கிழக்கு மாகாணக் கீதம்

கிழக்கு மாகாணக் கீதம்

ஈழநாட்டின் கீழ்த் திசையில்
  இலங்குகின்ற மாநிலம்
இணைந்து மூன்று இனங்களும்
  துலங்குகின்ற தாயகம்.


வந்தோர்க்குச் சோறிடும் வளமார்ந்த வயல்நிலம்
வகைவகையாய் உணவிடும் வற்றாத கடல்வளம்
இந்துஇஸ்லாம் கிறித்தவம் இவற்றினோடு பௌத்தமும்
இணைந்து மனிதம் வாழவே நெறிப்படுத்தும் திருநிலம்.

                                  ஈழநாட்டின் கீழ்த் திசையில்……….

அம்பாறை நெல்தரும் மட்டுநகர் இறால்தரும்
திருக்கோண மலையென்றும் பெருக்கோடு மீன்தரும்
கந்தளாய்க் கரும்பினிக்கும் கன்னியா நீர்கொதிக்கும்
கல்லடியில் மீனிசைக்கும் கல்முனையில் வளங்கொழிக்கும்.

                                  ஈழநாட்டின் கீழ்த் திசையில்……….

இயற்கைதந்த துறைமுகம் இணைந்தநல்ல ஈஸ்வரம்
வியக்கும்பள்ளி வாயல்கள் விரும்பும்புத்த கோயில்கள்
உயர்ந்ததேவ ஆலயம் ஒற்றுமையை விதைத்திடும்
நயந்தமனப் பண்புடை நமதினிய தாயகம்.

                                   ஈழநாட்டின் கீழ்த் திசையில்……….

வடக்கில்தென்ன மரவடி தெற்கில்குமணை யாறெல்லை
வந்துபாயும் மாவலி வழங்கும்நலத்திற் கேதெல்லை
இயல்இசை நாடகம் இணைந்துசமயக் கலைகளும்
திசைகள்தோறும் புகழ்தரும் தெவிட்டாத திருநிலம்.

                                   ஈழநாட்டின் கீழ்த் திசையில்……


          கந்தவனம் கோணேஸ்வரன்
          05.02.1012

கிழக்குமாகாண சபைக்கெனக் கீதமொன்றை உருவாக்கும் பொருட்டு மாகாணசபையால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டதற்கிணந்க என்னால் அனுப்பிவைக்கப்பட்டுத் தேர்வு பெறாமற்போன கீதம் இது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5