கிழக்கு மாகாணக் கீதம்
கிழக்கு மாகாணக் கீதம் ஈழநாட்டின் கீழ்த் திசையில் இலங்குகின்ற மாநிலம் இணைந்து மூன்று இனங்களும் துலங்குகின்ற தாயகம். வந்தோர்க்குச் சோறிடும் வளமார்ந்த வயல்நிலம் வகைவகையாய் உணவிடும் வற்றாத கடல்வளம் இந்துஇஸ்லாம் கிறித்தவம் இவற்றினோடு பௌத்தமும் இணைந்து மனிதம் வாழவே நெறிப்படுத்தும் திருநிலம். ஈழநாட்டின் கீழ்த் திசையில்………. அம்பாறை நெல்தரும் மட்டுநகர் இறால்தரும் திருக்கோண மலையென்றும் பெருக்கோடு மீன்தரும் கந்தளாய்க் கரும்பினிக்கும் கன்னியா நீர்கொதிக்கும் கல்லடியில் மீனிசைக்கும் கல்முனையில் வளங்கொழிக்கும். ஈழநாட்டின் கீழ்த் திசையில்………. இயற்கைதந்த துறைமுகம் இணைந்தநல்ல ஈஸ்வரம் வியக்கும்பள்ளி வாயல்கள் விரும்பும்புத்த கோயில்கள் உயர்ந்ததேவ ஆலயம் ஒற்றுமையை விதைத்திடும் நயந்தமனப் பண்புடை நமதினிய தாயகம். ...