் பெறவிழைந்தார்.
சொல்லே ருழவர் செந்தமிழ் மொழிக்குச் செம்மை சேர்த்திருந்தார்
நல்லே ருழவர் நம்பசி போக்க நாளும் உழைத்திருந்தார்
கடலே ருழவர் கடல்படு வளங்களைக் களிப்புடன் கரைசேர்த்தார்
உடலே ருழவர் உழைத்தார் வென்றாhர் உலகை நிமிரவைத்தார்.
இருந்தும் என்பயன் ஏதோ நெஞ்சில் நெருடல் தோன்றியது
அருந்தமிழ் மண்ணில் அயலவர் தொல்லை நாளும் பெருகியது
திருந்துவ ரெனவெம் தலைவர்கள் முயன்று பேசித் தோல்வியுற்றார்
வருந்துயர் களைய வலிமையிற் சிறந்த காளையர் களம்புகுந்தார்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்திட்ட இம்மண்ணில்
சொந்தங்க ளாயிரம் செருக்கொடு வாழ்ந்து மறைந்திட்ட இம்மண்ணில்
விந்தைகள் புரிந் தவர் விழுமியம் படைத்து வாழ்ந்திட்ட இம்மண்ணில்
பிந்தையர் வாழ்ந்திட வகைசெய் வதற்காய்ப் பெருந்துயர் நாமேற்றோம்
சற்றைப் பொழுதில் எறிகணை வீழ்ந்து சடுதியில் வீடிழந்தோம்
ஒற்றைப் பனையாய் ஒதுங்க வகையின்றி ஊரூராய்த் திரிந்தோம்
கொற்றம் அழிந்த வேந்தர் போல்நாம் குறுகிப் போயிருந்தோம்
முற்றம் மணக்கும் மல்லிகைச் சுகத்தை மனதில் தான்சுமந்தோம்
வாகரைத் தவிப்பு வடபுலக் கொதிப்பு படுவான் கரைப்பதற்றம்
தேகத்தை யுலுக்கும் தினந்தினக் கொலைகள் சேய்தாய் பிரிதுயரம்
சோகத்தில் துடிக்கும் மங்கையர் புலம்பல் துடிப்புடை மாணவரழிப்பு
வேகத்தில் மாறும் விடியும் ஒருநாள் அதுவரை பொறுத்திருப்போம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(27.03.2007ல் எழுதப்பட்ட கவிதை)
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் அருகில் அவளிருந்தாள்
கற்றைக் குழலைக் கையால் நீவிக் களித்து நானிருந்தேன்
முற்றம் மணக்கும் மல்லிகைக் கொடியாள் மதியை மறைத்திருந்தாள்
ஓற்றை உயிரீ ருடலில் உளதென உவப்பில் நானிருந்தேன்.
மழலைப் பேச்சில் மனதைக் கொடுத்து மயங்கிக் கிடந்திருந்தோம்
அழகுத் தமிழிற் கவிதை சொல்லி அறிவால் மகிழ்ந்திருந்தோம்
கழகத் தமிழிற் காவிய வரிகளைக் களிப்புடன் மீட்டிருந்தோம்
நிலவும் உலகும் நெஞ்சுள் வசப்படும் நினைவில் திளைத்திருந்தோம்.
கவிதை சிறுகதை கனிதமிழ் உரையென அரங்குகள் அமைத்திருந்தோம்
அவையில் அறிஞர் கூடி யுதிர்க்கும் கருத்தினில் ஆழ்ந்திருந்தோம்
சுவைதரு கூத்திலும் சுந்தரப் பாட்டிலும் சொக்கி யெமையிழந்தோம்
கவினுறு பரதம் தருஅபி நயத்தில் கவலைகள் மறந்திருந்தோம்..
கம்பெடுத் தாடிக் கன்னியர் மயங்கக் காளையர் வலம்வந்தார்
செம்பெடுத் தாடும் செல்வியர் அழகில் சிந்தையை அவரிழந்தார்
அம்பெனப் பாயும் விழியசை பெறற்கு ஆயிரம் தவமிருந்தார்
கம்பனும் நாணும் கவிபுனைந் தழகியர் காதலைப் பெறவிழைந்தார்.
சொல்லே ருழவர் செந்தமிழ் மொழிக்குச் செம்மை சேர்த்திருந்தார்
நல்லே ருழவர் நம்பசி போக்க நாளும் உழைத்திருந்தார்
கடலே ருழவர் கடல்படு வளங்களைக் களிப்புடன் கரைசேர்த்தார்
உடலே ருழவர் உழைத்தார் வென்றாhர் உலகை நிமிரவைத்தார்.
இருந்தும் என்பயன் ஏதோ நெஞ்சில் நெருடல் தோன்றியது
அருந்தமிழ் மண்ணில் அயலவர் தொல்லை நாளும் பெருகியது
திருந்துவ ரெனவெம் தலைவர்கள் முயன்று பேசித் தோல்வியுற்றார்
வருந்துயர் களைய வலிமையிற் சிறந்த காளையர் களம்புகுந்தார்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்திட்ட இம்மண்ணில்
சொந்தங்க ளாயிரம் செருக்கொடு வாழ்ந்து மறைந்திட்ட இம்மண்ணில்
விந்தைகள் புரிந் தவர் விழுமியம் படைத்து வாழ்ந்திட்ட இம்மண்ணில்
பிந்தையர் வாழ்ந்திட வகைசெய் வதற்காய்ப் பெருந்துயர் நாமேற்றோம்
சற்றைப் பொழுதில் எறிகணை வீழ்ந்து சடுதியில் வீடிழந்தோம்
ஒற்றைப் பனையாய் ஒதுங்க வகையின்றி ஊரூராய்த் திரிந்தோம்
கொற்றம் அழிந்த வேந்தர் போல்நாம் குறுகிப் போயிருந்தோம்
முற்றம் மணக்கும் மல்லிகைச் சுகத்தை மனதில் தான்சுமந்தோம்
வாகரைத் தவிப்பு வடபுலக் கொதிப்பு படுவான் கரைப்பதற்றம்
தேகத்தை யுலுக்கும் தினந்தினக் கொலைகள் சேய்தாய் பிரிதுயரம்
சோகத்தில் துடிக்கும் மங்கையர் புலம்பல் துடிப்புடை மாணவரழிப்பு
வேகத்தில் மாறும் விடியும் ஒருநாள் அதுவரை பொறுத்திருப்போம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(27.03.2007ல் எழுதப்பட்ட கவிதை)
கருத்துகள்
கருத்துரையிடுக