எங்கள் திருக்கோணமலை 17

எங்கள் திருக்கோணமலை 17


தென்கயிலை மலைமர்ந்து தென்றலசை வினில்மிதந்து
 திருப்பதிகந் தனில்மயங்கும் கோணேசர்
மென்றோளி மாதுமையாள் மேனியொரு பங்கனென
 மேன்மைபெறு தமிழ்காக்கும் நமதீசர்
அன்றாடம் அடியார்கள் அகமுருகிப் பதமேத்த
 அன்னையெனக் குறைதீர்க்கும் அருள்நேசர்
என்றுமுயர் சைவமொடு இனியதமிழ் தழைத்தோங்க
 இங்கமர்ந்து காவல்கொள்ளும் மறைவாசர்.



வீணைக்கொடி யோன்செருக்கை விரலாலே தாமடக்கி
 வேந்தனுக்கு நெறிகொடுத்த அருளாளர்
ஆணையிட்டு அவன்பதித்த அரியஏழு நீரூற்றால்
 அழகுவர லாறுதந்த உமைநாதர்
கோணைமண்ணின் நாயகராய்க் கோலாகல மாயமர்ந்து
 கொடுவினைகள் அழித்தருளும் குலவேந்தர்
காணவொண்ணாத் தேவர்களும் கைதொழுது ஏத்திநிற்க
 கருணைவடி வாகிநின்ற ஒளியேந்தல்.



கொள்ளமுன்னர் நித்திலங்கள் அள்ளிவந்து குவிக்கின்ற
 கத்துகடல் திருவடியைத் தாலாட்ட
கள்ளமிலாப் பக்தர்மனம் காக்ககாக்க என்றுரைத்துக்
 கருணைவடி வானவரைச் சீராட்ட
தௌ;ளுதமிழ்ப் பாடல்களால் சீராளர் பொழியுமிசை
 தேனருவி யாயவரின் செவியினிக்க
வள்ளலென வாய்த்தகோணை நாதன்றாள் தொழுகின்றோம்
 வளர்தமிழும் சிவநெறியும் பெருமைகொள்ள.



கந்தவனம் கோணேஸ்வரன்     
ஆனி 2019


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5