இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை எழுதுதல்.

கவிதை எழுதுதல். கவிதை என்பது ஓர் இனிய கலை. கவிதை யாத்தல் எல்லோர்க்கும் கைவரா. ஆனால் கவிதை படித்தலும் அதன் சிறப்பை நுகர்தலும் இரசனையுள்ள எவர்க்கும் இயலுமான இன்பமே. இங்கே இரசனை என்பதுதான் முக்கியம். கலையுணர்வு கிஞ்சிற்றேனும் அற்ற கழுதைகளும் ( கழுதை என்று மனைவியைத் திட்டிவிட்டு, கழு – அழகிய, தை – பெண்: எனவே அழகிய பெண்ணே என்று தமிழை வளைத்து மனைவியின் தாள்பணிந்த புலவனைப் போலல்லாமல் ) இருக்கத்தான் செய்கிறார்கள்.  இப்போது மட்டுமல்ல எப்போதும் இருந்தார்கள்: இருக்கிறார்கள்: இருப்பார்கள். இவர்களுக்குக் கற்பூர வாசனை தெரியாது என்று விட்டுவிட வேண்டியதுதான். பலர் கவிதை எழுதிப் பார்ப்பதுண்டு. சிலர் வெற்றி பெறப் பலர் தோற்றுப் போய் விடுகிறார்கள். ‘நூறு கவிதைகளை வாசித்தால் நூற்றோராவது கவிதையை எழுதிவிட என்னால் முடியும்.’ என்று வீண்பெருமை பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் கவிதைகளைப் படித்தாலும் அரைக்கவிதைகூட அவர்களுக்கு வராது என்பது செயலில் இறங்கும்போதுதான் புரியும். அதற்காக, அவர்களுடன் பொருதுவதில் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது? சிலருக்குக் கவிதை இலகுவாகவே வந்துவிடும். ‘கருவிலேயே திரு’ ...

தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 10

பதவியல்  02   பகுதி  10 தொகாநிலைத்தொடர். தொகாநிலைத் தொடர் என்பது வேற்றுமையுருபு முதலிய இடைச்சொற்கள் வெளிப்பட்டு நிற்கும் இயல்புடைய சொற்களின் கூட்டாகும். தொகைநிலைத் தொடர் எனப்படுமிடத்து வேற்றுமையுருபு முதலாக உருபுகள் மறைந்துநின்று பொருள் தருகின்ற அதேவேளையில் தொகாநிலைத் தொடரில் வெளிப்பட்டு நிற்கின்றன. தொகாநிலை என்பதன் பொருள் மறைவற்றநிலை அல்லது வெளிப்படையான தன்மை எனலாம். தொகாநிலைத் தொடரானது எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலை வினைமுற்றுத்தொடர், குறிப்புமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் எனப் பத்து வகைப்படுகின்றன. எழுவாய்த்தொடர்: எழுவாய்த் தொடரை முதல்வேற்றுமைத் தொடர் எனவும் குறிப்பிடலாம். முதல்வேற்றுமைக்கு உருபுகள் எவையுங் கிடையா. எனவே முதலாம் வேற்றுமையாகிய எழுவாய் பிறிதொரு பதத்துடன் இணையும்போது இத்தொடர் தோன்றுகிறது. முதல்வேற்றுமை அல்லது எழுவாய்ச் சொற்கள்: கணபதி, மரம், ஆறு என்பன. இதன்படி, கணபதி வந்தான். மரம் வீழ்ந்தது. ஆறு பெருகியது. என இணையும்போது எழுவாய்த்தொடர் தோ...

இந்துசமய விளக்கம் 10

இந்துசமய விளக்கம் 10 இறைவனைப் பற்றிய அறிவுமட்டும் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்குமா? நிச்சயமாக இல்லை. இறையுணர்வு அல்லது இறைபக்திதான் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். உலகநடைமுறை பற்றி நன்கு அறிந்த ஒருவர் தன் அறிவுத்திறமையால் எவரும் அறியாமல் தீயநடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே, நல்லவர்போல் தோற்றம் தரலாம்.  அ ல்லது சமூகத்தின்பால் எவ்வித அக்கறையுமின்றிக் காலம் கடத்தலாம். இதனால் அவர் சமூகத்தைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றாகிவிடாது. சுமூகத்தின்பால் பற்று இருந்தால்மட்டுமே அவர் மேன்மையானவராக வாழமுடியும்.  இவ்வாறே இறைவன்பால் பக்தி கொண்டவரால் மட்டுமே இறைவனை எளிதில் அடையமுடியும். இதைச் சுருக்கமாகக் கூறுவதாயின் சமூகஅறிஞர்கள், ஆசாரமறிந்தோர் எனப்படுவோரெல்லாம் பக்தி இருந்தாலன்றி இறைவனை நெருங்குவதில்லை. ஆனால் இறைபக்தி உள்ள ஒருவரோ, சமய உண்மைகள், ஆசாரங்கள் என்பவற்றை அறிந்திராதபோதிலும் - அவற்றைக் கடைப்படிக்காத போதிலும் - இறையுட்கலந்து விடுகிறார். இதனைத்தான் ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே.’ ஏன்று திருமுறைய...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

பதவியல்      இயல் 2   பகுதி 9 ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் கருத்துப் புலப்படுமாறும் அமைந்திருக்கின்ற இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட கூட்டே தொடர்மொழி எனப்படுகின்றது.  தொடர்மொழியானது தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படுகின்றது.  தொகைநிலைத் தொடர்: தொகைநிலைத் தொடர் என்பது உருபுகள் வெளிப்படாமல் மறைந்து நிற்கின்ற நிலையில், இரண்டு அல்லது அவற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து இலக்கணரீதியாகப் பொருள் தருவது எனலாம். தொகை என்றால் தொக்கிநிற்கிறது அல்லது மறைந்து நிற்கிறது என்று பொருள். இத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என அறுவகைப்படுகின்றது. 1. வேற்றுமைத்தொகை: வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துநின்று பொருள் தருகின்றபோது அது வேற்றுமைத்தொகை எனப்படுகிறது. வேற்றுமைகள் எட்டு என்கிறது இலக்கணம். இவற்றுள் முதல்வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையாகிய விளிவேற்றுமையும் உருபுகள் அற்றன. அதாவது எந்த உருபுகளையும் தம்முடன் இணைத்து மொழிநடையில் ...

தம்பி தில்லைமுகிலன் பற்றிய ஒரு பதிவு.

தம்பி தில்லைமுகிலன் பற்றிய ஒரு பதிவு. த ம்பி தில்லைமுகிலன் எனது தந்தையாரின் தாய்வழித் தமையனாரின் மகன். அதாவது என் பெரியய்யாவின் மகன். பெரியய்யாவின் பெயர் தம்பிப்பிள்ளை. யாழ் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்தவர். முகிலனின் தாயார் பத்தாம் குறிச்சியைச் சேர்ந்தவர். பெயர் தெய்வானைப்பிள்ளை. தம்பி தில்லைமுகிலனின் இயற்பெயர் துரைவீரசிங்கம் என்பதாகும். இலக்கிய ஆர்வம்காரணமாகத் தானே சூட்டிக்கொண்ட புனைபெயர்தான் தம்பி தில்லைமுகிலன். தம்பி என்பது தந்தையாரின் பெயரின் முதற்பகுதி. தில்லை என்பது அவரது உறவினர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட தில்லையம்பலம் என்ற அவரது பெயரின் முதற்பகுதி. முகிலன் என்பது அவர் விரும்பிச் சூடிய பெயர். இதுதான் தம்பி தில்லைமுகிலன் என்பதன் சாரம். தம்பி தில்லைமுகிலன் திருக்கோணமலையிற் பிறந்தவர். என்னைவிட நான்கு வயது மூத்தவர். பிறந்தபோதே தாயாரை இழந்துவிட்டார். தாயின் தங்கையார் வள்ளிநாயகத்திடம் தாய்ப்பாலருந்தி வளர்ந்தார். பிறந்தபோதே தாயாரை இழந்ததாலும் பொலிகண்டிக் குடும்பவழியில் மூத்த குழந்தையாகப் பிறந்ததாலும் பொலிகண்டியிலும் பத்தாம்குறிச்சியிலும் அபரிதமான செல்லக்குழந்தையாக வளர்க்கப்...