தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (2)
தமிழ் இலக்கணம் அறிவோம் 4
தொடரியல் 2 (2)
வழுவற்ற வாக்கிய அமைப்பு.
வாக்கியங்கள் அமைக்கப்படும்போது அவை வழுவற்றவையாக இருப்பது சிறப்பாகும். திணைவழு, பால்வழு, காலவழு, எண்வழு, இடவழு என்பவையின்றி அமையும் வாக்கியங்களே கருத்தைத் துல்லியமாக வெளிப்படுத்த வல்லன என்பதை மறந்துவிடக்கூடாது.
திணைவழு.
எழுவாய் உயர்திணையாக வருமிடத்துப் பயனிலையும் உயர்திணையாக அமைதல்வேண்டும். அதேபோல் எழுவாய் அஃறிணையாயின் பயனிலையும் அஃறிணைத் தன்மை கொண்டிருத்தலே முறை.
உதாரணமாக.
அவன் நல்லன் அல்லது அவன் நல்லவன் (உயர்திணை)
அது நல்லது (அஃறிணை).
இவற்றை மாற்றி அவன் என்ற உயர்திணை எழுவாயுடன் நல்லது என்ற அஃறிணைப் பயனிலையையோ.
அது என்ற அஃறிணை எழுவாயுடன் நல்லவன் என்ற உயர்திணைப் பயனிலையையோ இணைத்து வாக்கியம் அமைக்க முயல்வது நகைப்புக்கிடமாகும்.
ஏற்கத்தக்க திணைவழுக்கள்.
எவ்வாறெனினும் சில திணைவழுக்கள் நடைமுறையில் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்துகொளல் நன்று.
உதாரணமாக:
குழந்தை அழுகிறது. (குழந்தை உயர்திணைச் சொல்; அழுகிறது அஃறிணை வினைமுற்று.)
தெய்வம் காக்கிறது. (தெய்வம் உயர்திணை: காக்கிறது அஃறிணை)
குழந்தை. பிள்ளை, சிசு, தெய்வம் என்பவை உய்திணைச் சொற்களாயினும் மனநெகிழ்வு காரணமாகவோ என்னவோ அவற்றுடன் அஃறிணை வினைமுற்றுகளை இணைத்துப் கூறுவது மரபாகிவிட்டது. அவற்றை மக்கள் தங்கள் உடைமைகளாகக் கருதும் மனோபாவமாகவும் இருக்கலாம்.
பப்பி நன்றாக விளையாடுகிறான். (பப்பி – நாய் - அஃறிணை: விளையாடுகிறான், உயர்திணை).
லட்சுமி வீடு திரும்பிவிட்டாள். (லட்சுமி – பசு – அஃறிணை: திரும்பிவிட்டாள், உயர்திணை).
இங்கே அன்பின் காரணமாகப் பப்பி என்ற நாயும் லட்சுமி என்ற பசுவும் உயர்திணை வினைமுற்றுகளைப் (பயனிலை) பெற்றிருக்கின்றன.
காளையும் விவசாயியும் மாலையில் களைத்து வீடு திரும்பினர்.
இவ்வாக்கியத்தில் உழைப்பின் பெருமை காரணமாக விவசாயியுடன் அவனோடு சேர்ந்துழைத்த காளையும் உயர்திணை வினைமுற்றைப் பெறுகின்றது.
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.
இவ்வாக்கியத்தில் செய்கையின் இழிவுத்தன்மை காரணமாக யான மூர்க்கன் முதலையுடன் இணைக்கப்பட்டு அஃறிணை நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
எனவே இவ்வாக்கியம் அஃறிணைப் பன்மை வினைமுற்றான ‘விடா’ என்ற பயனிலையில் நிறைவு பெறுகிறது.
பால்வழு.
தமிழ்ச் சொற்களைப் பொறுத்தவரையில் வினைமுற்றுகளைக் கொண்டு பால் திணை எண் இடம் காலம் என்பவற்றைத் துல்லியமாகக் கூறிவிடமுடியும். அது எமது மொழிக்குள்ள சிறப்புகளில் ஒன்று.
உதாரணமாக, வென்றான் என்ற வினைமுற்றை நோக்குவோமானால் அது ஆண்பால், உயர்திணை, ஒற்றைமனிதன், படர்க்கை, இறந்தகாலம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது இலக்கணம் கல்லார்க்கும் தெரிந்த உண்மை.
எனவே பால்வழு நேராமல் எழுதுதல் மொழிக்குச் சிறப்புத் தரும்.
“அக்கா வந்தாள்: தம்பி விளையாடுகிறான்.” என எழுதவேண்டிய வாக்கியங்களை,
“அக்கா வந்தான்.” என்றோ “தம்பி விளையாடுகிறாள்.”; என்றோ.
எழுதுதல் தகாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
ஆயினும், சிலபகுதிகளில் பேச்சுமொழியிலும், பேச்சைச் சுட்டுகின்ற எழுத்து மொழியிலும் பால்வழு ஏற்கத்தக்க வகையில் கையாளப்படுகின்றது என்பதை அறிந்திருத்தல் பயனுடைத்தாகும்.
பல வீடுகளிற் பெரியவர்கள் ஆண்பிள்ளைகளுக்கு “கெதியாக வாடி.” “ஓடிப்போடி”. “அதை எடடி.” “கவனமாகப் படியடீ.” ஏன்றெல்லாம் பெண்பால் சொற்களைப் பயன்படுத்துவதும்,
பெண்கள் விடயத்தில் மறுதலையாக “கெதியாக வாடா.” ஓடிப்போடா.” என ஆண்பாற் சொற்களைப் பயன்படுத்துவதும் கண்கூடு. இவை அன்பின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
அநேகமாக இத்தகைய வாக்கியங்கள் முன்னிலை ஏவல்களாகவே அமைகின்றன.
இலக்கணநூலார் இவற்றை ஏற்கும் காலம்வரை இப்பேச்சுவழக்;கு நடைமுறை பால்வழுக்களின் பாற்படும் என்பதை மறவற்க.
“அப்பா இப்போதுதான் எங்கோ போயிருக்குது: அது அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும்.”
“அம்மா பாவம்..சுகமில்லாத நேரத்திலும் சமைக்குது…”
போன்ற வாக்கியங்கள் பேச்சுமொழியில் அஃறிணை ஒன்றன்பாற் சொற்களில் நிறைவு பெறுகின்றன என்பதையும் நடைமுறையில் அவதானிக்கலாம்.
இவ்விரு வாக்கியங்களும் இலக்கணமுறையிற் திணைவழு, பால்வழு என்பவற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும் பேச்சுவழக்கில் அவை சரியென ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
காலவழு.
காலவழு பொதுவாகக் குழந்தைகளின் பேச்சுமொழியில் வரும்போது அதைக் கேட்கும் பெரியவர்கள் மகிழ்ச்சியடைவது இயல்பு.
குழந்தை, “அப்பா நாளைக்கு வந்தார்.” என்றோ “அப்பா நேற்று வருவார்;.” என்றோ மழலை மொழியிற் பேசிவிட முடியும். பெரியவர்களும் அவற்றை ரசித்துப் பொருளை விளங்கிக் கொள்வார்கள். பிள்ளையின் பேச்சுத் திறனையும் வளர்ப்பார்கள்.
ஆனால் வளர்ந்தவர்கள் இத்தகைய வழுக்களை விட்டால் அது நகைப்புக்குரியாகிவிடும். எனவே பெரியவர்கள் காலவழுவின்றி பேசுதலும் எழுதுதலும் மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறந்தகால நிறை வாக்கிங்கள்:
தம்பி சாப்பிட்டான்.
நான் நேற்று வந்தேன்.
அவன் பந்து விளையாடினான்.
இவ்வாக்கியங்கள் மூன்றும் நிறைவான பொருளைத் தருகின்றன. வாக்கியம் தோன்றியதன் பணியும் நிறைவுற்று விட்டது. சொல்லப்படவேண்டியவை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இவ்வகை வாக்கிங்கள் இலகுவானவை. பிழையற அமைப்பதும் எளிது.
இறந்தகாலத் தொடர்நிலை வாக்கியங்கள்
தம்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
நான் நேற்று வந்து கொண்டிருந்தேன்.
அவன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
இவ்வாக்கியங்கள் நிறைவானவைபோற் தோற்றமளித்தாலும் ஏதோ ஒரு செய்தியை அவை மறைத்துக் கொண்டிருக்கின்றன என்பது உன்னிப்பாக நோக்கின் புரியும்.
“தம்பி நேற்றுச் சாப்பிட்டான்.” என்று அமையத்தக்க வசனம் “தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.” எனவமைவதன் காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
“தம்பி சாப்பிட்டான்.” என்பதுடன் வேறெச்செயலும் தொடர்புபட வாய்ப்பில்லை. ஆனால், ”தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.” எனுமிடத்து “நான் வரும்போது தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் . ” என்றோ, “நேற்றுக்காலை எட்டு மணிக்குத் தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் . என்றோ சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே, வினைச்சொல் வினைமுற்றாகி நிறைவுறாமல், வந்து, விளையாடி என வினையெச்சச் சொற்களாhகி “கொண்டு” என்ற துணைவினையையம் சேர்த்து வாக்கியத்துக்குப் புதுவடிவம் தருகின்றன. வேறொரு நிகழ்வுடன் தொடர்பு படும்போது இத்தகைய வாக்கியங்கள் உருவாவவது இயல்பு.
நிகழ்கால நிறை வாக்கியங்கள்.
மாலா படிக்கிறாள்.
அம்மா உணவு சமைக்கிறாள்.
அப்பா வேலைக்குப் போகிறார்.
இந்த மூன்று வாக்கியங்களும் நிகழ்காலத்தைக் குறிப்பனவாயினும் செயல் இப்போது நடைபெறுகிறது என்பதற்கான அழுத்தங்களைக் கொண்டிருக்கவில்லை. இவை வழமையான செயலைக் குறிக்கவும் பயன்படுகின்றன என்பது தெளிவு.
நிகழ்காலத் தொடர்நிலை வாக்கியம்..
மாலா படித்துக் கொண்டிருக்கிறள்.
அம்மா உணவு சமைத்துக் கொண்டிருக்கிறாள்
அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.
இவ்வாக்கியங்கள் நிகழ்காலத்தில் அச்செயல் நடைபெற்றுக் கொண்டிருப்தைக் குறிக்கின்றன. செயல்கள் இடம்பெறுகின்றன: ஆனால் நிறைவு பெறவில்லை என்ற கருத்து இவற்றில் மேலோங்கி நிற்கின்றன.
எவ்வாறெனினும் இவ்விருவகை வாக்கியங்களிலும் ஒருவித காலமயக்கத்தை நடைமுறையில் அவதானிக்க முடிகிறது என்பதையும் அறிந்து வைத்திருத்தல் நலம்.
உதாரணமாக, “மாலா படிக்கிறாள்.” என்ற வசனம் மாலா பாடசாலைக்குச் செல்பவள் என்ற கருத்தைச் சிறப்பான நிலையிலும் “அவளை இப்போது அழைக்காதீர்கள்: அவள் படிக்கிறாள்.” என்ற கருத்தைப் பொதுவான நிலையிலும் தருவதை அவதானிக்கலாம்.
“மாலா படித்துக் கொண்டிருக்கிறாள்.” ஏன்ற வாக்கியத்தை எடுப்போமானால், “இப்போது அவள் படித்துக் கொண்டிருக்கிறாள்.” என்ற பொருளிலும், “(தயவுசெய்து நீங்கள் கொடுத்த புத்தகத்தை உடனே திருப்பிக் கேட்டுவிடாதீர்கள்: பரீட்சை முடியும்வரை அவளிடமே இருக்கட்டும். ஏனெனில்…”) அவள் (அதைப் பரீட்சைக்காகப்) படித்துக் கொண்டிருக்கிறாள் என்ற பொருளிலும் பயன்படுத்த முடிவதை அவதானிக்கலாம்.
இவ்வாறே அநேகமான நிகழ்கால நிறைவாக்கியங்களும் தொடர்வாக்கியங்களும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் முறைமையை உன்னிப்பாக நோக்குவது தமிழறிவு வளம்பெற உதவும்.
எதிர்கால நிறை வாக்கியங்கள்.
மாலா படிப்பாள். (மாலா நளைக்காலை படிப்பாள்.)
அம்மா உணவு சமைப்பார். ( அம்மா இன்னும் சற்றுநேரத்தில் உணவு சமைப்பார்.)
அப்பா வேலைக்குப் போவார். (அப்பா உடல்நிலை தேறியதும் வேலைக்குப் போவார்.)
எதிர்காலத் தொடர்நிலை வாக்கியங்கள்.
மாலா படித்துக் கொண்டிருப்பாள்.
(நீங்கள் இரண்டாண்டுகள் கழித்து ஊருக்கு வரும்போது மாலா ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பாள்;.)
அம்மா உணவு சமைத்துக் கொண்டிருப்பாள்.
(காலையில் நான் குளித்துவிட்டு வரும்போது அம்மா அடுப்படியில் உணவு சமைத்துக் கொண்டிருப்பாள்.)
அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருப்பார்.
(நாளை இந்நேரம் அப்பா வேலைக்குப் போய்க்கொண்டிருப்பார்.)
எவ்வாறெனினும் வாக்கியங்கள் தாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாக உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டவை என்பதை நாம்மறந்து விடலாகாது.
குறிப்பாகக் காலவழு விடயத்தில் வாக்கியங்கள் சற்று நெகிழ்ச்சித்தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்தல் நன்மை பயக்கவல்லது.
“நான் எதிர்வரும் ஞாயிறன்று கொழும்புக்குப் போகிறேன்: நீயும் வருகிறாயா?” என்ற வாக்கியம் தற்காலத்தில் இலக்கணப் பிழையற்றதாகவும் எதிர்கால நிகழ்வைக் கூறுவதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாக்கியம் “போகிறேன்” என்ற வினைமுற்றுக்குப் பதிலாகப் “போகவுள்ளேன்” என்ற வினைமுற்றையும், “வருகிறாயா?” என்ற வினாச்சொல்லுக்குப் பதிலாக “வருவாயா?” என்ற வினாவமைப்பையும் கொண்டிருத்தலே முறையானதாகும்.
எனினும் மொழியின் வளர்ச்சி கருதித் தற்கால நடைமுறைகளும்; ஏற்கத்தக்கனவாக அமைந்திருக்கின்றன என்பது நோக்கத்தக்கது.
தொடரியல் 2 (2)
வழுவற்ற வாக்கிய அமைப்பு.
வாக்கியங்கள் அமைக்கப்படும்போது அவை வழுவற்றவையாக இருப்பது சிறப்பாகும். திணைவழு, பால்வழு, காலவழு, எண்வழு, இடவழு என்பவையின்றி அமையும் வாக்கியங்களே கருத்தைத் துல்லியமாக வெளிப்படுத்த வல்லன என்பதை மறந்துவிடக்கூடாது.
திணைவழு.
எழுவாய் உயர்திணையாக வருமிடத்துப் பயனிலையும் உயர்திணையாக அமைதல்வேண்டும். அதேபோல் எழுவாய் அஃறிணையாயின் பயனிலையும் அஃறிணைத் தன்மை கொண்டிருத்தலே முறை.
உதாரணமாக.
அவன் நல்லன் அல்லது அவன் நல்லவன் (உயர்திணை)
அது நல்லது (அஃறிணை).
இவற்றை மாற்றி அவன் என்ற உயர்திணை எழுவாயுடன் நல்லது என்ற அஃறிணைப் பயனிலையையோ.
அது என்ற அஃறிணை எழுவாயுடன் நல்லவன் என்ற உயர்திணைப் பயனிலையையோ இணைத்து வாக்கியம் அமைக்க முயல்வது நகைப்புக்கிடமாகும்.
ஏற்கத்தக்க திணைவழுக்கள்.
எவ்வாறெனினும் சில திணைவழுக்கள் நடைமுறையில் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்துகொளல் நன்று.
உதாரணமாக:
குழந்தை அழுகிறது. (குழந்தை உயர்திணைச் சொல்; அழுகிறது அஃறிணை வினைமுற்று.)
தெய்வம் காக்கிறது. (தெய்வம் உயர்திணை: காக்கிறது அஃறிணை)
குழந்தை. பிள்ளை, சிசு, தெய்வம் என்பவை உய்திணைச் சொற்களாயினும் மனநெகிழ்வு காரணமாகவோ என்னவோ அவற்றுடன் அஃறிணை வினைமுற்றுகளை இணைத்துப் கூறுவது மரபாகிவிட்டது. அவற்றை மக்கள் தங்கள் உடைமைகளாகக் கருதும் மனோபாவமாகவும் இருக்கலாம்.
பப்பி நன்றாக விளையாடுகிறான். (பப்பி – நாய் - அஃறிணை: விளையாடுகிறான், உயர்திணை).
லட்சுமி வீடு திரும்பிவிட்டாள். (லட்சுமி – பசு – அஃறிணை: திரும்பிவிட்டாள், உயர்திணை).
இங்கே அன்பின் காரணமாகப் பப்பி என்ற நாயும் லட்சுமி என்ற பசுவும் உயர்திணை வினைமுற்றுகளைப் (பயனிலை) பெற்றிருக்கின்றன.
காளையும் விவசாயியும் மாலையில் களைத்து வீடு திரும்பினர்.
இவ்வாக்கியத்தில் உழைப்பின் பெருமை காரணமாக விவசாயியுடன் அவனோடு சேர்ந்துழைத்த காளையும் உயர்திணை வினைமுற்றைப் பெறுகின்றது.
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.
இவ்வாக்கியத்தில் செய்கையின் இழிவுத்தன்மை காரணமாக யான மூர்க்கன் முதலையுடன் இணைக்கப்பட்டு அஃறிணை நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
எனவே இவ்வாக்கியம் அஃறிணைப் பன்மை வினைமுற்றான ‘விடா’ என்ற பயனிலையில் நிறைவு பெறுகிறது.
பால்வழு.
தமிழ்ச் சொற்களைப் பொறுத்தவரையில் வினைமுற்றுகளைக் கொண்டு பால் திணை எண் இடம் காலம் என்பவற்றைத் துல்லியமாகக் கூறிவிடமுடியும். அது எமது மொழிக்குள்ள சிறப்புகளில் ஒன்று.
உதாரணமாக, வென்றான் என்ற வினைமுற்றை நோக்குவோமானால் அது ஆண்பால், உயர்திணை, ஒற்றைமனிதன், படர்க்கை, இறந்தகாலம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது இலக்கணம் கல்லார்க்கும் தெரிந்த உண்மை.
எனவே பால்வழு நேராமல் எழுதுதல் மொழிக்குச் சிறப்புத் தரும்.
“அக்கா வந்தாள்: தம்பி விளையாடுகிறான்.” என எழுதவேண்டிய வாக்கியங்களை,
“அக்கா வந்தான்.” என்றோ “தம்பி விளையாடுகிறாள்.”; என்றோ.
எழுதுதல் தகாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
ஆயினும், சிலபகுதிகளில் பேச்சுமொழியிலும், பேச்சைச் சுட்டுகின்ற எழுத்து மொழியிலும் பால்வழு ஏற்கத்தக்க வகையில் கையாளப்படுகின்றது என்பதை அறிந்திருத்தல் பயனுடைத்தாகும்.
பல வீடுகளிற் பெரியவர்கள் ஆண்பிள்ளைகளுக்கு “கெதியாக வாடி.” “ஓடிப்போடி”. “அதை எடடி.” “கவனமாகப் படியடீ.” ஏன்றெல்லாம் பெண்பால் சொற்களைப் பயன்படுத்துவதும்,
பெண்கள் விடயத்தில் மறுதலையாக “கெதியாக வாடா.” ஓடிப்போடா.” என ஆண்பாற் சொற்களைப் பயன்படுத்துவதும் கண்கூடு. இவை அன்பின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
அநேகமாக இத்தகைய வாக்கியங்கள் முன்னிலை ஏவல்களாகவே அமைகின்றன.
இலக்கணநூலார் இவற்றை ஏற்கும் காலம்வரை இப்பேச்சுவழக்;கு நடைமுறை பால்வழுக்களின் பாற்படும் என்பதை மறவற்க.
“அப்பா இப்போதுதான் எங்கோ போயிருக்குது: அது அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும்.”
“அம்மா பாவம்..சுகமில்லாத நேரத்திலும் சமைக்குது…”
போன்ற வாக்கியங்கள் பேச்சுமொழியில் அஃறிணை ஒன்றன்பாற் சொற்களில் நிறைவு பெறுகின்றன என்பதையும் நடைமுறையில் அவதானிக்கலாம்.
இவ்விரு வாக்கியங்களும் இலக்கணமுறையிற் திணைவழு, பால்வழு என்பவற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும் பேச்சுவழக்கில் அவை சரியென ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
காலவழு.
காலவழு பொதுவாகக் குழந்தைகளின் பேச்சுமொழியில் வரும்போது அதைக் கேட்கும் பெரியவர்கள் மகிழ்ச்சியடைவது இயல்பு.
குழந்தை, “அப்பா நாளைக்கு வந்தார்.” என்றோ “அப்பா நேற்று வருவார்;.” என்றோ மழலை மொழியிற் பேசிவிட முடியும். பெரியவர்களும் அவற்றை ரசித்துப் பொருளை விளங்கிக் கொள்வார்கள். பிள்ளையின் பேச்சுத் திறனையும் வளர்ப்பார்கள்.
ஆனால் வளர்ந்தவர்கள் இத்தகைய வழுக்களை விட்டால் அது நகைப்புக்குரியாகிவிடும். எனவே பெரியவர்கள் காலவழுவின்றி பேசுதலும் எழுதுதலும் மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறந்தகால நிறை வாக்கிங்கள்:
தம்பி சாப்பிட்டான்.
நான் நேற்று வந்தேன்.
அவன் பந்து விளையாடினான்.
இவ்வாக்கியங்கள் மூன்றும் நிறைவான பொருளைத் தருகின்றன. வாக்கியம் தோன்றியதன் பணியும் நிறைவுற்று விட்டது. சொல்லப்படவேண்டியவை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இவ்வகை வாக்கிங்கள் இலகுவானவை. பிழையற அமைப்பதும் எளிது.
இறந்தகாலத் தொடர்நிலை வாக்கியங்கள்
தம்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
நான் நேற்று வந்து கொண்டிருந்தேன்.
அவன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
இவ்வாக்கியங்கள் நிறைவானவைபோற் தோற்றமளித்தாலும் ஏதோ ஒரு செய்தியை அவை மறைத்துக் கொண்டிருக்கின்றன என்பது உன்னிப்பாக நோக்கின் புரியும்.
“தம்பி நேற்றுச் சாப்பிட்டான்.” என்று அமையத்தக்க வசனம் “தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.” எனவமைவதன் காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
“தம்பி சாப்பிட்டான்.” என்பதுடன் வேறெச்செயலும் தொடர்புபட வாய்ப்பில்லை. ஆனால், ”தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.” எனுமிடத்து “நான் வரும்போது தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் . ” என்றோ, “நேற்றுக்காலை எட்டு மணிக்குத் தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் . என்றோ சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே, வினைச்சொல் வினைமுற்றாகி நிறைவுறாமல், வந்து, விளையாடி என வினையெச்சச் சொற்களாhகி “கொண்டு” என்ற துணைவினையையம் சேர்த்து வாக்கியத்துக்குப் புதுவடிவம் தருகின்றன. வேறொரு நிகழ்வுடன் தொடர்பு படும்போது இத்தகைய வாக்கியங்கள் உருவாவவது இயல்பு.
நிகழ்கால நிறை வாக்கியங்கள்.
மாலா படிக்கிறாள்.
அம்மா உணவு சமைக்கிறாள்.
அப்பா வேலைக்குப் போகிறார்.
இந்த மூன்று வாக்கியங்களும் நிகழ்காலத்தைக் குறிப்பனவாயினும் செயல் இப்போது நடைபெறுகிறது என்பதற்கான அழுத்தங்களைக் கொண்டிருக்கவில்லை. இவை வழமையான செயலைக் குறிக்கவும் பயன்படுகின்றன என்பது தெளிவு.
நிகழ்காலத் தொடர்நிலை வாக்கியம்..
மாலா படித்துக் கொண்டிருக்கிறள்.
அம்மா உணவு சமைத்துக் கொண்டிருக்கிறாள்
அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.
இவ்வாக்கியங்கள் நிகழ்காலத்தில் அச்செயல் நடைபெற்றுக் கொண்டிருப்தைக் குறிக்கின்றன. செயல்கள் இடம்பெறுகின்றன: ஆனால் நிறைவு பெறவில்லை என்ற கருத்து இவற்றில் மேலோங்கி நிற்கின்றன.
எவ்வாறெனினும் இவ்விருவகை வாக்கியங்களிலும் ஒருவித காலமயக்கத்தை நடைமுறையில் அவதானிக்க முடிகிறது என்பதையும் அறிந்து வைத்திருத்தல் நலம்.
உதாரணமாக, “மாலா படிக்கிறாள்.” என்ற வசனம் மாலா பாடசாலைக்குச் செல்பவள் என்ற கருத்தைச் சிறப்பான நிலையிலும் “அவளை இப்போது அழைக்காதீர்கள்: அவள் படிக்கிறாள்.” என்ற கருத்தைப் பொதுவான நிலையிலும் தருவதை அவதானிக்கலாம்.
“மாலா படித்துக் கொண்டிருக்கிறாள்.” ஏன்ற வாக்கியத்தை எடுப்போமானால், “இப்போது அவள் படித்துக் கொண்டிருக்கிறாள்.” என்ற பொருளிலும், “(தயவுசெய்து நீங்கள் கொடுத்த புத்தகத்தை உடனே திருப்பிக் கேட்டுவிடாதீர்கள்: பரீட்சை முடியும்வரை அவளிடமே இருக்கட்டும். ஏனெனில்…”) அவள் (அதைப் பரீட்சைக்காகப்) படித்துக் கொண்டிருக்கிறாள் என்ற பொருளிலும் பயன்படுத்த முடிவதை அவதானிக்கலாம்.
இவ்வாறே அநேகமான நிகழ்கால நிறைவாக்கியங்களும் தொடர்வாக்கியங்களும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் முறைமையை உன்னிப்பாக நோக்குவது தமிழறிவு வளம்பெற உதவும்.
எதிர்கால நிறை வாக்கியங்கள்.
மாலா படிப்பாள். (மாலா நளைக்காலை படிப்பாள்.)
அம்மா உணவு சமைப்பார். ( அம்மா இன்னும் சற்றுநேரத்தில் உணவு சமைப்பார்.)
அப்பா வேலைக்குப் போவார். (அப்பா உடல்நிலை தேறியதும் வேலைக்குப் போவார்.)
எதிர்காலத் தொடர்நிலை வாக்கியங்கள்.
மாலா படித்துக் கொண்டிருப்பாள்.
(நீங்கள் இரண்டாண்டுகள் கழித்து ஊருக்கு வரும்போது மாலா ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பாள்;.)
அம்மா உணவு சமைத்துக் கொண்டிருப்பாள்.
(காலையில் நான் குளித்துவிட்டு வரும்போது அம்மா அடுப்படியில் உணவு சமைத்துக் கொண்டிருப்பாள்.)
அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருப்பார்.
(நாளை இந்நேரம் அப்பா வேலைக்குப் போய்க்கொண்டிருப்பார்.)
எவ்வாறெனினும் வாக்கியங்கள் தாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாக உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டவை என்பதை நாம்மறந்து விடலாகாது.
குறிப்பாகக் காலவழு விடயத்தில் வாக்கியங்கள் சற்று நெகிழ்ச்சித்தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்தல் நன்மை பயக்கவல்லது.
“நான் எதிர்வரும் ஞாயிறன்று கொழும்புக்குப் போகிறேன்: நீயும் வருகிறாயா?” என்ற வாக்கியம் தற்காலத்தில் இலக்கணப் பிழையற்றதாகவும் எதிர்கால நிகழ்வைக் கூறுவதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாக்கியம் “போகிறேன்” என்ற வினைமுற்றுக்குப் பதிலாகப் “போகவுள்ளேன்” என்ற வினைமுற்றையும், “வருகிறாயா?” என்ற வினாச்சொல்லுக்குப் பதிலாக “வருவாயா?” என்ற வினாவமைப்பையும் கொண்டிருத்தலே முறையானதாகும்.
எனினும் மொழியின் வளர்ச்சி கருதித் தற்கால நடைமுறைகளும்; ஏற்கத்தக்கனவாக அமைந்திருக்கின்றன என்பது நோக்கத்தக்கது.
தமிழுக்கும் அமுதென்று பேர்! அதனை விவரிக்கும் போது அதிலும் மேலென்று புரிகிறது. தமிழ் வாழ்க!.உங்கள் நற்தொண்டு வளர்க!
பதிலளிநீக்கு