இலக்கியத்துளி 8
இலக்கியத்துளி 8 ஒரு மொழியின் சிறப்பு அதன் கவிதைகள் மூலந்தான் வெளிப்படுகிறது. மற்றைக் கலைகள் மொழிச்சிறப்பைக் கொண்டிருப்பினும் கவிதையின் அளவுக்கு மொழிவளத்தையும் இனிமையையும் புலப்படுத்தவல்லன எனக் கொள்ளவியலாது. தமிழின் பெருமைகூட அதன் சங்ககால இலக்கியங்களாலும், பன்னிருதிருமுறை, நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதாலான பக்தி இலக்கியங்களாலும் கம்பராமாயணம் போன்ற கவிதைக் காவியங்களாலும் உலக அரங்கில் உயர்நிலை பெற்றிருக்கிறது எனில் மிகையன்று. நந்தமிழ் மொழி ஒரு கவிதைக்கடல். அதில் மூழ்குந்தோறும் முத்துகள் பெறலாம். பக்தி, காதல், ஒழுக்கம், அறம், வீரம், இயற்கையழகு எனப் பலவகையான முத்துகளை இலக்கிய விரும்பிகளுக்குத் தாராளமாக அள்ளித் தருபவள் தமிழ்த்தாய் . நாம் இன்று களிக்கின்ற கவிதை முத்துகளை விதைத்தவர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள். அவர்கள் நாவினிலே “சரஸ்வதி குடியிருந்தாள்.” எனச் சொல்வது சாலப் பொருந்தும். நாவில் கலைவாணி நடமிடும் பாக்கியம் பெற்றவர்களுள் காளமேகப் புலவரும் ஒருவர். இவர் தன் மொழித் திறமையால் தமிழின் “த”கர வரிசை எழுத்துகளை மட்டும் வைத்தே ஒரு வெண்பாவை இயற்றிக் கவிதைப் பிரியர்...