இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருக்கோணமலை 18.

எங்கள் திருக்கோணமலை 18. காதல்மொழி பேசுகின்ற கன்னியர்கள் ஓர்புறம்  கண்ணசைவில் தமையிழக்கும் காளையர்கள் ஓர்புறம் வேதவொலி பரப்புகின்ற அந்தணர்கள் ஓர்புறம்  வேளைக்குச் சோறிடுநல் உழவர்கள் ஒர்புறம் தீதறியாக் கல்விபெறும் மாணவர்கள் ஓர்புறம்  தீந்தமிழை ஆய்ந்துணரும் அறிஞர்குழாம் ஓர்புறம் மோதுமலை கண்டுமகிழ் கோணேசர் அமர்ந்திருக்கும்  மேன்மைமிகு திருக்கோண மலையெங்கள் பேர்அறம். நீண்டு பரந்திருக்கும்   வளமான வயல்நிலங்கள்   நெல்மணியாய் அதைமாற்றித் தருகின்ற நற்கரங்கள் யாண்டும் குறைவில்லா தமைகின்ற கடல்வளங்கள்   யாவர்க்கும் உணவாகும் சுவையுள்ள மீனினங்கள் வேண்டும் பொழுதெல்லாம் துணைநிற்கும் நன்மனங்கள்   வேதனைக்கும் சோதனைக்கும் கைகொடுக்கும் வலுக்கரங்கள் மீண்டும் நிலைபெறுவோம் எனவார்க்கும் இதயங்கள்   மேன்மைமிகு திருக்கோண மலைதந்த நல்வளங்கள். அறிவியலும் மெய்யியலும் இணைந்தோங்கி வளரும்   அழகுதமிழ்க் கலைகளிங்கு தினம்புதிதாய் மலரும் நெறிதவறா வாழ்முறையால் தமிழர்நிலை உயரும்   நிலைத்துநிற்கும் காவியங்கள் இங்குபல தோன்றும் உறுதிபெறும் வக...

தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (2)

தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (2) வழுவற்ற வாக்கிய அமைப்பு. வாக்கியங்கள் அமைக்கப்படும்போது அவை வழுவற்றவையாக இருப்பது சிறப்பாகும். திணைவழு,  பால்வழு,  காலவழு, எண்வழு,  இடவழு என்பவையின்றி அமையும் வாக்கியங்களே கருத்தைத் துல்லியமாக வெளிப்படுத்த வல்லன என்பதை மறந்துவிடக்கூடாது. திணைவழு. எழுவாய் உயர்திணையாக வருமிடத்துப் பயனிலையும் உயர்திணையாக அமைதல்வேண்டும். அதேபோல் எழுவாய் அஃறிணையாயின் பயனிலையும் அஃறிணைத் தன்மை கொண்டிருத்தலே முறை. உதாரணமாக. அவன் நல்லன் அல்லது அவன் நல்லவன் (உயர்திணை) அது நல்லது (அஃறிணை). இவற்றை மாற்றி அவன் என்ற உயர்திணை எழுவாயுடன் நல்லது என்ற அஃறிணைப் பயனிலையையோ. அது என்ற அஃறிணை எழுவாயுடன் நல்லவன் என்ற உயர்திணைப் பயனிலையையோ இணைத்து வாக்கியம் அமைக்க முயல்வது நகைப்புக்கிடமாகும். ஏற்கத்தக்க திணைவழுக்கள். எவ்வாறெனினும் சில திணைவழுக்கள் நடைமுறையில் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்துகொளல் நன்று. உதாரணமாக: குழந்தை அழுகிறது. (குழந்தை உயர்திணைச் சொல்; அழுகிறது அஃறிணை வினைமுற்று.) தெய்வம் காக்கிறது.  (தெய்வம் உயர்திணை: காக...

எங்கள் திருக்கோணமலை 17

எங்கள் திருக்கோணமலை 17 தென்கயிலை மலைமர்ந்து தென்றலசை வினில்மிதந்து  திருப்பதிகந் தனில்மயங்கும் கோணேசர் மென்றோளி மாதுமையாள் மேனியொரு பங்கனென  மேன்மைபெறு தமிழ்காக்கும் நமதீசர் அன்றாடம் அடியார்கள் அகமுருகிப் பதமேத்த  அன்னையெனக் குறைதீர்க்கும் அருள்நேசர் என்றுமுயர் சைவமொடு இனியதமிழ் தழைத்தோங்க  இங்கமர்ந்து காவல்கொள்ளும் மறைவாசர். வீணைக்கொடி யோன்செருக்கை விரலாலே தாமடக்கி  வேந்தனுக்கு நெறிகொடுத்த அருளாளர் ஆணையிட்டு அவன்பதித்த அரியஏழு நீரூற்றால்  அழகுவர லாறுதந்த உமைநாதர் கோணைமண்ணின் நாயகராய்க் கோலாகல மாயமர்ந்து  கொடுவினைகள் அழித்தருளும் குலவேந்தர் காணவொண்ணாத் தேவர்களும் கைதொழுது ஏத்திநிற்க  கருணைவடி வாகிநின்ற ஒளியேந்தல். கொள்ளமுன்னர் நித்திலங்கள் அள்ளிவந்து குவிக்கின்ற  கத்துகடல் திருவடியைத் தாலாட்ட கள்ளமிலாப் பக்தர்மனம் காக்ககாக்க என்றுரைத்துக்  கருணைவடி வானவரைச் சீராட்ட தௌ;ளுதமிழ்ப் பாடல்களால் சீராளர் பொழியுமிசை  தேனருவி யாயவரின் செவியினிக்க வள்ளலென வாய்த்தகோணை நாதன்றாள் தொழுகின்றோம்  வளர்தமிழும் சிவந...

எங்கள் திருக்கோணமலை 16

எங்கள் திருக்கோணமலை 16 தென்றல் தாலாட்ட தேன்மலர்கள் பாராட்ட  தீந்தமிழர் இசைகாதில் அமுதூட்ட மன்றில் நின்றாடி மேதினியைக் காத்தருளும்  மாதுமையாள் பாகன்சிவன் துணையிருக்க அன்றோர் அகங்காரம் அழிப்பதற்காய் விரலூன்றி  அவனிசையால் உளம்நெகிழ்ந்து அருள்சுரக்க குன்றி லுறைவேந்தன் கோணேசர் பூமியொரு  குறைவின்றித் தலைநிமிர்ந்து தரணியாளும். வருவோர் போவோரெவரும் வரலாறாய் ஆவதில்லை  வாழ்ந்திடுவர்: இருந்திடுவர்: போய்விடுவர் ஒருநாள் செருக்கழியும் உள்ளதையம் இழந்துநிற்பர்  உணர்வர்மண் மகத்துவத்தை அப்போது தரும நெறியிலன தரணிதனை ஆள்வதில்லை  தருமநெறி ஒருக்காலும் மாய்வதில்லை பெருமை மிகுபெம்மான் பேரருளில் திளைத்துவரும்  பேறுபெற்ற பூமியென்றும் சாய்வதில்லை. மான்கள் துள்ளட்டும் மயிலினங்கள் ஆடட்டும்  மந்தியினம் மரந்தாவிப் பாயட்டும் தேன்பால் ஓடட்டும் தென்தமிழால் பாடட்டும்  தேவாரம் நான்மறைகள் ஓங்கட்டும் கூன்மதியர் சாயட்டும் கொடுங்கோலர் மாயட்டும்  குவலயத்தோர் மகிழ்வுடனே வாழட்டும் வானுலகர் வாழ்த்தட்டும் வளங்களெலாம் பெருகட்டும்  வல்லதிருக் கோ...

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (1)

தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (1) ஒற்றைச் சொல்லில் வாக்கியம். ஒரு வாக்கியம் தனக்குரிய அத்தனை பிரிவுகளையும் வெளிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அது நிறைவான பொருளைத் தரும் என்பதில்லை. சில தனிச் சொற்கள்;கூட நிறைவான பொருளைத் தருகின்ற வாக்கியங்களாக அமைவதுண்டு. உதாரணமாக,  ஒருவரைத் தெருவில் சந்திக்கும்போது, “எங்கிருந்து?” “எங்கே?” என்றோ அல்லது அக் கருத்துப்பட பேச்சுவழக்கிற் பயன்படும் ஒற்றைச் சொல்லாலோ ஒரு வினாவைத் தொடுக்குமிடத்து அவ்வினா நிறைவான பொருளைக் கொண்ட வாக்கியமாகவே அமைகிறது. இவ்வினாக்களின் கருத்து “எங்கே இருந்து வருகிறீர்கள்?” “எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்ற நிறைவான வசனமே என்பது கேட்பவருக்கும் பதிலளிக்க வேண்டியவருக்கும் தெளிவாகப் புரிகிறது. அதேபோல் “கடையிலிருந்து.” என்றோ “கொழும்புக்கு.” என்றோ ஒற்றைச் சொல்லிற் பதில்கள் கிடைக்குமானால் அவையும் முழு வாக்கியங்களாகின்றன. ஏனெனில் வினா தொடுத்தவருக்கு அப்பதில்கள் திருப்தியையும் தெளிவையும் தருகின்றன. அப்பதில்கள் “நான் கடையிலிருந்து வருகின்றேன்.” “நான் கொழும்புக்குப் போகின்றேன்.” என்ற முழுவடிவங்களைக் கொண்டிருப்பது க...