இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிழக்கு மாகாணக் கீதம்

கிழக்கு மாகாணக் கீதம் ஈழநாட்டின் கீழ்த் திசையில்   இலங்குகின்ற மாநிலம் இணைந்து மூன்று இனங்களும்   துலங்குகின்ற தாயகம். வந்தோர்க்குச் சோறிடும் வளமார்ந்த வயல்நிலம் வகைவகையாய் உணவிடும் வற்றாத கடல்வளம் இந்துஇஸ்லாம் கிறித்தவம் இவற்றினோடு பௌத்தமும் இணைந்து மனிதம் வாழவே நெறிப்படுத்தும் திருநிலம்.                                   ஈழநாட்டின் கீழ்த் திசையில்………. அம்பாறை நெல்தரும் மட்டுநகர் இறால்தரும் திருக்கோண மலையென்றும் பெருக்கோடு மீன்தரும் கந்தளாய்க் கரும்பினிக்கும் கன்னியா நீர்கொதிக்கும் கல்லடியில் மீனிசைக்கும் கல்முனையில் வளங்கொழிக்கும்.                                   ஈழநாட்டின் கீழ்த் திசையில்………. இயற்கைதந்த துறைமுகம் இணைந்தநல்ல ஈஸ்வரம் வியக்கும்பள்ளி வாயல்கள் விரும்பும்புத்த கோயில்கள் உயர்ந்ததேவ ஆலயம் ஒற்றுமையை விதைத்திடும் நயந்தமனப் பண்புடை நமதினிய தாயகம்.       ...

எங்கள் திருக்கோணமலை 15.

எங்கள் திருக்கோணமலை 15. ஆலயங்கள் மலிந்துஅருள் சுரக்கும் பூமி  அன்புவழி நடப்போரால் சிறக்கும் பூமி சீலமுடை யோர்பெருமை சுமக்கும் பூமி  செந்தமிழர் நூலாய்ந்து களிக்கும் பூமி மாலவன் சிவனாரோடு அமரும் பூமி  மாதவத்தார் தலமிருந்து அருளும் பூமி ஓலமிடும் கடல்சூழ்ந்து பாதம் தழுவும்  ஓப்பரிய கோணேசர் உறைந்த பூமி. ஆடவரும் அரிவையரும் மகிழும் பூமி  அறவழியில் வாழ்வமைத்துத் திகழும் பூமி கேடொழித்து நலம்சூழ உழைக்கும் பூமி  கேடுசெய்ய முயல்வோரைத் தகர்க்கும் பூமி தேடிவரு வோர்க்குவாழ்வு அருளும் பூமி  தேவரென உலவும்பெரி யோர்கள் பூமி பாடிஞான சம்பந்தனார் பணிந்த பூமி  பழம்பதியாய்க் கோணேசர் உறைந்த பூமி. மான்பாய்ந்து மந்திபாய்ந்து மகிழும் பூமி  மனம்பாயா திருக்கும்கலை தெரிந்த பூமி வான்பாய்ந்து வளங்கொழிக்கும் தமிழர் பூமி  வளமார்ந்த கலைகளினால் உயரும் பூமி தேன்பாயுந் திரியாய் தென் வெருகல்வரை  செந்தமிழர் நிலமாகப் பரந்த பூமி மீன்பாயுங் கடலன்னை நித்திலங்கள் கொழிக்க  மேன்மையுறு கோணேசர் உறைந்த பூமி.           ...

அமைச்சர் ரிசாத்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழ்மக்களின் எண்ணங்களும்.

அமைச்சர் ரிசாத்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழ்மக்களின் எண்ணங்களும். அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரரணை பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது. இது விவாதத்துக்கு வரும் காலத்தையும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்காலத்தையும் ஓரளவு தள்ளிப்போட முடிந்தாலும் இரண்டையும் இல்லாமற் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். பிரதமர் ரணிலின் செல்லப்பிள்ளையாக அமைச்சர் ரிசாத் இருந்தபோதிலும், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ள பத்துக் குற்றச்சாட்டுகளையும் எழுந்தமானத்தில் நிராகரித்துவிட முடியாதென்பதால் அவைபற்றிய விசாரணைக் குழுவை ரணில் நியமித்திருக்கிறார். இக்குழு மூன்றுவாரத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே விவாதம் வாக்கெடுப்பு எல்லாம் மூன்றுவாரங்களின் பின்னர்தாம் என்பது நடைமுறை உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னை நியாயப்படுத்தித் தனக்கான ஆதரவாளர்களைத் திரட்டிக்கொள்ள ரிசாத்துக்கு ரணில் போதிய அவகாசத்தை வழங்கியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. ரிசாத்தும தீவிரமான தொடர்புகளை ஏற்படுத்தித் த...

எங்கள் திருக்கோணமலை 14

எங்கள் திருக்கோணமலை 14 அலைபாயுங் கடலோரம் அழகான இளமான்கள்  அசைந்தாடும் பூமிதிருக் கோணமலை நிலையாக வாழ்தமிழர் நெஞ்சமெலாம் இனித்திருக்கும்  நிமலன்மா துமையாளோ டுறைந்தமலை கலையாடும் விழிமாதர் கண்ணசைவில் காளையர்கள்  களமாடி வெல்கின்ற புனிதமலை குலையாத உறுதியுடன் கொள்கைக்காய் வாழ்தமிழர்  கூடிக்களிக் கின்றபூமி எங்கள்மலை. வஞ்சமில்லா வாழ்வுதரும் வந்தோர்க்கும் சோறுதரும்  வளமார்ந்த கலைவளர்க்கக் களமுந்தரும் நெஞ்சமெலா மினித்திருக்க நிலையான உறவுதரும்  நேர்மைவழி நிற்போர்க்கு உயர்வுதரும் சஞ்சலமே இல்லாத சன்மார்க்கச் சிந்தைதரும்  சனாதன தருமத்தின் பெருமைதரும் அஞ்சுதலே இல்லாமல் அரன்நாமம் துதிப்போர்க்கு  அவனருளால் வாழ்முறையே நிறைவுதரும். வெருகலொடு திரியாயும் விளங்குதென்ன மரவடியும்  வயல்நிலத்துக் களஞ்சியம்தம் பலகமமும் பெருகிவரும் எழுநீரும் பேசரிய மாவலியும்  பெருநீரைத் தாங்கிநிற்கும் கந்தளையும் விரிகடலும் விளைபொருளும் வெண்முத்துக் குவியல்களும்  வேதநெறி பரப்பிநிற்கும் கோவில்களும் உரியதிருக் கோணமலை எங்கள்உயி ரானமலை  உளமேந்திச் ச...

இலக்கியத்துளி 9.

இலக்கியத்துளி 9. பாண்டி நாட்டில் சத்திமுத்தம் என்றேரர் ஊர். ஆங்கு ஒரு புலவர். வறுமையால் வாடிக்கொண்டிருந்தார். வீட்டில் மனையாள் பசியினால் தளர்ந்து போவதை ஏற்க அவர் மனம் ஒப்பவில்லை. “அரசரிடம் சென்று பாடிப் பரிசு பெற்றுவருவதே வறுமைதீரச் சிறந்தவழி.” என முடிவெடுத்தார் . மனையாளிடம் விடைபெற்றுக் கொண்டு தலைநகரம் நோக்கி நடக்கலானார். அரசவையில் வீற்றிருந்த பாண்டியனுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. நாரையின் அலகை எப்பொருளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பதே அது. அரசவைப் புலவர்களாற் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. எவர் பொருத்தமான உவமையைச் சொன்னாலும் அவருக்குப் பரிசு தரப்படும் என்று நகரெங்கும் அறிவித்தும் விடுகிறான். பலநாள் நடந்த களைப்பால் சோர்ந்துபோன சத்திமுத்தப் புலவர் தலைநகரை நெருங்கிய நிலையில் இரவாகிவிட்டதால்,  வாடிய உடலுடன் நகரவீதித் திண்ணையொன்றில் படுக்க முயன்றார். குளிர்காற்றும் பசிக்களைப்பும் அவரை உறங்க விடவில்லை. தன் மனையாள் தன்னைக் கணந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பாளே என்ற கவலைவேறு அவரது நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த இரவிலும் குந்தியபடியே வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒர...

எங்கள் திருக்கோணமலை 13 மெலிதான பூங்காற்று மெய்தீண்டிச் செல்லுகையில் மேன்மையுறு தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்லும் வலிதான குன்றமர்ந்து வரமருளும் கோணேசர் வழிநடப்போர் அன்பாலே சைவம் வெல்லும் தெளிதேனும் சர்க்கரையும் சேர்த்தினிய தமிழ்தந்த தேவாரப் பண்ணோசை நெஞ்சை அள்ளும் விழியாடும் மாதரென விளங்குமான் கூட்டங்கள் விளையாடும் அழகாலே உள்ளம் துள்ளும். நீறாடும் திருநுதலும் நெறியாடும் வாழ்வியலும் நிறைந்ததிரு வாசகமும் எங்கள் சொத்து ஏறாடும் பெருமான்மேல் எழில்சம்பந் தன்சொன்ன இனியகோண மலைப்பதிகம் பழைமை வித்து நூறாகத் தகர்த்தாலும் ஆறாகப் பெருகியொரு நேர்நின்று பேராடும் தமிழர் துணிவு மாறாது மாறாது என்றுரைசெய் மைந்தர்கள் மலைத்தாயார் பெற்றெடுத்த மண்ணின் சொத்து. தேனோடும் பூவோடும் மாவலியாள் வருவாள் தௌளுதமிழ்ப் பாவலர்க்குக் கவிதைமொழி தருவாள் மீனோடு போட்டியிட்டு மைவிழியார் வெல்வார் வீறுகொண்ட காளையர்கள் மயங்கிப்பின் செல்வார் கானாடும் வானரங்கள் கனிமரங்கள் தேடி களிப்போடு நகராடும் காளையர்போற் கூடி வானாடர் வந்தேத்தும் மாதுமையாள் நாதன் விருப்போடு அமர்ந்ததிருக் கோணமலைப் பூமி. கந்தவனம் கோணேஸ்வரன் ஏப்ரல் 2019

          எங்கள் திருக்கோணமலை 13         மெலிதான பூங்காற்று மெய்தீண்டிச் செல்லுகையில்            மேன்மையுறு தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்லும்          வலிதான குன்றமர்ந்து வரமருளும் கோணேசர்            வழிநடப்போர் அன்பாலே சைவம் வெல்லும்          தெளிதேனும் சர்க்கரையும் சேர்த்தினிய தமிழ்தந்த             தேவாரப் பண்ணோசை நெஞ்சை அள்ளும்          விழியாடும் மாதரென விளங்குமான் கூட்டங்கள்             விளையாடும் அழகாலே உள்ளம் துள்ளும்.          நீறாடும் திருநுதலும் நெறியாடும் வாழ்வியலும்            நிறைந்ததிரு வாசகமும் எங்கள் சொத்து          ஏறாடும் பெருமான்மேல் எழில்சம்பந் தன்சொன்ன            இனியகோண மலைப்பதிகம் பழைமை வித்து    ...