மறைந்த சமூகப் பெரியார்களை விற்றுப் பிழைக்காதீ;கள்.
மறைந்த சமூகப் பெரியார்களை விற்றுப் பிழைக்காதீ;கள்.
பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவ்வளவுதான்;. அவருடைய கருத்துகள் திருக்குறளைப் போல எக்காலத்துக்கும் பொருந்தும் என எதிர்பார்ப்பது மடைமை. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளையும் சமயக் குறைபாடுகளையும் அவர் களைய முனைந்தார். அதற்கான கருத்துகளை அக்கால மக்கள் புரிந்து கொள்ளத்தக்க மொழிநடையில் முன்வைத்தார். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தலைவணங்காமல் வாழவேண்டும் என ஆசைப்பட்டார்.
தெருக்களில் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டுவந்து சந்திகளில் வைத்து அவமதிப்புச் செய்தார். இந்து சமயம் பிழையானது என்பது அவரது செய்தியாக அமையவில்லை. எதற்கெடுத்தாலும் கடவுளின் பெயரால் அச்சங் கொள்வதும், கடவுள் பெயரைச் சொல்லி யார் ஏமாற்றினாலும் ஏற்றுக் கொள்வதும் கைவிடப்பட வேண்டும் என்று விரும்பினார். கடவுளது வேலை மக்களைத் தண்டிப்பதல்ல என்பதை உணர்த்தத் தன்னையே பிள்ளையார் அவமதிப்பாளனாக மக்களிடையே அடையாளப் படுத்தினார்.
இறக்குமதிச் சமயங்கள் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அவரது நோக்கம் இந்தியப் பண்பாட்டிலும் தமிழக வாழ்முறையிலும் திருத்தங்கள் வேண்டும் என்பதாகவே இருந்தது.
சாதித் திமிர் கூடாதென்றார். உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதரில் பேதங்கிடையாது என்று சொன்னார். அன்றைய சமுதாயத்தில் தங்களை உயர்பிறப்புகளாகக் காட்டிக்கொண்டிருந்த பார்ப்பனர்களைத் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தார். ஒருவேளை இலங்கையில் பெரியார் பிறந்திருந்தால் சாதிவேளாளர்களைப் புரட்டி எடுத்திருப்பார்.
மக்களைத் திருத்த முயன்றாரேதவிர அவர் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. கல்வியற்றவரானாலும் வல்ல சிந்தனையாளராக விளங்கினார். பல்கலைக்கழகங்களில் மாணவர் மத்தியில் கேள்விகளுக்குப் பதிலளித்துத் தன்நியாயங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார். கடவுள் இல்லை என்று பல்கலைக் கழக மாணவர்களிடையே நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார். அவரின் திறனால்தான் அண்ணாதுரை போன்றவர்கள் அவரைத் தலைவராக ஏற்றனர்.
தேர்தலில் நிற்கும் கருத்து அண்ணாதுரையிடம்தான் துளிர்த்தது. பெரியார் அதற்கு உடன்படவில்லை. எனவே திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. அண்ணாதுரை பெரியாரின் மக்கள் செல்வாக்கைத் தந்திரமாகத் தன் அரசியலுக்குப் பயன்படுத்தினார். “நான் இக்கட்சிக்குத் தலைவனல்லன். பொதுச் செயலாளரே. தலைமைப் பதவி எப்போதும் அவருக்காகக் காத்துக் கிடக்கிறது.” என உரத்துக்கூறி அதன்படியே செயல்பட்டார். கட்சிக் கூட்டம் நடைபெறும் போதிற்கூடத் தலைமைக்கென காத்திருக்கும் வெற்றுக் கதிரையை வைத்தே கூட்டம் நடத்தினார். பெரியாரின் மனம்நோகாமல் பார்த்துக் கொண்டார்.
பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தபோதும் சமய நிராகரிப்புக் செயற்பாட்டை அவர் செய்யவில்லை. கோயில்களுக்குச் செல்ல விரும்பாத அவர் அன்பு நெருக்குதல்கள் காரணமாகக் கோயிலுக்குள் கால்வைத்த வேளைகளிலெல்லாம் ஆலய ஒழுக்கநெறிகளை உதறாமல் நடந்தார். திருநீற்றை வெறிகொண்டு அவர் அழிக்கவில்லை.
அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை இரந்து வாங்கிய கருணாநிதி அதன்மூலம் நாவலரைப் பின்தள்ளிக் கட்சியின் தலைவரானார். பின்னர், எம்.ஜி.ஆரை உதாசீனம் செய்ய முயன்றதால் அரசியல் வனவாசத்துக்கு ஆளானார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் முதலமைச்சராக வந்தாராயினும் ஜெயலலிதாவுக்கு முன்னால் அவர் மீண்டும் அல்லற்பட வேண்டியதாயிற்று.
மக்கள் நன்மைக்காகத் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் இப்போது பெரியாரின் கறுப்புச் சட்டையை மட்டுமே சுமந்து திரிபவர்களின் கூடாரமாகிவிட்டது. பெரியாரின் கொள்கைகளை விளங்கிக் கொள்ளாமல் இந்துமக்களின் மனங்களைப் புண்படுத்துவதே அவர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. தன்வீட்டுப் பெண்களை விட்டுவிட்டு அடுத்த வீட்டுப் பெண்களை ஏமாற்றி அழைத்துவந்து தாலி அறுப்புவிழா நடத்தும் அளவுக்குத் தரம் தாழ்ந்த தலைவனைக் கொண்டிருக்கிறது. பொய்யும் புரட்டும் அவர்களின் உடைமைகளாகி விட்டன.
காவிகளை அணிந்துவிட்டுக் கழற்றமுடியாமல் ஓடித்திரியும் சாமியார்கள் போலக் கறுப்புச் சட்டைகளை அணிந்துவிட்டுக் கழற்றமுடியாமல் ஓடித்திரிவோரின் மைதானமாகிவிட்டது.
இத்தகைய போக்கற்றவர்களை வைத்துக் கொண்டு பெரியாரை எடைபோடாதீர்கள். ஒருசிலரின் அரசியல் தேவைக்கு அவரைப் போடுகாயாகப் பயன்படுத்தாதீர்கள். கடவுள் மறுப்புக் கொள்கையுடன் பெரியார் வழ்ந்தார். அவர் காலத்தில் அத்தகைய தேவை தமிழகத்துக்கு இருந்தது. ஆனால் அண்ணாதுரை அரசியலுக்கு வந்ததன்பின் “ஒன்றே குலம். ஒருவனே தேவன்.” என அதனை மாற்றினார். அண்ணாதுரையும் திருநீறு அழிப்புச் சாதனையையோ தாலிஅறுப்பு நாடகத்தையோ ஒருபோதும் மேற்கொண்டவரல்லர்.
தாலியை அண்ணாதுரை வெறுத்தொதுக்கவில்லை. மாறாக அறிவுக்குப் பொருத்தமாகப் புதுவிளக்கம் கொடுக்க முனைந்தார். புலியுடன் போராடி அதனைக் கொன்று அதன் பல்லைப் பிடுங்கிவந்து தன் காதல் மனையாளின் கழுத்தில் அணிவிக்கும் ஆரமல்லவா தாலி எனக் கூறினார். இது தன் கணவன் வீரன் எனப் பெண்கள் கொள்ளும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்றார். இங்கே சமயம் கொச்சைப் படுத்தப்படவில்லை. மக்களும் புதுவிளக்கத்தை ரசித்தார்கள்.
பகுத்தறிவு என்பது வேறு. சம்பிரதாயங்களைப் புறந்தள்ளுவது என்பது வேறு. எந்தச் சம்பந்தமும் இல்லாமல் தோல்விக்காலத்தில் மஞ்சள்துண்டைப் போட்டார் கருணாநிதி;. இதில் அவரது அச்சமும் பாமரத்தனமும்தான் மேலோங்கி நின்றது. பெரியார் போட்டார் என்பதற்காக எக்காரணமும் இல்லாமல் கறுப்புததுண்டையையோ அல்லது கறுப்புச் சட்டையையோ போட்டுக்கொண்டு திரிகிறார்கள் திராவிடக் கட்சிக்காரர்கள்.
கறுப்புத் துண்டுக்குள் என்ன பெரியாரின் கொள்கை திணிக்கப்பட்டிருக்கிறதா எந்தப் பொதுமகனும் அவர்களிடம் வினவவில்லை. கறுப்புத்துண்டிலும் மஞ்சள்துண்டிலும் மயங்கிக் கிடப்பவர்கள் காவித்துண்டுடன் நடமாடுவோரை என்ன தகுதி கெண்டு கேலி செய்கிறார்கள் என எவரும் வினவவில்லை. பொதுமக்கள் நாகரிகமாக நடந்து கொள்கின்ற நிலையில் பகுத்தறிவுவாதிகள் பாமரத்தனமாகச் செயல்படுவது தமிழகத்தின் சாபக்கேடாகி விட்டது.
நான் பெரியார் தாசனுமல்லன்: பெரியவர்வாள் பக்தனுமல்லன். நிதானமாகச் சிந்திக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒருவன். இருபகுதியாரும் சமுதாயத்தின் தூண்களே எனக் கருதுபவன் நான். எனவே தயவு செய்து சமூகத்துக்குத் தொண்டாற்றி மறைந்தவர்களை உங்கள் தேவைக்காக விற்றுப் பிழைக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
கந்தவனம் கோணேஸ்வரன்
16.04.2019
பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவ்வளவுதான்;. அவருடைய கருத்துகள் திருக்குறளைப் போல எக்காலத்துக்கும் பொருந்தும் என எதிர்பார்ப்பது மடைமை. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளையும் சமயக் குறைபாடுகளையும் அவர் களைய முனைந்தார். அதற்கான கருத்துகளை அக்கால மக்கள் புரிந்து கொள்ளத்தக்க மொழிநடையில் முன்வைத்தார். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தலைவணங்காமல் வாழவேண்டும் என ஆசைப்பட்டார்.
தெருக்களில் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டுவந்து சந்திகளில் வைத்து அவமதிப்புச் செய்தார். இந்து சமயம் பிழையானது என்பது அவரது செய்தியாக அமையவில்லை. எதற்கெடுத்தாலும் கடவுளின் பெயரால் அச்சங் கொள்வதும், கடவுள் பெயரைச் சொல்லி யார் ஏமாற்றினாலும் ஏற்றுக் கொள்வதும் கைவிடப்பட வேண்டும் என்று விரும்பினார். கடவுளது வேலை மக்களைத் தண்டிப்பதல்ல என்பதை உணர்த்தத் தன்னையே பிள்ளையார் அவமதிப்பாளனாக மக்களிடையே அடையாளப் படுத்தினார்.
இறக்குமதிச் சமயங்கள் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அவரது நோக்கம் இந்தியப் பண்பாட்டிலும் தமிழக வாழ்முறையிலும் திருத்தங்கள் வேண்டும் என்பதாகவே இருந்தது.
சாதித் திமிர் கூடாதென்றார். உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதரில் பேதங்கிடையாது என்று சொன்னார். அன்றைய சமுதாயத்தில் தங்களை உயர்பிறப்புகளாகக் காட்டிக்கொண்டிருந்த பார்ப்பனர்களைத் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தார். ஒருவேளை இலங்கையில் பெரியார் பிறந்திருந்தால் சாதிவேளாளர்களைப் புரட்டி எடுத்திருப்பார்.
மக்களைத் திருத்த முயன்றாரேதவிர அவர் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. கல்வியற்றவரானாலும் வல்ல சிந்தனையாளராக விளங்கினார். பல்கலைக்கழகங்களில் மாணவர் மத்தியில் கேள்விகளுக்குப் பதிலளித்துத் தன்நியாயங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார். கடவுள் இல்லை என்று பல்கலைக் கழக மாணவர்களிடையே நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார். அவரின் திறனால்தான் அண்ணாதுரை போன்றவர்கள் அவரைத் தலைவராக ஏற்றனர்.
தேர்தலில் நிற்கும் கருத்து அண்ணாதுரையிடம்தான் துளிர்த்தது. பெரியார் அதற்கு உடன்படவில்லை. எனவே திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. அண்ணாதுரை பெரியாரின் மக்கள் செல்வாக்கைத் தந்திரமாகத் தன் அரசியலுக்குப் பயன்படுத்தினார். “நான் இக்கட்சிக்குத் தலைவனல்லன். பொதுச் செயலாளரே. தலைமைப் பதவி எப்போதும் அவருக்காகக் காத்துக் கிடக்கிறது.” என உரத்துக்கூறி அதன்படியே செயல்பட்டார். கட்சிக் கூட்டம் நடைபெறும் போதிற்கூடத் தலைமைக்கென காத்திருக்கும் வெற்றுக் கதிரையை வைத்தே கூட்டம் நடத்தினார். பெரியாரின் மனம்நோகாமல் பார்த்துக் கொண்டார்.
பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தபோதும் சமய நிராகரிப்புக் செயற்பாட்டை அவர் செய்யவில்லை. கோயில்களுக்குச் செல்ல விரும்பாத அவர் அன்பு நெருக்குதல்கள் காரணமாகக் கோயிலுக்குள் கால்வைத்த வேளைகளிலெல்லாம் ஆலய ஒழுக்கநெறிகளை உதறாமல் நடந்தார். திருநீற்றை வெறிகொண்டு அவர் அழிக்கவில்லை.
அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை இரந்து வாங்கிய கருணாநிதி அதன்மூலம் நாவலரைப் பின்தள்ளிக் கட்சியின் தலைவரானார். பின்னர், எம்.ஜி.ஆரை உதாசீனம் செய்ய முயன்றதால் அரசியல் வனவாசத்துக்கு ஆளானார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் முதலமைச்சராக வந்தாராயினும் ஜெயலலிதாவுக்கு முன்னால் அவர் மீண்டும் அல்லற்பட வேண்டியதாயிற்று.
மக்கள் நன்மைக்காகத் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் இப்போது பெரியாரின் கறுப்புச் சட்டையை மட்டுமே சுமந்து திரிபவர்களின் கூடாரமாகிவிட்டது. பெரியாரின் கொள்கைகளை விளங்கிக் கொள்ளாமல் இந்துமக்களின் மனங்களைப் புண்படுத்துவதே அவர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. தன்வீட்டுப் பெண்களை விட்டுவிட்டு அடுத்த வீட்டுப் பெண்களை ஏமாற்றி அழைத்துவந்து தாலி அறுப்புவிழா நடத்தும் அளவுக்குத் தரம் தாழ்ந்த தலைவனைக் கொண்டிருக்கிறது. பொய்யும் புரட்டும் அவர்களின் உடைமைகளாகி விட்டன.
காவிகளை அணிந்துவிட்டுக் கழற்றமுடியாமல் ஓடித்திரியும் சாமியார்கள் போலக் கறுப்புச் சட்டைகளை அணிந்துவிட்டுக் கழற்றமுடியாமல் ஓடித்திரிவோரின் மைதானமாகிவிட்டது.
இத்தகைய போக்கற்றவர்களை வைத்துக் கொண்டு பெரியாரை எடைபோடாதீர்கள். ஒருசிலரின் அரசியல் தேவைக்கு அவரைப் போடுகாயாகப் பயன்படுத்தாதீர்கள். கடவுள் மறுப்புக் கொள்கையுடன் பெரியார் வழ்ந்தார். அவர் காலத்தில் அத்தகைய தேவை தமிழகத்துக்கு இருந்தது. ஆனால் அண்ணாதுரை அரசியலுக்கு வந்ததன்பின் “ஒன்றே குலம். ஒருவனே தேவன்.” என அதனை மாற்றினார். அண்ணாதுரையும் திருநீறு அழிப்புச் சாதனையையோ தாலிஅறுப்பு நாடகத்தையோ ஒருபோதும் மேற்கொண்டவரல்லர்.
தாலியை அண்ணாதுரை வெறுத்தொதுக்கவில்லை. மாறாக அறிவுக்குப் பொருத்தமாகப் புதுவிளக்கம் கொடுக்க முனைந்தார். புலியுடன் போராடி அதனைக் கொன்று அதன் பல்லைப் பிடுங்கிவந்து தன் காதல் மனையாளின் கழுத்தில் அணிவிக்கும் ஆரமல்லவா தாலி எனக் கூறினார். இது தன் கணவன் வீரன் எனப் பெண்கள் கொள்ளும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்றார். இங்கே சமயம் கொச்சைப் படுத்தப்படவில்லை. மக்களும் புதுவிளக்கத்தை ரசித்தார்கள்.
பகுத்தறிவு என்பது வேறு. சம்பிரதாயங்களைப் புறந்தள்ளுவது என்பது வேறு. எந்தச் சம்பந்தமும் இல்லாமல் தோல்விக்காலத்தில் மஞ்சள்துண்டைப் போட்டார் கருணாநிதி;. இதில் அவரது அச்சமும் பாமரத்தனமும்தான் மேலோங்கி நின்றது. பெரியார் போட்டார் என்பதற்காக எக்காரணமும் இல்லாமல் கறுப்புததுண்டையையோ அல்லது கறுப்புச் சட்டையையோ போட்டுக்கொண்டு திரிகிறார்கள் திராவிடக் கட்சிக்காரர்கள்.
கறுப்புத் துண்டுக்குள் என்ன பெரியாரின் கொள்கை திணிக்கப்பட்டிருக்கிறதா எந்தப் பொதுமகனும் அவர்களிடம் வினவவில்லை. கறுப்புத்துண்டிலும் மஞ்சள்துண்டிலும் மயங்கிக் கிடப்பவர்கள் காவித்துண்டுடன் நடமாடுவோரை என்ன தகுதி கெண்டு கேலி செய்கிறார்கள் என எவரும் வினவவில்லை. பொதுமக்கள் நாகரிகமாக நடந்து கொள்கின்ற நிலையில் பகுத்தறிவுவாதிகள் பாமரத்தனமாகச் செயல்படுவது தமிழகத்தின் சாபக்கேடாகி விட்டது.
நான் பெரியார் தாசனுமல்லன்: பெரியவர்வாள் பக்தனுமல்லன். நிதானமாகச் சிந்திக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒருவன். இருபகுதியாரும் சமுதாயத்தின் தூண்களே எனக் கருதுபவன் நான். எனவே தயவு செய்து சமூகத்துக்குத் தொண்டாற்றி மறைந்தவர்களை உங்கள் தேவைக்காக விற்றுப் பிழைக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
கந்தவனம் கோணேஸ்வரன்
16.04.2019
கருத்துகள்
கருத்துரையிடுக