இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியத்துளி 8

இலக்கியத்துளி 8 ஒரு மொழியின் சிறப்பு அதன் கவிதைகள் மூலந்தான் வெளிப்படுகிறது. மற்றைக் கலைகள் மொழிச்சிறப்பைக் கொண்டிருப்பினும் கவிதையின் அளவுக்கு மொழிவளத்தையும் இனிமையையும் புலப்படுத்தவல்லன எனக் கொள்ளவியலாது. தமிழின் பெருமைகூட அதன் சங்ககால இலக்கியங்களாலும், பன்னிருதிருமுறை, நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதாலான பக்தி இலக்கியங்களாலும் கம்பராமாயணம் போன்ற கவிதைக் காவியங்களாலும் உலக அரங்கில் உயர்நிலை பெற்றிருக்கிறது எனில் மிகையன்று. நந்தமிழ் மொழி ஒரு கவிதைக்கடல். அதில் மூழ்குந்தோறும் முத்துகள் பெறலாம். பக்தி,  காதல்,  ஒழுக்கம்,  அறம், வீரம், இயற்கையழகு எனப் பலவகையான முத்துகளை இலக்கிய விரும்பிகளுக்குத் தாராளமாக அள்ளித் தருபவள் தமிழ்த்தாய் . நாம் இன்று களிக்கின்ற கவிதை முத்துகளை விதைத்தவர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள். அவர்கள் நாவினிலே “சரஸ்வதி குடியிருந்தாள்.” எனச் சொல்வது சாலப் பொருந்தும். நாவில் கலைவாணி நடமிடும் பாக்கியம் பெற்றவர்களுள் காளமேகப் புலவரும் ஒருவர். இவர் தன் மொழித் திறமையால் தமிழின் “த”கர வரிசை எழுத்துகளை மட்டும் வைத்தே ஒரு வெண்பாவை இயற்றிக் கவிதைப் பிரியர்...

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 ஒற்றைச் சொல்லில் வாக்கியம். ஒரு வாக்கியம் தனக்குரிய அத்தனை பிரிவுகளையும் வெளிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அது நிறைவான பொருளைத் தரும் என்பதில்லை. சில தனிச் சொற்கள்;கூட நிறைவான பொருளைத் தருகின்ற வாக்கியங்களாக அமைவதுண்டு. உதாரணமாக, ஒருவரைத் தெருவில் சந்திக்கும்போது,“எங்கிருந்து?” “எங்கே?” என்றோ அல்லது அக் கருத்துப்பட பேச்சுவழக்கிற் பயன்படும் ஒற்றைச் சொல்லாலோ ஒரு வினாவைத் தொடுக்குமிடத்து அவ்வினா நிறைவான பொருளைக் கொண்ட வாக்கியமாகவே அமைகிறது. இவ்வினாக்களின் கருத்து “எங்கே இருந்து வருகிறீர்கள்?” “எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்ற நிறைவான வசனமே என்பது கேட்பவருக்கும் பதிலளிக்க வேண்டியவருக்கும் தெளிவாகப் புரிகிறது. அதேபோல் “கடையிலிருந்து.” என்றோ “கொழும்புக்கு.” என்றோ ஒற்றைச் சொல்லிற் பதில்கள் கிடைக்குமானால் அவையும் முழு வாக்கியங்களாகின்றன. ஏனெனில் வினா தொடுத்தவருக்கு அப்பதில்கள் திருப்தியையும் தெளிவையும் தருகின்றன. அப்பதில்கள் “நான் கடையிலிருந்து வருகின்றேன்.” “நான் கொழும்புக்குப் போகின்றேன்.” என்ற முழுவடிவங்களைக் கொண்டிருப்பது கண்கூடு. ...

மறைந்த சமூகப் பெரியார்களை விற்றுப் பிழைக்காதீ;கள்.

மறைந்த சமூகப் பெரியார்களை விற்றுப் பிழைக்காதீ;கள். பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவ்வளவுதான்;. அவருடைய கருத்துகள் திருக்குறளைப் போல எக்காலத்துக்கும் பொருந்தும் என எதிர்பார்ப்பது மடைமை. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளையும் சமயக் குறைபாடுகளையும் அவர் களைய முனைந்தார். அதற்கான கருத்துகளை அக்கால மக்கள் புரிந்து கொள்ளத்தக்க மொழிநடையில் முன்வைத்தார். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தலைவணங்காமல் வாழவேண்டும் என ஆசைப்பட்டார். தெருக்களில் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டுவந்து சந்திகளில் வைத்து அவமதிப்புச் செய்தார். இந்து சமயம் பிழையானது என்பது அவரது செய்தியாக அமையவில்லை. எதற்கெடுத்தாலும் கடவுளின் பெயரால் அச்சங் கொள்வதும், கடவுள் பெயரைச் சொல்லி யார் ஏமாற்றினாலும் ஏற்றுக்  கொள்வதும் கைவிடப்பட வேண்டும் என்று விரும்பினார். கடவுளது வேலை மக்களைத் தண்டிப்பதல்ல என்பதை உணர்த்தத் தன்னையே பிள்ளையார் அவமதிப்பாளனாக மக்களிடையே அடையாளப் படுத்தினார். இறக்குமதிச் சமயங்கள் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அவரது நோக்கம் இந்தியப் பண்பாட்டிலும் தமிழக வாழ்முறையிலும் திருத்தங்கள் வேண்டும் என்ப...

இலக்கியத்துளி 7

இலக்கியத்துளி 7 வறுமையால் வாடிய புலவரொருவர் ஒரு செல்வந்தனை நாடிச் சென்றார். அவனைப் புகழ்ந்து பாடினால் பரிசு ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு. அந்தச் செல்வந்தன் மகா கஞ்சப்பிரபு என்பது புலவருக்குத் தெரியாது. புலவரைக் கண்டதும் கஞ்சப்பிரபு வெலவெலத்துப் போனான். “புலவன் பாடி முடித்ததும் ஏதாவது பொருள் கொடுக்க வேண்டுமே.” என்பதுதான் அவன் கவலை. தான், பிறருக்குப் பொருள் கொடுக்க விரும்பாத உலோபி என்பது வருகின்ற புலவனுக்குத் தெரியக்கூடாது: அதேவேளை பொருள் கொடுக்காமல் புலவனைத் திருப்பி அனுப்பிவிடவும் வேண்டும் என்பதே அவனது விருப்பம். பிரபுவை நெருங்கிய புலவர், “ ஐயா, யான் தங்களைப் பாடிப் பரிசுபெற வந்திருக்கும் புலவன். தங்களைப் பாடுவதற்கு அனுமதி தாருங்கள்.” என்று பவ்வியமாகக் கேட்டார். அதைக் கேட்ட  கஞ்சப் பிரபுவோ நடுநடுங்கிப் போனான். பேராபத்தில் சிக்கிக் கொண்டவன்போல் தவித்தான். “எனக்கு வந்த மோசம் யாதோ?” என அஞ்சி உடலம் வியர்த்;து வாய் குளறினான். “ம்…பாடுக.” என வேண்டா வெறுப்பாகச் சொன்னான். பிரபுவின் நிலை தெரியாத புலவர் அவனைப் புகழ்ந்துபாடத் தொடங்கினார். “சிறப்புகள் நிறைந்ததும் விரு...

தமிழ் இலக்கணம் அறிவோம் - 4 தொடரியல்;. 1

தமிழ் இலக்கணம் அறிவோம் - 4 தொடரியல்;. 1 தொடரியல் என்பது  சொற்களை ஒன்றுக்கொன்று முறைப்படி தொடர்புபடுத்தி நேர்த்தியான கருத்துடையதும் இலக்கணப் பிழையற்றதுமான வசனங்களை அமைத்தல்பற்றிப் பேசும் பகுதி எனலாம். தொடரியலை வாக்கியவியல் அல்லது வசனவியல் என்றும் அழைக்கலாம். எவ்வளவு சொற்களை நாம் அறிந்திருந்தாலும், சொற்களின் நான்கு பிரதான பகுப்புகளான பெயர், வினை, இடை, உரி என்பவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும், அச்சொற்களைச் சரியான வகையில் ஒன்றோடொன்று இணைக்கும் முறைiயைத் தெரிந்திராவிட்டால் நாம் கருத்து எதனையும் தெரிவிக்க முடியாதவர்களாகவே இருப்போம். சொற்குவியல்கள் ஒருபோதும் வாக்கியமாவதில்லை. வாக்கியமாகாத எதுவும் நாம் நினைக்கும் கருத்தையும் வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே நாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சரியான முறையிற் சொற்களைக் கையாண்டு வசனங்களை அமைக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அதற்காக, வாக்கியமமைத்தல் என்பது ஏதோ கடினமான செயலென்று முடிவகட்ட வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் எல்லோரும் பேச்சவழக்கில் தினமும் பல்வேறு விதமான வாக்கியங்களை அமைத்துக் கொண்டுதான்...

இலக்கியத்துளி 6

இலக்கியத்துளி 6 புலமையும் வறுமையும் சேர்ந்தேயிருப்பன என்பர் அனுபவசாலிகள். இராமச்சந்த்ரக் கவிராயர் விடயத்திலும் இந்தக் கூற்று பொருந்தியே நின்றது. அவர் ஒரு பாக்குவெட்டியை வைத்திருந்தார். புலவரது உடைமைகளில் மிகவும் பயனுள்ளபொருள் அந்தப் பாக்குவெட்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும். யார் செய்த பாவமோ, ஒருநாள் அந்தப் பாக்குவெட்டி காணாமற் போயிற்று. புலவர் தவித்துப்போனார். பாக்குவெட்டி இல்லாமல் அவரால் எதுவும் செய்யமுடியாது என்பது அவரின் தவிப்பிற் தெரிந்தது. அங்குமிங்கும் தேடினார். வுழக்கமாக பாக்குவெட்டி வைக்கும் இடத்தைப் பலதடவைகள் துருவித்துருவிப் பார்த்தார். பாக்குவெட்டியைக் காணோம் என்பது உறுதியாயிற்று. பாக்குவெட்டி தானாகக் காணாமற் போயிருக்க முடியாது. அதனை யாரோ அபகரித்து விட்டார்கள் போலும் என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டது. அக்கம்பக்கத்தாரை அழைத்தார். தன் பாக்குவெட்டி காணாமற்போன சங்கதியைக் கவலையுடன் சொன்னார். எவரிடமிருந்தும் பாக்குவெட்டி பற்றிய செய்தி வரவில்லை. தன் பாக்குவெட்டி எவ்வௌற்றுக்கு எல்லாம் பயன்படுகின்றது என்பதை விளக்கத் தொடங்கினார். அப்போதாவது எடுத்தவர்கள் இரக்கப்பட்டு அத...

இலக்கியத்துளி 5

இலக்கியத்துளி 5 எல்லா மனிதர்களும் தாம்பிறந்த நாடு, மொழி, மதம் என்பவை குறித்துப் பெருமித உணர்வு கொள்வது இயல்பானது. அதேபோல் தாம்பிறந்த குலத்தையும் அவ்வப்போது மனிதர்கள் தூக்கிப் பிடிக்கத் தயங்குவதில்லை. இப்பண்பு சரியா பிழையா என்பதைச் சந்தர்ப்பங்களைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் தன்குலத்தை உயர்த்துவது மட்டுமன்றி எதிரே நிற்பவரின் குலத்தைக் குறைவாகப் பேசினால்….? தமிழ் இலக்கியப் பரப்பில் இத்தகைய நிகழ்வொன்று இடம்பெற்றிருக்கிறது. அது அருமையான கவிதை ஒன்றையும் நமக்களித்திருக்கிறது என்றால் அது வியப்பான செய்திதான். நடந்ததைப் பார்ப்போம். நாட்டு மன்னன் வேட்டையின் பொருட்டுக் காட்டுக்குச் செல்கிறான். காட்டின் நடுவே அழகான கன்னி ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்த மன்னன் அவளை அழைத்து விசாரிக்கிறான். அவள் வேடர்குலப் பெண் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அந்த வேடர்குலத் தேவதையை முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். மன்னன் நினைத்திருந்தால் அவளைச் சிறைப்படுத்தித் தன்னுடன் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் மன்னன் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை. அரண்மன...