இலக்கியத்துளி 5
இலக்கியத்துளி 5
எல்லா மனிதர்களும் தாம்பிறந்த நாடு, மொழி, மதம் என்பவை குறித்துப் பெருமித உணர்வு கொள்வது இயல்பானது. அதேபோல் தாம்பிறந்த குலத்தையும் அவ்வப்போது மனிதர்கள் தூக்கிப் பிடிக்கத் தயங்குவதில்லை. இப்பண்பு சரியா பிழையா என்பதைச் சந்தர்ப்பங்களைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் தன்குலத்தை உயர்த்துவது மட்டுமன்றி எதிரே நிற்பவரின் குலத்தைக் குறைவாகப் பேசினால்….?
தமிழ் இலக்கியப் பரப்பில் இத்தகைய நிகழ்வொன்று இடம்பெற்றிருக்கிறது. அது அருமையான கவிதை ஒன்றையும் நமக்களித்திருக்கிறது என்றால் அது வியப்பான செய்திதான். நடந்ததைப் பார்ப்போம்.
நாட்டு மன்னன் வேட்டையின் பொருட்டுக் காட்டுக்குச் செல்கிறான். காட்டின் நடுவே அழகான கன்னி ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்த மன்னன் அவளை அழைத்து விசாரிக்கிறான். அவள் வேடர்குலப் பெண் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அந்த வேடர்குலத் தேவதையை முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்.
மன்னன் நினைத்திருந்தால் அவளைச் சிறைப்படுத்தித் தன்னுடன் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் மன்னன் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை. அரண்மனைக்குச் சென்றதும் பிரதானிகளுடன் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருகிறான். முறைப்படி பெண்கேட்டு வருவதற்கான அனுமதி கேட்டு வேடர்குலத் தலைவனுக்குத் திருமுகம் அனுப்புகிறான். அவ்வோலையை அனுபவம் நிறைந்த தூதன் ஒருவன் கொண்டுசெல்கிறான்.
ஓலை வேடர்குலத் தலைவனிடம் சேர்கிறது. ஓலை கொண்டுவந்த அரசதூதுவன் இறுமாப்புடன் நிற்கின்றான். “மன்னர்பிரானின் தூதன் நானெங்கே… காட்டுவாசியான வேடர்தலைவன் இவன் எங்கே…” என்பது அவனது நினைப்பு.
ஓலையைப் படித்ததும் வேடர் தலைவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. தூதனை அலட்சியமாகப் பார்க்கிறான். “மன்னனுக்கு நாங்கள் பெண் தரவேண்டுமா? அது சரியாகுமா? என்ன துணிச்சலில் நீ இந்த ஓலையைக் கொண்டுவந்தாய்?” என்பது போலிருக்கிறது அவன் பார்வை. தூதன் நடுநடுங்கிப் போய்விடுகிறான். வேடர் தலைவன் பேசத் தொடங்குகிறான்.
“மனைவியை விலைகூறி விற்றவன் யார்? (அரிச்சந்திரன் என்ற மன்னன்தானே.)
பாதி ஆடையோடு காட்டின் நடுவே மனைவியை அழவைத்து விலகிச் சென்றவன் யார்? (நளமகாராசன் அல்லவா.)
கொடிய சிறைக்கு மனைவியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தவன் யார்? (இராமன் அன்றோ.)
மனைவியின் ஆடையை அந்நிய ஆடவன் களையும்போது பார்த்து விழித்துக் கொண்டிருந்தவர்கள்; யார்? யார்?
(பராக்கிரமசாலிகளான பஞ்சபாண்டவர்கள் தாமே.)
இப்படியெல்லாம் (மனைவியைக் காப்பாற்றத் தெரியாத) கேவலமான மன்னர் குலத்தவனுக்குத் தாரமாக எங்கள் குலப்பெண் தேவையென்று கேட்பது ஏற்கத்தக்க செயலோ?
மணம்பேச வந்த உன்றன் வாயைக் கொப்பளித்துக் கழுவடா. உன் மன்னன் தந்த ஓலையைக் காற்றிலே பறக்க விடடா.
(எம்மோடு சமர் புரிகின்ற எதிரிகளுக்கு) சொர்க்கம் என்ற வெற்றியை அருள்கின்ற வெங்கை மாநகரத்து வேடர்கள் நாங்கள்.
எல்லாம்வல்ல முருகப்பெருமான் எம்மை நாடிவந்து, எமது உணவையும் உண்டு பழகியதன் பின்னர் நாம் அவருக்கு வளர்த்த பெண்ணான வள்ளியைத்தான் மணம் முடித்துக் கொடுத்தோம். பெற்ற பெண்ணைக் கடவுளுக்கே நாம் கொடுக்கவில்லை.
நீயோ இன்று யாம் பெற்ற பெண்ணை உன் மன்னருக்குத் தாரமாகக் கேட்கிறாய். என்ன உனக்குப் பேய் பிடித்துவிட்டதா தூதனே..”
என்று சீறி விழுகிறான்.
மன்னனுக்கே தன் குலப்பெருமை பேசுகின்ற வேடனின் வார்த்தைகளைப் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடலாக வடித்திருக்கின்றார். அதனைப் பார்ப்போமே.
விற்ற தார்?கலை பாதி யோடுவ
னத்தி லேஅழ விட்ட தார்?
வெம்சி றைப்புக விட்ட தார்? துகில்
உரிய விட்டு விழித்த தார்?
உற்ற தாரமும் வேண்டும் என்றினி
மன்னர் பெண் கொளல் ஒக்குமோ?
உமிய டாமண மென்ற வாய்:கிழித்து
ஓலை காற்றில் உருட் டடா
வெற்றி ஆகிய முத்தி தந்தருள்
வெங்கை மாநகர் வேடர் யாம்:
விமலா. ஆனவர் எம்மை அடுத்தினிது
எங்கள் மிச்சில் மிசைந்த தால்
பெற்ற வேலர்த மக்கு யாமொரு
பெண்வ ளர்ப்பி னில் ஈந்தனம்
பெற்ற பெண்ணைக் கொடுப்ப மோ:இதென்
பேய்பி டித்தி டுதூ தரே.
இப்போது சொல்லுங்கள்: வேடன் பேசிய குலப்பெருமை தமிழுக்கு அல்லவா சிறப்பைத் தருகிறது?
கந்தவனம் கோணேஸ்வரன்
2.4.2019
எல்லா மனிதர்களும் தாம்பிறந்த நாடு, மொழி, மதம் என்பவை குறித்துப் பெருமித உணர்வு கொள்வது இயல்பானது. அதேபோல் தாம்பிறந்த குலத்தையும் அவ்வப்போது மனிதர்கள் தூக்கிப் பிடிக்கத் தயங்குவதில்லை. இப்பண்பு சரியா பிழையா என்பதைச் சந்தர்ப்பங்களைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் தன்குலத்தை உயர்த்துவது மட்டுமன்றி எதிரே நிற்பவரின் குலத்தைக் குறைவாகப் பேசினால்….?
தமிழ் இலக்கியப் பரப்பில் இத்தகைய நிகழ்வொன்று இடம்பெற்றிருக்கிறது. அது அருமையான கவிதை ஒன்றையும் நமக்களித்திருக்கிறது என்றால் அது வியப்பான செய்திதான். நடந்ததைப் பார்ப்போம்.
நாட்டு மன்னன் வேட்டையின் பொருட்டுக் காட்டுக்குச் செல்கிறான். காட்டின் நடுவே அழகான கன்னி ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்த மன்னன் அவளை அழைத்து விசாரிக்கிறான். அவள் வேடர்குலப் பெண் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அந்த வேடர்குலத் தேவதையை முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்.
மன்னன் நினைத்திருந்தால் அவளைச் சிறைப்படுத்தித் தன்னுடன் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் மன்னன் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை. அரண்மனைக்குச் சென்றதும் பிரதானிகளுடன் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருகிறான். முறைப்படி பெண்கேட்டு வருவதற்கான அனுமதி கேட்டு வேடர்குலத் தலைவனுக்குத் திருமுகம் அனுப்புகிறான். அவ்வோலையை அனுபவம் நிறைந்த தூதன் ஒருவன் கொண்டுசெல்கிறான்.
ஓலை வேடர்குலத் தலைவனிடம் சேர்கிறது. ஓலை கொண்டுவந்த அரசதூதுவன் இறுமாப்புடன் நிற்கின்றான். “மன்னர்பிரானின் தூதன் நானெங்கே… காட்டுவாசியான வேடர்தலைவன் இவன் எங்கே…” என்பது அவனது நினைப்பு.
ஓலையைப் படித்ததும் வேடர் தலைவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. தூதனை அலட்சியமாகப் பார்க்கிறான். “மன்னனுக்கு நாங்கள் பெண் தரவேண்டுமா? அது சரியாகுமா? என்ன துணிச்சலில் நீ இந்த ஓலையைக் கொண்டுவந்தாய்?” என்பது போலிருக்கிறது அவன் பார்வை. தூதன் நடுநடுங்கிப் போய்விடுகிறான். வேடர் தலைவன் பேசத் தொடங்குகிறான்.
“மனைவியை விலைகூறி விற்றவன் யார்? (அரிச்சந்திரன் என்ற மன்னன்தானே.)
பாதி ஆடையோடு காட்டின் நடுவே மனைவியை அழவைத்து விலகிச் சென்றவன் யார்? (நளமகாராசன் அல்லவா.)
கொடிய சிறைக்கு மனைவியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தவன் யார்? (இராமன் அன்றோ.)
மனைவியின் ஆடையை அந்நிய ஆடவன் களையும்போது பார்த்து விழித்துக் கொண்டிருந்தவர்கள்; யார்? யார்?
(பராக்கிரமசாலிகளான பஞ்சபாண்டவர்கள் தாமே.)
இப்படியெல்லாம் (மனைவியைக் காப்பாற்றத் தெரியாத) கேவலமான மன்னர் குலத்தவனுக்குத் தாரமாக எங்கள் குலப்பெண் தேவையென்று கேட்பது ஏற்கத்தக்க செயலோ?
மணம்பேச வந்த உன்றன் வாயைக் கொப்பளித்துக் கழுவடா. உன் மன்னன் தந்த ஓலையைக் காற்றிலே பறக்க விடடா.
(எம்மோடு சமர் புரிகின்ற எதிரிகளுக்கு) சொர்க்கம் என்ற வெற்றியை அருள்கின்ற வெங்கை மாநகரத்து வேடர்கள் நாங்கள்.
எல்லாம்வல்ல முருகப்பெருமான் எம்மை நாடிவந்து, எமது உணவையும் உண்டு பழகியதன் பின்னர் நாம் அவருக்கு வளர்த்த பெண்ணான வள்ளியைத்தான் மணம் முடித்துக் கொடுத்தோம். பெற்ற பெண்ணைக் கடவுளுக்கே நாம் கொடுக்கவில்லை.
நீயோ இன்று யாம் பெற்ற பெண்ணை உன் மன்னருக்குத் தாரமாகக் கேட்கிறாய். என்ன உனக்குப் பேய் பிடித்துவிட்டதா தூதனே..”
என்று சீறி விழுகிறான்.
மன்னனுக்கே தன் குலப்பெருமை பேசுகின்ற வேடனின் வார்த்தைகளைப் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடலாக வடித்திருக்கின்றார். அதனைப் பார்ப்போமே.
விற்ற தார்?கலை பாதி யோடுவ
னத்தி லேஅழ விட்ட தார்?
வெம்சி றைப்புக விட்ட தார்? துகில்
உரிய விட்டு விழித்த தார்?
உற்ற தாரமும் வேண்டும் என்றினி
மன்னர் பெண் கொளல் ஒக்குமோ?
உமிய டாமண மென்ற வாய்:கிழித்து
ஓலை காற்றில் உருட் டடா
வெற்றி ஆகிய முத்தி தந்தருள்
வெங்கை மாநகர் வேடர் யாம்:
விமலா. ஆனவர் எம்மை அடுத்தினிது
எங்கள் மிச்சில் மிசைந்த தால்
பெற்ற வேலர்த மக்கு யாமொரு
பெண்வ ளர்ப்பி னில் ஈந்தனம்
பெற்ற பெண்ணைக் கொடுப்ப மோ:இதென்
பேய்பி டித்தி டுதூ தரே.
இப்போது சொல்லுங்கள்: வேடன் பேசிய குலப்பெருமை தமிழுக்கு அல்லவா சிறப்பைத் தருகிறது?
கந்தவனம் கோணேஸ்வரன்
2.4.2019
கருத்துகள்
கருத்துரையிடுக