இலக்கியத்துளி 8
இலக்கியத்துளி 8
ஒரு மொழியின் சிறப்பு அதன் கவிதைகள் மூலந்தான் வெளிப்படுகிறது. மற்றைக் கலைகள் மொழிச்சிறப்பைக் கொண்டிருப்பினும் கவிதையின் அளவுக்கு மொழிவளத்தையும் இனிமையையும் புலப்படுத்தவல்லன எனக் கொள்ளவியலாது.
தமிழின் பெருமைகூட அதன் சங்ககால இலக்கியங்களாலும், பன்னிருதிருமுறை, நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதாலான பக்தி இலக்கியங்களாலும் கம்பராமாயணம் போன்ற கவிதைக் காவியங்களாலும் உலக அரங்கில் உயர்நிலை பெற்றிருக்கிறது எனில் மிகையன்று.
நந்தமிழ் மொழி ஒரு கவிதைக்கடல். அதில் மூழ்குந்தோறும் முத்துகள் பெறலாம். பக்தி, காதல், ஒழுக்கம், அறம், வீரம், இயற்கையழகு எனப் பலவகையான முத்துகளை இலக்கிய விரும்பிகளுக்குத் தாராளமாக அள்ளித் தருபவள் தமிழ்த்தாய்
.
நாம் இன்று களிக்கின்ற கவிதை முத்துகளை விதைத்தவர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள். அவர்கள் நாவினிலே “சரஸ்வதி குடியிருந்தாள்.” எனச் சொல்வது சாலப் பொருந்தும்.
நாவில் கலைவாணி நடமிடும் பாக்கியம் பெற்றவர்களுள் காளமேகப் புலவரும் ஒருவர். இவர் தன் மொழித் திறமையால் தமிழின் “த”கர வரிசை எழுத்துகளை மட்டும் வைத்தே ஒரு வெண்பாவை இயற்றிக் கவிதைப் பிரியர்களை மயக்கிப் போட்டிருக்கிறார்.
அந்தப் பாடலைப் பார்ப்போம்:
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்திதத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி
இதன் பொருள் இதுதான்:
தாதி தூதோ தீது – பணிப் பெண்களை (காதல்) தூதாக அனுப்பினால் தீமைதான் விளையும்.
தத்தை தூது ஓதாது – கிளி (நாம் சொல்லியவற்றை அப்படியே சொல்லுந் திறனற்றதால்) தூது உரைக்க வல்லதன்று.
தூதி தூது ஒத்து -- தூது செல்கின்ற என் பிரியமானவளே, (உன்) தூது எனக்கு உடன்பாடான,
இதத் தூததே -- இதமான தூது அன்றோ.
தாதொத்த -- (எனவே) தாது ஒத்த – பொன்னைப் போன்றவளே,
துத்தி தத்தாதே – கறையேதும் அவர்மேற் படராவண்ணம் (தூயவழியில்)
துதித்து – (என் காதலரை) வணங்கி,
தேத்து ஒத்து – (அவரை) தேற்றி (அவருடன்) இணைந்து,
இது தித்தித்தது -- இந்தச் செய்தி (எனக்கு) தித்திப்பாக இருந்தது,
ஓதி(த்) -- எனச் சொல்லி,
திதி -- (என்னைக்) காத்தருள்வாய்.
கவிதை கடினமானதுபோற்; தெரிந்தாலும் அது, தன் காதல் தூதுக்காக நம்பிக்கையுள்ள தோழியிடம் பணிந்து நிற்கும் ஒரு காதற்பெண்ணின் உள்ளத் தவிப்பையல்லவா காட்டுகிறது?.
இப்படி ஓரெழுத்திற் கவிதை தருமாற்றல் தமிழுக்கன்றி வேறெம்மொழிக்குச் சாலும்?
கந்தவனம் கோணேஸ்வரன்,
18.04.2019
ஒரு மொழியின் சிறப்பு அதன் கவிதைகள் மூலந்தான் வெளிப்படுகிறது. மற்றைக் கலைகள் மொழிச்சிறப்பைக் கொண்டிருப்பினும் கவிதையின் அளவுக்கு மொழிவளத்தையும் இனிமையையும் புலப்படுத்தவல்லன எனக் கொள்ளவியலாது.
தமிழின் பெருமைகூட அதன் சங்ககால இலக்கியங்களாலும், பன்னிருதிருமுறை, நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதாலான பக்தி இலக்கியங்களாலும் கம்பராமாயணம் போன்ற கவிதைக் காவியங்களாலும் உலக அரங்கில் உயர்நிலை பெற்றிருக்கிறது எனில் மிகையன்று.
நந்தமிழ் மொழி ஒரு கவிதைக்கடல். அதில் மூழ்குந்தோறும் முத்துகள் பெறலாம். பக்தி, காதல், ஒழுக்கம், அறம், வீரம், இயற்கையழகு எனப் பலவகையான முத்துகளை இலக்கிய விரும்பிகளுக்குத் தாராளமாக அள்ளித் தருபவள் தமிழ்த்தாய்
.
நாம் இன்று களிக்கின்ற கவிதை முத்துகளை விதைத்தவர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள். அவர்கள் நாவினிலே “சரஸ்வதி குடியிருந்தாள்.” எனச் சொல்வது சாலப் பொருந்தும்.
நாவில் கலைவாணி நடமிடும் பாக்கியம் பெற்றவர்களுள் காளமேகப் புலவரும் ஒருவர். இவர் தன் மொழித் திறமையால் தமிழின் “த”கர வரிசை எழுத்துகளை மட்டும் வைத்தே ஒரு வெண்பாவை இயற்றிக் கவிதைப் பிரியர்களை மயக்கிப் போட்டிருக்கிறார்.
அந்தப் பாடலைப் பார்ப்போம்:
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்திதத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி
இதன் பொருள் இதுதான்:
தாதி தூதோ தீது – பணிப் பெண்களை (காதல்) தூதாக அனுப்பினால் தீமைதான் விளையும்.
தத்தை தூது ஓதாது – கிளி (நாம் சொல்லியவற்றை அப்படியே சொல்லுந் திறனற்றதால்) தூது உரைக்க வல்லதன்று.
தூதி தூது ஒத்து -- தூது செல்கின்ற என் பிரியமானவளே, (உன்) தூது எனக்கு உடன்பாடான,
இதத் தூததே -- இதமான தூது அன்றோ.
தாதொத்த -- (எனவே) தாது ஒத்த – பொன்னைப் போன்றவளே,
துத்தி தத்தாதே – கறையேதும் அவர்மேற் படராவண்ணம் (தூயவழியில்)
துதித்து – (என் காதலரை) வணங்கி,
தேத்து ஒத்து – (அவரை) தேற்றி (அவருடன்) இணைந்து,
இது தித்தித்தது -- இந்தச் செய்தி (எனக்கு) தித்திப்பாக இருந்தது,
ஓதி(த்) -- எனச் சொல்லி,
திதி -- (என்னைக்) காத்தருள்வாய்.
கவிதை கடினமானதுபோற்; தெரிந்தாலும் அது, தன் காதல் தூதுக்காக நம்பிக்கையுள்ள தோழியிடம் பணிந்து நிற்கும் ஒரு காதற்பெண்ணின் உள்ளத் தவிப்பையல்லவா காட்டுகிறது?.
இப்படி ஓரெழுத்திற் கவிதை தருமாற்றல் தமிழுக்கன்றி வேறெம்மொழிக்குச் சாலும்?
கந்தவனம் கோணேஸ்வரன்,
18.04.2019
கருத்துகள்
கருத்துரையிடுக