தமிழ் இலக்கணம் அறிவோம் - 4 தொடரியல்;. 1
தமிழ் இலக்கணம் அறிவோம் - 4
தொடரியல்;. 1
தொடரியல் என்பது சொற்களை ஒன்றுக்கொன்று முறைப்படி தொடர்புபடுத்தி நேர்த்தியான கருத்துடையதும் இலக்கணப் பிழையற்றதுமான வசனங்களை அமைத்தல்பற்றிப் பேசும் பகுதி எனலாம். தொடரியலை வாக்கியவியல் அல்லது வசனவியல் என்றும் அழைக்கலாம்.
எவ்வளவு சொற்களை நாம் அறிந்திருந்தாலும், சொற்களின் நான்கு பிரதான பகுப்புகளான பெயர், வினை, இடை, உரி என்பவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும், அச்சொற்களைச் சரியான வகையில் ஒன்றோடொன்று இணைக்கும் முறைiயைத் தெரிந்திராவிட்டால் நாம் கருத்து எதனையும் தெரிவிக்க முடியாதவர்களாகவே இருப்போம்.
சொற்குவியல்கள் ஒருபோதும் வாக்கியமாவதில்லை. வாக்கியமாகாத எதுவும் நாம் நினைக்கும் கருத்தையும் வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே நாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சரியான முறையிற் சொற்களைக் கையாண்டு வசனங்களை அமைக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.
அதற்காக, வாக்கியமமைத்தல் என்பது ஏதோ கடினமான செயலென்று முடிவகட்ட வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் எல்லோரும் பேச்சவழக்கில் தினமும் பல்வேறு விதமான வாக்கியங்களை அமைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். சொல்லவந்த கருத்தையும் முடிந்தவரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆயினும் உன்னிப்பாகக் கவனிப்போமானால், சிலர் சொல்லவந்த கருத்துகளைத் தெளிவாகச் சொல்லும்போது, பலர் அதனையே தடுமாற்றத்துடன் சரியாகக் கோவைப்படுத்தாமற் சொல்லிக் கேட்போரை அல்லது படிப்போரைத் திணறடிப்பதையும் காணலாம். இக்குறைபாடு களையப்பட வேண்டுமானால் சரியான முறையில் வாக்கியங்களை அமைக்க நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.
ஒரு சிறிய வாக்கியத்தில், எழுவாய் பயனிலை ஆகிய இருபகுதிகள் இருப்பதைக் காணலாம். அவ்வாறு அமையும்நிலையில் சில வாக்கியங்களில் எழுவாய் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்தும் வருவதுண்டு. இதனைத் தோன்றா எழுவாய் என்பர். சில வாக்கியங்களில் பயனிலை வெளிப்படாமல் குறிப்பால் உணர்த்துவதுமுண்டு. எனினும் இலக்கணநூலார் இதனைத் தோன்றாப் பயனிலை எனச் சொல்வதில்லை என்பதையும் மனத்திருத்தல் நலம்.
இதேபோல் எழுவாய் பயனிலை என்பவற்றுடன் செயப்படுபொருள் எனும் பகுதியும் சேர்ந்து வருவதுண்டு. இச் செயப்படுபொருளும் வசனத்தில் மறைந்து நிற்கும் சந்தர்ப்பங்களும் உள. இந்நிலையில் இதனை தோன்றாச் செயப்படுபொருள் என இலக்கணம் சொல்வதில்லை.
எனவே தோன்றா எழுவாய்க்குக் கொடுக்கும் இலக்கண முக்கியத்துவம் தோன்றாப் பயனிலைக்கோ, தோன்றாச் செயப்படுபொருளுக்கோ கொடுக்கப்படுவதில்லை என்பது தெளிவு. ஆயினும் இத்தகைய தோன்றாப் பயனிலை, தோன்றாச் செயப்படுபொருள் என்பவை வருகின்ற சந்தர்ப்பங்களையும் நுணுக்கமாக அறிந்திருத்தல் தமிழறிவு மேம்பட வழிசமைக்கும்.
முதலில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றால் என்ன என்பது பற்றி நோக்குவோம்.
எழுவாய்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல விழைவாராயின் அதற்கு யாதாகினுமோர் அடிப்படை தேவைப்படுகிறது. அதாவது, தோற்றுவாய் அல்லது எழுவாய் தேவைப்படுகிறது. தோற்றுவாய் அல்லது எழுவாய் இன்றி யாரும் கருத்துச் சொல்வதில்லை.
எனவே, ஒருவர் எதனைப்பற்றிக் கருத்துச் சொல்ல முன்வருகிறாரோ அதுவே எழுவாய் ஆகிறது.
தம்பி நன்றாகப் படித்தான்.
வேணி நடனமாடுகிறாள்;.
நான் அவனைச் சந்திக்கவில்லை.
இந்த மூன்று வாக்கியங்களையும் நோக்கினால் முதலாவது வாக்கியம் ‘தம்பி’ பற்றியும் இரண்டாவது வாக்கியம் ‘வேணி’ எனும் பெண்பற்றியும், மூன்றாவது வாக்கியம் ‘நான்’ எனப் பேசுபவர் பற்றியும் கருத்தைச் சொல்ல முன்வருகின்றன. எனவே, இவ்வாக்கியங்களின் தோற்றத்துக்குக் காரணமாக இவை அமைந்திருப்பதால் இவை எழுவாய் எனப்படுகின்றன.
இவ்வாக்கியங்களில் எழுவாய்கள் தெளிவாகவே புலப்படுகின்றன. முதலாவது வாக்கியத்தில் “தம்பி” என்பதும், இரண்டாவது வாக்கியத்தில் “வேணி” என்பதும், மூன்றாவது வாக்கியத்தில் “நான்” என்பதும் வெளிப்டையாகவே நிற்கின்றன.
பயனிலை.
ஓர் எழுவாயிலிருந்து தோன்றும் வாக்கியத்தின் பயன்நிலையைத் தீர்மானிக்கும் சொல்லைப் பயனிலை என்கிறோம். தமிழ் வாக்கிய அமைப்பின்படி இச்சொல் அநேகமாக வாக்கியத்தின் இறுதியிலேயே வருவதால் பயனிலை என்பது பொதுவாக வாக்கியத்தின் முடிவுச் சொல்லாகவே வருகிறது.
பயனிலையாக வருகின்ற சொல் வினைச்சொல்லாகவோ வினை தொக்கிநிற்கும் (மறைந்துநிற்கும்) சொல்லாகவோ அமையும். பயனிலையாக வருகின்ற சொல்லுக்கு முன்னால் யார் அல்லது எது என்ற கேள்வியைக் கேட்டு எழுவாயை விடையாகப் பெறலாம் என்பது இலக்கணமுறைமை.
தம்பி ஓடினான்.
நாய் குரைத்தது.
அவன் நல்லவன்.
ஆகிய வசனங்களை எடுத்துக்கொண்டால், ஓடினான், குரைத்தது, நல்லவன் என்பன பயனிலையாகின்றன. இதன்படி யார் ஓடினான் என்ற கேள்விக்குத் தம்பி என்பது விடையாக வருகிறது. எது குரைத்தது என்ற கேள்விக்கு நாய் என்பது பதிலாகிறது. அதேபோல் யார் நல்லவன் எனும்போது அவன் என்பது விடையாகிறது. எனவே, தம்பி, நாய், அவன் என்பவை எழுவாய்கள் ஆகின்றன.
ஓடினான், குரைத்தது என்பவை வினைமுற்றுகளாக அமைந்திருக்க , நல்லவன் என்பது பெயர்ச்சொல்லாக (வினையாலணையும் பெயர்) வருவதைக் காண்கிறோம். எனினும் ஆழமாகப் பார்வையைச் செலுத்தினால் அவ்வசனம் “அவன் நல்லவன் ஆவான்.” என நிறைவுறுவதை உணரலாம். இங்கே ஆவான் என்கின்ற வினைமுற்று மறைந்து நிற்கிறது. எனவே இவ்வகை வசனங்களில் வரும் பயனிலைகள் வினைச்சொற்கள் தொக்கிநிற்கும் பயனிலைகள் எனப்படுகின்றன.
செயப்படுபொருள்.
தம்பி பானையை உடைத்தான்.
அக்கா பாடத்தைப் படித்தாள்.
அம்மா வீட்டைப் பெருக்கினார்.
பொய்யன் நல்லவனை ஏமாற்றினான்.
மேற்கண்ட வசனங்களை எடுத்துக்கொண்டால் உடைத்தான், படித்தாள், பெருக்கினார், ஏமாற்றினான் என்பவை பயனிலைகள் எனப்படுகின்றன. இவையனைத்தும் உயர்திணை வினைமுற்றுகளாக இருப்பதால் “யார்?” என்ற கேள்வியுடன் பயனிலைச் சொற்களை இணைக்கும்போது தம்பி, அக்கா, அம்மா, பொய்யன் என்பவை விடையாக வருகின்றன. இவற்றை நாம் எழுவாய்கள் எனவும் இனங்காண்கிறோம்.
அதேபோல் யாரை அல்லது எதனை என்ற வினாக்களைப் பயனிலைச் சொல்லுக்கு முன் இணைத்தால் அவற்றின் விடைகளாக வருபவை செயப்படுபொருள்கள் ஆகின்றன. இதன்படி தம்பி எதை உடைத்தான் எனில் பானையை உடைத்தான் என்பது பதிலாகிறது. எனவே, பானையை என்பது செயப்படுபொருள்.
எதைப் படித்தாள் என்ற கேள்விக்கு பாடத்தை என்பதும், எதைப் பெருக்கினார் என்பதற்கு வீட்டை என்பதும் விடையாக வருகின்றன. “பொய்யன் யாரை ஏமாற்றினான்?” என்ற கேள்விக்கு நல்லவனை என்பது விடையாகிறது. எனவே குடத்தை, பாடத்தை, வீட்டை, நல்லவனை என்பவை செயப்படுபொருள்கள் எனப்படுகின்றன.
இவற்றிலிருந்து செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமைஉருபான “ஐ” உச்சரிப்பை இறுதியில் பெற்றிருக்கும் என்பது வெளிப்படை.
எனினும் தற்கால நடைமுறையில் வேற்றுமை உருபு வெளிப்படையாக இல்லாமலும் வசனங்கள் அமைகின்றன. வேற்றுமை உருபு வெளிப்டையாகத் தெரியாவிடினும் “ஐ” உருபு நிச்சயம் செயப்படுபொருளில் மறைந்து நிற்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
தம்பி பாடம் படித்தான்.
அம்மா வீடு பெருக்கினார்.
மணப்பெண் நகை அணிந்தாள்.
ஆகிய வசனங்களில் செயப்படுபொருள்களான பாடம், வீடு, நகை என்பவை வெளிப்டையாக “ஐ”உருபைக் கொண்டிராத போதிலும் எதை என்ற கேள்வி எழும்போது பாடத்தை, வீட்டை, நகையை என்பவையே முறையான விடைகளாக வருவதால் “ஐ”உருபு தொக்கி நிற்பதை உணரலாம்.
தோன்றா எழுவாய்.
நாளை வருகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
என் பின்னால் வா.
அதை எடு.
நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
இவ்வைந்து வாக்கியங்களும் தாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகவே சொல்கின்றன. எனினும் அவற்றின் எழுவாய்கள் வெளிப்படையாக அல்லாமல் மறைந்தே நிற்கின்றன.
முதலிரண்டு வாக்கியங்களை எடுத்துக் கொண்டால் முதலாவது வாக்கியம் தன்மை ஒருமை உயர்திணை வினைமுற்றைப் பயனிலையாகக் கொண்டிருப்பதால் நான் எனுஞ் சொல்லை எழுவாயாகக் கொள்ள முடிகிறது.
“நான் நாளை வருகிறேன்.” எனும்போது எழுவாய் வெளிப்டையாகவே வருகிறது. எனவே “நாளை வருகிறேன்.” என்ற வாக்கியத்தில் நான் மறைந்து நின்னு பொருள் தருவதால் அது தோன்றா எழுவாய் எனப்படுகிறது.
இரண்டாவது வாக்கியம் தன்மைப் பன்மை உயர்திணை வினைமுற்றான “சந்திப்போம்” என்ற சொல்லைக் கொண்டு நிறைவுறுவதால் மறைந்திருக்கும் எழுவாய் நாம், நாங்கள், நீயும்நானும் என்ற சொற்களில் யாதாகிலும் ஒன்றாய் இருப்பின் மட்டுமே பொருந்திவரும் என்பது வெளிப்படை.
இதன்படி,
நாம் (யாம்) மீண்டும் சந்திப்போம்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
நீயும் நானும் (அல்லது நீங்களும் நானும்) மீண்டும் சந்திப்போம்.
என எழுவாய் அமைய வாய்ப்புண்டு.
எனவே வாக்கியத்துக்குப் பொருந்தி வருகின்ற எழுவாய் மறைந்து நிற்பதன் காரணமாக அது தோன்றா எழுவாய் எனப்படுகின்றது.
மூன்றாம் நான்காம் வாக்கியங்களின் எழுவாய் ஒருமை முன்னிலைச் சொல்லாகவே வருகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டினதும் பயனிலைகள் ஏவல் வினைகளிலேயே வருவதால் படர்க்கைச் சொல் அவ்வாக்கியங்களின் எழுவாயாவதற்கு எவ்வகையாலும் வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.
இவ்வகை வசனங்களில் தம்பீ அல்லது தங்காய் என்ற சொல்லை எழுவாயாகக் கொள்ளின் வசனம் நிறைவு பெறுவதைக் காணலாம். இங்கே நீ எனும் முன்னிலைச் சொல்லுடன் தம்பீ , தங்காய், அக்கா, அண்ணா போன்ற எட்டாம் வேற்றுமை விளிச்சொற்கள் (விளிவேற்றுமைகளும் முன்னிலைச் சொற்களே) அனைத்தும் பொருந்திவருவதை அவதானிக்கலாம்.
இவற்றைப்போல் பெயர்களையும் விளிவேற்றுமையாக்கி எழுவாயாகப் பயன்படுத்தலாம்.
இதன்படி,
அக்கா, என்பின்னால் வா. அக்கா, அதை எடு
தம்பீ என் பின்னால் வா. தம்பீ அதை எடு
பாலா, என் பின்னால் வா. பாலா, அதை எடு
நீ என் பின்னால் வா நீ அதை எடு.
என வரக்கூடிய எழுவாய்ச் சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவதால் அவை தோன்றா எழுவாய்கள் எனப்படுகின்றன.
ஐந்தாவது வாக்கியமான, “நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.” என்பதிலும் எழுவாய் மறைந்தே நிற்கிறது. இதன் பயனிலையான “வரமுடியும்” என்ற வினைமுற்று தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொருந்திவருவதால் தோன்றாமல் மறைந்து நிற்கும் எழுவாய்,
நாங்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
நீங்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்;.
அவர்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
மாணவர்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்
.
ஆகிய வசனங்களில் நாங்கள், நீங்கள், அவர்கள் மாணவர்கள் என மூவிடச் சொற்களைக் கொண்டு அமைவதைக் காணலாம்.
தோன்றாப் பயனிலையும் செயப்படுபொருளும்;
ஒரு வகுப்பில் ஆசிரியரின் கட்டளைப்படி மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் எழுதிவந்த கட்டுரைகளை வாசிப்பதாகக் கொள்வோம். சில மாணவர்கள் வாசித்து முடித்துவிட்ட நிலையில் ஆசிரியர் ஒரு மாணவரைச் சுட்டி :”நீ” என உத்தரவிடுகிறார்.
இந்த உத்தரவில் நீ என்ற எழுவாய் மாத்திரமே வெளிப்பட்டு நிற்கிறது. எனினும் அதன் கருத்து “நீ உன் கட்டுரையைப் படி.” என்பதாகவே அமையும். இங்கே படி என்ற பயனிலையோ, கட்டுரையை என்ற செயப்படுபொருளோ வாக்கியத்தில் வெளிப்படையாக உள்ளடக்கப்படாத போதிலும், நீ என்கின்ற தோன்றும் எழுவாயின் பின்னால் அவை தோன்றாமல் மறைந்து நிற்கின்றன என்பது தெளிவு இவைபோன்ற பல தோன்றாப் பயனிலைகளும் தோன்றாச் செயப்படுபொருள்களும் வாக்கியங்களில் தாராளமாகப் பயன்படுவதை நடைமுறையிற் காணலாம்..
எனவே இலக்கணத்தில் இவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத போதிலும் சூழலுக்கு அமைவாக இவை தோன்றாப் பயனிலையாகவும் தோன்றாச் செயப்படுபொருளாகவும் செயற்படுகின்றன என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்ளல் தமிழறிவு மேம்பட உதவும்.
தொடரியல்;. 1
தொடரியல் என்பது சொற்களை ஒன்றுக்கொன்று முறைப்படி தொடர்புபடுத்தி நேர்த்தியான கருத்துடையதும் இலக்கணப் பிழையற்றதுமான வசனங்களை அமைத்தல்பற்றிப் பேசும் பகுதி எனலாம். தொடரியலை வாக்கியவியல் அல்லது வசனவியல் என்றும் அழைக்கலாம்.
எவ்வளவு சொற்களை நாம் அறிந்திருந்தாலும், சொற்களின் நான்கு பிரதான பகுப்புகளான பெயர், வினை, இடை, உரி என்பவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும், அச்சொற்களைச் சரியான வகையில் ஒன்றோடொன்று இணைக்கும் முறைiயைத் தெரிந்திராவிட்டால் நாம் கருத்து எதனையும் தெரிவிக்க முடியாதவர்களாகவே இருப்போம்.
சொற்குவியல்கள் ஒருபோதும் வாக்கியமாவதில்லை. வாக்கியமாகாத எதுவும் நாம் நினைக்கும் கருத்தையும் வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே நாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சரியான முறையிற் சொற்களைக் கையாண்டு வசனங்களை அமைக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.
அதற்காக, வாக்கியமமைத்தல் என்பது ஏதோ கடினமான செயலென்று முடிவகட்ட வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் எல்லோரும் பேச்சவழக்கில் தினமும் பல்வேறு விதமான வாக்கியங்களை அமைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். சொல்லவந்த கருத்தையும் முடிந்தவரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆயினும் உன்னிப்பாகக் கவனிப்போமானால், சிலர் சொல்லவந்த கருத்துகளைத் தெளிவாகச் சொல்லும்போது, பலர் அதனையே தடுமாற்றத்துடன் சரியாகக் கோவைப்படுத்தாமற் சொல்லிக் கேட்போரை அல்லது படிப்போரைத் திணறடிப்பதையும் காணலாம். இக்குறைபாடு களையப்பட வேண்டுமானால் சரியான முறையில் வாக்கியங்களை அமைக்க நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.
ஒரு சிறிய வாக்கியத்தில், எழுவாய் பயனிலை ஆகிய இருபகுதிகள் இருப்பதைக் காணலாம். அவ்வாறு அமையும்நிலையில் சில வாக்கியங்களில் எழுவாய் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்தும் வருவதுண்டு. இதனைத் தோன்றா எழுவாய் என்பர். சில வாக்கியங்களில் பயனிலை வெளிப்படாமல் குறிப்பால் உணர்த்துவதுமுண்டு. எனினும் இலக்கணநூலார் இதனைத் தோன்றாப் பயனிலை எனச் சொல்வதில்லை என்பதையும் மனத்திருத்தல் நலம்.
இதேபோல் எழுவாய் பயனிலை என்பவற்றுடன் செயப்படுபொருள் எனும் பகுதியும் சேர்ந்து வருவதுண்டு. இச் செயப்படுபொருளும் வசனத்தில் மறைந்து நிற்கும் சந்தர்ப்பங்களும் உள. இந்நிலையில் இதனை தோன்றாச் செயப்படுபொருள் என இலக்கணம் சொல்வதில்லை.
எனவே தோன்றா எழுவாய்க்குக் கொடுக்கும் இலக்கண முக்கியத்துவம் தோன்றாப் பயனிலைக்கோ, தோன்றாச் செயப்படுபொருளுக்கோ கொடுக்கப்படுவதில்லை என்பது தெளிவு. ஆயினும் இத்தகைய தோன்றாப் பயனிலை, தோன்றாச் செயப்படுபொருள் என்பவை வருகின்ற சந்தர்ப்பங்களையும் நுணுக்கமாக அறிந்திருத்தல் தமிழறிவு மேம்பட வழிசமைக்கும்.
முதலில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றால் என்ன என்பது பற்றி நோக்குவோம்.
எழுவாய்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல விழைவாராயின் அதற்கு யாதாகினுமோர் அடிப்படை தேவைப்படுகிறது. அதாவது, தோற்றுவாய் அல்லது எழுவாய் தேவைப்படுகிறது. தோற்றுவாய் அல்லது எழுவாய் இன்றி யாரும் கருத்துச் சொல்வதில்லை.
எனவே, ஒருவர் எதனைப்பற்றிக் கருத்துச் சொல்ல முன்வருகிறாரோ அதுவே எழுவாய் ஆகிறது.
தம்பி நன்றாகப் படித்தான்.
வேணி நடனமாடுகிறாள்;.
நான் அவனைச் சந்திக்கவில்லை.
இந்த மூன்று வாக்கியங்களையும் நோக்கினால் முதலாவது வாக்கியம் ‘தம்பி’ பற்றியும் இரண்டாவது வாக்கியம் ‘வேணி’ எனும் பெண்பற்றியும், மூன்றாவது வாக்கியம் ‘நான்’ எனப் பேசுபவர் பற்றியும் கருத்தைச் சொல்ல முன்வருகின்றன. எனவே, இவ்வாக்கியங்களின் தோற்றத்துக்குக் காரணமாக இவை அமைந்திருப்பதால் இவை எழுவாய் எனப்படுகின்றன.
இவ்வாக்கியங்களில் எழுவாய்கள் தெளிவாகவே புலப்படுகின்றன. முதலாவது வாக்கியத்தில் “தம்பி” என்பதும், இரண்டாவது வாக்கியத்தில் “வேணி” என்பதும், மூன்றாவது வாக்கியத்தில் “நான்” என்பதும் வெளிப்டையாகவே நிற்கின்றன.
பயனிலை.
ஓர் எழுவாயிலிருந்து தோன்றும் வாக்கியத்தின் பயன்நிலையைத் தீர்மானிக்கும் சொல்லைப் பயனிலை என்கிறோம். தமிழ் வாக்கிய அமைப்பின்படி இச்சொல் அநேகமாக வாக்கியத்தின் இறுதியிலேயே வருவதால் பயனிலை என்பது பொதுவாக வாக்கியத்தின் முடிவுச் சொல்லாகவே வருகிறது.
பயனிலையாக வருகின்ற சொல் வினைச்சொல்லாகவோ வினை தொக்கிநிற்கும் (மறைந்துநிற்கும்) சொல்லாகவோ அமையும். பயனிலையாக வருகின்ற சொல்லுக்கு முன்னால் யார் அல்லது எது என்ற கேள்வியைக் கேட்டு எழுவாயை விடையாகப் பெறலாம் என்பது இலக்கணமுறைமை.
தம்பி ஓடினான்.
நாய் குரைத்தது.
அவன் நல்லவன்.
ஆகிய வசனங்களை எடுத்துக்கொண்டால், ஓடினான், குரைத்தது, நல்லவன் என்பன பயனிலையாகின்றன. இதன்படி யார் ஓடினான் என்ற கேள்விக்குத் தம்பி என்பது விடையாக வருகிறது. எது குரைத்தது என்ற கேள்விக்கு நாய் என்பது பதிலாகிறது. அதேபோல் யார் நல்லவன் எனும்போது அவன் என்பது விடையாகிறது. எனவே, தம்பி, நாய், அவன் என்பவை எழுவாய்கள் ஆகின்றன.
ஓடினான், குரைத்தது என்பவை வினைமுற்றுகளாக அமைந்திருக்க , நல்லவன் என்பது பெயர்ச்சொல்லாக (வினையாலணையும் பெயர்) வருவதைக் காண்கிறோம். எனினும் ஆழமாகப் பார்வையைச் செலுத்தினால் அவ்வசனம் “அவன் நல்லவன் ஆவான்.” என நிறைவுறுவதை உணரலாம். இங்கே ஆவான் என்கின்ற வினைமுற்று மறைந்து நிற்கிறது. எனவே இவ்வகை வசனங்களில் வரும் பயனிலைகள் வினைச்சொற்கள் தொக்கிநிற்கும் பயனிலைகள் எனப்படுகின்றன.
செயப்படுபொருள்.
தம்பி பானையை உடைத்தான்.
அக்கா பாடத்தைப் படித்தாள்.
அம்மா வீட்டைப் பெருக்கினார்.
பொய்யன் நல்லவனை ஏமாற்றினான்.
மேற்கண்ட வசனங்களை எடுத்துக்கொண்டால் உடைத்தான், படித்தாள், பெருக்கினார், ஏமாற்றினான் என்பவை பயனிலைகள் எனப்படுகின்றன. இவையனைத்தும் உயர்திணை வினைமுற்றுகளாக இருப்பதால் “யார்?” என்ற கேள்வியுடன் பயனிலைச் சொற்களை இணைக்கும்போது தம்பி, அக்கா, அம்மா, பொய்யன் என்பவை விடையாக வருகின்றன. இவற்றை நாம் எழுவாய்கள் எனவும் இனங்காண்கிறோம்.
அதேபோல் யாரை அல்லது எதனை என்ற வினாக்களைப் பயனிலைச் சொல்லுக்கு முன் இணைத்தால் அவற்றின் விடைகளாக வருபவை செயப்படுபொருள்கள் ஆகின்றன. இதன்படி தம்பி எதை உடைத்தான் எனில் பானையை உடைத்தான் என்பது பதிலாகிறது. எனவே, பானையை என்பது செயப்படுபொருள்.
எதைப் படித்தாள் என்ற கேள்விக்கு பாடத்தை என்பதும், எதைப் பெருக்கினார் என்பதற்கு வீட்டை என்பதும் விடையாக வருகின்றன. “பொய்யன் யாரை ஏமாற்றினான்?” என்ற கேள்விக்கு நல்லவனை என்பது விடையாகிறது. எனவே குடத்தை, பாடத்தை, வீட்டை, நல்லவனை என்பவை செயப்படுபொருள்கள் எனப்படுகின்றன.
இவற்றிலிருந்து செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமைஉருபான “ஐ” உச்சரிப்பை இறுதியில் பெற்றிருக்கும் என்பது வெளிப்படை.
எனினும் தற்கால நடைமுறையில் வேற்றுமை உருபு வெளிப்படையாக இல்லாமலும் வசனங்கள் அமைகின்றன. வேற்றுமை உருபு வெளிப்டையாகத் தெரியாவிடினும் “ஐ” உருபு நிச்சயம் செயப்படுபொருளில் மறைந்து நிற்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
தம்பி பாடம் படித்தான்.
அம்மா வீடு பெருக்கினார்.
மணப்பெண் நகை அணிந்தாள்.
ஆகிய வசனங்களில் செயப்படுபொருள்களான பாடம், வீடு, நகை என்பவை வெளிப்டையாக “ஐ”உருபைக் கொண்டிராத போதிலும் எதை என்ற கேள்வி எழும்போது பாடத்தை, வீட்டை, நகையை என்பவையே முறையான விடைகளாக வருவதால் “ஐ”உருபு தொக்கி நிற்பதை உணரலாம்.
தோன்றா எழுவாய்.
நாளை வருகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
என் பின்னால் வா.
அதை எடு.
நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
இவ்வைந்து வாக்கியங்களும் தாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகவே சொல்கின்றன. எனினும் அவற்றின் எழுவாய்கள் வெளிப்படையாக அல்லாமல் மறைந்தே நிற்கின்றன.
முதலிரண்டு வாக்கியங்களை எடுத்துக் கொண்டால் முதலாவது வாக்கியம் தன்மை ஒருமை உயர்திணை வினைமுற்றைப் பயனிலையாகக் கொண்டிருப்பதால் நான் எனுஞ் சொல்லை எழுவாயாகக் கொள்ள முடிகிறது.
“நான் நாளை வருகிறேன்.” எனும்போது எழுவாய் வெளிப்டையாகவே வருகிறது. எனவே “நாளை வருகிறேன்.” என்ற வாக்கியத்தில் நான் மறைந்து நின்னு பொருள் தருவதால் அது தோன்றா எழுவாய் எனப்படுகிறது.
இரண்டாவது வாக்கியம் தன்மைப் பன்மை உயர்திணை வினைமுற்றான “சந்திப்போம்” என்ற சொல்லைக் கொண்டு நிறைவுறுவதால் மறைந்திருக்கும் எழுவாய் நாம், நாங்கள், நீயும்நானும் என்ற சொற்களில் யாதாகிலும் ஒன்றாய் இருப்பின் மட்டுமே பொருந்திவரும் என்பது வெளிப்படை.
இதன்படி,
நாம் (யாம்) மீண்டும் சந்திப்போம்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
நீயும் நானும் (அல்லது நீங்களும் நானும்) மீண்டும் சந்திப்போம்.
என எழுவாய் அமைய வாய்ப்புண்டு.
எனவே வாக்கியத்துக்குப் பொருந்தி வருகின்ற எழுவாய் மறைந்து நிற்பதன் காரணமாக அது தோன்றா எழுவாய் எனப்படுகின்றது.
மூன்றாம் நான்காம் வாக்கியங்களின் எழுவாய் ஒருமை முன்னிலைச் சொல்லாகவே வருகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டினதும் பயனிலைகள் ஏவல் வினைகளிலேயே வருவதால் படர்க்கைச் சொல் அவ்வாக்கியங்களின் எழுவாயாவதற்கு எவ்வகையாலும் வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.
இவ்வகை வசனங்களில் தம்பீ அல்லது தங்காய் என்ற சொல்லை எழுவாயாகக் கொள்ளின் வசனம் நிறைவு பெறுவதைக் காணலாம். இங்கே நீ எனும் முன்னிலைச் சொல்லுடன் தம்பீ , தங்காய், அக்கா, அண்ணா போன்ற எட்டாம் வேற்றுமை விளிச்சொற்கள் (விளிவேற்றுமைகளும் முன்னிலைச் சொற்களே) அனைத்தும் பொருந்திவருவதை அவதானிக்கலாம்.
இவற்றைப்போல் பெயர்களையும் விளிவேற்றுமையாக்கி எழுவாயாகப் பயன்படுத்தலாம்.
இதன்படி,
அக்கா, என்பின்னால் வா. அக்கா, அதை எடு
தம்பீ என் பின்னால் வா. தம்பீ அதை எடு
பாலா, என் பின்னால் வா. பாலா, அதை எடு
நீ என் பின்னால் வா நீ அதை எடு.
என வரக்கூடிய எழுவாய்ச் சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவதால் அவை தோன்றா எழுவாய்கள் எனப்படுகின்றன.
ஐந்தாவது வாக்கியமான, “நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.” என்பதிலும் எழுவாய் மறைந்தே நிற்கிறது. இதன் பயனிலையான “வரமுடியும்” என்ற வினைமுற்று தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொருந்திவருவதால் தோன்றாமல் மறைந்து நிற்கும் எழுவாய்,
நாங்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
நீங்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்;.
அவர்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்.
மாணவர்கள் நன்றாகப் படித்தால் மட்டுமே சமூகத்துக்குப் பயனுள்ள மனிதர்களாக வரமுடியும்
.
ஆகிய வசனங்களில் நாங்கள், நீங்கள், அவர்கள் மாணவர்கள் என மூவிடச் சொற்களைக் கொண்டு அமைவதைக் காணலாம்.
தோன்றாப் பயனிலையும் செயப்படுபொருளும்;
ஒரு வகுப்பில் ஆசிரியரின் கட்டளைப்படி மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் எழுதிவந்த கட்டுரைகளை வாசிப்பதாகக் கொள்வோம். சில மாணவர்கள் வாசித்து முடித்துவிட்ட நிலையில் ஆசிரியர் ஒரு மாணவரைச் சுட்டி :”நீ” என உத்தரவிடுகிறார்.
இந்த உத்தரவில் நீ என்ற எழுவாய் மாத்திரமே வெளிப்பட்டு நிற்கிறது. எனினும் அதன் கருத்து “நீ உன் கட்டுரையைப் படி.” என்பதாகவே அமையும். இங்கே படி என்ற பயனிலையோ, கட்டுரையை என்ற செயப்படுபொருளோ வாக்கியத்தில் வெளிப்படையாக உள்ளடக்கப்படாத போதிலும், நீ என்கின்ற தோன்றும் எழுவாயின் பின்னால் அவை தோன்றாமல் மறைந்து நிற்கின்றன என்பது தெளிவு இவைபோன்ற பல தோன்றாப் பயனிலைகளும் தோன்றாச் செயப்படுபொருள்களும் வாக்கியங்களில் தாராளமாகப் பயன்படுவதை நடைமுறையிற் காணலாம்..
எனவே இலக்கணத்தில் இவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத போதிலும் சூழலுக்கு அமைவாக இவை தோன்றாப் பயனிலையாகவும் தோன்றாச் செயப்படுபொருளாகவும் செயற்படுகின்றன என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்ளல் தமிழறிவு மேம்பட உதவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக